Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெனிவாவை தணிக்கும் தீவிர முனைப்பில் அரசாங்கம்

Featured Replies

ஜெனிவாவை தணிக்கும் தீவிர முனைப்பில் அரசாங்கம்

 

ரொபட் அன்­டனி

நிதி­ய­மைச்சர் மங்­கள சம­ர­வீ­ர­வினால் இலங்­கையின் வரவு செல­வுத்­திட்ட சம்­பி­ர­தா­யங்­க­ளுக்கும் வழ­மைக்கும் மாறான முறையில் வித்­தி­யா­ச­மான அணு­கு­மு­றை­யு­ட­னான வரவு செல­வுத்­திட்டம் ஒன்று முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது. அதா­வது பொது மக்­களை திருப்­தி­ப்ப­டுத்­து­வ­தற்­கான நிவா­ர­ணங்கள் குறைந்த அதே­வேளை பொரு­ளா­தார ரீதியில் வர்த்­த­கர்­களை ஊக்­கு­விக்­கின்ற, முத­லீ­டு­களை அதி­க­ரிக்­கின்ற, சுகா­தாரம், கல்வி ஆகிய துறை­களை முன்­னேற்­று­கின்ற வகையில் பல்­வேறு பரிந்­து­ரை­க­ளுடன் வரவு செல­வுத்­திட்டம் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது.

அந்­த­வ­கையில் மிகவும் வித்­தி­யா­ச­மான ஒரு அணு­கு­மு­றை­யி­லான வரவு செல­வுத்­திட்டம் இம்­முறை முன்­வைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவே பார்க்­கப்­ப­டு­கின்­றது. உண்­மையில் வரவு செல­வுத்­திட்­டத்தை பார்க்­கும்­போது எமக்கும் அவ்­வா­றான உணர்வு ஏற்­ப­டு­வதை தவிர்க்க முடி­யா­ம­லேயே உள்­ளது. காரணம் ஒவ்­வொரு வரு­டமும் நிவா­ர­ணங்­களை அள்ளி வழங்­கி­ய­தா­கவே நாம் கூறுவோம். ஆனால் இம்­முறை அவ்­வாறு இல்லை. மாறாக வித்­தி­யா­ச­மான கோணத்தில் நிதி­ய­மைச்­சரின் பார்வை அமைந்­துள்­ளது.

அது மட்­டு­மன்றி யுத்தம் முடி­வ­டைந்த 2009 ஆம் ஆண்­டுக்கு பின்னர் கடந்த பல வரு­டங்­க­ளாக முன்­வைக்­கப்­பட்ட வரவு செல­வுத்­திட்­டங்­க­ளுடன் ஒப்­பி­டு­கையில் 2018 ஆம் ஆண்­டுக்­கான வரவு செல­வுத்­திட்­ட­மா­னது தமிழ் பேசும் மக்­களை பொறுத்­த­வ­ரை­யிலும் யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்டு அழி­வ­டைந்து காணப்­ப­டு­கின்ற பிர­தே­சங்­களை பொறுத்­த­வ­ரை­யிலும் முற்­றிலும் வித்­தி­யா­ச­மான கோணத்தில் அமைந்­துள்­ளது.

அதா­வது வரவு செல­வுத்­திட்­டத்தின் இறுதி அத்­தி­யா­ய­மா­னது நாட்டின் நல்­லி­ணக்­கத்தை வலுப்­ப­டுத்தும் வகை­யிலும் பாதிக்­கப்­பட்ட மக்­களின் பிரச்­சி­னை­களை ஆராயும் வகை­யிலும் நிதி­ய­மைச்சர் மங்­கள சம­ர­வீ­ர­வினால் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது. யுத்தம் முடி­வ­டைந்த பின்னர் நாட்டில் முன்­வைக்­கப்­பட்ட எந்­த­வொரு வரவு செல­வுத்­திட்­டத்­திலும் இவ்­வாறு நல்­லி­ணக்­கத்­துக்­காக தனி அத்­தி­யாயம் இருக்­க­வில்லை.

ஆனால் நிதி­ய­மைச்சர் மங்­கள சம­ர­வீ­ர­வினால் முன்­வைக்­கப்­பட்ட இந்த வரவு செல­வுத்­திட்­டத்தில் நல்­லி­ணக்­கத்தை ஊக்­கு­விக்­கவும் யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட மக்­களை பொரு­ளா­தார ரீதியில் கட்­டி­யெ­ழுப்­பவும் யோச­னைகள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன. இதற்கு ஒரு முக்­கிய காரணம் இருக்­கின்­றது.

