Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பினாமி சட்டம்... சஃபேமா... ரெய்டுக்கு அடுத்த அஸ்திரங்கள் ரெடி!

Featured Replies

மிஸ்டர் கழுகு: பினாமி சட்டம்... சஃபேமா... ரெய்டுக்கு அடுத்த அஸ்திரங்கள் ரெடி!

 
 

 

ரெயின்கோட்டை உதறியபடியே நுழைந்த கழுகாரின் முகத்தை உற்றுப்பார்த்தோம். ‘‘சசிகலா குடும்பம்மீதான இந்த மெகா ரெய்டின் நோக்கம் என்ன? தமிழக மக்கள் மனதில் இருக்கும் இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லும்’’ என்றோம்.

‘‘அவர்களை ஒட்டுமொத்தமாக அரசியலிலிருந்து அகற்றுவதுதான் டெல்லியின் நோக்கம். ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு, அதற்கான பேச்சுவார்த்தைகள் பல கட்டங்களில் சசிகலா குடும்பத்துடன் நடத்தப்பட்டன. ஆனால், அவர்கள் மசியவில்லை. கட்சியை உடைத்து, அதிகாரத்தைப் பறித்து, சிறைக்கு அனுப்பியபிறகும் அவர்கள் ஒதுங்குவதாகத் தெரியவில்லை. முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் பன்னீர்செல்வமும் டெல்லி பி.ஜே.பி-யிடம் புலம்பிய புலம்பல்களை அடுத்தே இந்த ரெய்டுகள் வேகம்பிடித்தன.’’

p42b.jpg

‘‘என்ன புலம்பினார்களாம்?’’

“ ‘எங்களால் அந்தக் குடும்பத்தை எந்த வகையிலும் கட்டுப்படுத்த முடியவில்லை. போயஸ் கார்டன் வீட்டை நினைவு இல்லம் ஆக்குவோம் என்று அறிவித்தோம். ஆனால், அங்கே எங்களால் நுழையக்கூட முடியவில்லை.‘நமது எம்.ஜி.ஆர்’ நாளிதழ், ஜெயா டி.வி ஆகிய இரண்டுமே அவர்களிடம்தான் உள்ளன. அவற்றில் எங்களுக்கு எதிரான செய்திகள்தான் வருகின்றன. சாதாரண அ.தி.மு.க தொண்டர்கள், அதைத்தான் வேதவாக்காக நினைக்கிறார்கள். எங்களுக்குப் போட்டியாக எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை பல ஊர்களில் தினகரன் நடத்துகிறார். அதற்கு, எல்லா வகையிலும் பண உதவிகள் வருகின்றன. ஜெயலலிதாவின் சொத்துகள் அனைத்தும் அவர்களின் கைகளில் இருக்கின்றன. ஒருவர் போனால் இன்னொருவர் வந்து ஆதிக்கம் செலுத்துகிறார். மொத்தமாக அவர்களைத் துடைத்தெறிய வேண்டும்’ எனப் புலம்பினார்களாம். இதையடுத்தே ஸ்கெட்ச் துல்லியமாகப் போடப்பட்டது.’’

‘‘அதற்கு உதவியவர்கள் யார்?’’

‘‘சசிகலா குடும்பத்தின் உள்விவகாரங்கள் அறிந்த எடப்பாடி, பன்னீர்செல்வம், வைத்திலிங்கம் என்று பலர் உதவினாலும், மைத்ரேயன், அரவிந்த் பாண்டியன், கே.பி.முனுசாமி ஆகியோர்தான் பல விவரங்களை அள்ளிக்கொடுத்தவர்கள். கடந்த ஆறு மாதங்களாக, ஆவணங்களைத்தான் கைப்பற்றியது வருமானவரித் துறை. ஆனால், யார் யார் சசிகலாவின் உறவினர்கள், யார் யார் பினாமிகள் என்று துல்லியமாகச் சொல்லிக்கொடுத்தது  கே.பி.முனுசாமிதான்.’’

