Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கென்னடி கொலை தொடர்பான 2,800 கோப்புகளை விடுவித்தார் டிரம்ப்

Featured Replies

கென்னடி கொலை தொடர்பான 2,800 கோப்புகளை விடுவித்தார் டிரம்ப்

அமெரிக்கக் குடியரசுத் தலைவராக இருந்தபோது ஜான் எஃப் கென்னடி சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பான 2,800 ரகசியக் கோப்புகளை வெளியிடத் தகுந்த கோப்புகளாக வகைமாற்றம் செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார் இப்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப்.

கென்னடி உரையாற்றுகிறார்.படத்தின் காப்புரிமைEPA Image captionகென்னடியின் (வலது) வாழ்வும் மரணமும் அமெரிக்கர்களின் ஆர்வத்தை இன்னமும் தூண்டியபடிதான் உள்ளது.

எனினும் தேசியப் பாதுகாப்புக் காரணங்களைக் காட்டி இக் கொலை தொடர்பான இன்னும் சில ரகசியக் கோப்புகளை சாதாரணக் கோப்புகளாக வகை மாற்றம் செய்து விடுவிக்க டிரம்ப் மறுத்துவிட்டார்.

தேசிய ஆவணக் காப்பகத்தால் பகிரத்தக்கதாக மாற்றப்பட்டுள்ள கோப்புகளில் இருப்பது என்ன என்பது பற்றி டிரம்ப் நிர்வாகத்தின் மூத்த அலுவலர்கள் தெரிவிக்கவில்லை. 54 ஆண்டுகளுக்கு முன்பு டெக்சஸ் மாகாணத்தின் டல்லாஸ் பகுதியில் கென்னடி சுட்டுக்கொல்லப்பட்டது முதல் அவரது கொலைக்கான நோக்கம் தொடர்பாக பல சதிக் கோட்பாடுகள் வலம் வந்தபடி உள்ளன.

இந்தக் கொலை தொடர்பான விசாரணையின் சுமார் 50 லட்சம் பக்க ஆவணங்கள் முழுவதையும் 25 ஆண்டுகளில் பகிரங்கமாக வெளியிடவேண்டும் என்று அமெரிக்க நாடாளுமன்றமான காங்கிரஸ் 1992ல் சட்டம் இயற்றியது. இந்தச் சட்டப்படி, எல்லா ஆவணங்களையும் வெளியிடுவதற்கான காலக்கெடு வியாழக்கிழமை முடிவடைய இருந்த நிலையில் இந்த ஆவணங்களில் இன்னும் வெளியிடப்படாமல் இருந்தவற்றில் பெரும்பாலானதை டிரம்ப் விடுவித்து உத்தரவிட்டுள்ளார்.

இதற்கு முன்னதாகவே, சுமார் 90 சதவீத ஆவணங்கள் வெளியிடப்பட்டுவிட்டன.

அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ., புலனாய்வு நிறுவனமான எஃப். பி.ஐ. வெளியுறவுத் துறை உள்ளிட்ட நிறுவனங்கள் கடைசி நிமிடத்தில் மேற்கொண்ட முயற்சிகளால் இந்தக் கொலை தொடர்பான கோப்புகளில் சில வெளியிடப்படவில்லை. எனினும், அரசு மூடி மறைக்க முயல்வதான குற்றச்சாட்டுகள் குறையப்போவதில்லை.

தேசியப்பாதுகாப்புக்கு சரி செய்ய முடியாத பாதிப்ப ஏற்படுத்தக்கூடும் என்று கருதப்படும் கோப்புகளை நிறுத்திவைக்கவேண்டும் என்ற முடிவை ஏற்றுக்கொள்வதைத் தவிர என்னால் செய்யக்கூடியது ஒன்றும் இல்லை என்று டிரம்ப் டிவிட்டர் பதிவு ஒன்றில் தெரிவித்துள்ளார்.

என்ன நடந்தது?