மங்­கள சம­ர­வீர வெளி­வி­வ­கார அமைச்­ச­ராக இருந்­த­போது நல்­லி­ணக்கம், பொறுப்­புக்­கூறல் மற்றும் பாதிக்­கப்­பட்ட மக்­களின் பிரச்­சி­னைகள், தேசி­யப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு என்­பன தொடர்பில் ஆழ­மான முறையில் கருத்­துக்­களை முன்­வைத்து வந்­தவர். அதா­வது இந்த விவ­கா­ரங்­களில் கடும்­போக்­கான கருத்­துக்­களை வெளியி­டாமல் நிதா­ன­மான முறையில் செயற்­பட்டு வந்­தவர்.

அதுவும் சர்­வ­தே­சத்தை சமா­ளிக்கும் வகையில் சிறப்­பாக செயற்­பட்­டவர். எந்­த­வொரு கட்­ட­த்­திலும் சர்­வ­தே­சத்­துடன் முரண்­ப­டாமல் எந்­த­வொரு விட­யத்­தையும் சாத­க­மான முறையில் அணுக முடியும் என்ற வாதத்­தையே சர்­வ­தே­சத்தின் முன் அவர் வெளி­யிட்டு வந்­தி­ருக்­கின்றார்.

மங்­கள சம­ர­வீர வெளிவி­வ­கார அமைச்­ச­ராக இருக்­கும்­போது இலங்கை மீதான சர்­வ­தே­சத்தின் அதி­ருப்தி மற்றும் ஐக்­கிய நாடுகள் சபையின் விமர்­சனப் பார்வை என்­ப­வற்றை மாற்­றி­ய­மைத்து சாத­க­மான பார்­வையை ஏற்­ப­டுத்­தி­யவர். அதே­போன்று தமிழ் பேசும் மக்­களின் பிரச்­சினை விட­யத்­திலும் மித­வாத போக்­கு­டை­ய­வ­ரா­கவும் தமிழ் பேசும் மக்­களின் பிரச்­சினை தீர்க்­கப்­ப­ட­வேண்டும் என்றும் அதி­காரம் பகி­ரப்­ப­ட­வேண்டும் என்றும் வலி­யு­றுத்தி வரு­கின்றார்.

இவ்­வா­றான பின்­ன­ணியில் நிதி­ய­மைச்சர் மங்­கள சம­ர­வீர புதிய பொறுப்பை ஏற்ற பின்னர் நல்­லி­ணக்கம் மற்றும் தமிழ் பேசும் மக்­களின் பிரச்­சி­னைகள் குறித்து அதிக கவனம் செலுத்­தி­யி­ருக்­கின்றார். நல்­லி­ணக்கம் தொடர்­பாக முன்­னெ­டுக்­கப்­ப­ட­வேண்­டிய விட­யங்கள், அத்­துடன் யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட மக்­களின் மனங்­களை வெல்­ல­வேண்­டி­யதன் தேவை குறித்து வரவு செல­வுத்­திட்­டத்தில் கவனம் செலுத்­தப்­பட்­டுள்­ளது.

யுத்­தத்தை வெற்­றி­கொண்­ட­போதும் நாட்டில் சமா­தானம் வெல்­லப்­ப­ட­வில்லை என்றும் பாதிக்­கப்­பட்ட மக்­களின் மனங்­களை வெல்ல முடி­ய­வில்லை என்றும் வரவு செல­வுத்­திட்­டத்தில் நிதி­ய­மைச்சர் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார். அந்­த­வ­கையில் இம்­முறை வரவு செல­வுத்­திட்­டத்தில் நல்­லி­ணக்கம் என்ற தலைப்பில் முன்­வைக்­கப்­பட்­டுள்ள விட­யங்கள் தொடர்பில் பார்ப்போம்.

