Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

போயஸ் கார்டனில் ஐ.டி. ரெய்டு! #ITRaids

Featured Replies

போயஸ் கார்டனில் ஐ.டி. ரெய்டு! #ITRaids


முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 

aaaa_22264.jpg

 

சசிகலா மற்றும் டி.டி.வி. தினகரன் ஆகியோரின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இல்லங்களில் கடந்த 9-ம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையைத் தொடங்கினர். சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் 187 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தப்பட்டது. இந்தச் சோதனையில் பல்வேறு ஆவணங்களும், ரொக்கப் பணம் மற்றும் தங்க நகைகள் கைப்பற்றப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின. இதில், ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன், டாக்டர் வெங்கடேஷ் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் வீடுகளிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். நான்கு நாள்களுக்கு மேலாக நடத்தப்பட்ட சோதனை முடிவில்,  ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன், ஜெயா டி.வியின் தலைமைச் செயலதிகாரி விவேக் உள்ளிட்டோர் வருமான வரித்துறை அலுவலகத்துக்கு நேரடியாக வரவழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டனர்.

22_22284.jpg

 

இந்தநிலையில், ஜெயலலிதா வசித்த போயஸ் கார்டன் வீட்டில் தற்போது வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை அடையாறில் உள்ள பூங்குன்றன் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் போயஸ் கார்டனில் இந்தச் சோதனை நடத்தப்படுவதாகத் தெரிகிறது. போயஸ் கார்டன் இல்லத்தில் பூங்குன்றன் பயன்படுத்திய அறையில் சோதனை நடத்தப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இந்தச் சோதனைக்காக நீதிமன்றத்தின் உத்தரவை வருமான வரித்துறை அதிகாரிகள் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. போயஸ் கார்டன் இல்லத்தின் முக்கியக் கட்டடத்தில் சோதனை நடைபெறவில்லை என்றும், அதன் அருகில் உள்ள கூடுதல் கட்டடத்தில் பூங்குன்றன் பயன்படுத்திய அறையில் மட்டுமே சோதனை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. 

https://www.vikatan.com/news/tamilnadu/108140-it-officials-raids-poes-garden.html

 

  • தொடங்கியவர்

வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வரும் போயஸ் கார்டன் இல்லத்துக்கு ஜெயா டி.வி. சி.இ.ஓ. விவேக் வருகை

ஜெயலலிதா வாழ்ந்த வீட்டில் சோதனை நடத்துவது மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தும்: முன்னாள் எம்.எல்.ஏ. வி.பி. கலைராஜன்

  • தொடங்கியவர்

லேப் டாப், 4 பென் டிரைவ்களை மீட்கவே போயஸ் கார்டனில் திடீர் சோதனை    

போயஸ் கார்டனில் சோதனை நடத்துவது அம்மாவின் ஆன்மாவுக்கு செய்யப்படும் துரோகம் - டிடிவி தினகரன்    


Read more at: https://tamil.oneindia.com/

 

  • தொடங்கியவர்

ஜெ., வசித்த போயஸ் வீட்டில் வருமான வரித்துறை சோதனை

 

சென்னை, சசிகலாவின் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் நடந்த சோதனையை அடுத்து சென்னை போயஸ்கார்டனில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா வசித்த வேதா இல்லத்தில் இன்று இரவு வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
ஜெயலலிதா முதல்வராக இருந்த போது அவரது உடன் பிறவா சகோதரி சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் நண்பர்கள் வருவாய்க்கு அதிகமாக பணம் சம்பாதித்தாக எழுந்த புகாரையடுத்து 187 வீடுகளில் வருமான வரித்துறையினர் ஐந்து நாட்களுக்கும் மேலாக சோதனையில் ஈடுபட்டனர். இதில் ஆயிரத்து 430 கோடி ரூபாய் மதிப்பிலான ஆவணங்கள் சசிகலா உறவினர்கள், நண்பர்களிடம் கைப்பற்றப்பட்டன. இச்சோதனையில் ஜெயலலிதாவின் அரசியல் உதவியாளராக இருந்த பூங்குன்றனும் தப்பவில்லை. அவரது வீட்டிலும் சோதனை நடத்திய அதிகாரிகள் முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.

