Jump to content

ஓர் இரவுக்குள் வெறிச்சோடியது யாழ். மாவட்டம்


Recommended Posts

ஓர் இரவுக்குள் வெறிச்சோடியது யாழ். மாவட்டம்

 
ஓர் இரவுக்குள் வெறிச்சோடியது யாழ். மாவட்டம்

ஈழத்­த­மிழ் மக்­கள் தமது விடு­த­லைப் போராட்ட வர­லாற்­றில் இரண்டு இடப்­பெ­யர்­வு­களை அனு­ப­வித்­தி­ருந்­த­னர். இவை சாதா­ர­ண­மா­னவை அல்ல. அவை பயங்­க­ர­மா­னவை. கொடூ­ர­மா­னவை. காலத்­தால் மறக்க முடி­யா­தவை. தங்­க­ளது உரி­மைப் போர் கார­ண­மாக விடு­த­லைப் புலி­ க­ளின் ஆயு­தப் போராட்­டம் 1983இல் ஆரம்­ப­மா­னது முதல் முள்­ளி­வாய்க்­கா­லில் முடி­வ­டைந்­த­து­வரை தமிழ் மக்­கள் இழந்­த­வை­கள் ஏரா­ளம்.

அம்­மை­யா­ரின் ஆட்­சி­யி­லேயே
இடம்­பெற்­றது இடப்­பெ­யர்வு

சமா­தா­னப் புறா­வாக தன்னை இனங்­காட்­டிக் கொண்ட சந்­தி­ரிகா அம்­மை­யா­ரின் ஆட்­சி­யின்­போது இடம்பெற்றதே வைக்­கப்­பட்­டதே யாழ்ப்­பாண மாவட்ட இடப்­பெ­யர்வு. யாழ். மாவட்­டத்தை விடு­த­லைப் புலி­க­ளின் கட்­டுப்­பாட்­டி­லி­ருந்து கைப்­பற்­றி­விட வேண்­டு­மென்ற நோக்­கில் 1995ஆம் ஆண்டு ஒக்­ரோ­பர் மாதம் போரை ஆரம்­பித்­தது சந்­தி­ரிகா அரசு. இத­னால் யாழ். குடா­வி­லி­ருந்து சுமார் ஐந்து லட்­சம் தமிழ் மக்­கள் ஓர் இர­வுப் பொழு­துக்­குள் தமது இருப்­பி­டங்­களை விட்டு வெளி­யே­றி­னர்.

யாழ்ப்­பா­ணத்தை 1985ஆம் ஆண்­டி­லி­ருந்து விடு­த­லைப் புலி­கள் தங்­கள் கட்­டுப்­பாட்­டுக்­குள் கொண்டு வந்­தி­ருந்­த­னர். அவ்­வே­ளை­யில் ஐக்­கிய தேசி­யக் கட்சி அரசு யாழ். குடா­நாட்­டைப் புலி­க­ளி­ட­மி­ருந்து விடு­விக்க மேற்­கொண்ட முயற்­சி­கள் பய­ன­ளிக்­க­வில்லை. 1987ஆம் ஆண்டு மே மாதம் அப்­போ­தைய ஐ.தே. கட்சி அர­சில் பாதுகாப்பு அமைச்­ச­ராக இருந்த லலித் அத்­து­லத் முதலி வட­ம­ராட்சி மீது பெரிய இரா­ணுவ நட­வ­டிக்­கை­யொன்றை மேற்­கொண்டு பல பகு­தி­களை அர­சின் கட்­டுப்­பாட்­டுக்­குள் கொண்டு வந்­தி­ருந்­தார்.

இந்­திய அமை­திப் படை­யி­ன­ரின் வரு­கை­யு­டன் வட­ம­ராட்­சிப் பிர­தே­சம் மீண்­டும் புலி­க­ளின் கைக­ளுக்கு மாறி­யி­ருந்­தது. யாழ்ப்­பா­ணத்தை புலி­க­ளி­ட­ம் இருந்து முழு­மை­யா­கக் கைப்­பற்­று­கின்ற திட்­டத்தை ஐக்­கிய தேசி­யக் கட்சி அர­சி­னால் நிறை­வேற்­றிக் கொள்ள முடி­யில்லை. வலி­கா­மம் வடக்­குப் பகு­தி­க­ளில் சில பிர­தே­சங்­கள், தீவ­கம் ஆகி­ய­வற்­றையே ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் ஆட்­சி­யின் போது படை­க­ளால் விடு­த­லைப் புலி­க­ளி­ட­மி­ருந்து மீட்­க முடிந்தது.