அதா­வது ""வடக்கில் உற்­பத்­தி­யாளர் கூட்­டு­றவு சங்­கங்கள் ஊடாக தெரிவு செய்­யப்­பட்ட சிறு கைத்­தொ­ழில்­க­ளுக்கு ஆத­ரவு வழங்க 1000 மில்­லியன் ரூபா ஒதுக்­கப்­பட்­டுள்­ளது. வட­மா­கா­ணத்தில் இடம்­பெ­யர்ந்த மக்­களை குடி­யேற்ற 2750 மில்­லியன் ரூபா ஒதுக்­கப்­பட்­டுள்­ளது. வடக்கு, கிழக்கில் 50 ஆயிரம் செங்கல் மற்றும் சீமெந்து கலவை வீடுகள் நிர்­மா­ணிக்­கப்­ப­ட­வுள்­ளன.

வடக்கு மற்றும் வட­மத்­திய மாகா­ணங்­களில் கடன் பட்­டுள்ள மக்­க­ளுக்­காக ஆத­ரவு அளிக்க 1000 மில்­லியன் ரூபா ஒதுக்­கப்­பட்­டுள்­ளது. கிளி­நொச்­சி­யிலும் நெடுந்­தீ­விலும் பனை சம்­பந்­த­மான உணவு பத­னிடல் நிலை­யங்கள் ஸ்தாபிக்­கப்­ப­ட­வுள்­ளன. முன்னாள் போரா­ளிகள் மற்றும் யுத்­தத்­தினால் வித­வை­யா­ன­வர்­களை பணிக்­காக ஆட்­சேர்ப்பு செய்யும் தனியார் நிறு­வ­னங்­க­ளுக்கு சம்­பள உதவுத் தொகை வழங்­கப்­ப­ட­வுள்­ளது. இதற்­காக 400 மில்­லியன் ரூபா ஒதுக்­கப்­பட்­டுள்­ளது. யாழ்ப்­பா­ணத்தில் நவீன பொரு­ளா­தார நிலை­ய­மொன்றை உரு­வாக்க 100 மில்­லியன் ரூபா ஒதுக்­கப்­பட்­டுள்­ளது.

காணா­மல்­போனோர் தொடர்­பான அலு­வ­ல­கத்தை நிய­மித்து அதனை செயற்­ப­டுத்­து­வ­தற்கு 1400 மில்­லியன் ரூபா ஒதுக்­கப்­பட்­டுள்­ளது. அச்­சு­வேலி கைத்­தொழில் வலயத்தை மேம்­ப­டுத்­தவும் அம்­மாச்சி எண்­ணக்­க­ருவை நடை­மு­றைப்­ப­டுத்­தவும் யோசனை முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது.

வடக்கில் 1990 ஆம் ஆண்டு இடம்­பெ­யர்ந்த முஸ்லிம் மக்­களை மீள் குடி­யேற்­று­வ­தற்­காக அவர்­க­ளுக்­காக வீட­மைப்பு திட்­டத்தை முன்­னெ­டுக்­கவும், 2500 மில்­லியன் ரூபா நிதி ஒதுக்­கப்­பட்­டுள்­ளது. மயி­லிட்டித் துறை­மு­கத்தை முன்­னேற்­று­வ­தற்­காக யோசனை முன்­வைக்­கப்­பட்­டுள்­ள­துடன் இதற்­காக நிதி ஒதுக்­கப்­பட்­டுள்­ளது. யாழ்.­பல்­க­லைக்­க­ழ­கத்தின் வவு­னியா வளா­கத்தின் நூலக வச­தியை முன்­னேற்ற 200 மில்­லியன் ரூபா ஒதுக்­கப்­பட்­டுள்­ளது""

இவ்­வாறு பல முக்­கிய விட­யங்கள் வடக்கு, கிழக்கில் பாதிக்­கப்­பட்ட மக்­களின் நலன்­புரி விட­யங்­களை கருத்­திற்­கொண்டு முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன.

இந்­நி­லையில் வரவு செல­வுத்­திட்­டத்தை சாத­க­மாக பார்ப்­ப­தாக பிர­தான எதிர்க்­கட்­சி­யான தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு அறி­வித்­துள்­ளது. 2018 ஆம் ஆண்­டுக்­காக கூட்­ட­மைப்­பி­டத்­தி­லி­ருந்து பெறப்­பட்ட கருத்­துக்கள் வரவு செல­வுத்­திட்­டத்தில் உள்­வாங்­கப்­பட்­டுள்ள நிலையில் அதனை சாத­க­மாக பார்ப்­ப­தாக தமிழ்க் கூட்­ட­மைப்பின் ஊட­கப்­பேச்­சா­ளரும், யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம்.ஏ.சுமந்­திரன் தெரி­வித்­துள்ளார்.

