Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ரணிலின் உறு­தி­மொ­ழியால் ஆத­ர­வ­ளித்­தது கூட்­ட­மைப்பு

Featured Replies

ரணிலின் உறு­தி­மொ­ழியால் ஆத­ர­வ­ளித்­தது கூட்­ட­மைப்பு

 

(ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்)

எதிர்­வரும் 2018 ஆம் ஆண்டுக்­கான வரவு – செல­வுத்­திட்­டத்­திற்கு ஆத­ர­வ­ளிப் பது என்ற முடிவை பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க வழங்­கிய வாக்­கு­று­தி­களை அடு த்து பிர­தான எதிர்க்­கட்­சி­யான  தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு ஏகோ­பித்து எடுத்­துள்­ளது.  

முன்­ன­தாக பிர­தான எதிர்க்­கட்­சி­யான தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு வரவு செல­வுத்­திட்­டத்­திற்கு ஆத­ர­வ­ளிப்­பதா இல்­லையா என்­பது குறித்து முடி­வெ­டுப்­ப­தற்கு கடந்த 9ஆம் திகதி கூடி­யி­ருந்­த­போதும் அதில் உறுப்­பி­னர்­களிள் பலரின் எதிர்ப்­புக்­களை அடுத்து ஜனா­தி­ப­தியை சந்­தித்த பின்னர் இறுதி முடி­வொன்றை எடுக்க முடியும் என்ற இணக்­கப்­பாட்­டுடன் நிறை­வ­டைந்­தி­ருந்­தது.

இந்­நி­லையில் 16 ஆம் திக­திக்கு முன்­ன­தாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பா­லவை தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு சந்­தித்­தி­ருக்­க­வில்லை. இது­வொ­ரு­பு­ற­மி­ருக்­கையில், தேசிய கொள்­கைகள் மற்றும் பொரு­ளா­தர அபி­வி­ருத்தி அமைச்சின் ஊடாக வழங்­கப்­பட்ட இரண்டு கோடி ரூபா பெறு­மா­தி­யான அபி­வி­ருத்தி திட்­டங்கள் அனைத்து உறுப்­பி­னர்­க­ளுக்கும் கிடைத்­தி­ருக்­காமை மற்றும் கடந்த காலத்தில் வழங்­கப்­பட்ட வாக்­கு­று­திகள் நிறை­வேற்­றப்­பட்­டி­ருக்­காமை உள்­ளிட்ட சர்ச்­சை­க­ளுக்கு மத்­தியில் வரவு செல­வுத்­திட்­டத்­திற்கு ஆத­ர­வ­ளிப்­பதா இல்­லையா என்­பது குறித்து இறுதி முடி­வொன்றை எடுப்­ப­தற்­காக நேற்று வியா­ழக்­கி­ழமை பிற்­பகல் 12.30இற்கு கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்­றக்­குழு கூட்டம் பாரா­ளு­மன்­றத்தில் உள்ள எதிர்க்­கட்சித் தலைவர் அலு­வ­ல­கத்தில் நடை­பெற்­றது.

இதன்­போது தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பங்­கா­ளிக்­கட்சி உறுப்­பி­னர்கள் உள்­ள­டங்­க­லாக எட்டு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் எதி­ரா­கவே வாக்­க­ளிக்க வேண்டும் என்ற கருத்­துக்­களை முன்­வைத்­தனர்;, எதிர்க்­கட்­சித்­த­லைவர், இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்­சியின் தலைவர், ஊட­கப்­பேச்­சாளர் ஆகியோர் தற்­போ­தைய சூழலில் வாக்­க­ளிக்கும் முடி­வையே எடுக்க வேண்டும் என்ற தொனிப்­பட்ட கருத்­துக்­களை முன்­வைத்­த­மை­யாலும் பலத்த முரண்­பா­டுகள் எழுந்­தன. இத­னை­ய­டுத்து பிற்­பகல் ஒரு­ம­ணிக்கு கூட்டம் முடி­வு­க­ளின்றி மீண்டும் பிற்­பகல் 3மணிக்கு கூட்­டத்­தினை கூட்­டு­வ­தாக அறி­விக்­கப்­பட்­டது.

