Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத்தை பேனா மூலம் வழங்க அரசாங்கம் முயற்சி : மஹிந்த கூறுகிறார்

Featured Replies

ஈழத்தை பேனா மூலம் வழங்க அரசாங்கம் முயற்சி : மஹிந்த கூறுகிறார்

ra-c97b1b9de5e9ed4c855435de2298fc2952c517b9.jpg

 

(எம்.ஆர்.எம்.வஸீம்)

பிர­பா­கரன் யுத்­தத்­தினால் பெற்­றுக்­கொள்ள முடி­யா­மல்­போன ஈழத்தை அர­சாங்கம் பேனா­வினால் வழங்க முயற்­சிக்­கின்­றது. ஒரு­முறை ஏமாந்­து­விட்ட நாங்கள் இரண்டாம் முறையும் ஏமாந்­து­வி­ட­மாட்டோம்.

உள்­ளூ­ராட்சி மன்­ற­தேர்­தலில் அர­சாங்­கத்­துக்கு பாடம்­பு­கட்ட மக்கள் எம்­முடன் கைகோர்க்க வேண்டும் கட்­சியின் சின்­னத்­தை­விட கொள்­கையே முக்­கி­ய­மாகும். கட்­சியின் கொள்­கையை நாங்­களே பின்­பற்றி வரு­கின்றோம் என முன்னாள் ஜனா­தி­ப­தியும் குரு­ணாகல் மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மஹிந்த ராஜபக்ஷ் தெரி­வித்தார்.

நாட்டை மீண்டும் கட்­டி­யெ­ழுப்ப அனை­வரும் ஒன்­று­ப­டுவோம் எனும் தொனிப்­பொ­ருளில் கூட்டு எதிர்க்­கட்சி நடத்­திய  மக்கள் பேரணி நேற்று அநு­ரா­த­பு­ரத்தில் இடம்­பெற்­றது. முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷ் தலை­மையில் இடம்­பெற்ற மக்கள் பேரணில் கூட்டு எதிர்க்­கட்­சியை சேர்ந்த பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் பலரும் கலந்து கொண்­ட­துடன் பாரிய மக்கள் கூட்­டமும் கலந்­து­கொண்­டி­ருந்­தது.

பேர­ணியில் கலந்­து­கொள்­வ­தற்கு முன்னர் மஹிந்த ராஜபக்ஷ் நேற்று காலை அநு­ரா­த­புரம் ஸ்ரீம­கா­போதி விகா­ரை­யில்யில் வழி­பட்­ட­துடன் அநு­ரா­த­புரம் றுவன்­வெளி சாய விகா­ரையில் வழி­பட்­ட­பின்னர் அங்கு அரச மர­மொன்­றையும் நாட்டி வைத்தார். பின்னர் மாலை 2 மணி­ய­ளவில் அநு­ரா­த­புரம் சல்­காது மைதா­னத்தில் இடம்­பெற்ற மக்கள் பேர­ணியில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரை­யாற்­று­கையில்,

அர­சாங்கம் அடுத்­த­வ­ரு­டத்­துக்­காக முன்­வைத்­துள்ள வர­வு-­செ­லவுத் திட்­டத்தில் மக்­க­ளுக்கு எவ்­வித மானி­யமும் வழங்­கப்­ப­ட­வில்லை. ஆனால் பிய­ருக்­கான விலை குறைக்­கப்­பட்­டுள்­ளது. சாதா­ரண மக்கள் பயன்­ப­டுத்தும் மூக்குக் கண்­ணா­டிக்­குக்­கூட வரி­வி­திக்­கப்­பட்­டுள்­ளது. மக்­களின் எதிர்ப்­புக்­க­ளையும் மீறி ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு பிர­தமர் பத­வியை வழங்­கி­யதன் விளை­வா­கத்தான் மக்கள் என்று இந்த நிலைக்குத் தள்­ளப்­பட்­டுள்­ளனர்.

அத்­து­டன்­ம­ஹிந்த ரணி­லுடன் டீல் போடு­வ­தாக தெரி­வித்­து­வந்த அர­சாங்­கத்தில் இருப்­ப­வர்கள் தற்­போது  மைத்­தி­ரி­யுடன் டீல் போடு­வ­தாக தெரி­விக்­கின்­றனர். ஆனால் இந்த மஹிந்த ரணி­லு­டனோ மற்­ற­வ­ரு­டனோ அல்­லது வேறு யாரு­டனும் டீல் போடு­வ­தில்லை. மக்­க­ளு­டனே டீல் போடும் என்­பதை தெரி­வித்­துக்­கொள்­கின்றேன்.

