Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிளிநொச்சியிலும் முல்லைத்தீவிலும் அரசாங்கம் இன்னமும் தாக்குதல் நடத்தாமைக்கான இரகசியத்தை வெளியிடுவோம்

Featured Replies

கிளிநொச்சியிலும் முல்லைத்தீவிலும் அரசாங்கம் இன்னமும் தாக்குதல் நடத்தாமைக்கான இரகசியத்தை வெளியிடுவோம்

பின்னால் வெள்ளைவான் வருகின்றது என்கிறார் ஸ்ரீபதி சூரியாராச்சி

விடுதலைப் புலிகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் நானும் ஜனாதிபதியின் ஆலோசகர் பசில் ராஜபக்ஷவுமே கலந்து கொண்டோம் என்று பதவி விலக்கப்பட்ட அமைச்சர் ஸ்ரீபதி சூரியாராச்சி சபையில் தெரிவித்தார். கிளிநொச்சியிலும் முல்லைத்தீவிலும் அரசாங்கம் இன்னமும் ஏன் தாக்குதல் நடத்தவில்லை என்ற இரகசியத்தை நேரம் வரும்போது வெளியிடுவேன் என்றும் அவர் கூறினார். பாராளுமன்றம் நேற்றுக் காலை 9.30 மணியளவில் சபாநாயகர் வி.ஜே.மு. லொக்கு பண்டார தலைமையில் கூடியது. வழமையான தினப்பணிகள் முடிவடைந்ததும் சிறப்புரிமை பிரச்சினை ஒன்றை முன்வைத்து உரையாற்றிய போதே ஸ்ரீபதி சூரியாராச்சி இவ்வாறு தெரிவித்தார். தனது சிறப்புரிமை பிரச்சினையில் ஸ்ரீபதி சூரியாராச்சி மேலும் தெரிவித்ததாவது: எனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக நான் வீதியில் சென்று கொண்டிருக்கும்போது எனக்கு பின்னால் இலக்கத் தகடு இல்லாத வாகனம் ஒன்று பின் தொடர்ந்தது.

நான் நேற்று முன்தினம் பாராளுமன்றத்திலிருந்து செல்லும் போதும் அதே வெள்ளை வான் பின் தொடர்ந்தது. மங்கள சமரவீரவினதும் எனதும் அமைச்சுப் பதவிகள் பறிக்கபட்டதும் சில மணி நேரங்களில் எங்கள் பாதுகாப்பு விலக்கப்பட்டது . இவ்விடயம் குறித்து நாங்கள் இருவரும் மனித உரிமை ஆணைக்குழுவில் முறையிட்டுள்ளோம். இந்நிலையில் எனக்கு நான்கு பாதுகாப்பு அதிகாரிகளையும் மங்கள சமரவீரவுக்கு 8 அதிகாரிகளையும் நியமிக்குமாறு மனித உரிமை ஆணைக்குழு கூறியது.

ஆனால் புதிய முகங்களைக் கொண்ட அதிகாரிகள் எமது பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்டனர். ஆனால் நாம் ஏற்கனவே எம்மிடம் கடமையாற்றிய பாதுகாப்பு அதிகாரிகளை நியமிக்குமாறு கேட்கின்றோம்.

இதேவேளை எனது வீட்டில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் இருவரும் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளனர். பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் பணிப்புரையின் பேரிலேயே அனைத்து பாதுகாப்பும் விலக்கிக் கொள்ளப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் கருத்துக்களை தெரிவிக்கும் உரிமை எனக்கு உள்ளது. அதனை தவிர்க்க முடியாது. எனக்கும் மங்கள சமரவீரவுக்கும் நன்றி தெரிவிக்கும் நிகழ்வு கிரிபத்கொடையில் இடம் பெறவுள்ளது. அந்த நிகழ்வுக்கு நேற்று சுவரொட்டிகளை எனது ஆதரவாளர்கள் பியகமவில் ஒட்டிக் கொண்டிருந்தனர்.

அதன்போது அங்கு வந்த இரண்டு கறுப்பு நிற ஜீப்களில் இருந்தவர்கள், ஸ்ரீபதி எங்கே என்று கேட்டுவிட்டு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். ஆகவே எனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே எனது பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு சபாநாயகரை கோருகின்றேன். ஜயலத் குறுக்கீடு இங்கு குறுக்கிட்ட ஐ.தே.க. வின் ஜயலத் ஜயவர்த்தன எம்.பி. அரசு புலி உடன்படிக்கை குறித்து கேள்வியெழுப்பினார்.