‘‘சரி, தினகரன் வீட்டில் எந்த ரெய்டும் நடக்கவில்லையே?’’

‘‘1995-ம் ஆண்டு, ஃ்பெரா வழக்கு அவர்மீது தொடரப்பட்ட காலத்திலிருந்தே அவரது கணக்கு வழக்குகள் வெளிப்படையானவை. அதனால், அவர் வீட்டில் புகுந்தால் ஒன்றும் தேறாது என்பது வருமானவரித் துறைக்குத் தெரியும். அதனால்தான், அவரின் சென்னை வீட்டில் ரெய்டு எதுவும் நடக்கவில்லை. புதுச்சேரி பண்ணை வீட்டில் மட்டும் ரெய்டு நடந்தது. இளவரசியின் வாரிசுகள்தான் அதிகம் குறிவைக்கப்பட்டனர்.’’

‘‘என்ன காரணம்?’’

‘‘சசிகலா பரோலில் வந்த சமயத்தில் உமது நிருபர், ‘கட்சிக்கு தினகரன்... ஆஸ்திக்கு விவேக்’ என எழுதி இருந்தாரே, அதே காரணம்தான்! பரோலில் வந்த சசிகலா, சொத்துகளை இளவரசியின் மகன் விவேக் பொறுப்பில் ஒப்படைத்தார். அதுபோல, விவேக்கின் சகோதரி கிருஷ்ணப்ரியாவின் பெயரிலும் சில சொத்துகள் பரிமாற்றம் செய்யப்பட்டன. இந்தத் தகவல்கள் டெல்லிக்குப் போகாமல் இருந்திருக்குமா? அதனால்தான் விவேக் வீட்டிலும், விவேக்கின் மாமனார் பாஸ்கர் வீட்டிலும் துருவித் துருவி சோதனைபோட்டனர். தினகரனே விவேக்கிடம் பணம் வாங்கித்தான் ஊர் ஊராகச் சென்று கூட்டங்களை நடத்திக்கொண்டிருக்கிறார். அதனால்தான் விவேக் குறிவைக்கப்பட்டார்.’’

p42.jpg

‘‘சோதனைகளில் என்ன கிடைத்ததாம்?’’

‘‘கிலோ கணக்கில் நகை, கோடிக்கணக்கில் பணம் என்று எதையும் எதிர்பார்த்து அதிகாரிகள் போகவில்லை. அவர்களின் கவனமெல்லாம் ஆவணங்களில்தான் இருந்தது. கைப்பற்றப்பட்டதில் மிக முக்கியமானவை, சொத்து மற்றும் கம்பெனி ஆவணங்கள்தான். 1,430 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டதற்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அவற்றை வைத்துத்தான் அடுத்த ஆட்டத்தை ஆட உள்ளது டெல்லி. அதைத் தெரிந்துகொண்டுதான் தினகரனும், ‘என் உறவினர்கள் ஏதாவது வைத்திருந்தால், அதற்கு நான் எப்படிப் பொறுப்பாக முடியும்’ எனப் பின்வாங்கினார்.’’

‘‘டெல்லியின் அடுத்த ஆட்டம் என்னவாக இருக்கும்?’’

‘‘சில நாள்களுக்குமுன்பு இமாசலப் பிரதேசத்தில் பேசிய பிரதமர் மோடி, ‘யாருடைய பினாமி சொத்துகளும் தப்பாது’ என்று எச்சரிக்கை விடுத்தார் அல்லவா! அதுதான் நடக்கப்போகிறது. எடுத்துச்சென்ற ஆவணங்கள் மூலம், பினாமிகள் பெயரில் உள்ள சொத்துகளெல்லாம் பினாமி தடைச்சட்டம் மூலம் முடக்கிவைக்கப்படும். அதன்மூலம் சசிகலா குடும்பத்தின் முதுகெலும்பை உடைப்பதுதான் அடுத்த ஆட்டம். தினகரன் இந்த நேரத்திலும் கலங்காமல் இருப்பதுபோலக் காட்டிக்கொள்கிறார். ஆனால், அதையும் மீறி அவரிடம் வாட்டம் தெரிகிறது. மாற்றுக் கட்சியினர் தினகரனுக்கு ஆதரவாகவும், மத்திய அரசைக் கண்டித்தும் பேசியது அவரைக் கொஞ்சம் உற்சாகப்படுத்தியுள்ளது.’’
‘‘இதற்குப் பிறகும் தினகரன் ஓயவில்லை என்றால் என்ன நடக்கும்?’’

