Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்த் தேசியத்தின் வளர்ச்சியே தமிழ் மக்களது எதிர்பார்ப்பு

Featured Replies

 
தமிழ்த் தேசியத்தின் வளர்ச்சியே தமிழ் மக்களது எதிர்பார்ப்பு
 
 

தமிழ்த் தேசியத்தின் வளர்ச்சியே தமிழ் மக்களது எதிர்பார்ப்பு

தேசி­யம் என்­பது, ஒரு இனம், தான் வாழ்­வ­தற்­காக நீண்­ட­ கா­ல­ மாக ஒரு பாரம்­ப­ரிய நிலத்­தில், தனக்­கெனத் தனி­யான மொழி, பண்­பாடு,கலா­சா­ரம், பொருண்­மிய வளம் என்­பவை கொண்­ட­தாக இயங்­கு­தல் என்பதாகும்.

அதன் விரிந்த உண்­மை­யான உட்­பொ­ருள், இன்­னும் விசா­ல­மா­னது. குறித்த பாரம்­ப­ரிய நிலத்­தில், அவர்­க­ளின் ஆள்­புல எல்லை,ஆகா­யம் , கடல், வளி­மண்­ட­லம், இயல் தாவ­ரங்­கள், விலங்­கு­கள், பற­வை­கள், அவர்­தம் பழக்­க­வ­ழக்­கங்­கள், வழி­பாட்டு முறை­மை­கள் என்று அத்­தனை விசேட அம்­சங்­க­ளும் தேசி­யத்­தின் அர்த்­தக் கூறு­க­ளா­கும். அதன் மெய்ப்­பொ­ருள் உணர்த்­து­வ­து ­தான், தமி­ழர்­கள் தனி­யான தேசிய இன­மா­கத் தம்மை வெளிப்ப­டுத்­து­வ­தற்­குக் கார­ணம்.

ஈழத்தமிழர்களது தனிப்பெரும் கட்சியாக
தன்னை நிறுவிக் கொண்ட தமிழரசுக் கட்சி

இலங்­கை­யின் வடக்கு கிழக்­குப் பிர­தே­சம் தமி­ழர்­க­ளின் மர­பு­வ­ழித் தாயக பூமி எனப்­ப­டு­வ­தன் அர்த்­தம், மேற்­சொன்ன அடை­யா­ளங்­க­ளின் பரி­ணா­மப் படி­மு­றை­யா­கும். அதா­வது தமது அப்­பன், அவ­ரது அப்­பன், அவ­ரது அப்­பன், ஆச்சி, அவ­ளது ஆச்சி, அவ­ளது ஆச்சி எனப் பரம்­ப­ரை­யாக மேற்­சொன்ன அடை­யா­ளங்­க­ளோடு வாழ்ந்து, அதனை உருக்­கு­லை­யா­மல் அடுத்­த­டுத்த தலை­மு­றை­க்குக் கடத்­தி­வந்து, எம்­மி­டம் சேர்த்­தி­ருப்ப­து­தான். எனவே தமி­ழர்­கள் தமது மர­பு­வ­ழித் தாயக பூமி­யில், தமிழ் அடை­யா­ளங்­க­ளோடு தொடர்ச்­சி­யாக வாழ்ந்து வரு­வ­தால், அவர்­களை ஒரு தேசிய இன­மா­கக் கொள்­ளு­தல் அவ­சி­யம்.

தமி­ழர்­கள் மீதான பார­பட்­சப் ப­டுத்­தல்­கள் முனைப்­புப் பெற்­று­வந்த சுதந்­திர இலங்­கை­யின் ஆரம்ப நாள்­க­ளில், தமி­ழர்­கள் தனி­யான தேசிய இனம் என்ற மெய்­யான புரி­தல்­க­ளோடு, ஜன­நா­யக, அர­சி­யல் மற்­றும் அற­வ­ழிப் போராட்­டங்­களை தந்தை செல்­வ­நா­ய­கம் தலை­மை­யி­லா­ன­வர்­கள் முன்­னெ­டுத்­தி­ருந்­த­னர். சி.வன்­னி­ய­சிங்­கம், இ.மு.வி.நாக­நா­தன் ஆகி­யோ­ரும் இவர்­க­ளில் அடங்­கி­யி­ருந்­த­னர். இந்த இ.மு.வி.நாக­நா­தன் தான், தமிழ் ஈழம் என்­றி­ருந்­ததை தமி­ழீ­ழம் என்று சேர்த்து உச்­ச­ரிக்க வேண்­டும் என்று பதிவு செய்­த­வர்.

