Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அராஜகமும் அச்சுறுத்தலும் தீர்வு தரப் போவதில்லை

Featured Replies

அராஜகமும் அச்சுறுத்தலும் தீர்வு தரப் போவதில்லை

 
 

 

நல்லாட்சி அரசாங்கம் ஜனாதிபதித் தேர்தலின் போதும், பாராளுமன்றத் தேர்தலின் போதும் நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதிக்கமையவே புதியதொரு அரசியலமைப்பைக் கொண்டுவரும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகின்றது.

 அரசாங்கம் அரசியலமைப்பை தன் விருப்பப்படி எதேச்சதிகாரமாகக் கொண்டு வர முயற்சிக்காமல், உரிய முறைப்படி ஜனநாயக விழுமியங்களுக்கமைவாக பாராளுமன்றத்தை முற்றுமுழுதான அரசியலமைப்புச் சபையாக மாற்றியமைத்தே அரசியலமைப்பு வரைபைக் கொண்டு வருவதில் முன்னுரிமை கொடுத்துள்ளது. அதற்கமைய முதற்கட்டமாக இடைக்கால அறிக்கையை முன்வைத்துள்ளது.

அதனை அனைத்துத் தரப்பினரும் படித்து யோசனைகளை முன்மொழிவதற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.அதற்கான காலஅவகாசமும் வழங்கப்பட்டுள்ளது. இதனை உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் சகல தரப்புகளுக்கும் உரியதாகும்.

நிலையான சமாதானத்துக்காகவும், நல்லிணக்கத்திற்காகவும், தேசத்தின் அபிவிருத்தி முன்னேற்றத்திற்காகவும் புதியதொரு அரசியலமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டுமென்பதற்காகவே 2015இல் இடம்பெற்ற தேர்தலின் போது நாட்டு மக்கள் இந்த நல்லாட்சிக்கு தங்களது ஆணையை வழங்கினர். மக்களின் ஆணைக்கமையவே அரசாங்கம் புதிய அரசியலமைப்பை ஏற்படுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றது.

ஜனநாயக விழுமியம், பண்பாடுகளுக்கமைய மக்களின் இறையாண்மைக்கு பங்கமில்லாத விதத்தில் புதிய அரசியலமைப்பை ஏற்படுத்த அரசு முனைகின்ற போது மக்களால் நிராகரிக்கப்பட்ட மகிந்த தரப்பைச் சேர்ந்தவர்கள் கூச்சல் போடத் தொடங்கியுள்ளனர். அரசியலமைப்பு தொடர்பில் அவர்கள் நல்லெண்ணத்துடன் கூடிய யோசனைகளை முன்வைப்பார்களானால் அதனை வரவேற்கக் கூடியதாக இருக்கும்.

மாறாக, மகிந்த தரப்பிலிருந்து ஜனநாயக விரோதிகள் வெளிப்படுத்தும் கருத்துகள் மிக மோசமான, அருவருக்கத்தக்கனவாகவே உள்ளன. அரசாங்கத்தை மட்டுமல்ல மக்களையும் கூட அச்சுறுத்துபவையாக காணப்படுகின்றன. முன்னாள் பாதுகாப்புச் செயலாளரான கோதாபய ராஜபக்ஷவினால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் ‘பலவேக வியரு’ என்ற அமைப்பு தேசத்துரோக அமைப்பாகவே இயங்கிக் கொண்டிருக்கின்றது. நிதியமைச்சரும் ஊடகத்துறை அமைச்சருமான மங்கள சமரவீரவின் கூற்றுப்படி சொல்வதானால், இந்த அணியினர் இறந்த உடல்களில் இரத்தம் குடிக்கக் காத்திருக்கும் இரத்தக் காட்டேரிகளாகவே செயற்படத் தொடங்கியிருக்கின்றனர்.

கோதாபயவின் சுயரூபத்தை முகம் கிழித்துக் காட்டியிருக்கும் அமைச்சர் மங்கள சமரவீர, புதிய அரசியலமைப்புக்கு ஆதரவளிப்போர், ஒத்துழைப்பு நல்குவோர் அனைவரும் கொல்லப்பட வேண்டியவர்கள் என்ற கோத்தாபயவின் கூற்றை வெறுப்புக்குரியதொன்றாகவே நோக்கியிருக்கின்றார். அவர் மட்டுமல்ல, ராஜபக்ஷ அணியின் மற்றொருவரான விமல் வீரவன்ஸ மற்றொரு படி மேலேபோய் புதிய அரசியலமைப்பின் முழுமையான வரைவு பாராளுமன்றத்துக்குக் கொண்டுவரப்படும் நாளில் பாராளுமன்றத்தில் குண்டுத் தாக்குதல் நடத்தப்படுமென அச்சுறுத்தல் விடுத்திருக்கிறார்.