எமது மக்­களின் பிரச்­சி­னை­களை மையப்­ப­டுத்­தியும், நல்­லி­ணக்கச் செயற்­பா­டு­கள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வேண்­டி­யதன் அவ­சி­யத்­தினை வலி­யுறுத்­தியும் கருத்­துக்­களை முன்­வைத்­தி­ருந்தோம். அந்த விட­யங்கள் இந்த வரவு செல­வுத்­திட்­டத்தில் உள்­வாங்­கப்­பட்­டுள்­ளன. குறிப்­பாக முன்னாள் போரா­ளி­க­ளுக்­கான மறு­வாழ்வு, வேலை­வாய்ப்பு, மாற்­று­தி­ற­னாளி பெண்­க­ளுக்­கான வீடுகள், விதவைப் பெண்­க­ளுக்­கான தேவைகள், இளை­ஞர்­க­ளுக்­கான வேலை­வாய்ப்­பினை கருத்­திற்­கொண்டு முத­லீ­டுகள் போன்ற விட­யங்கள் நிதி அமைச்­சரின் உரையில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளன. காணா­மல்­போ­ன­வர்­க­ளுக்­கான அலு­வ­ல­கத்­தினை இயங்கச் செய்­வ­தற்­காக 1300 மில்­லியன் ரூபா ஒதுக்­க­ப்பட்­டுள்­ளது. அத­ன­டிப்­ப­டையில் நாம் இந்த வரவு செல­வுத்­திட்­டத்­தினை சாத­க­மா­கவே பார்க்­கின்றோம் என்றும் சுமந்­திரன் எம்.பி. குறிப்­பிட்­டுள்ளார்.

அந்­த­வ­கையில் தமிழ் பேசும் மக்­களின் பிரச்­சி­னைகள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பினால் முன்­வைக்­கப்­பட்­டுள்ள விட­யங்கள் குறித்து அர­சாங்கம் கவனம் செலுத்­தி­யுள்­ளது. இந்­நி­லையில் இங்கு இரண்டு விட­யங்கள் குறித்து நாம் அவ­தானம் செலுத்­த­வேண்­டி­யுள்­ளது.

மங்­கள சம­ர­வீர நிதி­ய­மைச்சர் என்ற கார­ணத்­தினால் இவ்­வா­றா­ன­தொரு கோணம் முன்­வைக்­கப்­பட்­டி­ருந்­தாலும் இங்கு உண்­மை­யான யதார்த்த நிலை குறித்து நாம் சிந்­திக்­க­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். அதா­வது முத­லா­வது விட­ய­மாக கடந்த இரண்­டரை வரு­டங்­க­ளாக இலங்கை மீது சர்­வ­தே­சத்­துக்கு காணப்­பட்ட நன்­ம­திப்பு மற்றும் நம்­பிக்கை என்­பன படிப்­ப­டி­யாக குறை­வ­டைந்து வரு­வதை காண முடி­கின்­றது.

அர­சாங்­கத்தின் மீதான சர்­வ­தேச சமூகம், ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேரவை மற்றும் பாதிக்­கப்­பட்ட மக்கள் ஆகிய தரப்­புக்­களின் நம்­பிக்கை படிப்­ப­டி­யாக குறை­வ­டைந்­து­வ­ரு­கின்­றது என்றே கூறலாம். அண்­மைய காலத்தில் இலங்­கைக்கு விஜயம் மேற்­கொண்ட ஐக்­கிய நாடு­களின் மூன்று விசேட நிபு­ணர்கள், ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் பிர­தி­நி­திகள் ஆகியோர் இலங்கை மீது பல்­வேறு விமர்­ச­னங்­களை முன்­வைத்­து­விட்டே சென்­றுள்­ளனர்.