 

1994ஆம் ஆண்டு நவம்­பர் மாதம் சந்­தி­ரிகா அம்­மை­யார் முதற் பெண் அரச தலை­வ­ராக மக்­க­ளால் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டி­ருந்­தார். தனக்கு ஐக்­கிய தேசி­யக் கட்சி அர­சி­னால் ஏற்­பட்­டி­ருந்த கொடு­மை­களை, அவ­லங்­களை மட்­டு­மன்றி தனது கண­வ­ரின் உயி­ரி­ழப்­பி­னூ­டாக தமிழ் மக்­க­ளின் அனு­தா­பத்­தை­யும் சந்­தி­ரிகா பெற்­றி­ருந்­தார். ஒரு­வ­ருட காலம் முடி­வ­டை­வ­தற்குள் தமிழ் மக்­கள்­மீது இப்­ப­டி­யொரு பெரும் போரைத் தொடுத்து பெரிய அள­வி­லான இடப்­பெ­யர்வை ஏற்­ப­டுத்­து­வார் என எந்­த ­வொரு தமிழ் மக­னும் எதிர்­பார்த்­தி­ருக்­க­மாட்­டான். சந்­தி­ரிகா அம்­மை­யார் விடு­த­லைப் புலி­க­ளு­டன் பேச்சு நடத்தி ஒரு சுமு­க­மான நிலை­யை­க் கொண்டு வர விரும்பி பேச்­சு­க­ளி­லும் ஈடு­பட்­டி­ருந்­தார். சமா­தா­னப் புறா­வாக தம்­மைக் காட்­டிக் கொண்ட அவர், குறு­கிய காலத்­துள் சமா­தான முயற்­சி­க­ளைத் தூக்கி விசி­விட்டு விடு­த­லைப் புலி­க­ளு­டன் மோதலை ஆரம்­பித்து வைத்­தார்.

 

1995ஆம் ஆண்டு ஜூன் மாதத்­தி­லி­ருந்து யாழ். குடா உட்­பட வடக்கு, கிழக்கு மாகா­ணங்­க­ளில் விடு­த­லைப் புலி­கள் அர­சுப் படை­க­ளு­ட­னான தாக்­கு­தல்­க­ளைத் தொடுத்து படை­யி­ன­ருக்கு இழப்­புக்­க­ளை­யும் அளப்­பெ­ரிய சேதங்­க­ளை­யும் ஏற்­ப­டுத்தி வந்­தி­ருந்­த­னர். 1995ஆம் ஆண்டு ஜூலை மாதம் 09ஆம் திக­தி­யன்று அர­சுப் படை­கள் வலி.வடக்­கைக் கைப்­பற்­று­வ­தற்­காக இரவு பக­லாக தாக்­கு­தல்­களை நடத்­திக் கொண்­டி­ருக்­கை­யில் பொது­மக்­கள் சொந்த வதி­வி­டங்­க­ளி­லி­ருந்து பாது­காப்­புத் தேடி அகப்­பட்ட பொருள்­க­ளைக் கையில் எடுத்­துக் கொண்டு வெளி­யே­றிக் கொண்­டி­ருந்­த­னர்.

மக்­கள் கூட்­டம் கூட்­ட­மாக வலி.வடக் கி­லி­ருந்து வெளி­யே­றக் கொண்­டி­ருக்­கை­யில் வானூர்­திக் குண்டு வீச்­சுத் தாக்­கு­தல்­கள் அகோ­ர­மாக மேற்­கொள்­ளப்­பட்­ட­மை­யில் மக்­கள் கொல்­லப்­பட்­டும் படு­கா­யங்­க­ளுக்கு உள்­ளா­கிக் கொண்­டு­மி­ருந்­த­னர்.
1995ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் இண்­டாம் திக­தி­யன்று வட­ம­ராட்சி கடற்­ப­ரப்­பி­லி­ருந்து முப்­ப­டை­யி­ன­ ரின் தாக்­கு­தல்­கள் ஆரம்­ப­மா­கின.