இந்­நி­லையில் மூன்று மணிக்கு ஆரம்­ப­மான கூட்­டத்­திலும் சில இழு­ப­றிகள் நடை­பெற்­ற­தை­ய­டுத்து பாரா­ளு­மன்­றத்­தி­லி­ருந்து பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை சந்­தித்து உறு­தி­மொழி இணக்­கப்­பாட்டின் பிர­காரம் அடுத்த கட்ட முடி­வு­களை எடுக்­கலாம் என பெரும்­பா­லான உறுப்­பி­னர்கள் வலி­யு­றுத்­தல்­களைச் செய்­தனர்.

இத­னை­ய­டுத்து பிர­தமர் ரணில் விக்;கிர­ம­சிங்­க­வுடன் தமிழிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன் தலை­மையில் அனைத்து உறுப்­பி­னர்­களும் பங்­கேற்ற அவ­சர சந்­திப்­பொன்று பாரா­ளு­மன்­றத்தில் உள்ள பிர­தமர் அலு­வ­ல­கத்தில் பிற்­பகல் 4மணி­ய­ளவில் நடை­பெற்­றது.

இதன்­போது எதிர்க்­கட்­சித்­த­லைவர் இரா.சம்­பந்தன், பிர­த­ம­ரி­டத்தில் தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் முன்­வைத்த கோரிக்­கைகள், அர­சாங்­கத்­தினால் வழங்­கப்­பட்ட வக்­கு­று­திகள் நிறை­வேற்­றப்­ப­டாமை உள்­ளிட்ட விட­யங்கள் தொடர்பில் கருத்­துக்­களை முன்­வைத்து இதன் கார­ண­மாக எமது உறுப்­பினர் வாக்­க­ளிப்­ப­தற்கு விரும்­பா­தி­ருக்­கின்­றார்கள் என்­பதை சுட்­டிக்­காட்­டினார்.

அச்­ச­ம­யத்தில் பிர­தமர் ரணில் விக்­கி­ம­சிங்க, இந்த விட­யங்கள் அனைத்தும் ஒரு இரவில் தீர்க்கும் விட­யங்கள் அல்ல. நாம் தமிழ் மக்­களின் அடிப்­படை விட­யங்­களை புரிந்து கொண்­டுள்ளோம். எனது அமைச்சின் ஊடாக வழங்­கப்­படும் அபி­வி­ருத்தி திட்­டங்­களை வழங்­கு­வ­தற்­கு­ரிய நட­டி­வக்­கை­களை விரைந்து எடுப்போம்.

அத்­துடன் தாங்­க­ளு­டைய பிர­தே­சங்­களில் உள்ள தொழில்­வாய்ப்பு மையங்­களை ஸ்திரப்­ப­டுத்­து­வ­தற்­கான திட்­டங்­களும் எம்­மி­டத்தில் உள்­ளன. மேலும் அதன்­போது தமது ஆலோ­ச­னை­க­ளையும் நாம் பெற்­றுக்­கொள்­ள­வுள்ளோம். காணா­ம­லாக்­கப்­பட்­ட­வர்கள், அர­சி­யல்­கை­திகள், காணி­வி­ட­யங்கள், மீள்­கு­டி­யேற்றம் உள்­ளிட்ட அனைத்து அடிப்­படைப் பிரச்­ச­னைகள் குறித்தும் நாம் உரிய தரப்­பி­னரை அழைத்து நேர­டி­யாக கலந்­து­ரை­யா­டுவோம். அதன் ஊடாக விசேட செய­ல­ணி­யொன்­றையோ அல்லது பொருத்தமான பொறிமுயையொன்றையோ அமைத்து நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த உறுதிமொழிகளின் பிரகாரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 14 உறுப்பினர்கள் வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிப்பதென ஏக தீர்மானம் எடுத்தனர். இதேவேளை வெளிநாடு சென்றிருப்பதன் காரணத்தால் சரவணபவன் எம்.பியும், வரவு செலவுத்திட்டத்தின் மீது அதிருப்திக் கருத்துக்களை முன்வைத்திருந்த சிவசக்தி ஆனந்தன் எம்.பியும் வருகை தந்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-11-17#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.