Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரியாலை இளைஞர் சூடு! சிறப்பு அதிரடிப்படை கவனம்

Featured Replies

அரியாலை இளைஞர் சூடு! சிறப்பு அதிரடிப்படை கவனம்

 
அரியாலை இளைஞர் சூடு! சிறப்பு அதிரடிப்படை கவனம்

போர்க் காலத்­தில் சாதா­ர­ண­மாக மலிந்து கிடந்த துப்­பாக்­கிச் கூட்­டுக் கொலை­கள் அதன் பின்­னர் மெல்ல மங்­கிப்­போ­யின. வாள்­வெட்­டுக்­கு­ழுக்­கள் தலை தூக்­கு­வ­தா­கப் பொலி­சா­ருக்கு எதி­ரா­கக் குற்­றச்­சாட்டு எழுந்­தது.

அந்­தக் குற்­றச் சாட்டை மழுங்­க­டிக்க இரண்டு பல்­க­லைக்­க­ழக மாண­வர்­க­ளின் உயிர்­கள் கொக்­கு­வி­லில் பொலி­சா­ரின் துப்­பாக்­கி­ க­ளால் காவு கொள்­ளப்­பட்­டன.

வட­ ம­ராட்­சி­யில் கள்ள மண் ஏற்­று­ப­வர்­க­ளி­டம் பொலி­சார் கப்­பம் வாங்­கு­கி­றார்­கள் என்ற குற்­றச்­சாட்டு உச்­சம் பெற்­ற­போது துன்­னாலை இளை­ஞன் மீது துப்­பாக்­கிச் சூடு நடாத்­தப்­பட்­டது.

வித்­தியா கொலை வழக்­கின் தீர்ப்பை உல­கமே எதிர்­பார்த்­தி­ருந்த வேளை­யில் நீதி­பதி இளஞ்­செ­ழி­யன் மீது துப்­பாக்­கிச் சூடு இடம்­பெற்­றது. தற்­போது அர­ச­மைப்பு விவா­தம் மீதான எதிர்­பார்ப்பு ஏற்­பட்­டுள்­ள­போது, மீண்­டும் ஒரு துப்­பாக்­கிச் சூடு அரங்­கே­றி­யுள்­ளது.

அரி­யா­லை­யில் ஓர் உயிர் காவு கொள்­ளப்­பட்­டுள்­ளது. வடக்­கைத் தொடர்ந்­தும் பதற்­றத்­தில் வைத்­தி­ருந்து அர­சி­யல் செய்­யும் முயற்­சி­யின் சதியா இது? என்று கேள்­வி­கள் பல­வும் எழுந்­துள்­ளன. ஏனெ­னில் இலங்கை அர­சி­ய­லில் புரை­யோ­டிப்­போ­யுள்ள சூழ்ச்­சி­கள், தந்­தி­ரங்­கள் இன்­று­வரை அக­லவே இல்லை.

படை­கள் எவ்­வ­ழியோ அரசு அவ்­வழி

தமிழ் மக்­கள் நிம்­ம­தி­யா­கவோ அல்­லது நிரந்­த­ரத் தீர்­வு­டனோ வாழக் கூடாது என்­ப­தில் ஆட்­சி­யே­றும் அர­சு­கள் என்­றுமே உறு­தி­யா­க­வுள்­ளன.

இந்த விட­யத்­தில் அவை ஒற்­று­மை­யா­கச் செயற்­ப­டு­கின்­றன. காலத்­துக்குக் காலம் அர­சி­யல் ரீதி­யிலோ அல்­லது இரா­ணுவ ரீதி­யிலோ சரி தமி­ழர் தரப்­புக்கு ஒரு படி முன்­னேற்­றம் ஏற்­ப­டு­வது தென்­பட்­டால், அதனை மழுங்­க­டிப்­ப­தற்­கா­கச் சிங்­கள தேசம் பூதா­கா­ர­மான ஏதா­வது ஒரு விட­யத்­தி­னைக் கிள்­ளி­வி­டு­வது வழமை.