நல்­லாட்சி அரசை அமைத்து ஒரு மாத­கா­லத்­தி­லேயே திருட ஆரம்­பித்­து­விட்­ட­தாக மைத்­திரி கூறி­யுள்ளார். ஆனால், எங்­க­ளுடன் 10வருடம் இருந்­து­விட்டு பொது வேட்­பா­ள­ராக சென்ற பின்­னர்தான் நாங்கள் திரு­டர்கள் என்று கூறினார். இதுதான் நிலைமை. இனியும் இந்த அரசால் மக்­களை ஏமாற்ற முடி­யாது. மேலும் நாட்­டுக்­கு­வரும் முத­லீட்­டா­ளர்கள் பயந்­தோ­டு­கின்­றனர். பொரு­ளா­தாரம் பாரிய பின்­ன­டவை சந்­தித்­துள்­ளது. 10 வரு­டத்தில் நாங்கள் பெற்­றுக்­கொண்­டி­ருந்த கடனை அர­சாங்கம் யுத்தம் இல்­லாத சூழலில் 3 வரு­டங்­களில் பெற்­றுக்­கொண்­டுள்­ளது . அத்­துடன், நாங்கள் ஆரம்­பித்த அபி­வி­ருத்தித் திட்­டங்­க­ளைக்­கூட பூர்த்தி செய்ய முடி­யாத ஒரு அர­சா­க­வுள்­ளது.

அத்­துடன் இடம்­பெ­ற­வுள்ள உள்­ளூ­ராட்சி மன்ற தேர்தல் மக்கள் போராடிப் பெற்­ற­தாகும். மக்­க­ளுக்கு வாக்­க­ளித்த எத­னையும் இந்த அர­சாங்கம் செய்­யப்­போ­வ­தில்லை. அதனால் தேர்­தலில் அர­சாங்­கத்­துக்கு நல்­ல­தொரு  பாடத்தை புகட்ட வேண்­டிய பொறுப்பு மக்­க­ளுக்கு உள்­ளது. அர­சாங்கம் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு பதி­லாக நல்­லி­ணக்­கத்தை சீர்­கு­லைக்கும் சமஷ்டி அர­ச­மைப்­பொன்றை கொண்­டு­வர முயற்­சிகள் எடுக்­கப்­பட்டு வரு­கின்­றன. இரா­ணு­வத்­தினர் இரத்தம் சிந்தி ஒரு­மைப்­ப­டுத்­திய தாய்­நாட்டை தமிழ் அடிப்­ப­டை­வா­தி­க­ளுக்கு கூறு­போட நினைக்­கின்­றனர்.

மேலும் பிர­பா­க­ரனால் 30 வருடம் யுத்தம் செய்து பெற முடி­யா­து­போன ஈழத்தை பேனாவின் மூலம் கொடுக்க தயா­ரா­கி­விட்­டனர். அதனால் ஒரு­முறை ஏமாந்­து­விட்டோம். இரண்டாம் முறையும் ஏமாற மாட்டோம். அரசை தோற்­க­டிக்க மக்கள் எம்­முடன் கைகோர்க்க வேண்டும். சிறி­லங்கா சுதந்­திர கட்­சியின் கொள்கை இருப்­பது எம்­மி­டத்­தி­லாகும். பண்­டா­ர­நா­யக்­க­வினால் ஏற்­ப­டுத்­தப்­பட்ட சிறி­லங்கா சுதந்­திர கட்­சியின் கொள்­கையை இன்று ஐக்­கிய தேசிய கட்­சிக்கு தாரை­வார்த்­துள்­ளனர். கட்­சியின் சின்­னத்­தை­விட கொள்­கையே முக்­கியம். கட்­சியின் கொள்­கையை நாங்­களே பாது­காத்து வரு­கின்றோம் என்றார்.

விமல் வீர­வன்ச

தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் தலைவர் விமல் வீர­வன்ச தெரி­விக்­கையில், சர்­வ­தே­சத்தை வெற்­றி­கொண்­டுள்­ள­தாக அர­சாங்கம் தெரி­விக்­கின்­றது. ஆனால் நாட்டில் எரி­பொருள் இல்­லாமல் போன­போது அவ­ச­ரத்­துக்­கேனும் எரி­பொ­ருளை பெற்­றுக்­கொள்ள எந்த சர்­வ­தேச நாட்­டி­னதும் உத­வியை பெற்­றுக்­கொள்ள முடி­யாமல் போயுள்­ளது. ரணில் விக்­ர­ம­சிங்க யுத்­தத்தால் பிரிக்க முடி­யா­மல்­போன நாட்டை சட்டத்தால் பிரிக்க முயற்சிக்கின்றார். அதனால் மக்கள் விரோத அரசாங்கத்தை பாராளுமன்றத்துக்கு உள்ளும் வெளியிலும் தோற்கடிக்க ஒன்றுபடவேண்டும்.

தினேஷ் குணவர்த்தன

பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவிக்கையில், 2002ஆம் ஆண்டு ரணிலுக்கு அதிகாரம் கிடைத்ததுடன் அவர் ரணில் பிரபா ஒப்பந்தத்தை செய்தார். தற்போது நாட்டை துண்டாடும் சமஷ்டி முறையை ஏற்படுத்தப்போகின்றார். அதனை தோற்கடிக்கும் முதலாவது போராட்டமாக எதிர்வரும் தேர்தலை பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்றார்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-11-13#page-1

  • கருத்துக்கள உறவுகள்

மின்சார நாற்காலியிலிருந்து காப்பாற்றி விட்டதால் காப்பாற்றியவர்களைப் பார்த்து இப்பிடித் தைரியமாக  கூவுகிறார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.