Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திணறவைக்கும் போதைப் பொருள் வியாபாரம்

Featured Replies

திணறவைக்கும் போதைப் பொருள் வியாபாரம்

 

பாட­சா­லைப்­பிள்­ளை­க­ளுக்கு நாசம் விளை­விக்கும் பல புதி­ய­வற்றின் வர­வுகள் கண்டு பெற்றோர் பீதி கொள்­கி­றார்கள். பாட­சா­லைப்­பிள்­ளை­களை அடி­மைகள் ஆக்­கி­விடும் விதம், வித­மான நவீன உண­வுகள், குடி­வ­கைகள், பொருட்கள், போதைப் பொருட்கள், என்­ற­வ­கையில் ஏரா­ள­மா­னவை மாணவர் மத்­தியில் உலவ விடப்­ப­டு­கி­றது.

இன்­னு­மொரு புறம் ரக்ஸ் கலக்­கப்­பட்ட, ரொபிகள், பிஸ்­கட்­டுக்கள், குளி­கைகள், மற்றும் அபின் கஞ்சா, ஹெரோயின் போன்ற பொருட்கள் இவை­யொ­ரு­பு­ற­மி­ருக்க, கைத்­தொ­லை­பேசி, இணையம், பேஸ்புக், நவீன வலைப்­பின்­னல்கள், கையே­டுகள், நூல்கள், தொலைக்­காட்சி நிகழ்ச்­சிகள் என்ற ஏரா­ள­மா­ன­வற்றின் புகுத்­தல்­களால் மாணவர் சமூகம் அல்­லல்­படும் நிலை­யொன்று வேக­மாக வளர்ந்து கொண்­டி­ருக்­கி­றது.

அறி­வி­யலும் நவீ­னத்­து­வமும் வளர வளர மாண­வர்­களின் ஒழுக்­க­வி­யலும் விழு­மி­யங்­களும் எதிர்க்­க­ணிய நிலை­பெற்று செல்­வ­தனால் பெற்றோர் பயம் கொள்­கி­றார்கள். பாட­சாலை நிர்­வாகம் திணறிக் கொண்­டி­ருக்­கி­றது. சமூகம் பாட­சா­லை­க­ளையும் பிள்­ளை­க­ளையும் ஆச்­ச­ரி­யத்­துடன் பார்க்­க­வேண்­டி­யுள்­ளது.

மனித மூல­த­னத்தை விளை­விக்கும் பாட­சா­லைகள் இன்று பல்­வேறு சவால்­க­ளையும் பிரச்­சி­னை­க­ளையும் எதி­ர­் கொள்­ள­வேண்­டி­யுள்­ளது. இவற்றின் பொது விளை­வா­கவே திரு­கோ­ண­மலைப் பிர­தே­சத்தில் தமிழ்­ பாட­சா­லை­களைக் குறி­வைத்து போதைப்­பொருள் விநி­யோகம் மது­வூட்­டல்கள், புகைத்தல் என்ற நாச­கா­ர­மான பழக்­க­வ­ழக்­கங்கள் விதைக்­கப்­பட்டுக் கொண்­டி­ருக்­கி­ற­தென பெற்­றோர்­களும் பாட­சாலை அதி­பர்கள், ஆசி­ரி­யர்­களும் தங்­க­ளது கவ­லை தெரி­வித்து வரு­கின்­றார்கள்.

திரு­கோ­ண­மலை பட்­ட­ணமும் சூழலும் பிர­தே­சத்­துக்கு உட்­பட்ட பிர­பல்­ய­மான கல்­லூ­ரி­களின் மாண­விகள், மாண­வர்­களை குறி­வைத்து போதைப்­பொ­ருட்­களை விநி­யோ­கிக்கும் குழுக்கள் தனி­ந­பர்கள் இயங்­கி­வ­ரு­வ­தாக திடுக்­கிடும் தக­வல்கள் வெளி­வந்து கொண்­டி­ருக்­கின்­றன.

கடந்த 60 நாட்­களில் பல்­வேறு இடங்­களில் பல்­வேறு நபர்கள், பாட­சாலை மாண­வர்கள் போதைப்­பொ­ருட்­க­ளோடு கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். அல்­லது பிடி­பட்­டுள்­ளனர் என்ற பார­தூ­ர­மான தக­வல்கள் பெற்றோர் மத்­தி­யிலும் சமூ­கத்தின் மத்­தி­யிலும் பீதி­யையும் பயத்­தையும் உண்­டாக்கி வரு­கின்­றன.