அதைக் கன­கச்­சி­த­மாக நிகழ்த்­திய பலரே ஆட்­சி­யி­லும் நிலைக்­கி­றார்­கள். அர­சன் எவ்­வ­ழியோ குடி­மக்­க­ளும் அவ்­வழி என்­பர். எமது நாட்­டில் படை­கள் எவ்­வ­ழியோ ஆட்­சி­யா­ளர்­க­ளும் அவ்­வ­ழியே என்ற மரபே பின்­பற்­றப்­ப­டு­கி­றது.

அதா­வது அர­சி­யல் தீர்­வில் தமி­ழர்­க­ளுக்­குச் சம­உ­ரி­மை­கள் கிடைக்க கூடாது என்­ப­தில் இணைந்தே சதி­செய்­கின்­ற­னர்.

ஏனெ­னில் வடக்­கில் குறிப்­பாக 2015 மற்­றும் 2016களில் யாழ்ப்­பாண மாவட்­டத்­தில் வாள்­வெட்­டுக் கலாச்­சா­ரம் தலை­தூக்­கி­யது. அப்­போது அதனை அடக்க வேண்­டிய பொலி­சார் கைகட்டி வேடிக்கை பார்த்­த­னர்.

அத்­தோடு அந்­தக் குழுக் களுக்கும் பொலி­சா­ருக்­கும் நெருங்­கிய தொடர்பு உண்டு என்­றும் குற்­றச்­சாட்டு முன்­வைக்­கப்­பட்­டது.

சூடு­க­ளும் பின்­ன­ணி­யும்

வாள்­வெட்டை அடக்­க­வேண்­டிய தேவை எழுந்­த­தன் விளை­வாக 2016ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 20ஆம் திகதி இரண்டு பல்­க­லைக் கழக மாண­வர்­கள் கொல்­லப்­பட்­ட­னர். அது நடந்து ஓர் ஆண்டு கடந்து விட்­டது. இருந்­தும் வாள்­வெட்­டுக்­கும் தீர்­வில்லை. சுட்­டுப்­ப­டு­ கொலை செய்­யப்­பட்­ட­வர்­க­ளுக்­கும் நீதி­யில்லை.

வாள்­வெட்­டுப் பேச்­சுக்­க­ளும் மங்­கின. கார­ணம் அந்­தச் சூட்­டின் பிர­தி­ப­லிப்பே. அடுத்து மணல்­கொள்ளை, மணல் தட்­டுப்­பாடு என்­பன பூதா­கா­ர­ மா­கின. சில­ரி­டம் பொலி­சார் கப்­பம் பெற்று மணல் கடத்த அனு­ம­திக்­கின்­ற­னர் எனக் குடத்­தனை மக்­கள் பகி­ரங்­க­மா­கவே குற்­ற­மும் சாட்­டி­னர்.

அதன் விளை­வாக இந்த ஆண்­டின் ஜுலை மாத ஆரம்­பத்­தில் குடத்­தனை இளை­ஞன் ஒரு­வர் சுடப்­பட்­டார். பின்­னர் நீதி­பதி இளஞ்­செ­ழி­யன் தொடர்­பு­பட்ட அந்­தச் சூடு, கடந்த யூலை மாதம் 23ஆம் திகதி நடந்­தது. மக்­கள் அனை­வ­ரின் கவ­ன­மும் இதன்­பால் மட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டது.

தற்­போது, கடந்த ஒக்­ரோ­பர் 22ஆம் திகதி அரி­யாலை –உத­ய­பு­ரம் பகு­தி­யில் இளை­ஞர் சுடப்­பட்­டி­ருக்­கி­றார். இது சம­கா­லத்­தில் நடந்­து­கொண்­டி­ருக்கும் புதிய அர­ச­மைப்பு விமர்­ச­னங்­க­ளைக் குறைப் ப­தற்­காக இருக்­க­லாம் என்றே நம்­பப்­ப­டு­கி­றது.