விமல் வீரவன்ஸவை பொறுத்தமட்டில் இதுவொன்றும் புதுமையான விடயமல்ல. அன்று ஜே. வி.பி. அமைப்பு தடை செய்யப்பட்டிருந்த காலப் பகுதியில் மறைவிடங்களில் இருந்து கொண்டு செய்த அட்டகாசங்களை, அட்டூழியங்களை நாட்டு மக்கள் இலகுவில் மறந்து விட முடியாது. மக்களால் தெரிவாகி வந்துள்ள விமல் வீரவன்ஸ போன்றோர் இன்று மக்கள் விரோதிகளாக, ஜனநாயக விரோதிகளாக மாறியுள்ளனர். ஜனநாயகத்தின் மீது இவர்கள் நம்பிக்கை வைக்கவில்லை. துப்பாக்கிகள் மீதும், குண்டுகள் மீதுமே நம்பிக்கை வைத்திருப்பதாகவே நோக்க முடிகிறது.

மக்களாணைக்கு எதிராக துரோகிகளாக மாறியுள்ள கோதாபய, விமல் வீரவன்ஸ, சரத் விஜேசேகர போன்ற ராஜபக்ஷ அணியை நாட்டு மக்கள் இனியொருபோதும் மன்னிக்கப் போவதில்லை என்ற அமைச்சர் மங்கள சமரவீரவின் கருத்து நூறு வீதம் உண்மையானதாகும். இத்தகைய நிலைப்பாட்டினையே நாட்டு மக்களும் எடுத்திருப்பதை வெளிப்படையாகவே காணமுடிகிறது. ஜனநாயக விரோதிகளாகச் செயற்படுவோர் விடயத்தில் அரசாங்கம் பாராமுகமாக இருந்துவிட முடியாது. சட்டத்தை அவர்கள் விடயத்தில் இறுக்கமாக்க வேண்டும்.

நாட்டில் அமைதி நிலைபெறவேண்டும். ஒற்றுமை தளைத்தோங்க வேண்டும். நல்லிணக்கம் கட்டியெழுப்பப்படவேண்டும். பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். இவற்றைத்தான் நாடும், நாட்டு மக்களும் எதிர்பார்க்கின்றனர். அதற்காகவே 2015 இல் மக்கள் இந்த நல்லாட்சிக்கு ஆணை வழங்கியுள்ளனர். இந்த மக்களாணைக்கு விரோதமாகச் செயற்படுவோர் யாராக இருந்தாலும் அவர்கள் நிராகரிக்கப்பட வேண்டியவர்கள். கண்டிக்கப்பட வேண்டியவர்கள்.

ராஜபக்ஷ ஆட்சியின் இருண்ட யுகத்தை நாட்டு மக்கள் அவ்வளவு இலகுவாக மறந்துவிட மாட்டார்கள். அவ்வாறானதொரு ஆபத்து மிக்க யுகம் மீளவும் உருவாகக் கூடாது என்பதே அன்று 2015ல் நல்லாட்சிக்கு ஆணை வழங்கிய 63 இலட்சம் மக்களின் ஒரே எதிர்பார்ப்பாகும். ஒரே வருடத்தில் இருதடவைகள் தோற்கடிக்கப்பட்ட ராஜபக்ஷ அணி இன்னமும் பாடம்படிக்கவில்லை. மற்றொரு தடவை தவறான பாதையில் பயணிக்க முற்பட்டால் மக்கள் பதிலடி கொடுக்க தயங்க மாட்டார்கள்.

நல்லாட்சி அரசு தொடங்கியுள்ள புதிய அத்தியாயத்தை நிறைவு செய்யும் வரை அரசு ஓயப்போவதில்லை என்று அமைச்சர் மங்கள சமரவீரவின் உறுதிமொழி வெற்றி கொள்ளப்படவேண்டும். ஜனநாயகம் வெற்றிகொள்ளப்பட வேண்டும். அராஜகம் தோற்கடிக்கப்பட வேண்டும். இவைதான் நாட்டு மக்களின் எதிர்பார்ப்பாகும்.

ஆயுதங்களால், இனவெறிப் பேச்சுக்களால் மக்கள் மனங்களை வெற்றிகொள்ள முடியாது. சமாதானம், நல்லிணக்கம், இன ஒற்றுமை இந்த மூன்றுமே மக்கள் மனங்களை வெற்றிகொள்ளக் கூடிய ஆயுதங்களாகும். அதன் வழி பயணித்தால் மட்டுமே நாமும், நாடும் வெற்றி பெறமுடியும்.

http://www.thinakaran.lk/2017/10/27/ஆசிரியர்-தலைப்பு/20783/அராஜகமும்-அச்சுறுத்தலும்-தீர்வு-தரப்-போவதில்லை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.