தமி­ழ­ரசு ஒன்றை எவ்­வாறு நிறு­விக்­கொள்ள வேண்­டும் என்­ப­தில் தெளி­வான செயல் வ­டி­வம் ஒன்று அவர்­க­ளி­டம் இருந்­தி­ருக்­க­வில்­லை­யாயி­னும், அதை நோக்கி நகர்­வ­தற்­கான உத்­வே­கத்­தை­யும் பாதை ­யை­யும் திறந்­து­விட்­ட­வர்­கள் தமி­ழ் அரசுக் கட்­சி­யி­னரே!

1949ஆம் ஆண்டு டிெசம்­பர் மாதம் 18ஆம் திக­தி­யன்று தமிழ் ­அர­சுக் கட்சி உத்­தி­யோ­க­பூர்­வ­மாக ஆரம்­பிக்­கப்­பட்டு, அதன் அர­சி­யல் பய­ணத்­தில் 1956 ஆம் ஆண்டில் பண்­டா-­செல்வா ஒப்­பந்­தத்­தை­யும், 1965 ஆம் ஆண்­டில் டட்லி- செல்வா ஒப்­பந்­தத்­தை­யும், தமிழ் மக்­கள் சார்­பாக இலங்கை அர­சு­டன் செய்­து­கொண்­ட­தன் அடிப்­ப­டை­யில் , தமி­ழர்­க­ளின் தவிர்க்­க­மு­டி­யாத கட்­சி­யா­க­வும், இலங்­கைத் தமிழ் மக்­க­ளது பேரம் பேசும் சக்­தி­யா­க­வும் தமி­ழ் அரசுக் கட்சி தன்னை நிறு­விக் கொண்­டது.

அந்த ஒப்­பந்­தங்­கள் பின்­னா­ளில் சிங்­கள மக்­க­ளின் பேரா­த­ர­வோடு சிங்­கள ஆட்­சி­யா­ளர்­க­ளால் கைவி­டப்­பட்­டமை வர­லாற்­றுப் பாடம். தமி­ழ் அரசுக் கட்சி, (பெட­ரல் பார்ட்டி ) சமஷ்­டிக் கட்சி என்றே சிங்­கள மக்­க­ளால் அறி­யப்­ப­டு­கி­றது. என­வே­தான் ‘பெட­ரல்’ என்­ற­தும் அது தனித் த­மிழ் அர­சொன்றை நிறு­விக்­கொள்­ளும் ஆட்சி முறைமை என்று இன்­ற­ள­வும் சிங்­கள மக்­கள் நம்பவைக்­கப்படு­கி­றார்­கள்.

1976ஆம் ஆண்டில் வட்­டுக்­கோட்டை பிர­க­ட­னத் தின் மூலம் தமி­ழீழ தனி­ய­ரசு ஒன்­றுக்­கான அறை­
கூ­வலை தமி­ழ் அர­சுக் கட்­சி­யி­னால் விடுக்க முடிந்­தது. அத­னைத் தொடர்ந்து 1977ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21 ஆம் திகதி நடை­பெற்ற நாடா­ளு­மன்­றத் தேர்­த­லில் வடக்கு கிழக்கு மக்­கள் பெரு­ம­ள­வி­லான தமது ஆத­ரவை தமி­ழ் அரசுக் கட்­சிக்கு வழங்­கி­ய­தன் மூலம், தனி­ய­ர­சொன்­றுக்­கான ஆணையை வழங்­கி­னார்­கள் என்றே கொள்­ள ­வேண்­டும்.

