Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மனிதரை நினைத்து விட்டால்......

Featured Replies

தண்ணீர் ஊற்றியோ வளர்த்தோம் இப்பயிரைக் கண்ணீரால் காத்தோம் கருகத் திருவுளமோ" என்று பாரதி பாடியது எமக்கு மிக நன்றாகவே பொருந்தும். தமிழன் தலைக்கு மேலே குண்டுகளும் காலுக்குக் கீழே தசைத் துண்டுகளும் பறக்கும்போது தலையில்லா பிண்டங்களால் தெருக்கள் நிறைந்திருக்கும் இவ்வேளையிலே நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்று எங்களை நாங்களே ஒரு தரம் கேட்க மாட்டோமா?

"வீசும் காற்றுக்கும் சிறை

மண்ணின் மேனி எங்கும் அன்னியன் அடிச்சுவடு

முற்றத்தக்கு வந்திருக்கிறது குற்றமுள்ள பகை

ஏண்ணை புசிய மரத்திலேறி என்னடா விளையாட்டு"

என்று புதுவை இரத்தினதுரை குமுறுகிறார்.

உன் வீட்டு வாசலுக்கு வந்து சாவு விழும் வரையிலும் ஆடு பாடு கூத்தாடு மது அருந்து ஏது நடந்தால் எனக்கென்ன என்று வாழ்வாயா? இப்படித்தான் உனக்கு வாழ்க்கை வரவேண்டும் என்று ஆராதிக்கிறாய்.

"தானுண்டு தன் பெண்டிர் பிள்ளை உண்டு என்று வாழும் கடுகுள்ளம் கொண்டோர்" என்று பாவேந்தன் பாரதிதாசன் கூறுவது போல வாழ்வதுவா வாழ்க்கை? "சொந்தச் சோதரர்கள் தீயினில் வேதல் கண்டும் சிந்தை கலங்காரடி கிளியே" என பாரதி கூறயதும் உனக்காகவா மனிதா?

அண்மை நாட்களிலே ஒரு வானொலியும் தொலைக்காட்சியும் ஒரு விளம்பரத்தை திரும்பத் திரும்ப ஒளி ஒலிபரப்புகிறது. சித்திரைத்திருவிழாவாம்! நுழைவுச் சீட்டைப் பெற்றால் தென்னிந்தியப் பிரபலங்களோடு சேர்ந்து நீங்களும் கூத்தாடலாமாம்!

என்ன இது நாடே தீயிலே வேகும் நேரத்திலா இந்தக் களியாட்டம் என்று எண்ணத் தோன்றவில்லையா? பக்கத்திலே வித்துடல் கிடப்பினும் இவர் பாராது விழா எடுப்பாரா?

காதலர் தினம் கொண்டாடுவார் வானெலி தொலைக்ககாட்சிகள் தோறும் இதற்க்காக கவிதையும் விவாதங்களும் செய்வோம், கேட்டால் தமிழர் நாம் காதலையும் வீரத்தையும் இரு கண்களெனப் போற்றுகின்றவர் என்று இலக்கியக் காலத்தை சான்று பகிர்வோம்.

அன்றாடம் பல தலைகள், அதுவும் அப்பாவிகளினது உருண்டு கொண்டு இருக்கும் இவ் வேளையிலே நாம் அவர்களுக்காக அழுது வடித்து கண்ணீர் தான் சிந்த வேண்டாம், ஆனால் ஒரளவிற்காவது மவுனத் துளி திரட்டி அனுதாபங்களையாவது தெரிவிக்க வேண்டாமா?

ஏன் இப்படி நடக்கிறார்கள்? யார் யாரோ தென் இந்தியக் கூத்துக் காரர்களை எல்லாம் அமைத்து வந்து கேளிக்கை வைக்கிறார்கள் கேட்டால் சித்திரைத் திருவிழா என்று உள்ள ஊடகங்களிலே எல்லாம் பேரெடுப்பிலே விளம்பரம் செய்கிறார்;கள். உங்கள் வீட்டு முற்றத்திலே ஒரு சாவீடு நடை பெறும் போது எதிர் வீட்டுக்காரன் சின்ன மேளம் பிடித்து திருவிழா செய்தால் எப்பிடி இருக்கும் உங்களுக்கு?

"புதுவை சொன்னது போல மாய மான் பின்னே ஓடுகிறீர்கள் கவனம்" என்ற குரல் உங்கள் காதிலே கேட்கவில்லையா? உண்மையைச் சொல்லுங்கள் நீங்கள் உங்களது வியாபார முகத்துக்கு விடுதலை எனும் திரை தானே போட்டிருக்கிறீர்கள்?

நாள் தோறும் எண்ணற்ற எமது உறவுகள் கொல்லப் படுகையிலே உங்களாலே எப்படி முடிகிறது களியாட்டத் தேரிலே பவனி வர? எழுச்சி விழாக்களை ஏற்பாடு செய்து மக்களின் விழிப்புணர்வுக்கு வித்திடாது கேளிக்கை செய்து உணர்வுகளை மழுங்கடிக்கத் துரை போவதா?