அவரது அளித்த தகவலின்படி நீதிமன்ற அனுமதி பெற்று நேற்று ஜெயலலிதா வசித்த சென்னை போயஸ் கார்டன் இல்லத்திலுள்ள பூங்குன்றன் தனி அறையில் இன்று இரவு வருமான வரித்துறை அதிகாரிகள் 4 பேர் சோதனையில் ஈடுபட்டனர். இதையடுத்து தி.நகர் உதவி கமிஷனர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

gallerye_223522730_1899029.jpg
next.png

ஜெ., வசித்த இல்லத்தை நினைவு சின்னமாக்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் அவர் இல்லத்தில் வருமான வரி சோதனை நடந்தது அ.தி.மு.க.,வினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போயஸ் இல்லத்திற்கு விவேக் வருகை
போயஸ் கார்டனில் வருமானவரித்துறையினர் சோதனை நடைபெற்று வரும்நிலையில் ஜெயாடிவி சி.இ.ஓ., விவேக் மற்றும் அவரது மனைவி வருகை தந்தனர். இந்நிலையில் விவேக் மட்டும் ஜெ.,வீட்டிற்குள் அனுமதி வழங்கப்பட்டதை அடுத்து அவர் வீட்டிற்குள் சென்றார். வருமானவரித்துறையின் உத்தரவின் பேரில் அவர் போயஸ்இல்லத்திற்கு வந்ததாக கூறப்படுகிறது.

 

 

ஆயுதப்படை போலீசார் பாதுகாப்பு

போயஸ் கார்டனில் ஜெயலலிதா இல்லத்தில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தியதை அடுத்து ஜெயலலிதாவின் இல்லத்திற்கு முன்பு தி.நகர் காவல் ஆணையர் தலைமையில் போலீசார் மற்றும் ஆயுதப்படை போலீசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

 

21 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் சோதனை

கடந்த 1996-ம்ஆண்டு டிசம்பர் மாதம்7 ம்தேதி முதல் 11-ம் தேதி வரை தொடர்ந்து 5 நாட்கள் சோதனை நடைபெற்றது.இந்நிலையில் 21 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் சோதனை நடைபெற்றுள்ளது.

 

 

http://www.dinamalar.com/news_detail.asp?id=1899029

  • தொடங்கியவர்

கோஷமிட்ட தொண்டர்கள் கைது! #ITRaids #LiveUpdates

கோஷமிட்ட தொண்டர்கள் கைது!

போயஸ் கார்டன் இல்லத்துக்கு முன்பு கூடியிருந்த தினகரன் ஆதரவாளர்கள், ரெய்டுக்கு எதிராகவும் மத்திய அரசுக்கு எதிராகவும் தொடர்ந்து கோஷமிட்டு வந்தனர். அவர்களை கலைந்துபோகச் சொல்லி போலீஸ் அறிவுறுத்தியது. ஆனால், அவர்கள் தொடர்ந்து கோஷமிட்டபடி இருந்ததால், காவல்துறை அனைவரையும் கைது செய்தது. 

 

கைது செய்யப்படும் ஆதரவாளர்கள்

ரெய்டு குறித்து ஆட்சியாளர்களிடம் என்ன பதில் இருக்கிறது?: டி.டி.வி.தினகரன் கேள்வி

தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த டி.டி.வி.தினகரன் போயஸ் கார்டன் ரெய்டு குறித்து, `குறைந்தபட்சம் இந்த முதல்வரை மாற்ற வேண்டுமென்றுதான் நாங்கள் முதலில் கூறினோம். ஆனால், அதைத் தொடர்ந்து எங்கள் மீது தேசதுரோக வழக்குவரை போட்டார்கள். பல நடவடிக்கைகளை எங்கள் மீது ஏவிவிடுகின்றனர். இப்போதும் சொல்கிறேன், இந்த ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்படும். ஜெயலலிதாவின் ஆட்சி மீண்டும் தமிழகத்தி நிறுவப்படும். பதவியைக் காப்பாற்றிக்கொள்ள எடப்பாடியும் பன்னீரும் இந்த சோதனையை எங்கள்மீது நடத்துகின்றனர். ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை நினைவிடமாக மாற்றப்போவதாக சொல்லிவிட்டு இப்படி சோதனைகளை நடத்துகின்றனர். இந்த செயலுக்கு ஆட்சியாளர்கள் என்ன பதில் சொல்வார்கள் என்று பார்ப்போம்.' என்று தெரிவித்துள்ளார்.