‘‘அமலாக்கத்துறை அடுத்து களமிறங்கும். அதன்பின் பினாமி சட்டத்தின்படி நடவடிக்கை பாயும் என்கிறார்கள். 2016 நவம்பரில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டபோது, இந்தச் சட்டத்தையும் அமல்படுத்தியது மத்திய அரசு. இந்தச் சட்டத்தின்படி போடப்பட்ட முதல் வழக்கைச் சந்தித்த அரசியல்வாதி, முன்னாள் பீகார் முதல்வர் லாலு பிரசாத் யாதவ். அதேவழியில், தினகரனையும் வளைக்கப் போகிறார்கள். இந்தச் சட்டத்தின்படி, பினாமி பெயரில் வாங்கப்பட்ட சொத்துகள் பறிமுதல் செய்யப்படும். அப்படிச் சொத்து வாங்கியவருக்கு, அந்தச் சொத்தின் மதிப்பில் 25 சதவிகிதம் வரை அபராதம் விதிக்கலாம்; கூடவே ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கவும் வழி இருக்கிறது. இதேபோல, அந்நியச் செலாவணி மோசடி செய்பவர்களைக் குறிவைக்கும் ‘சஃபேமா’ என்ற சட்டத்தையும் பயன்படுத்தலாமா என ஆலோசித்துவருகிறார்கள். அடுத்தடுத்து இந்த அஸ்திரங்களையே சசிகலா குடும்பம்மீது பிரயோகிக்க உள்ளார்கள்’’ என்ற கழுகார், ரெயின் கோட்டை எடுத்து அணிந்துகொண்டார். பிறகு, கோட்டின் உள்பாக்கெட்டிலிருந்து சில குறிப்புகளை எடுத்துக்கொடுத்துவிட்டு, வேகமாகப் பறந்தார்.

படங்கள்: கே.குணசீலன்,
வி.ஸ்ரீனிவாசுலு


கழுகார் கான்ஃபிடென்ஷியல் நோட்

dot4.png வருமானவரித் துறையினர் விவேக் வீட்டுக்கு வந்தபோது, அவரின் மைத்துனர் பிரபுவும் வீட்டில் இருந்துள்ளார். அவர், ‘‘எனக்கும் இந்தச் சோதனைக்கும் சம்பந்தமில்லை. நான் வெளியே போகலாமா?’’ எனக் கேட்டுள்ளார். ஆனால், ‘‘ஜாஸ் சினிமாஸ் நிறுவனத்தை நீங்கள்தான் மேற்பார்வை செய்கிறீர்கள் என்று எங்களுக்குத் தெரியும். உங்களையும் விசாரிக்க வேண்டும்’’ என உட்கார வைத்துவிட்டனர். உயர் ரக நாய்கள் இரண்டை வளர்த்து வருகிறார், விவேக். அவற்றை மட்டும்தான் வீட்டை விட்டு வெளியே கொண்டுசெல்ல அனுமதி அளித்துள்ளனர்.

dot4.png ‘‘2006-ம் ஆண்டு ஜெயலலிதா, பெருமதிப்புள்ள சொத்து ஒன்றை வாங்கினார். ‘அந்தச் சொத்து பற்றி உங்களுக்கு நன்றாகத் தெரியும். அது யார் பெயரில் உள்ளது? அதன் ஆவணங்கள் எங்கே உள்ளன?’ என்ற கேள்வியையே நான்கு நாள்களும் வெவ்வேறுவிதமாக விவேக்கிடம் கேட்டார்கள்’’ என நெருங்கிய வட்டாரங்களில் சொல்கிறார்கள்.