மண்­டை­தீ­வில் தேடு­தல்

அண்­மைய சூட்­டில் கொல்­லப்­பட்­ட­வர் பற்றி வெளி­வ­ரும் செவிக்­க­தை­க­ளில் அரச படை­யி­னரே இதை மேற்­கொண்­டுள்­ள­தாக அறிய முடி­கின்­றது.

இதே­நே­ரம் இங்கு அர­சு­கள் மாறு­கின்­றன, தவிர முப்­ப­டை­க­ளின் தள­ப­தி­கள் மாற்­றப்­ப­டு­கின்­ற­னர், ஆனால் படை­யி­னர் மகிந்த காலத்­தில் இருந்த படை­யி­னரே.

தற்­போ­தும் உள்­ள­னர். இலங்­கை­யில் தற்­போது சுமார் 2இலட்­சத்து 50ஆயி­ரம் இரா­ணு­வச் சிப்­பாய்­கள் உள்­ள­னர். இந்­தச் சூட்டு விட­யத்­தில் கடற்­ப­டை­யி­னரே சந்­தே­கிக்­கப்­ப­டு­கின்­ற­னர்.

அண்­மை­யில் மண்­டை­தீ­வுக் கடற்­படை முகா­மில் தேடு­தல் நடத்­தப்­பட்­டது இத­னா­லேயே. போர் ஓய்ந்து பணி­கள் இல்­லா­ம­லி­ருக்­கும் இவர்­களை வைத்தே அதிக சதி­கள் அரங்­கேற்­றப்­ப­டு­கின்­றன என்று தற்­போது பொது­வெ­ளி­யில் விச­னங்­கள் வெளி வரு­கின்­றன.

தீர்­வு­க­ளில் முரண்­போக்கு

ஆரம்­பத்­தில் ஒரு அர­ச­மைப்­புத் திருத்­தத்­தைக் கொண்­டு­வர முற்­ப­டு­கை­யில் ஒரு தரப்பு பாத­யாத்­திரை சென்று அதை இல்­லா­மல் செய்­த­தும், அதே­போன்று ஒரு தரப்பு தீர்வை முன் வைக்க, மறு­த­ரப்பு அதைக் கிழித்­தெ­றிந்து, தீயிட்ட நிகழ்­வு­க­ளும் உள்ளன.

இரண்டு பெரும் கட்­சி­கள், மாறி மாறி எதிர்த்த கட்­சி­கள் இன்று ஒன்று சேர்ந்து சிறு­பான்மை மக்­க­ளின் மன­தைப் புரிந்து, நல்­ல­தொரு தீர்வை வழங்­குவார்­களா அல்­லது இரண்டு கட்­சி­ க­ளும் இணைந்து சது­ரங்க விளை­யாட்டு விளை­யாடி ஒற்­று­மை­யா­கச் சண்டை
பிடித்து இப்­போ­தும் அதைக் குழப்­பிக் கொண்டே இருக்­கி­றார்­களா என்­கின்ற சந்­தே­கம் பல­மா­கி­விட்­டுள்­ளது.

அர­ச­மைப்­புத் தீர்­வில் எதா­வது கிடைக்­குமா எனக் காத்­தி­ருக்­கும் தமி­ழர்­க­ளைத் திசை­தி­ருப்பி, இளை­யோர்­களை ஆத்­தி­ர­மூட்டி மீண்­டும் ஓர் இளை­ஞர்­கள் அழிப்­புக்கு வித்­தி­டு­கி­றார்­களோ என்­று­கூ­டச் சந்­தே­கங்­கள் எழா­ம­லில்லை.