அதா­வது பொறுப்­புக்­கூறல் மற்றும் நல்­லி­ணக்க செயற்­பா­டு­களில் அர­சாங்கம் எவ்­வி­த­மான முன்னேற்றத்தையும் காட்­ட­வில்லை என்­பது அவர்­களின் அதி­ருப்­திக்கு கார­ண­மாக அமைந்­துள்­ளது. அதா­வது இவ்­வாறு தொடர்ந்து பொறுப்­புக்­கூறல் செயற்­பாட்டில் அர­சாங்கம் முன்­னேற்­றத்தை வெளிக்­காட்­டாமல் இருந்தால் சர்­வ­தேசம் இந்த நீதியை நிலை­நாட்டும் செயற்­பாட்டில் இறங்கும் என்­பது ஒரு எச்­ச­ரிக்­கை­யாக முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது.

மேலும் இலங்­கையின் விவ­காரம் ஒரு கட்­டத்தை தாண்டி ஐக்­கிய நாடுகள் பாது­காப்பு சபைக்கு செல்லும் என்ற விட­யத்­தையும் முன்­வைத்­தி­ருந்தனர். இந்­த­வ­கையில் தற்­போது இலங்கை மீது சர்­வ­தே­சமும் ஐக்­கிய நாடுகள் சபையும் இலங்கை மீது வைத்­தி­ருந்த நம்­பிக்கை படிப்­ப­டி­யாக குறை­வ­டைந்து சென்­றுள்­ளது என்­பதை காண முடி­கின்­றது. இதனை நன்­றாக அர­சாங்கம் உணர்ந்­துள்­ளது.

முக்­கி­ய­மாக முன்னர் வெளி­வி­வ­கார அமைச்­ச­ராக இருந்த மங்­கள சம­ர­வீர இந்த விட­யத்தை நன்­றா­கவே உணர்ந்­தி­ருக்­கின்றார். காரணம் அவர்தான் கடந்த இரண்­டரை வருட காலத்தில் சர்­வ­தே­சத்­தி­டமும் ஐக்­கிய நாடுகள் சபை­யி­டமும் காணப்­பட்ட இலங்கை மீதான விமர்­ச­னங்­க­ளையும் அதி­ருப்­தி­க­ளையும் போக்­கு­வதில் முன்­னின்று செயற்­பட்­டவர்.

இலங்கை மீதான சாத­க­மான தன்­மையை ஐக்­கிய நாடுகள் சபை­யிடம் ஏற்­ப­டுத்­து­வதில் சிறந்த பங்­க­ளிப்பை வழங்­கி­யவர். எனவே அவர் தற்­போது இலங்கை மீது சர்­வ­தேச சமூ­கத்­தி­டமும் ஐக்­கிய நாடுகள் சபை­யி­டமும் ஏற்­பட்­டுள்ள விமர்­சனம், அதி­ருப்தி மற்றும் நம்­பிக்­கை­யின்­மையை போக்கும் வகையில் இவ்­வாறு வரவு செல­வுத்­திட்­டத்தில் நல்­லி­ணக்கம் என்ற அத்­தி­யா­யத்தை முன்­வைத்­தி­ருக்­கலாம் என்றும் ஊகிக்க முடி­கின்­றது.

அதா­வது இது­வொரு இரா­ஜ­தந்­திர அணு­கு­மு­றை­யாக இருக்­கலாம். எதிர்­வரும் மார்ச் மாதம் இலங்கை மீதான கெடு­பி­டிகள் ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையில் அதி­க­ரிக்­கலாம் என்றும் எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. எனவே அந்த கெடு­பி­டி­க­ளையும் அழுத்­தங்­க­ளையும் குறைக்கும் வகையில் இவ்­வா­றான ஏற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருக்­கலாம் என்றும் ஊகிக்­கலாம்.

இலங்கை மீதான அதி­ருப்­தியை முன்­வைத்­துள்ள ஐக்­கிய நாடு­களின் விசேட நிபு­ணர்கள் தமது அறிக்­கை­க­ளையும் எதிர்­வரும் மார்ச் மாதம் முன்­வைக்­க­வுள்­ளனர். எனவே அழுத்­தங்கள் அதி­க­ரிக்­கலாம் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. அதனால் அதனை ஓர­ளவு குறைக்கும் வகை­யிலும் இந்த ஏற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருக்­கலாம் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. அழுத்­தங்­களை வெளிக்­காட்டும் வகை­யிலும் இரா­ஜ­தந்­திர ஏற்­பா­டாக இவை முன்­வைக்­கப்­பட்­டி­ருக்­கலாம். ஜெனிவா அழுத்­தங்­களை தணிக்கும் முயற்­சியில் அர­சாங்கம் ஈடு­பட்­டுள்­ள­தா என்ற கேள்­வியும் இங்கு எழுப்­பப்­ப­டு­கின்­றது.