படை­யி­னர் சம­கா­லத்­தில் யாழ். நகர் நோக்கி முன்­னே­று­கின்ற முயற்­சி­யைக் கைவி­டாது தாக்­கு­தல்­களை நடத்­திக் கொண்­டி­ருக்க மக்­க­ளின் இடப்­பெ­யர்­வு­க­ளும் தொடர்ந்­த­வாறு இருந்­தது. படை­யி­ன­ரது தாக்­கு­த­லில் காய­ம­டைந்து யாழ். போதனா மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­ப­டு­வோர் தொகை தின­மும் அதி­க­ரித்­துக் கொண்­டி­ருந்­தது. சிகிச்­சைக்­கான மருந்­து­க­ளுக்­குத் தட்­டுப்­பாடு நில­வி­யது. மக்­கள் தின­மும் பேர­வ­லங்­க­ளுக்­குள்­ளா­கிக் கொண்­டி­ருந்­த­னர்.

உண­வுத் தட்­டுப்­பாடு, குடி­தண்­ணீர், சுகா­தார வச­தி­கள் போன்ற அத்­தி­யா­வ­சி­யத் தேவை­கள் நெருக்­க­டி­க­ளுக்கு உள்­ளா­கின. 1995 செப்­ரெம்­பர் 22ஆம் திக­தி­யன்று வட­ம­ராட்சி நாகர் கோ­யி­லுள்ள பாட­சாலை மீது நடத்­தப்­பட்ட வான் தாக்­கு­த­லில் 25 மாண­வர்­கள் வரை­யில் கொல்­லப்­பட்­டி­ருந்­த­னர். வலி.தெற்­குப் பகு­தி­யி­லும் படை­யி­ன­ரின் முன்­னேற்ற நட­வ­டிக்­கை­யா­னது பெரும் இழப்­புக்­கள் மத்­தி­யில் அவர்­க­ளுக்­குச் சாத­க­மா­கின.

வெளி­யே­றும்­படி வந்­தது கட்­டளை

1995 ஒக்­ரோ­பர் மாதம் 23 ஆம் திக­தி­யன்று வலி.வடக்­குப் பகு­தி­களை இரா­ணு­வம் தனது முழு­மை­யான கட்­டுப்­பாட்­டுக்­குள் கொண்டு வந்­தது. வலி­கா­மத்­தின் நுழை­வா­ச­ லான யாழ். நகரை நோக்கி படை­யி­ன­ரின் முன்­னேற்­றம் பல முனை­க­ளி­லி­ருந்து ஆரம்­ப­மாக மக்­கள் இடம்­பெ­யர ஆரம்­பித்­த­னர். யாழ். நக­ரை­விட்டு உடன் வெளி­யே­று­மாறு புலி­க­ளி­டம் இருந்து மக்­க­ளுக்­குக் கட்­டளை வந்­தது. இதை­ய­டுத்து 1995ஆம் ஆண்டு ஒக்­ரோ­பர் 30ஆம் திகதி இர­வுக்­குள் 5 லட்­சம் மக்­கள் கூண்­டோடு வெளி­யே­றி­னர்.

தத்­த­மது உட­மை­களை சுமந்­த­வாறு இறு­கிய மனங்­க­ளு­டன் குழந்­தை­கள், சிறு­வர்­கள், பெண்­கள், வயோ­தி­பர்­கள் என செம்­மணி வீதி­யூ­டாக இடப்­பெ­யர்­வுப் பய­ணம் காலை­யி­லி­ருந்து ஆரம்­ப­மா­கின்­றது. துவிச்­சக்­கர வண்­டி­கள் மற்­றும் சிறு­சிறு வண்­டி­கள் உட்­பட மற்­றும் பெரு வாக­னங்­கள் யாவும் செம்­மணி வீதி­யூ­டாக வயற்­ப­ரப்­பி­னை­யும் கண்டி வீதி­யை­யும் ஆக்­கிர ­மி­த்­துக் கொண்­டன.