பொலிஸ் நிலை­யங்­களில் இயங்­கி­வரும் போதைத்­த­டுப்புப் பிரிவு அதா­வது, மது­போதை போதைப் பொருள் ஒழிப்பு பிரிவு, மாவட்ட போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு மிக கடு­மை­யான முயற்­சி­களை மேற்­கொண்டு தடுப்­ப­தற்­கு­ரிய முயற்­சி­களை மேற்­கொண்டு வரு­கின்ற போதும் அவை­யெல்­லா­வற்­றையும் உடைத்­துக்­கொண்டு இவ்­வகை சமூக நாச­காரச் செயல்­களில் ஒரு கூட்டம் ஈடு­பட்டுக் கொண்­டி­ருப்­பது கவலை தரும் விட­யந்தான்.

மாண­வர்கள் குறிப்­பாக குறித்த தரங்­களில் படித்துக் கொண்­டி­ருக்­கின்ற மாண­வி­க­ளுக்கும், மாண­வர்­க­ளுக்கும் பல்­வ­கை­யான வடி­வங்­களில் இல­வ­ச­மாக போதைப்­பொ­ருட்கள் வழங்­கப்­ப­டு­வ­தாகக் கூறப்­ப­டு­கி­றது. சில சம­யங்­களில் போதைப் பொருட்­களை பாவிப்­ப­தற்­காக பணமும் கொடுக்­கப்­ப­டு­வ­தாக கூறப்­ப­டு­கி­றது. 14 க்கும் 30 வய­துக்கும் இடைப்­பட்ட வய­தினர் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்டு, இவ்­வ­ய­தி­ன­ருக்கே இவை கூடி­ய­ளவு விநி­யோ­கிக்­கப்­ப­டு­கின்­றது என்ற செய்தி, உத்­தி­யோ­கப்­பற்­றற்ற செய்­தி­யாக இருந்­தாலும் அரச வைத்­தி­ய­சா­லை­யி­லுள்ள இவ்­வகை பாவ­னைக்கு தடுப்­ப­தி­கா­ரி­யாக கட­மை­பு­ரியும் குறித்த அதி­காரி இதனை உறு­திப்­ப­டுத்­தி­யுள்ளார்.

குறித்த போதைப்­பொருள் வஸ்த்­துகள் மாத்­திரை வடிவம், தூள், சிகரட் உள்­ளி­டுகை, ரொபி மற்றும் பிஸ்கட் என்ற வடி­வத்தில் விநி­யோ­கிக்­கப்­ப­டு­வ­தாக மேலும் ஒரு அதி­காரி தெரி­வித்தார்.

இதில் ஆச்­ச­ரி­யப்­ப­டக்­கூ­டிய விடயம் யாதெனில் சுமார் 1000 க்கும் 3000 ஆயி­ரத்­துக்கும் இடைப்­பட்ட பெறு­மதி கொண்ட, போதைப்­பொ­ருட்கள் மேற்­படி வய­தி­ன­ருக்கு முதல் முதல் இல­வ­ச­மாக வழங்­கப்­ப­டு­வ­தா­கவும் தொடர்ந்து, பாவ­னைக்கு ஆளா­கிப்­போ­ன­வர்­க­ளுக்கு பணத்­துக்கு விற்­கப்­ப­டு­வ­தா­கவும் தக­வல்கள் வதந்­தி­க­ளாக சொல்­லப்­ப­டு­கின்­றன.

