Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கேட்டலோனிய தலைவர்களை சிறை வைத்தது ஸ்பெயின் நீதிமன்றம்

Featured Replies

கேட்டலோனிய தலைவர்களை சிறை வைத்தது ஸ்பெயின் நீதிமன்றம்

ஸ்பெயினில் உள்ள கேட்டலோனிய தன்னாட்சிப் பிராந்தியத்தை தனி நாடாக அறிவிப்பதற்காக, கடந்த அக்டோபரில் கேட்டலோனியாவின் பிராந்திய அரசு நடத்திய பொதுமக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் பங்காற்றியதற்காக, கலைக்கப்பட்ட பிராந்திய அரசில் அங்கம் வகித்த எட்டு தலைவர்களை ஸ்பெயின் உயர் நீதிமன்றம் சிறை வைத்துள்ளது.

கேட்டலோன்படத்தின் காப்புரிமைREUTERS

கலகம் செய்தல், தேச துரோகம் மற்றும் பொது நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியது ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள ஒன்பது கேட்டலோனியத் தலைவர்கள் வியாழன்று நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார்கள்.

பதவி நீக்கம் செய்யப்பட்ட கேட்டலன் அரசின் தலைவர் கார்லஸ் பூஜ்டிமோன் மற்றும் நான்கு தலைவர்கள் நீதிமன்றம் அனுப்பிய அழைப்பாணையை நிராகரித்தனர்.

இந்த விசாரணை 'அரசியல்' நோக்கம் கொண்டது என்று, தற்போது பெல்ஜியம் நாட்டிலுள்ள, பூஜ்டிமோன் கூறியுள்ளார்.

நீதிமன்றத்தால் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட, அந்த வாக்கெடுப்பு நடந்த அக்டோபர் 1-ஆம் தேதி முதல் ஸ்பெயினில் அரசியல் நெருக்கடி நிலவுகிறது.

கேட்டலோனிய பிராந்திய நாடாளுமன்றத்தை கலைத்து, கடந்த வாரம் அங்கு ஸ்பெயின் மத்திய அரசின் நேரடி ஆட்சியை அமல்படுத்திய ஸ்பெயின் பிரதமர் மரியானோ ரஜாய், அங்கு வரும் டிசம்பர் 21 அன்று தேர்தல் நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.

நீதிமன்றத்தில் என்ன நடந்தது?

நீதிமன்ற விசாரணைக்கு வந்த ஒன்பது கேட்டலோனிய தலைவர்களில் எட்டு பேரை சிறையில் அடைக்க ஸ்பெயின் அரச வழக்கறிஞர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

அவர்களில் கலைக்கப்பட்ட கேட்டலோனிய அரசில் துணை அதிபராக இருந்த ஓரியோல் ஜன்குரா, உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சராக இருந்த ஜோக்குயின் ஃபோர்ன், வெளியுறவு விவகாரங்களுக்கான தலைவராக இருந்த ரால் ரொமேவா ஆகியோர் அடக்கம்.

ஒன்பதாவது நபரான கேட்டலோனியாவின் முன்னாள் வர்த்தக அமைச்சர் சேண்டி விலா, பிராந்திய நாடாளுமன்றம் கேட்டலோனியாவை தனி நாடாக பிரகடனம் செய்வதற்கு முன்பே பதவி விலகிவிட்டதால் அவருக்கு 50,000 யூரோ பணம் பெற்றுக்கொண்டு பிணை வழங்கலாம் என்று வழக்கறிஞர்கள் கூறினர்.

http://www.bbc.com/tamil/global-41846173

  • தொடங்கியவர்

கட்டலோனிய தலைவரிற்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கும் விவகாரத்தில் தலையிட ஐரோப்பிய ஓன்றியம் மறுப்பு

spain.png
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கட்டலோனியாவின் முன்னைய பிராந்திய அரசாங்கத்தின் அமைச்சர்களை ஸ்பெயின் கைது செய்துள்ளமைக்கு   ஆதரவை வெளியிட்டுள்ள ஐரோப்பிய ஓன்றியம் கட்டலோனிய தலைவரிற்கு எதிராக ஸ்பெயின் பிடியாணை பிறப்பிக்கும் விவகாரத்தில் தலையிட மறுத்துள்ளது.

தற்போது பெல்ஜியத்தில் உள்ள கட்டலோனிய தலைவரிற்கு எதிராக ஸ்பெயின் பிடியாணை பிறப்பிக்கவுள்ளமை முற்றுமுமுதாக அந்த நாட்டின் நீதித்துறை சார்ந்த விவகாரம் எனவும்  அவர்களது சுதந்திரத்தை நாங்கள் முற்றுமுழுதாக  மதிக்கின்றோம் எனவும் ஐரோப்பிய ஆணைக்குழுவின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை முன்னைய கட்டலோனிய அரசாங்கத்தின் எட்டு அமைச்சர்களை சிறையில் அடைக்கும் ஸ்பெயினின் முடிவை ஜேர்மனி வரவேற்றுள்ளது. ஸ்பெயின் சட்டத்தின் ஆட்சியால் வழிநடத்தப்படும் நாடு என குறிப்பிட்டுள்ள ஜேர்மனியின் பேச்சாளர் ஸ்பெயின் பிரதமரி;ன் நிலைப்பாடுகளை ஆதரிப்பதாக தெரிவித்துள்ளார்.

http://globaltamilnews.net/archives/48267

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.