தண்­ணீர்த் தாகம், பசி உணர்வு, களைப்பு, முதி­ய­வர்­க­ளால் தொடர்ந்து நடக்க முடி­யா­த­நிலை. நோய்­க­ளோ­டு போராட் டம், அழு­து­து­டித்த குழந்­தை­களைக் கட்­டுப்­ப­டுத்த முடி­யாத நிலை, கர்ப்­பி­ணி­கள்­பட்ட துய­ரம் யாவற்­றுக்­கும் மத்­தி­யில் உச்­சக்­கட்ட அவ­லங்­கள், நெருக்­க­டி­கள் அனைத்­தும் தங்­க­ளுக்கே சொந்­த­மா­கி­விட்ட நிலை­யில் தவித்­த­னர் தமிழ் மக்­கள்.

இடப்­பெ­யர்­வின்­போது ஏற்­பட்ட துய­ரங்­க­ளை­யும் வலி­க­ளை­யும் தாங்­கவே முடி­யாது, அவை சொல்­லி­மா­ளா­தவை. மக்­க­ளற்ற வலி­கா­மம் பிர­தே­சங்­க­ளைப் படை­யி­னர் தம் வசப்­ப­டுத்­திக் கொண்­ட­னர். தென்­ம­ராட்சி மட்­டுமே தங்­கள் கட்­டுப்­பாட்­டில் வைத்­தி­ருக்­கக் கூடிய நிலை­யில் விடு­த­லைப் புலி­கள் இருந்­த­னர்.

ஏதி­லி­க­ளாக ஆகி­னர் 
யாழ்ப்­பாண மக்­கள்

யாழ்ப்­பா­ணத்­தின் முத­லா­வது இடப்­பெ­யர்­வா­னது தமி­ழர்­க­ளின் பொரு­ளா­தா­ரச் சரி­வுக்­கும் வாழ்­வா­தார வீழ்ச்­சிக்­கும் கார­ண­மா­கி­யது. தமிழ் மக்­க­ளது பொரு­ளா­தார இருப்­பின் அடி அத்­தி­பா­ரத்­தையே அசைத்­தி­ருந்­தது. 5 லட்­சம் மக்­க­ளின் வாழ்­வா­னது தெரு வாழ்க்­கை­யா­னது. ஏதி­லி­க­ளாக தமி­ழர்­கள் வாழ்வு அமைய வேண்­டு­மென்­ப­தில் சந்­தி­ரிகா அம்­மை­யா­ரும் படை­யி­ன­ரும் அப்­ப­டி­யொரு கணக்­கைப் போட்டு வைத்­தி­ருந்­த­னர். சோகங்­க­ளி­லெல்­லாம் பெரும் சோகம் சொந்த ஊரை விட்­டுப் பிரி­கின்ற சோகம்.

அடுத்­தது வாழ்­வா­தா­ரத்தை இழத்­தல். இவ்­வி­ரண்­டை­யும் யாழ்ப்­பாண மக்­கள் மீது அப்­போ­தைய சந்­தி­ரிகா அம்­மை­யா­ரின் ஆட்சி திட்­ட­மிட்டு வலிந்து திணித்­தி­ருந்­தது. மக்­க­ளின் இடப்­பெ­யர்­வு­க­ளுக்கு மத்­தி­யில் ஆகா­யப் பரப்­பில் வேவு வானூர்­தி­கள் உட்­பட புக்­காரா, சுப்­பர் சொனிக் வானூர்­தி­கள் தொடர்ச்­சி­யான குண்­டு ­வீச்­சுக்­களை நடத்­திக் கொண்­டி­ருந்­தன. இத­னால் ஆயி­ரக்­க­ணக்­கான மக்­கள் செத்­து­ம­டிந்­த­னர்.