இங்கு அதிர்ச்­சி­யூட்டும் விடயம் என்­ன­வெனில் திரு­கோ­ண­ம­லைப்­பி­ர­தே­சத்தில் தமிழ் இளை­ஞர்கள், யுவ­திகள் ஆகி­யோரை அதிலும் கல்­லூரி மாண­வி­க­ளையும் மாண­வர்­க­ளையும் குறி­வைத்தே இவ்­வி­யா­பாரம் விஸ்­த­ரிக்­கப்­பட்டு வரு­கின்ற நிலையில் ஏனைய சமூ­கத்­த­வர்கள் இவ்­வ­கை­யான நச்­சு­வ­ல­யத்­துக்குள் அகப்­பட்டுக் கொள்­வது குறைவு என்ற தக­வலும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. இதில் எந்­த­ள­வுக்கு உண்மை, பொய் இருக்­கின்­றது என்­ப­தற்கு அப்பால் கண்­டு­பி­டிக்­கப்­ப­டு­கின்ற விட­யங்கள், பிடி­பட்டுப் போகின்ற சம்­ப­வங்கள் பெரும்­பாலும் தமிழ் சூழ­லா­கவே இருக்­கி­றது என்று சுட்­டிக்­காட்­டப்­ப­டு­கி­றது.

உதா­ர­ண­மாக பட்­ட­ணமும் சூழலும் பிர­தேசப் பகு­தி­யி­லுள்ள, மனை­யா­வெளி, தில்லை நகர், சிவ­புரி, பாலை­யூற்று, ஆனந்தபுரி, அலஸ்­தோட்டம், செல்­வ­நா­ய­க­புரம், வரோத நகர், லிங்­க­நகர், சல்லி, சாம்­பல்­தீவு, சோலை­யடி, துவ­ரங்­காடு, உப்­பு­வெளி, போன்ற பல்­வேறு இடங்கள் இவ்­வகை பழக்­க­வ­ழக்­கங்­க­ளுக்கு ஆளா­கி­வ­ரு­கி­ற­தென இது தொடர்பில் ஆய்­வு­களை மேற்­கொண்டு விழிப்­பு­ணர்­வு­களை ஊட்டி வரும் அரச சார்­பற்ற நிறு­வன அதி­காரி ஒருவர் தெரி­வித்தார்.

யுத்தம் முடி­வுக்கு கொண்­டு­வ­ரப்­பட்ட பின் தமிழ் பிர­தே­சங்­க­ளையும், அங்­கு­வாழும் மாணவி, மாண­வர்­க­ளையும் இளைஞர், யுவ­திகள் ஆகி­யோரைக் குறி­வைத்து திட்­ட­மிட்ட முறையில் மேற்­கொள்­ளப்­பட்டு வரும் இந்த நாச­கார செயலால், மாணவர் உல­கத்தின் ஒழுக்கம் இளைஞர், யுவ­தி­களின் பண்­பாடு, பழக்க வழக்­கங்கள் மற்றும் விழு­மி­யங்கள் அனைத்­துமே உடைத்­ தெ­றி­யப்­ப­டு­கின்­றது. சீர்­கெட்ட ஆரோக்­கி­ய­மில்லா ஒரு சமூ­கத்தை ஊரு­வாக்­கு­வ­தற்­கான சகல சதி முயற்­சி­களும் மிக திட்­ட­மிட்ட முறையில் மேற்­கொள்­ளப்­பட்­டு­வ­ரு­வ­தாக, சமயப் பெரியார் ஒருவர் கவ­லைப்­பட்­டுக்­கொண்டார்.

இப்­போ­தைப்­பொருள் பாவ­னைக்குள் மாண­வர்கள் எவ்­வாறு ஈர்த்­தெ­டுக்­கப்­ப­டு­கி­றார்கள் என்­பதை ஒருவர் விளக்­கு­கிற போது அதை பின்­வ­ரு­மாறு விளக்­கினார்.

க.பொ.த சாதா­ரண, உயர்­தர பரீட்­சைக்கு தோற்­றி­விட்டு பரீட்சை பெறு­பே­று­க­ளுக்­காக மாண­வர்கள் குறித்த காலம் காத்­தி­ருக்­கி­றார்கள். இவர்கள் இவ்­வி­டைக்­கா­லத்தில் மாற்­றீ­டு­க­ளின்றி என்ன செய்­வ­தென்று அறி­யாது திக்­கு­முக்­கா­டு­கி­றார்கள். இவ்­வே­ளையில் இவர்­களின் பொழு­து­போக்கு கள­மாக இணையம், முகநூல், கைய­டக்க தொலை­பேசி கை­கொ­டுக்­கி­றது. மாற்­றுப்­பெ­யர்­களில், அல்­லது பொய்­யான பெயர்­களில் இவர்­க­ளுடன் தொடர்பு கொண்டு போதைப்­பொருள் பற்றி மறை­மு­க­மான பிர­சா­ரங்கள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன. மிக தந்­தி­ர­மா­கவும் லாவ­க­மா­கவும் மேற்­கொள்­ளப்­படும் பகிர்­வு­களால் தூண்­டப்­பட்டு, பாவிக்க தொடங்கி விடு­கி­றார்கள்.