ஏனெ­னில் இங்கு நடக்­கும் ஒவ்­வொரு துப்­பாக்­கிச் சூட்­டுக்­குப் பிற­கும் போராட்­டம், கத­வ­டைப்பு என இளை­ஞர்­கள், மக்­கள் அந்­தப் பக்­கமே திசை திருப்­பப்­ப­டு­கி­றார்­கள்.

சட்­டமா அதி­ப­ரின் விநோ­தம்

இலங்கை அர­சி­ய­லில் என்ன இடம்­பெ­று­கின்­றது என எவ­ருக்­குமே விளங்­காத நிைலமை காணப்­ப­டு­வது வழ­மை­தான். நாட்­டின் ஜன­நா­ய­கம் , மற்­றும் பாது­காப்பு, எவற்­றில் எவர் அதி­கா­ரம் கொண்ட முடிவை எடுக்­கின்­ற­ார் என்­ப­தில் மூடிய ஆட்­சி­யா­கவே இந்த ஆட்சி உள்­ளது.

இங்கே அரச தலை­வரை மிஞ்­சிய முடிவை எடுக்­கும் சட்­டமா அதி­பர் இவ்­வாறு இடம்­பெ­றும் சூட்­டுக் கொலை­கள் தொடர்­பில் வாய் திறப்­பதே கிடை­யாது. அல்­லது அதற்­குச் சட்ட நட­வ­டிக்­கை­யும் கிடை­யாது.

சாட்­சி­க­ளுக்­குப் பாது­காப்­பில்லை எனக்­கூறி வவு­னி­யா­வில் இடம்­பெ­றும் அர­சி­யல் கைதி­க­ளின் வழக்கை அனு­ரா­த­பு­ரத்­துக்கு மாற்­றத்­து­டிக்­கும் சட்­டமா அதி­பர் இங்கே ஒரு மாகா­ணத்­தின் மக்­களே பாது­காப்­பில்­லா­மல் இருக்­கி­றார்­கள் இதற்கு என்ன நட­வ­டிக்கை எடுத்­தார் என்று வினா­வி­னால், பதில் பூச்­சி­ய­மா­கவே உள்­ளது.

அண்­மைய சூடு ஆரம்­பத்­தில் மண்­டை­தீ­வுக் கடற்­ப­டை­யி­னர் பக்­கம் கவ­னத்­தைத் திருப்­பி­யது. குறித்த சம்­ப­வத்­தினை நடத்­தி­யது கடற்­ப­டை­யி­னர்­தான் எனப் பேச்­சுக்­கள் எழுந்­தன. அங்கு தேடுதலும் நடத்தப்பட்டது.

இந்­தச் சூடு ஒரு முச்­சக்­கர வண்­டி­யில் சென்று நடாத்­தப்­பட்­டி­ருக்­கி­றது. சுட்ட பின்பு ஓடிச் சென்று வெற்­றுத் தோட்­டாக்­க­ளைப் பொறுக்கி எடுத்த பின்பு மீண்­டும் அதே முச்­சக்­கர வண்­டி­யில் ஆயு­த­தாரி தப்­பிச் செல்­லும் காட்சி துர­திஸ்ட வச­மாக அரு­கில் உள்ள சி.சி.ரி கம­ரா­வில் பதி­வா­கி­யி­ருக்­கி­றது.

அந்த முச்­சக்­கர வண்­டி­யா­னது பாது­காப்பு அமைச்­சின் பதி­வில் உள்­ள­தா­க­வும். அது சிறப்பு அதி­ர­டிக் படை­யி­ன­ரு­டை­யது என்­றும் செய்­தி­கள் வெளி­யா­கி­யுள்­ளன. ஆக, இந்­தச் சூட்­டை­யும் படைத்­த­ரப்பே மேற்­கொண்­டுள்­ளது என்­பது இப்­போது தெரிய வந்­தி­ருக்­கி­றது.

http://newuthayan.com/story/41649.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.