அடைக்­க­லம் தந்­தது வன்னி

தென்­ம­ராட்­சி­யை­யும் வன்­னி­யை­யும் நோக்கி இடம்­பெ­யர்ந்த மக்­கள் செய்­வ­த­றி­யாது தவித்­துக் கொண்­டி­ருந்­த­போது செல்­லும் இடங்­க­ளில் கண்­ணுற்ற இடங்­க­ளான தேவா­ல­யங்­கள், சன­ச­மூக நிலை­யங்­கள் இந்­து­மத ஆல­யங்­கள், வெறு­மை­யா­கக் காணப்­பட்ட கட்­ட­டங்­கள் மக்­க­ளுக்கு தஞ்­ச­ம­ளித்­தன. மீண்­டும் சொந்த இடங்­க­ளுக்கு திரும்­பிச் செல்­வோமா அல்­லது இதுவே தஞ்­சம்­தானா? எங்கே மீண்­டும் மீண்­டும் செல்­வது? உற­வு­களை எங்கே காண்­பது? என்ற ஏக்­கங்­கள் அவர்­க­ளின் மன­தில் ஆழப்­ப­திந்­தி­ருந் தன.
இடப்­பெ­யர்­வு­க­ளோடு இளை­ஞர்­கள், யுவ­தி­கள் ஆயி­ரக்­க­ணக்­கில் புலி­கள் இட­யக்­கத்­தில் இணைந்து கொண்­ட­னர். இத­னால் புலி­க­ளின் பலம் பல­ம­டங்­கா­கி­யது. அர­சி­யல் நகர்­வு­க­ளும் வெற்­றி­ய­ளித்­தன. யாழ்ப்­பா­ணத்­தைக் கைப்­பற்­றிய சந்­தி­ரிக்கா அரசு கொழும்­பில் பெரும் கொண்­டா­டங்­களை முன்­னெ­டுத்த போதி­லும் அவை நீண்டு நிலை­பெ­ற­வில்லை. யாழ்ப்­பா­ணத்தை மீட்­டெ­டுத்த அர­சின் வெற்­றிக்கு வன்­னி­யில் அர­சுக்­குப் பல தோல்­வி­கள் பதி­லாக வழங்­கப்­பட்­டன.

ஓடி­ம­றைந்­தன 22 ஆண்­டு­கள்

ஈழத்­த­மிழ் மக்­க­ளின் பல இடப் பெ­யர்­வு­க­ளில் மிக முக்­கி­ய­மா­னது யாழ்ப்­பா­ணத்­தில் 1995ஆம் ஆண்டு ஒக்­ரோ­பர் மாதம் 30ஆம் திகதி திங்­கட்­கி­ழமை நடந்­தே­றிய இடப் பெ­யர்வே. இந்­தத் துய­ரம் நடந்­தேறி இன்­று­டன் 22 ஆண்­டு­கள் கடக்­கின்­றன. முன்­னைய நாள் அர­ச தலை­வர் சந்­தி­ரிகா சமா­தான தேவதை என்ற மதிப்­பை­யும் அடை­யா­ளத்­தை­யும் இழந்­த­வ­ரா­கவே இன்­றும் யாழ்ப்­பாண மக்­க­ளைச் சந்­தித்து விட்­டுச் செல்­கின்­றார். ஜே.ஆர்.ஜெய­வர்த்­தன, ஆர்.பிரே­ம­தாச, மகிந்த ராஜ­பக்ச வரி­சை­யில் சந்­தி­ரிகா குமா­ர­துங்­க­வும் தமி­ழர்­க­ளின் படு­கொ­லை­க­ளுக்­கும் நிம்­ம­தி­யற்ற வாழ்­வுக்­கும் இடப்­பெ­யர்­வு­க­ளுக்­கும் பொரு­ளா­தார இழப்­பு­க­ளுக்­கும் என்­றுமே முக்­கிய பொறுப்­பாளி என்­பதை எவ­ரும் மறுத்­திட இய­லாது மறக்­க­வும் இய­லாது.

http://newuthayan.com/story/41854.html

Link to comment
Share on other sites

யாழ் இடப்பெயர்வு ஒக்ரோபர் 30,1995 – 22 வருடங்கள் :-

 
18years_CI.jpg
 
(அக்டோபர் 30உடன் யாழ்ப்பாண இடப்பெயர்வு நடந்து 22 வருடங்கள் ஆகின்றன. ஈழத் தமிழர்களின் வாழ்வில் மறக்க முடியாத அந்த இடப்பெயர்வு அவலத்தை பற்றிய இந்தப் பதிவை குளோபல் தமிழ் செய்திகள்  மீள் பிரசுரம் செய்யப்படுகிறது)
 
அன்று கந்தசஷ்டி விரதத்தின் கடைசி நாள். விடிந்த போது சாதாரணமாத்தான் விடிந்தது. பலாலி இராணுவ முகாமிலிருந்து யாழ்ப்பாணத்தினை கைப்பற்ற இராணுவத்தினர் தாக்குதலை நடாத்தி வருவதும், அன்றைக்கு சில நாட்கள் முன்பாக அந்த நடவடிக்கையை முறியடிக்க புலிகள் மேற்கொண்ட நடவடிக்கை வெற்றியைத் தராமல் போனதும் அப்போதைய பரபரக்கும் செய்திகள்.
 