நண்­பர்கள் வட்­ட­மென்­பது எவ்­வ­ளவு வலி­மை­யா­னது என்­பது யாவரும் அறிவர். அவ்­வட்­டத்­துக்குள் இருந்து ஒருவர் முக­வ­ராக தேர்ந்­தெ­டுக்­கப்­ப­டு­கிறார். இவர்­களே நண்பர் வட்ட கடத்­தல்­கா­ரர்­க­ளாக விளங்­கு­கி­றார்கள். பாலியல் சேஷ்­டைகள், உடல் உள­வியல் தாக்­கத்­துக்கு உள்­ளாகும் வகையில் போதை வஸ்து பர­வ­லாக்­கப்­ப­டு­கி­றது.

மாண­வர்­களை முக­வர்கள் ஆக்கி அவர்கள் மூலம் இது விநி­யோ­கிக்­கப்­ப­டு­வ­துடன் ஒரு­சில ஆசி­ரி­யர்­களும் உடந்­தை­யாக, இருந்து வரு­வ­துடன் போதைப்­பொருள் விஸ்­த­ரிப்­புக்கு பல மறை­க­ரங்கள் செய­ற்­பட்­டு­வ­ரு­வ­தா­கவும் கூறப்­ப­டு­கி­றது.

போதை­யி­லி­ருந்து விடு­பட்ட நாடு தேசிய போதைப் பொருள் ஒழிப்பு கொள்கை மற்றும் செயற்­பாட்டு வேலைத் திட்டம் 2016, 2017 ஆம் ஆண்­டு­க­ளுக்குள் பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கின்ற போதும், இலங்­கையில் 25,000 ஆயிரம் பேர் போதைப்­பொருள் பாவ­னையால் வரு­டந்­தோறும் இறந்து போகின்­றார்கள் என்­பதை சில­புள்ளி விப­ரங்கள் தெரி­விக்­கின்­றன. சற்றும் அக­லப்­ப­டுத்திப் பார்ப்­போ­மானால் உல­கத்தில் 6 மில்­லியன் நபர்கள் இறந்து போகின்­றார்கள் என்று தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

திரு­கோ­ண­மலைப் பிர­தே­சத்தில் அண்­மைக்­கா­ல­மாக போதைப்­பொருள் விற்­பனை, அதன் பாவனை அசு­ர­வே­கத்தில் பர­வி­வ­ரு­வ­தாக ஒரு அதி­காரி தெரி­வித்தார். இதனை ஒரு மருத்­துவர் உறு­திப்­ப­டுத்­தினார். திரு­கோ­ண­மலை நக­ரத்தின் பிர­தான இடங்கள் இவ்­வகை பாவ­னைக்கு அதி­க­ளவு பயன்­ப­டுத்­தப்­ப­டு­வ­தாக சில இடங்கள் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளன.

குறித்த பிர­தே­சங்கள், கிரா­மங்கள், தெருக்கள் ஆகி­ய­வற்றில் கஞ்சா, குடு, சாராயம் ஆகி­ய­வற்றை விற்று தம் ஜீவ­னோ­பா­யத்தை நடத்தும் தனி­ந­பர்கள், குழுக்கள், பெண்கள் இன்னும் இருந்­து­கொண்டே இருக்­கி­றார்கள். இவர்கள் இச்­சட்ட ரீதி­யற்ற பொருட்­களை விற்­பதன் மூலம் அடிக்­கடி கைது­செய்­யப்­ப­டு­கி­றார்கள். இவர்­க­ளுக்கு வழங்­கப்­படும் தண்­டனை சிறி­ய­ளவு தண்­ட­னை­யாக மாத்­தி­ர­மின்றி கைது செய்­யப்­ப­டு­கி­ற­வர்கள் பிடி­ப­டு­ப­வர்­க­ளுக்கு பொலிஸார் உத­வு­வதன் கார­ண­மாக இவர்கள் தப்­பித்து கொள்­வது மாத்­தி­ர­மல்­லாமல் மீண்டும் குலத்­தொழில் போல் அத்­தொ­ழி­லையே செய்து வரு­கின்­றார்கள். இது­வொரு முடிவு காண­மு­டி­யாத சீர­ழி­வா­கவே இன்னும் காணப்­ப­டு­கின்­ற­தென, விழிப்­பு­ணர்வை உண்­டு­பண்ணும் அதி­காரி தெரி­வித்தார்.