1970 களின் பிற் பா­தி­யில் முனைப்­புப் பெற் றி­ருந்த ஈழப்­போ­ராட்ட இளை­ஞர்­க­ளுக்கு, இந்த மக்­கள் ஆத­ரவு பெரும் உட்­சா­கத்­தை­யும் மனோ­தி­டத்­தை­யும் கொடுத்­தது.

ஈழ­வி­டு­த­லைக்­காக பல ஆயுத இயக்­கங்­கள் தோன்­றி­யி­ருந்­தா­லும், தங்­க­ளின் கண்­ணி­ய­மான செயற்­பாடு, கடமை தவ­றாத தன்மை, கட்­டி­றுக்­க­மான தலைமை, சோரம்­போகா வீரம், சாகத்­து­ணிந்த மனம், சுய கட்­டுப்­பாடு, ஒழுக்­கம் போன்ற தமது நற்­பண்­பு­க­ளால் தமி­ழீழ விடு­த­லைப்­பு­லிகளே மக்­க­ளின் மனங்­க­ளில் நன்­ம­திப்­பை­யும் பேரா­த­ர­வை­யும் பெற்­ற­னர்.

ரணில்– பிரபா ஒப்பந்தத்தின் விளைவாகவே தமிழ்
தேசியக் கூட்டமைப்பு

அதன் பய­னா­கவே முப்பது ஆண்­டு­கள் கால­த்துக்கும் மேலாக எவ­ரா­லும் இல­கு­வில் வீழ்த்­தி­விட முடி­யாத இரா­ணுவ பலத்­தோ­டும், பொருண்­மிய, மக்­கள் பலத்­தோ­டும் தமி­ழீழ விடு­த­லைப் புலி­க­ளால் ஒரு விடு­த­லைப் போராட்­டத்தை நகர்த்­திச் செல்ல முடிந்­தது. குறித்த காலப்­ப­கு­தி­யில் இலங்­கை­யின் இரா­ணுவ அர­சி­யல் நகர்­வு­கள் விடு­த­லைப் புலி­களை முன்­னி­றுத்­தியே நகர்த்­தப்­பட்­ட­துண்டு.

எனவே மேற்­கு­றிப்­பிட்ட அர­சி­யல் தலை­மை­க­ளுக்கு வெளித்­தெ­ரி­கின்ற வகை­யில் எந்த வேலைத்­திட்­டங்­க­ளும் செயற்­பா­டு­க­ளும் களத்­தில் இருக்­க­வில்லை.
தந்தை செல்­வ­நா­ய­கத்­தின் மூல­மும், தமி­ழ் அரசுக் கட்­சி­யின் மூல­மும் வளர்த்­தெ­டுக்­கப் பட்ட தமிழ்த் தேசியக் கருத்­து­ரு­வாக்­கத்துக்கு,களத்­தில் யதார்த்த பூர்­வ­மா­க­வும் கொள்கை ரீதி­யா­க­வும் செயல்­வ­டி­வ­மும், உயிர்­வ­டி­வ­மும் விடு­த­லைப் புலி­க­ளால் கொடுக்­கப்­பட்­டன.

கோட்­பாட்டு ரீதி­யாக அதன் அர்த்­தப் பொதி­வு­களை உலக அரங்குக்குக் கொண்டு சென்­ற­வர்­க­ளில் அன்­டன் பால­சிங்­கம் முதன்­மை­யா­ன­வர்.

இப்­ப­டி­யாக பல நீண்ட செயல்­வ­டி­வங்­க­ளை­யும் , போரி­யல் சார் தியா­கங்­க­ளை­யும் மேற்­கொண்டு, உலக தரி­ச­னத்­தோடு, நவீன உலக சிந்­த­னை­க­ளை­யும் உள்­வாங்கி, மிகச்­செ­றி­வாக பல துறை­க­ளி­லும், பல வடி­வங்­க­ளி­லும் செயற்­பட்டு தமிழ் மக்­க­ளின் மனங்­க­ளில் ஆழ­மாக பதி­யம் வைக்­கப்­பட்ட தமிழ்த் தேசிய எண்­ணக்­க­ருவை, அடுத்த கட்­ட­மாக தோள்­க­ளில் தாங்­கிக் கொள்­ப­வர்­க­ளாக தமிழ் தேசி­யக் கூட்­ட­மைப்­பி­னர் இருந்­த­னர்.