யுத்த முனையில் இராணுவத்தினரின் கைகள் ஓங்கியிருப்பது பலருக்கும் தெரிந்திருந்தாலும் புலிகளின் இராணுவ நகர்வுகள் பற்றி யாருக்கும் எதிர்வு கூற முடியாதென்கிற நிலையில் எந்த ஒரு யாழ்ப்பாண குடிமகனும் தானும் உறவும் ஒட்டுமொத்தமாய் இந்த நிலத்தை விட்டுப் பிரிவோம் என்று நினைத்திருக்க வில்லை.
 
காலையில் பாடசாலைக்கு புறப்படுகின்றவன் மாலையில் சிலவேளைகளில் நான் திரும்பி வராது இருக்க கூடும் என்று நினைத்திருப்பான். குண்டு வீச்சு விமானங்களின் இரைச்சல் கேட்டவன் இந்த விமானங்கள் வீசும் ஏதாவது ஒரு குண்டில் நான் செத்துப் போகலாம் என்று நினைத்திருப்பான். ஷெல் வீச்சுக்கள் அதிகமாகும் போது ஏதாவது ஒரு ஷெல் என் தலையில் விழுந்து யாரேனும் என்னைக் கூட்டி அள்ளிச் செல்லக் கூடும் என நினைத்திருப்பான். ஆனால், ஒரே இரவில் ஒன்றாய்க் கூடி வாழ்ந்த மண்ணைவிட்டு தூக்கியெறியப்படுவோம் என எவரும் நினைத்திருக்க மாட்டார்கள்.
 
ஆனால் இன்றைய மாலை அத்தனைபேரும் தங்கள் வேர்களைப் பிடுங்கி நடந்தார்கள். எங்கே போவது, என்ன செய்வது என்னும் எந்தச் சிந்தனையும் இன்றி உயிர் பிழைக்க வேண்டும் என்ற நோக்கோடு மட்டும் நடந்தார்கள்.
 
இரவு நெருங்குகிறது. இன்றைக்கும் புத்தூர்ப் பகுதிகளில் சண்டை நடந்தது என பேசிக்கொள்கிறார்கள். மின்சாரம் இல்லாத அந்தக் காலத்து யாழ்ப்பாணம் மிகச் சீக்கிரமாக நித்திரைக்கு சென்று விடும்.
 
8 மணியிருக்கும். பரவலாக எல்லா இடங்களிலும் ஒலிபெருக்கி கட்டிய வாகனங்களில் அறிவிப்பு செய்கிறார்கள் புலிகள்.
 
யாழ்ப்பாணத்தை கைப்பற்றி பாரிய இன அழிப்பு நடவடிக்கையை இராணுவம் மேற்கொள்ள இருக்கின்றதனால் உடனடியாக பாதுகாப்பான பிரதேசங்களான தென்மராட்சி வடமராட்சி வன்னிப் பகுதிகளுக்கு சனத்தை இடம்பெயருமாறு கோரியது அந்த அறிவிப்பு.
 
யாழ்ப்பாண குடாநாட்டில் அப்போதிருந்த அண்ணளவான மக்கள் தொகை 5 லட்சம். யாழ் குடாநாட்டினை வடபகுதியின் மற்றைய பிரதேசங்களுடன் இணைத்திருந்த வெறும் இரண்டு வீதிகளினூடாக 5 லட்சம் மக்கள் ஓர் இரவு விடிவதற்குள் கடந்து செல்ல வேண்டும் என்பதனை கற்பனை செய்தும் பார்க்க முடியாது.
ஆனால் மக்களுக்கு அதற்கெல்லாம் நேரமிருக்க வில்லை. மூட்டை முடிச்சுக்களை கட்டி எல்லோரும் வீதிகளில் இறங்க இறுகிப்போனது வீதி.
 