இவ்­வ­கை­யான சீர்­கே­டுகள் உண்­டாக்கும் பழக்க வழக்­கங்­க­ளுக்கு இளை­ஞர்கள், யுவ­திகள், மாணவ, மாண­விகள் ஆளா­வ­தற்­கு­ரிய கார­ணங்கள் என்ன அதற்­கான பரி­கா­ரங்கள் யாவை என்­பதை பெற்­றோர்­களும் சமூக நாடி­களும் தெரிந்­துக்­கொள்ள வேண்டும்.

அவ­ச­ரமும் நெருக்­க­டி­களும் நிறைந்த இன்­றைய உலகில் பெற்­றோர்­களின் கவ­னிப்பு மற்றும் அவ­தா­னிப்பு இன்மை தாமுண்டு தமது வேலை­யுண்டு என்ற போக்கில் நடந்து கொள்­கின்ற நிலை­மைகள், பிள்­ளைகள் அதி­க­மான சுதந்­தி­ரத்­துக்கு ஆளாக்­கப்­பட்டு தன்­னிச்­சை­யான போக்கில் நடந்து கொள்ளும் போக்கு வேக­மாக வளர்ந்து கொண்டு வரு­கி­றது.

குடும்­பங்­க­ளுக்கு வந்து சேரும் வெளி­நாட்டுப் பணங்­களின் பாய்ச்­சல்கள் கண்மண் தெரி­யாமல் நடக்க வைக்­கி­றது. வெளி­நாட்டு பணங்­களின் பரி­மாற்­றங்கள் உழைப்பின் பெறு­ம­தி­யையோ அல்­லது பணத்தின் பெறு­ம­தி­யையோ உணர்த்­து­வ­தா­க­வில்லை. இந்­நி­லை­மைகள் குடும்­பங்­களின் சீர­ழி­வுக்கு இன்­னொரு கார­ண­மா­கின்­றது.

நவீன தொடர்­பா­டல்கள், போக்­கு­வ­ரத்­துக்கள் இடை­யு­ற­வுகள், வேக­மாக வளர்ந்­து­வரும் நிலையில் அறி­மு­க­மில்­லாதோர் தொடர்பு அல்­லது அந்த சூழலைச் சேராதோர் தொடர்பு, புதிது புதி­தாக ஏற்­பட்டுக் கொள்­வ­தனால் உள்ள கெடு­திகள் வேக­மா­கவே வளர்ந்து கொண்­டி­ருக்­கி­றது.

எல்­லா­வற்­றுக்கும் அப்பால் இளை­ஞர்­க­ளையும் யுவ­தி­க­ளையும் அத­ல­பா­தா­ளத்­துக்கு கொண்டு செல்லும் கரு­வி­யாக மாறி­யி­ருப்­பது யாதெனில் சகல வச­தி­க­ளையும் கொண்ட கைய­டக்க தொலை­பே­சி­க­ளாகும். அன்­றைய உண­வுக்கு போராடும் ஒரு குடும்­பத்தைச் சேர்ந்த பிள்­ளை­யாக இருந்­தாலும் அவர்­க­ளு­டைய கையி­லுள்ள தொலை­பே­சிகள் எல்லை மீறிய பெறு­மதி கொண்­ட­தா­கவும் சகல வச­திகள் உடை­ய­தா­கவும் காணப்­ப­டு­கி­றது. இந்த வச­திகள் மாணவ, மாண­வி­க­ளையும் இளைஞர், யுவ­தி­க­ளையும் பிழை­யான எண்­ணங்­க­ளுக்கு அழைத்துச் செல்லும் நிலையே உரு­வாகி வரு­கி­றது. இவற்­றுடன் சமூக வலைத்­த­ளங்­களின் பெருக்கம் இன்று பல்­வேறு சவால்­களை உரு­வாக்கிக் கொண்­டி­ருப்­பதை நாளாந்த நடை­மு­றையில் காணக்­கூ­டி­ய­தா­க­வுள்­ளது.