ஸ்ரீபதி சூரியாராச்சி தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் கூறியதாவது: அரசு புலி உடன்படிக்கை தொடர்பாக நான் விடயங்களை வெளிப்படுத்துவேன். நான் எதற்கும் பயப்பட மாட்டேன். விடுதலை புலிகளுடன் இடம் பெற்ற பேச்சுவார்த்தையில் பசில் ராஜபக்ஷவுடன் நானும் கலந்து கொண்டேன். இடைநடுவில் எழுந்து வந்துவிட்டேன். நாட்டுக்கு துரோகமிழைக்க என்னால் முடியாது. எனவே ரகசிய உடன்படிக்கை குறித்து ஆராய வேண்டும். அதற்காகவே பாராளுமன்றத் தெரிவுக்குழுவை நியமிக்குமாறு கேட்டுள்ளேன். இதேவேளை நேற்று முன்தினம் சபையில் உரையாற்றிய அமைச்சர் ஹேமகுமார நாணயகுமார எனது சில கருத்துக்களை விமர்சித்திருந்தார். அது குறித்து விளக்கமளிக்க வேண்டும்.

கிளிநொச்சியிலும் முல்லைத்தீவிலும் யுத்தத்தை மேற்கொள்ள வேண்டிய நிலையில் ஆட்கள் இல்லாத பாலைவனம் போன்ற கிழக்கில் யுத்தம் செய்ய வேண்டுமா? என்று நாங்கள் கேட்டோம்.கிளிநொச்சியில் யுத்தம் செய்ய வேண்டிய தைரியம் இராணுவத்தினருக்கு உண்டு. கிழக்கில் யுத்தம் செய்யும்போது அங்கு 79 வயதை உடைய ஒருவரே இருந்துள்ளார். அதனைத்தான் நான் பாலைவனம் போன்ற பிரதேசம் என்று கூறினோம். ஆனால் அதனை ஹேமகுமார நாணயக்கார தவறாக விளங்கிக் கொண்டுள்ளார். நான் சமூகக்கல்வி பாடத்தை நன்றாக படித்துள்ளேன்.

அன்று ஹெல்பிங் அம்பாந்தோட்டை ஊழல் என்று மஹிந்த ராஜபக்ஷவை விமர்சித்த ஹேம குமார நாணயக்கார இன்று அரசாங்கத்தில் இணைந்து கொண்டு ஐ.தே.க.வினை விமர்சிக்கின்றார்.அரசாங்கம் ஏன் கிளிநொச்சியில் தாக்குதல்களை மேற்கொள்வதில்லை? தயாசிறி ஜயசேகர குறுக்கீடு இடையில் குறுக்கிட்ட ஐ.தே.க. வின் தயாசிறி ஜயசேகர எம்.பி: ஸ்ரீபதி சூரியாராச்சி கூறிய வெள்ளைவான் விவகாரம் தொடர்பாக நாங்கள் அவசர கால சட்ட விவாதத்தின் போது எடுத்துக் கூறினோம். இவ்விடயம் குறித்து மனோ கணேசன் எம்.பி.யும் விரிவாக உரையாற்றினார்.

இந்நிலையில் வெள்ளைவான் விவகாரம் குறித்து அரசின் நிலைப்பாடு என்ன என்று கேள்வியெழுப்பினார். தொடர்ந்து உரையாற்றிய ஸ்ரீபதி சூரியாராச்சி எம்.பி. அரசாங்கம் கிளிநொச்சியிலும் முல்லைத்தீவிலும் ஏன் தாக்குதல் நடத்தவில்லை என்று எங்களுக்குத் தெரியும். நேரம் வரும் போது அவற்றை வெளிப்படுத்துவேன் என்று கூறினார்.

வீரகேசரி நாளேடு

தங்களுக்கென்று பிரச்சினை வரும்போதுதான் இவ்வாறான இரகசியத் தகவல்கள்

வெளிவரும். அரசுடன் இணைந்திருக்கும் போது வெள்ளைவான் பற்றிக் கதைப்ப

தேயில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.