இப்போது நினைத்துப்பார்த்தால், புலிகள் அந்த வெளியேற்றத்தை திட்டமிட்டு நடாத்தி முடித்திருக்கலாமோ என தோன்றுகிறது. ஏனெனில் அந்த இடப்பெயர்வு முடிந்து அடுத்த இரண்டு மாதங்கள் வரை யாழ்ப்பாணம் புலிகளின் கைகளில் தான் இருந்தது. இடப்பெயர்வின் பின்னர் ஒரு பத்து பதினைந்து நாட்கள் வரை இடம் பெயர்ந்தவர்கள் மீண்டும் யாழ்ப்பாணம் சென்று பொருட்கள் எடுத்துவர அனுமதிக்கப்பட்டிருந்தார்கள்.
 
ஆனால் எந்த விதமான முன் தீர்மானமும் இன்றி நெருக்கடியான நிலையிலேயே புலிகளும் இந்த முடிவினை எடுத்திருந்தார்கள் என்பதற்கு மக்களோடு மக்களாக இடம் பெயர்ந்த புலிகளின் படையணிகளும், காயமடைந்து வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த போராளிகளும் சான்று.
 
அந்த இரவு மிகப்பெரும் மனித அவலத்தை சுமந்தது. இனி வீடு வருவோமோ என்று உடைந்து போனவர்கள், எங்கே போவது என்ற திசை தெரியாதவர்கள், வயதான அம்மா அப்பா இவர்களை வீட்டிலே விட்டு வந்தவர்கள், நிறைமாத கர்ப்பிணிகள், முதியவர்களைச் சுமந்தவர்கள் என வீதியில் ஒரு அடி எடுத்து வைப்பதற்கு ஒரு மணி நேரம் ஆயிற்று.
 
தண்ணி கேட்டு அழுத குழந்தைகளுக்கு பெய்த மழையை குடையில் ஏந்தி பருக்கியவர்கள், லொறிகளில் றேடியேற்றருக்கென வாளிகளில் தொங்கும் தண்ணீரை எடுத்து குடித்தவர்கள், வீதியில் இறந்த முதியவர்களை அந்த சதுப்பு நிலத்தில் குழி தோண்டி புதைத்தவர்கள் – உலகம் என்ற ஒன்று பார்த்து ‘உச்’ மட்டும் கொட்டியது.
 
 
அடுத்த காலையே வானுக்கு வந்து விட்ட விமானங்கள், நிலமையை இன்னும் பதற்றப்படுத்தியது. அந்த வீதிக்கு அண்மையாக எங்கு குண்டு வீசினாலும் ஆயிரக்கணக்கில் பலியாக மக்கள் தயாராயிருந்தனர்.
 
24 மணிநேரங்களிற்கும் மேலாக நடக்க வேண்டியிருந்தது. நடந்தும் தங்க இடமெதுவும் இன்றி ஆலயங்கள், தேவாலயங்கள், பஸ் நிலையங்கள் என கண்ணில் பட்ட இடங்களில் மக்கள் தங்கள் வாழ்க்கையைத் தூக்கிப்போட்டனர்.
 
காலங்காலமாய் வாழ்ந்த மண்ணை விட்டு ஒரே நாளில் நிர்ப்பந்தங்களால் தூக்கியெறியப்படின் அந்த வலி எப்படியிருக்கும் என்பது அன்றைய நாளுக்கு மிகச்சரியாக 5 வருடங்களிற்கு முன்பு யாழ்ப்பாணத்தை விட்டு முஸ்லீம் மக்கள் வெளியேற்றப்பட்ட போது எனக்கு தெரியவில்லை. ஆனால் அன்று புரிந்தது.
 
குறிப்பு: முஸ்லீம் மக்கள் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றப்பட்டு இன்று 27 ஆண்டுகளும் முஸ்லீம்கள் அல்லாத யாழ்ப்பாண மக்கள் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேறி இன்று 22 ஆண்டுகளும் நிறைகின்றன. முஸ்லீம்கள் வெளியெற்றத்திற்கு காரணமாயிருந்த புலிகள் பின்னர் பகிரங்க மன்னிப்பும் கவலையும் தெரிவித்து முஸ்லீம்களை மீளவும் யாழ்ப்பாணத்தில் குடியெற தடையேதும் இல்லை என சொல்லியிருக்கிறார்கள். – நன்றி – சாரல்

http://globaltamilnews.net/archives/47540

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.