இவை தவிர முச்­சக்­கர வண்டி, ஈர் உருளிப் பெருக்கம் சனச்­செ­றிவு குறைந்த இடங்கள், பிழை­யான நண்­பர்­களின் சேர்க்­கைகள், கவ­னிப்பார் அற்­றுக்­கி­டக்கும் பற்­றைகள், நகர பாது­கா­வ­லரின் பரி­சோ­தனை பல­வீனம் என ஏகப்­பட்ட விட­யங்கள் இவ்­வ­கை­யான சமூக சீர்­கே­டு­க­ளுக்கு கார­ண­மா­கின்­றன என ஓர் ஆய்­வாளர் எடுத்துக் கூறி­யது மாத்­தி­ர­மன்றி எச்­ச­ரிக்­கவும் செய்தார்.

இவை­யொரு புற­மி­ருக்க பாட­சாலை நிர்­வாகம் இவற்றை அதி­க­ளவு கண்டு கொள்­ளாமல் ஒழுக்கம், விழு­மியம் என்­ப­வற்றை பேணிக்­காக்­கவோ, வளர்க்­கவோ முயற்­சிகள் மேற்­கொள்ளா நிலை­மை­யுடன் இரவு நேர கலப்பு வகுப்­புக்கள் பாரிய தூண்­டு­தல்­களை உண்­டாக்கி வருவதாக அந்த ஆய்வாளரும் சமூக நலவாதியுமான அவர் தெரிவித்தார்.

போதைவஸ்து பாவனை, பாலியல் வன்மங்கள், விழுமிய வீழ்ச்சிகள் அதிகரித்து விட்டதன் காரணமாகவே நேரடியாகவே அவை பல்வேறு வழிகளில் தாக்கங்களை உண்டாக்கிவருகிறது என்று கூறப்படுகிறது. உதாரணமாக மாவட்டத்தின் கல்வி வீழ்ச்சி தொடர்ந்து அதிகரித்துவருவதுடன், தொழில் பெறமுடியா நிலைகள் சமூகவிழுமியங்கள் பாதிக்கப்-படுகின்றன. மாணவர்களின் ஆளுகைவிருத்தி எதிர்க்கணிய நிலைக்கு கொண்டு செல்லப்படுகிறது. எதிர்கால சந்ததி மற்றும் தலைமுறைகளின் ஒட்டு மொத்த நிர்க்கதிக்கும் இப்பழக்க வழக்கங்கள் மூலகாரணமாகி வருகின்றன.

குடும்பங்களுக்கு சொந்தமான சுய கௌரவங்களுக்கு இழுக்கு உண்டாகுவதுடன் சட்டவிரோத செயற்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இதனால் உயிர் இழப்புக்கள் ஏற்படும் ஆபத்துக்களும் பெருகி வருகிறதென சுட்டிக்காட்டப்படுகிறது.

அண்மையில் எடுக்கப்பட்ட தகவல்கள் மற்றும் தரவுகளின் அடிப்படையில் பார்க்கின்றபோது திருகோணமலை நகரப்பிராந்தியம் அதன் சூழல் சார்ந்த பிரதேசம் திட்டமிட்ட முறையில் குறிவைத்து தாக்கப்படுவதுடன் கௌரவமான குடும்பங்களைச் சேர்ந்தவர்களின் பிள்ளைகள் கண்ணி வைக்கப்படுகிறார்கள் என்ற உண்மை நிலையை ஒவ்வொரு பெற்றோரும் சமூக நாடிகளும் உணர்ந்து கொள்ள வேண்டும். இதற்கு துணைபோவோர் பொலிஸாராக இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டுமென்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய எச்சரிக்கையான விடயமாகும். 

திரு­மலை நவம்

http://epaper.virakesari.lk/

  • கருத்துக்கள உறவுகள்

வடகிழக்கில் போதை மருந்து இறக்குமதியாளர் நல்அரசின் செல்லபிள்ளை என்று முன்பு எழுதியபோது சாரத்தை மடிச்சு கட்டிக்கொண்டு வந்து குரைத்தவையை இப்போ தேடுகிறன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.