Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஜிம்பாப்வேவில் அதிகாரத்தை கைப்பற்றியது ராணுவம்: அதிபர் முகாபே 'கைது'

Featured Replies

ஜிம்பாப்வேவில் ராணுவப் புரட்சி?- அரசு தொலைக்காட்சியை கைப்பற்றிய ராணுவம்

ஜிம்பாப்வேவில் ராணுவ புரட்சி? Image captionஅரசு தொலைக்காட்சியில் தோன்றிய ராணுவ அதிகாரி அறிக்கையை வாசித்தார்

ஜிம்பாப்வேவில் அரசியல் நெருக்கடி வளர்ந்துவரும் நிலையில் அந்நாட்டு ராணுவ வீரர்கள், அரசு தொலைக்காட்சி நிறுவனமான இசட்.பி.சியின் தலைமை அலுவலகத்தைக் கைப்பற்றியுள்ளனர்.

தொலைக்காட்சியில் தோன்றிய ராணுவத்தினர்,''குற்றவாளிகளை குறிவைத்து" தாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிக்கையை வாசித்தனர்.

இது, அரசைக் கைப்பற்றும் ராணுவ நடவடிக்கையல்ல எனக் கூறியுள்ள ராணுவத்தினர், அதிபர் ராபர்ட் முகாபே பாதுகாப்பாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் ஜிம்பாப்வேவின் தலைநகரான ஹராரேவில் நடந்துள்ளது.

ஜிம்பாப்வேவில் ராணுவ புரட்சி?படத்தின் காப்புரிமைREUTERS

நகரின் வடக்கு புறநகர் பகுதியில், பயங்கர துப்பாக்கிச்சூடு மற்றும் பீரங்கிகளின் சத்தங்களும் கேட்டுள்ளன.

இது குறித்து 93 வயதான அந்நாட்டு அதிபர் ராபர்ட் முகாபேவிடம் இருந்து இதுவரை எந்த வார்த்தையும் வரவில்லை.

ராணுவ புரட்சி எனக் கூறப்படுவதை மறுக்கும் தென் ஆப்ரிக்காவில் உள்ள ஜிம்பாப்வே தூதர் ஐசக் மோயோ, அரசு 'நிலையாக' உள்ளது என கூறியுள்ளார்.

ராணுவத் தலையீட்டுக்கான சாத்தியங்கள் இருப்பதாக அந்நாட்டு ராணுவ தலைவர் எச்சரிக்கை விடுத்தபிறகு, ஜிம்பாப்வேவின் ஆளுங்கட்சி ராணுவ தலைவர் மீது 'துரோக' குற்றச்சாட்டுகளைச் சுமத்திய பிறகு இங்கு நிலைமை மோசமானது.

ராணுவ தலைவர் சிவென்காபடத்தின் காப்புரிமைAFP Image captionராணுவ தலைவர் சிவென்கா

நாட்டின் துணை அதிபரை அதிபர் ராபர்ட் முகாபே நீக்கியபிறகு, ராணுவத் தலைவர் சிவென்கா, அதிபருக்குச் சவால் விடுத்தார்.

அதிபர் ராபர்ட் முகாபேவின் 'ஜானு பிஃப்' கட்சியில் இருப்பவர்கள் களையெடுக்கப்படுவதை தடுத்து நிறுத்த ராணுவம் செயல்பட தயாராக உள்ளது என சிவென்கா கூறியிருந்தார்.

செவ்வாய்க்கிழமையன்று ஆயுதம் தாங்கிய வாகனங்கள் ஹராரேவின் புறநகர் சாலைகளில் நிலைகொண்டதால், பதற்றங்கள் மேலும் அதிகரித்தது.

செவ்வாய்க்கிழமை மாலை ஹராரேவில் உள்ள இசட்.பி.சி அலுவலகத்தை ராணுவ வீரர்கள் கைப்பற்றியபோது, சில ஊழியர்கள் ராணுவ வீரர்களால் இழுத்துத் தள்ளப்பட்டனர் என தகவல்கள் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளது.

அதிபர் ராபர்ட் முகாபே உடன் அவரது மனைவி கிரேஸ் முகாபேபடத்தின் காப்புரிமைAFP Image captionஅதிபர் ராபர்ட் முகாபே உடன் அவரது மனைவி கிரேஸ் முகாபே

ஊழியர்கள் '' கவலைப்பட வேண்டாம்'' என்றும், அலுவலகத்தைப் பாதுகாக்கவே தாங்கள் வந்துள்ளதாகவும் ராணுவ வீரர்கள் கூறியதாக தகவல்கள் கூறுகின்றன.