p42c.jpg

dot4.png 2016 நவம்பரில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டபோது விவேக் செய்த பரிமாற்றங்கள், வெளிமாநிலங்களில் அவர் செய்த முதலீடுகள், வாங்கிய கார்கள் உள்ளிட்ட சில விஷயங்களைத்தான் கேள்விகளாகத் துளைத்தார்களாம்.

dot4.png போயஸ் கார்டனில் ஜெயலலிதாவின் பி.ஏ-வாக இருந்த பூங்குன்றன், சசிகலா சிறைக்குச் சென்றபிறகு எங்கும் தலைகாட்டவில்லை. சசிகலா பரோலில் வந்தபோதுதான் அவரைப் பார்க்கமுடிந்தது. அந்த நேரத்தில் பூங்குன்றனிடம் சில பல கையெழுத்துகள் வாங்கப்பட்டதாகவும், அதன்பிறகு அவர் களையிழந்து காணப்பட்டதாகவும் சொல்கிறார்கள். அந்தக் கையெழுத்துகள் தொடர்பாகத்தான் அவரிடம் விசாரணை நடந்ததாம்.

dot4.png 72 மணி நேரம், 100-க்கும் மேற்பட்ட கேள்விகள் என ரெய்டில் திவாகரனைத் துளைத்தெடுத்தனர். திவாகரன், அவரின் கல்லூரியில்  பேராசிரியராகப் பணியாற்றும் அன்புக்கரசி, கல்லூரியை நிர்வகித்து வரும் விநாயகம், டிரைவர் வினோத் ஆகியோரை முழுமையான விசாரணை வளையத்தில் கொண்டு வந்தார்கள். கல்லூரியின் பெண்கள் விடுதியில் ஓர் அறை மட்டும் பூட்டப்பட்டிருந்தது. பூட்டை உடைத்து உள்ளே சென்ற அதிகாரிகள், அங்கிருந்து நிறைய ஆவணங்களை எடுத்துள்ளனர். அவற்றை வைத்தே திவாகரன் மகள் ராஜமாதங்கி வீட்டுக்கும் சோதனைக்குச் சென்றனர். ஆவணங்களில் 16 பண்டல்களை மட்டும் தங்களது வாகனத்தில் ஏற்றிச் சென்றுள்ளார்கள். மீதியுள்ள ஆவணங்கள் மற்றும் பொருள்களைக் கல்லூரியில் 8-ம் நம்பர் அறையில் வைத்துப் பூட்டி சீலிட்டுவிட்டுச் சென்றுள்ளார்கள் அதிகாரிகள்.

dot4.pngl ‘அ.தி.மு.க-வின் இரண்டு அணிகளும் இணைய முயற்சி செய்ததால்தான் இந்த ரெய்டு நடைபெற்றதா’ என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அறிக்கை விட்டிருந்தார். அந்த அறிக்கை பற்றி மத்திய உளவுத்துறையினர் தீவிரமாக விவாதித்தனராம். குறிப்பாக, பன்னீர் தரப்பிலிருந்து பெங்களூரு சிறைக்கு ஒரு தூதர் போயிருந்ததாக வெளியான செய்தியும் இதனுடன் இணைத்துப் பேசப்பட்டதாம்.

dot4.png பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்துக்கு, சைக்கிள் சப்ளை செய்யும் நிறுவனத்தை முடிவு செய்யும் டெண்டரில் பல விதிமீறல்கள் நடந்துள்ளனவாம். சைக்கிள் தயாரிப்பில் அனுபவமே இல்லாத சில நிறுவனங்களும் உள்ளே நுழைந்துவிட்டனவாம். அவர்கள் ‘சைக்கிள்’ என்ற பேனரில் எதைக் கொடுப்பார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.   

https://www.vikatan.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.