1963 நவம்பர் 22-ம் தேதி டல்லாசில் மேற்கூரையில்லாத கார் ஒன்றில் பயணித்தபோது கென்னடி சுட்டுக்கொல்லப்பட்டார். அந்தக் காரில் இருந்த டெக்சஸ் மாகாண ஆளுநர் ஜான் கொன்னாலி காயமடைந்தார். காவல்துறை அதிகாரி ஜெ.டி.டிப்பிட்டும் சுட்டுக்கொல்லப்பட்டார். இது தொடர்பாக கைது செய்யப்பட்ட லீ ஹார்வீ ஆஸ்வால்டு என்பவர் போலீஸ் அலுவலகத்தில் இரவு விடுதி உரிமையாளர் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

http://www.bbc.com/tamil/global-41772545

  • தொடங்கியவர்

அமெரிக்க முன்னாள் அதிபர் கென்னடி படுகொலை தொடர்பான 3000 ரகசிய கோப்புகள் வெளியீடு: நாட்டின் பாதுகாப்பு கருதி மேலும் சில ஆவணங்கள் நிறுத்தி வைப்பு

 

 
28CHKIANKENNEDY

ஜான் எப் கென்னடி   -  REUTERS

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜான் எப் கென்னடி படுகொலை தொடர்பான சுமார் 3,000 ரகசிய கோப்புகளை அந்நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்ப் வெளியிட்டுள்ளார். எனினும் நாட்டின் பாதுகாப்பு கருதி சில ஆவணங்கள் வெளியிடப்படவில்லை.

ஜான் எப் கென்னடி கடந்த 1961 ஜனவரியில் அமெரிக்க அதிபரானார். பதவியில் இருந்தபோதே 1963-ம் ஆண்டு நவம்பர் 22-ம் தேதி டெக்சாஸ் மாகாணம் டல்லாஸ் நகரில் மேற்கூரையில்லாத ஒரு காரில் பயணித்தபோது கென்னடி சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நாட்டை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இது தொடர்பாக லீ ஹார்வி ஆஸ்வால்டு என்பவர் கைது செய்யப்பட்டார்.

எனினும் அடுத்த 2 நாட்களில் ஜாக் ரூபி என்பவரால் ஆஸ்வால்டு சுட்டுக் கொல்லப்பட்டார். கென்னடி படுகொலையில் இவர் மட்டும்தான் குற்றவாளி என அந்நாட்டு புலனாய்வு அமைப்பும் (எப்பிஐ) வாரன் ஆணையமும் அதிகாரபூர்வமாக முடிவுக்கு வந்தன. எனினும், கென்னடி படுகொலையில் மிகப்பெரிய சதித் திட்டம் இருப்பதாக பல்வேறு தரப்பினரும் கருதினர். இதையடுத்து கென்னடியை சுட்டுக் கொன்றது யார் என்பது குறித்து பல்வேறு ஊகங்கள் வெளியாகி வந்தன.

இந்நிலையில், தேசிய ஆவண காப்பகம் வெளியிட்ட அறிக்கையில், “அதிபர் ட்ரம்ப் உத்தரவின்படி, கென்னடி படுகொலை தொடர்பான 2,891 கோப்புகளை வெளியிட்டுள்ளோம். அதேநேரம் பாதுகாப்புத் துறையினர் கேட்டுக் கொண்டதையடுத்து மேலும் சில ரகசிய கோப்புகளை வெளியிட வேண்டாம் என ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்” என கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிபர் ட்ரம்ப் வெளியிட்ட அறிக்கையில், “கென்னடி படுகொலை தொடர்பான ரகசியங்களைத் தெரிந்துகொள்ள பொதுமக்கள் விரும்புகின்றனர். அதற்கு அவர்களுக்கு உரிமை உள்ளது. எனவே, சில கோப்புகளை வெளியிட உத்தரவிடப்பட்டுள்ளது.

எனினும், சில கோப்புகளை வெளியிட்டால் ராணுவம், உளவு, சட்ட அமலாக்கம் உள்ளிட்ட துறைகளுக்கு பாதிப்பு ஏற்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். எனவே, நாட்டின் பாதுகாப்பு கருதி, சில கோப்புகளை வெளியிடும் முடிவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அடுத்த 180 நாட்களுக்குள் ஆய்வு செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது” என கூறப்பட்டுள்ளது. - பிடிஐ

http://tamil.thehindu.com/world/article19937683.ece

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.