தற்போது நீக்கப்பட்டுள்ள துணை அதிபர் மனன்காக்வே, நாட்டின் அடுத்த அதிபராவார் என முன்பு பார்க்கப்பட்டது. ஆனால், அதிபர் ராபர்ட் முகாபேவின் மனைவி கிரேஸ் முகாபேதான், அடுத்த அதிபருக்கான போட்டியில் முதலிடத்தில் இருக்கிறார் எனது தற்போது தெளிவாகியுள்ளது.

மனன்காக்வே மற்றும் கிரேஸ் முகாபே இடையிலான சண்டை ஜானு பிஃப் கட்சிக்குள் பிளவை ஏற்படுத்தியுள்ளது.

மனன்காக்வேவிற்கு ஆதரவளிக்காதவர்களுக்கு அவரின் கூட்டாளிகள் கொலை மிரட்டல் விடுத்து வருவதாகக் கடந்த மாதம் கூறிய கிரேஸ் முகாபே, ராணுவ புரட்சிக்கு வாய்ப்பிருப்பதாகவும் கூறியிருந்தார்.

http://www.bbc.com/tamil/global-41993041

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

ஜிம்பாப்வேவில் அதிகாரத்தை கைப்பற்றியது ராணுவம்: அதிபர் முகாபே 'கைது'

ராபர்ட் முகாபேபடத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionராபர்ட் முகாபே

ஜிம்பாப்வேவின் அதிகாரத்தை அந்நாட்டு ராணுவம் கைப்பற்றியுள்ளது. 1980 முதல் அந்நாட்டு அதிபராக இருந்த ராபர்ட் முகாபே பாதுகாப்பாக உள்ளதாக ராணுவம் கூறியுள்ளது.

'' சமூக மற்றும் பொருளாதார துன்பங்களை'' உருவாக்கிய முகாபேவுக்கு நெருக்கமானவர்களை தாங்கள் இலக்கு வைத்துள்ளதாக அரசு தொலைக்காட்சியை கைப்பற்றிய பிறகு ராணுவ செய்தி தொடர்பாளர் அறிவித்தார்.

தொலைக்காட்சியில் தோன்றி அறிக்கை ஒன்றினை வாசித்த மேஜர் ஜெனரல், இது ஆட்சிக்கவிழ்ப்பு இல்லை என கூறினார். மேலும், முகாபே பாதுகாப்பாக இருப்பதாகக் கூறினார். இச்சம்பவம் ஜிம்பாப்வேவின் தலைநகரான ஹராரேவில் நடந்துள்ளது.

நகரின் வடக்கு புறநகர் பகுதியில், பயங்கர துப்பாக்கிச்சூடு மற்றும் பீரங்கிகளின் சத்தங்களும் கேட்டுள்ளன.

இது குறித்து 93 வயதான அந்நாட்டு அதிபர் ராபர்ட் முகாபேவிடம் இருந்து இதுவரை எந்த வார்த்தையும் வரவில்லை.

ஜிம்பாப்வேபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

அரசு தொலைக்காட்சி நிறுவனமான இசட்.பி.சியின் தலைமை அலுவலகத்தைக் ராணுவத்தினர் முதலில் கைப்பற்றியுள்ளனர்.

ராணுவ புரட்சி எனக் கூறப்படுவதை மறுக்கும் தென் ஆப்ரிக்காவில் உள்ள ஜிம்பாப்வே தூதர் ஐசக் மோயோ, அரசு 'நிலையாக' உள்ளது என கூறியுள்ளார்.

ராணுவத் தலையீட்டுக்கான சாத்தியங்கள் இருப்பதாக அந்நாட்டு ராணுவ தலைவர் எச்சரிக்கை விடுத்தபிறகு, ஜிம்பாப்வேவின் ஆளுங்கட்சி ராணுவ தலைவர் மீது 'துரோக' குற்றச்சாட்டுகளைச் சுமத்திய பிறகு இங்கு நிலைமை மோசமானது.

ராணுவ தலைவர் சிவென்காபடத்தின் காப்புரிமைAFP Image captionராணுவ தலைவர் சிவென்கா

நாட்டின் துணை அதிபரை அதிபர் ராபர்ட் முகாபே நீக்கியபிறகு, ராணுவத் தலைவர் சிவென்கா, அதிபருக்குச் சவால் விடுத்தார்.

அதிபர் ராபர்ட் முகாபேவின் 'ஜானு பிஃப்' கட்சியில் இருப்பவர்கள் களையெடுக்கப்படுவதை தடுத்து நிறுத்த ராணுவம் செயல்பட தயாராக உள்ளது என சிவென்கா கூறியிருந்தார்.

செவ்வாய்க்கிழமையன்று ஆயுதம் தாங்கிய வாகனங்கள் ஹராரேவின் புறநகர் சாலைகளில் நிலைகொண்டதால், பதற்றங்கள் மேலும் அதிகரித்தது.