ரோம் நகர் தீப்பற்றி எரிகையிலே பிடில் வாசித்த நீரோ மன்னன் போலவோ அல்லது மட்டக்களப்பிலே பல பேர் சுட்டுக் கொல்லப்பட்ட அந்த நேரத்திலே அந்த இடத்துக்கு டக்கிளசு தேவானாந்தா போய் நூல்கள் அன்பளிப்புச் செய்ததைப் போல இருக்கவில்லையா உங்களுக்கு இது?

இந்திய சுதந்திரப் போரின் போது கூட மக்கள் கூடிக் கூத்தாடினார்கள் தான.; ஆனால் அவைகள் வெள்ளையனை கேலி செய்தும் கிண்டல் செய்தும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்றுகின்ற கூத்துக்களாகவே இந்தன.

ஆனால் நீங்கள் மங்கிப்போனவருயும் சந்தை இழந்து போனவருமான தென் இந்திய திரை உலகத்தவரை தேடி அலைந்து பிடித்து வியாபாரம் பண்ணப் பார்க்கிறீர்கள். இதனால் எமது நோக்கமும் கொண்ட கொள்கையும் பாதை மாறி விடும் ஆபத்திருப்பதை உணர மறுக்கிறீர்கள்.

தனி ஒருவர் கோலகலமாக பிறந்த நாளோ புப்புனித நீராட்டு விழாவோ செய்வதையே தப்பென்று சுட்டிக்காட்டும் வேளையிலே நிறுவன மயப்படுத்தப்பட்ட அமைப்புக்கள் அதுவும் தமிழனுக்காக தோள் கொடுப்போம் தமிழுக்காக வாள் எடுப்போம் என்று வாய்க்கு வாய் சொல்லுகின்ற நீங்களே இத்தவறினைச் செய்யலாமா?

இன்னும் சிலரோ தமிழன் படும் இன்னல்களுக்கு அவன் போன சென்மப் பயனும் கரும வினையுமே காரணம் என்றும் செப்பித்திரிகிறாரகள்.

எனக்கத் தெரிந்து நடந்த சம்பவம் இது. அமெரிக்காவில் விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் வாங்கினார்கள் என்ற குற்றச் சாட்டிலே அமெரிக்கக் காவல் துறையினாலே கைது செய்யப்பட்ட ஒரு இளைஞனை வெளியே எடுத்துத் தருவதாக கூறி பத்தாயிரம் டொலர் கேட்டிருக்கிறார் ஒருவர். இதை நீங்கள் வாசிக்கும் போது இவ்வாறு வாக்குறுதி அளித்திருப்பவரை யாரோ ஒரு முக்கிய அரசியல் புள்ளி என நினைத்திருப்பீர்கள் ஆனால் உண்மை அதுவல்ல

அவர் கர்நாடக மானிலத்திலிருந்து வந்த ஒரு சாத்திரியாவார். அவர் அந்த இளைஞனிற்கு முன்வினைத் தோசம் இருப்பதாகவும், அதனாலேயே கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பதாகவும் அந்த இளைஞனின் உறவிர்களுக்கு கூறியுள்ளார்.

குறிப்பிட்ட இளைஞன் முற்பிறப்பில் கர்நாடகத்தில் பிறந்தான் என்றும், அங்கு ஒரு கன்னிப்பெண்ணை ஏமாற்றினான் இன்றும், அதன் பயனாகவே இந்தப் பிறப்பிலே அந்த இளைஞனுக்கு இத்தனை துன்பங்கள் வருவதாகவும் அந்த சாத்திரி மேலும் எடுத்து விட்டிருக்கிறார். அதன்படி அந்த முன்வினைத் தோசத்தை நீக்க ஒரு யாகத்தை கர்நாடகத்திலுள்ள கோவிலிலே நடாத்தி முடிக்கவேண்டும் என்றும், அதற்காகவே இவ்வளவு பணமும் தேவை என்று கேட்டிருக்கிறார் அந்த ஆசாமி.

இப்படித் தான் நமது அறியாமையினைப் பயன்படுத்தி பணம் கறக்க முனைபவர்களுக்கும், எது நடந்தாலும் எமக்கென்ன என நினைத்து வியாபாரம் செய்யத் துடிக்கும் வியாபாரிகளுக்கும் இடையிலே நின்று தான் எமது மண்ணை மீட்க வேண்டிய தேவை இருக்கிறது

எது எப்படியோ எமது சிக்கல்களையும் விடுதலைத் தாகத்தையும் பயன்படுத்தி பணம் கறக்க பலர் முனைகிறார்கள் என்பது மட்டும் இப்போதைக்குப் புலனாகிறது.

...................நன்றி வெப் ஈழம்

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி...

  • தொடங்கியவர்

இணைப்புக்கு நன்றி...

நன்றியெல்லாத்தயும் உம் பாக்கட்ல வையும். :angry: :angry: டைகர் பமிலியின் பேச்சாளராக கள உறவுகளிற்க்கு அறிவுரையாக மடல் ஒன்று வரையும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.