இதே­வேளை இன்­னு­மொரு அணு­கு­மு­றை­யிலும் இதனை நாம் நோக்­க­வேண்­டி­யுள்­ளது. அதா­வது யுத்­தத்தின் பின்னர் பாதிக்­கப்­பட்ட மக்­களின் பிரச்­சி­னை­களை ஆழ­மாக உணரும் செயற்­பாடோ அவர்­களின் பிரச்­சி­னை­களை தீர்த்து வைக்கும் நல்­லி­ணக்க ஏற்­பா­டு­களோ முன்­வைக்­கப்­ப­ட­வில்லை என்ற குற்­றச்­சாட்டு முன்­வைக்­கப்­பட்டு வந்­தது.

குறிப்­பாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜ­பக் ஷ வடக்கில் பல அபி­வி­ருத்தி திட்­டங்­களை முன்­னெ­டுத்தார். ஆனால் அவ­ரினால் மக்­களின் மனங்­களை வெல்ல முடி­ய­வில்லை. பாதிக்­கப்­பட்ட மக்­களின் வாழ்­வா­தார போக்கு அவ­தா­னிக்­கப்­ப­ட­வில்லை. 80 ஆயி­ரத்­துக்கும் மேற்­பட்ட பெண்­களை தலை­மைத்துவமாகக்­கொண்ட குடும்­பங்­க­ளுக்கு உத­வ­வில்லை. காணாமல் போனோர் விவ­காரம், காணி விவ­காரம் என்­ப­ன­வற்­றுக்கு தீர்வு வழங்­கப்­ப­ட­வில்லை.

விசேட தேவை­யு­டைய பெண்கள், ஆண்கள், முன்னாள் போராளிகள் பலரும் பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கின்றனர். இவர்கள் இன்றும் கடுமையான சிரமங்களுக்கு மத்தியில் வாழ்ந்துவருகின்றனர். இவர்களின் விடயத்தில் கடந்த காலத்தில் எவ்விதமான சாதகமான அணுகுமுறையும் முன்னெடுக்கப்பட்டிருக்கவில்லை. புதிய அரசாங்கம் வந்த பின்னரும்கூட இந்தப் பிரச்சினைகளை தீர்ப்பதில் ஆழமான அணுகுமுறை இருக்கவில்லை. காணி விடுவிப்பில் மட்டும் அமைச்சர் ஒருவரின் கடும் முயற்சி காரணமாகவும் கூட்டமைப்பின் அழுத்தம் காரணமாகவும் ஒரு குறிப்பிட்ட மட்டத்தில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

எனவே இதனை நிதியமைச்சர் உணர்ந்திருக்கலாம். அதனால் இவ்வாறான யோசனைகள் முன்வைக்கப்பட்டிருக்கலாம். எவ்வாறெனினும் இந்த விடயங்களை அரசாங்கம் கவனத்திற்கொண்டு இவற்றை நடைமுறைப்படுத்தவேண்டியது அவசியமாகும். தொடர்ந்தும் இந்த விடயங்களில் தாமதம் இருக்கக்கூடாது. ஏற்கனவே அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. அதனால் புதிதாக தற்போது முன்வைக்கப்பட்டுள்ள விடயங்களும் விரைந்து முன்னெடுக்கப்படவேண்டும். சர்வதேசத்தினதும் ஐக்கிய நாடுகள் சபையினதும் பாதிக்கப்பட்ட மக்களினதும் அரசாங்கம் மீதான நம்பிக்கை படிப்படியாக குறைவடைந்து செல்கின்றது.

இந்நிலையில் அரசாங்கம் தமது  அர்ப்பணிப்பு தொடர்பில் என்ன செய்து கொண்டிருக்கின்றது என்பதனை அனைவரும் அவதானித்துக்கொண்டி ருக்கின்றனர் என்பதனை மறந்து விடக்கூடாது. அரசாங்கத்தின் பொதுவான அணுகுமுறை இந்த விடயத்தில் மாற வேண்டும். மாறாக ஐக்கிய நாடுகள் சபை யையும் சர்வதேசத்தையும் மட்டும் தணித் துவிடலாம் என்று எண்ணக்கூடாது. 

http://epaper.virakesari.lk

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.