2002 ஆம் ஆண்டு இலங்கை அர­சுக்­கும் விடு­த­லைப்­பு­லி­க­ளுக்­கும் இடை­யில் செய்து கொள்­ளப்­பட்ட ரணில்– – பிரபா ஒப்­பந்­தத்­தின் விளை கனி­யா­க­வும், அமர ஊட­கர் தர்­ம­ரட்­ணம் சிவ­ரா­மின் அய­ராத ஊடாட்­டத்­தின் பல­னா­க­வும், விடு­த­லைப் புலி­க­ளின் அங்­கீ­கா­ரத்­தோ­டும் தமி­ழர்­க­ளுக்கு கிடைத்­த­து­தான் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் தமிழ் மக்கள் எதிர்பார்த்தவை ஏமாற்றமாகின

இலங்­கைத் தமி­ழ் அரசுக் கட்சி,ஈழ­மக்­கள் புரட்­சி­கர விடு­தலை முன் ன­ணி, தமி­ழீழ விடு­தலை இயக்­கம், தமி­ழர் விடு­த­லைக் கூட்­டணி, தமி­ழீழ மக்­கள் விடு­தலை க் கழ­கம் என்­பவை இணைந்­ததே தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பா­கும்.

2009ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி ஆயுத மோதல்­க­ளின் மௌனிப்­பின் பின்­ன­ரான காலப்­ப­கு­தி­யி­லி­ருந்து தமிழ் மக்­கள் தங்­க­ளது ஏகோ­பித்த அர­சி­யல் தலை­மை­க­ளாகத் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பி­னரை ஏற்றுச் செயற்­பட்டு வரு­கின்­ற­னர்.

ஆனால் 2015 ஜன­வரி 08ஆம் திகதிய தலைவர் தேர்தலையடுத்து கூட்டு அரசின் பின்­ன­ரான காலப் ப­கு­தி­யில் தமிழ் மக்­க­ளுக்­கும் தமிழ் தேசிய கூட்­ட­மைப்­பி­ ன­ருக்­கும் இடை­யி­லான இடை­வெ­ளித் தூரம் பார­தூ­ர­மா­கிப் போன­து­தான் துர­திர்ஷ்­ட­மா­கும்.

தமிழ் மக்­கள் எதிர்­பார்த்­தி­ருந்த தமி­ழீழ தனி­ய­ர­சுக் கனவு சிதைக்­கப் பட்­ட­தன் பின்­னர், வடக்கு, கிழக்கு இணைந்த தமது தாய­கப் பிர­தே­ சத்­தில் , தனித்­து­வ­மான அடை­யா­ளங்­க­ளு­ட­னும், சுய­நிர்­ணய உரி­மை­யு­ட­னும் கூடி­ய­தான ஒரு தீர்வை எதிர்­பார்த்தே, தமிழ் மக்­கள் தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்­புக்கு வாக்­க­ளித்­தி­ருந்­த­னர்.