செவ்வாய்க்கிழமை மாலை ஹராரேவில் உள்ள இசட்.பி.சி அலுவலகத்தை ராணுவ வீரர்கள் கைப்பற்றியபோது, சில ஊழியர்கள் ராணுவ வீரர்களால் இழுத்துத் தள்ளப்பட்டனர் என தகவல்கள் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளது.

அதிபர் ராபர்ட் முகாபே உடன் அவரது மனைவி கிரேஸ் முகாபேபடத்தின் காப்புரிமைAFP Image captionஅதிபர் ராபர்ட் முகாபே உடன் அவரது மனைவி கிரேஸ் முகாபே

ஊழியர்கள் '' கவலைப்பட வேண்டாம்'' என்றும், அலுவலகத்தைப் பாதுகாக்கவே தாங்கள் வந்துள்ளதாகவும் ராணுவ வீரர்கள் கூறியதாக தகவல்கள் கூறுகின்றன.

தற்போது நீக்கப்பட்டுள்ள துணை அதிபர் மனன்காக்வே, நாட்டின் அடுத்த அதிபராவார் என முன்பு பார்க்கப்பட்டது. ஆனால், அதிபர் ராபர்ட் முகாபேவின் மனைவி கிரேஸ் முகாபேதான், அடுத்த அதிபருக்கான போட்டியில் முதலிடத்தில் இருக்கிறார் எனது தற்போது தெளிவாகியுள்ளது.

மனன்காக்வே மற்றும் கிரேஸ் முகாபே இடையிலான சண்டை ஜானு பிஃப் கட்சிக்குள் பிளவை ஏற்படுத்தியுள்ளது.

மனன்காக்வேவிற்கு ஆதரவளிக்காதவர்களுக்கு அவரின் கூட்டாளிகள் கொலை மிரட்டல் விடுத்து வருவதாகக் கடந்த மாதம் கூறிய கிரேஸ் முகாபே, ராணுவ புரட்சிக்கு வாய்ப்பிருப்பதாகவும் கூறியிருந்தார்.

http://www.bbc.com/tamil/global-41993041

  • தொடங்கியவர்

ஜிம்பாப்வே: ராணுவத்தின் அடுத்த நடவடிக்கை என்ன?; காத்திருக்கும் குடிமக்கள்

ஜிம்பாப்வே: ராணுவத்தின் அடுத்த நடவடிக்கை என்ன?; காத்திருக்கும் குடிமக்கள்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

ஜிம்பாப்வேயில் அதிபரின் அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியுள்ள நிலையில், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் என்ன என்பதை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் அந்நாட்டு குடிமக்கள்.

ஜிம்பாப்வே அதிபர் ராபர்ட் முகாபேவின் அதிகாரத்தை கைப்பற்றி அவரை ராணுவம் தடுப்புக்காவலில் எடுத்துள்ளது ஆகியவை ஆட்சிக்கவிழ்ப்பு நடவடிக்கை போன்றே தோன்றுகிறது என்று ஆஃப்ரிக்க யூனியன் கருத்து தெரிவித்துள்ளது.

அதன் தலைவர் ஆல்பா கோண்ட், நாட்டில் அரசியலமைப்பு நிலை உடனடியாக திரும்ப ஆஃப்ரிக்கா யூனியன் கோரிக்கை விடுப்பதாக தெரிவித்துள்ளார்.

ஆனால், ஜிம்பாப்வே ராணுவமோ, ஆட்சிக்கவிழ்ப்பை நடத்தவில்லை என்றும், அதிபர் முகாபே பத்திரமாக இருப்பதாகவும், அவரை சுற்றியுள்ள குற்றவாளிகளை எதிர்த்து நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

முகாபேவுக்கு அடுத்து அதிபர் பதவியில் யார் வருவார்கள் என்ற அதிகார மோதல் ஏற்பட்டதையடுத்து ராணுவம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

கடந்த வாரம் ஜிம்பாப்வேயின் துணை அதிபர் எம்மர்சன் மனங்கேக்குவா பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அவரது நீக்கம், முகாபேவின் மனைவி கிரேஸ் அதிபர் பதவிக்கு வருவதற்கான சூழ்நிலையை உருவாக்கியது. அதே சமயம், ராணுவத்தின் மூத்த அதிகாரிகள் தாங்கள் ஓரங்கட்டப்படுவதை போன்று உணரும் சூழலுக்கும் தள்ளப்பட்டுள்ளனர்.

1980களில் பிரிட்டனிடமிருந்து ஜிம்பாப்வே விடுதலை பெற்றதிலிருந்து நாட்டின் அரசியலில் ஆதிக்கம் செலுத்து வருகிறார் 93 வயதாகும் அதிபர் முகாபே.

http://www.bbc.com/tamil/global-42006914

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.