தமிழ் தலைமைகளை ஏமாற்ற முயலும் ஆட்சித் தரப்புக்கள்

அதில் எது­வொன்­றும் அங்­கு­லம் கூட நக­ராத நிலை­யில், அதற்கு மாறான தமிழ் மக்­கள் விரும்­பாத தகாத விட­யங்­களை அரசு புதிது புதி­தாகத் திரை­நீக்­கம் செய்து வரு­கி­றது. உதா­ர­ண­மாக, காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்­கான தீர்­வைக் கொடுக்­காமை, அர­சி­யல் கைதி­களை விடு­விக்­காமை, கடல் நிலம் சார் பொரு­ளா­தா­ரத்தை இரா­ணு­வம் தம் வசப்­ப­டுத்தி இருத்­தல், உண்­மை­யைக் கண்­ட­றி­ய­வும், மீள நிக­ழா­மையை உறு­திப்­ப­டுத்­த­வும் உண்­மை­யாக செயற்­ப­டாமை, மீள்­கட்­டு­மான வாழ்­வா­தார மேம்­பா­டு­க­ளை மேற்கொள்ளாமை, திட்­ட­திட்டமிட்ட குடி­யேற்­றம், பௌத்த மய­மாக்­கல் என நீண்டு செல்­லும் பட்­டி­யல் உண்டு. இதில் விசே­டம் என்­ன­வெ­னில் அர­சின் இத்தகைய செயற்­பா­டு­க­ளுக்கு தமிழ்த் தலை­மை­கள் ஒத்­தோ­டு­தல் அல்­லது மௌன­மாக இருத்­தல் என்ற துலங்­கல்­களை காட்­டிக்­கொண்­டி­ருப்­ப­தால், மக்­கள் பெரும் சினம் கொண்­டுள்­ள­னர்.

அதன் அறு­வ­டை­களை எதிர்­வ­ரும் உள்­ளூ­ராட்சித் தேர்­த­லி­லும், மாகா­ண­சபை மற்­றும் நாடா­ளு­மன்­றத் தேர்­தல்­க­ளி­லும் எம்­மால் காணக்­கூ­டி­ய­தாக இருக்­கும். அதன் பெரும் பயன்­களை தென்­னி­லங்கைக்
கட்­சி­க­ளும் முஸ்­லீம் கட்­சி­க­ளுமே அனு­ப­விக்­கக் கூடும்.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பின் ஒரு­சில தனி நபர்­க­ளின் செயற்­பா­டு­கள்­தான், இந்­தக் குழப்­பங்­க­ளுக்கு கார­ணம் எனக் கூறி இல­கு­வா­கக் கடந்து போய்­விட முடி­யாது. இனி­
வ­ரும் காலங்­க­ளில் தமிழ் தேசி­யத்­துக்கு ஏற்­ப­டப்­போ­கும் பார­தூ­ர­மான பின்­ன­டை­வு­க­ளுக்கு தமிழ் த் தலை­மை­கள் ஒவ்­வொ­ரு­வ­ரும் பொறுப்­பா­ளி­க­ளாக வேண்டி ஏற்­பட்­டுள்­ளது.

ஒரு பொது மன­நி­லை­யோடு, மக்­கள் நலன் சார்ந்து செய­லாற்­று­கின்ற செய­லூக்­கம் மிக்­க­வர்­க­ளாக, தமக்­குள் ஐக்­கிய படு­கின்ற ஒரு கூட்­ட­மாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வர­வேண்­டும் என்­ப­தும், எதிர்­கா­லத்­தில் தமிழ்த் தலை­மை­கள் ஆக்­க­பூர்­வ­மாகச் செயற்­பட்டு, தமிழ்த் தேசி­யத்தைப் போசித்து வளர்க்க வேண்­டும் என்­ப­துமே தமிழ் மக்­க­ளின் பெரு­ வி­ருப்­பா­கும்.

http://newuthayan.com/story/45619.html

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, நவீனன் said:

ஒரு பொது மன­நி­லை­யோடு, மக்­கள் நலன் சார்ந்து செய­லாற்­று­கின்ற செய­லூக்­கம் மிக்­க­வர்­க­ளாக, தமக்­குள் ஐக்­கிய படு­கின்ற ஒரு கூட்­ட­மாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வர­வேண்­டும் என்­ப­தும், எதிர்­கா­லத்­தில் தமிழ்த் தலை­மை­கள் ஆக்­க­பூர்­வ­மாகச் செயற்­பட்டு, தமிழ்த் தேசி­யத்தைப் போசித்து வளர்க்க வேண்­டும் என்­ப­துமே தமிழ் மக்­க­ளின் பெரு­ வி­ருப்­பா­கும்.

 

 காலங்கடந்த ஞானம். கைகொடுக்கும் என்பதற்கில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.