தினகரன்

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 

aaaa_22264.jpg

சசிகலா மற்றும் டி.டி.வி. தினகரன் ஆகியோரின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இல்லங்களில் கடந்த 9-ம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையைத் தொடங்கினர். சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் 187 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தப்பட்டது. இந்தச் சோதனையில் பல்வேறு ஆவணங்களும், ரொக்கப் பணம் மற்றும் தங்க நகைகள் கைப்பற்றப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின. இதில், ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன், டாக்டர் வெங்கடேஷ் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் வீடுகளிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். நான்கு நாள்களுக்கு மேலாக நடத்தப்பட்ட சோதனை முடிவில்,  ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன், ஜெயா டி.வியின் தலைமைச் செயலதிகாரி விவேக் உள்ளிட்டோர் வருமான வரித்துறை அலுவலகத்துக்கு நேரடியாக வரவழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டனர்.

22_22284.jpg

 

இந்தநிலையில், ஜெயலலிதா வசித்த போயஸ் கார்டன் வீட்டில் தற்போது வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை அடையாறில் உள்ள பூங்குன்றன் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் போயஸ் கார்டனில் இந்தச் சோதனை நடத்தப்படுவதாகத் தெரிகிறது. போயஸ் கார்டன் இல்லத்தில் பூங்குன்றன் பயன்படுத்திய அறையில் சோதனை நடத்தப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இந்தச் சோதனைக்காக நீதிமன்றத்தின் உத்தரவை வருமான வரித்துறை அதிகாரிகள் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. போயஸ் கார்டன் இல்லத்தின் முக்கியக் கட்டடத்தில் சோதனை நடைபெறவில்லை என்றும், அதன் அருகில் உள்ள கூடுதல் கட்டடத்தில் பூங்குன்றன் பயன்படுத்திய அறையில் மட்டுமே சோதனை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. 

https://www.vikatan.com/news/tamilnadu/108140-it-officials-raids-poes-garden.html

  • தொடங்கியவர்

சசிகலாவிடம் விசாரணை நடத்த முடிவு

 
 
A.D.M.K,Sasikala,அ.தி.மு.க,சசிகலா,விசாரணை,முடிவு
Colors:
  •  
  •  
  •  
  •  
 
 

 

சென்னை: போயஸ் கார்டன் சோதனையை தொடர்ந்து பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவிடம் விசாரணை நடத்த வருமானவரித்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
 

 

வாரண்ட் பெற்றே...

சென்னை போயஸ் கார்டனில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா வசித்த வேதா இல்லத்தில், நேற்று(நவ.,17) இரவு முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். வேதா இல்லத்தில் ஜெயலலிதா பயன்படுத்திய 2 பெரிய அறைகள் தவிர மீதமுள்ள 3 அறைகளில் சோதனை நடத்தி வருகின்றனர். நீதிமன்ற விசாரணை இருப்பதால் வாரண்ட் பெற்றே சோதனை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

 

சசிகலாவிடமும்...

இந்நிலையில் போயஸ் கார்டன் சோதையை தொடர்ந்து பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவிடமும் விசாரணை நடத்த வருமானவரித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். அடுத்தடுத்து அதிரடி தொடர்வதால் சசிகலா தரப்பு பீதியில் உறைந்துள்ளது. முன்னதாக வேதா இல்லம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தினகரன் ஆதரவாளர்கள் 40 பேரை போலீசார் கைது செய்தனர்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1899167

  • தொடங்கியவர்

மூன்று மணி நேரத்துக்கும் மேலாக போயஸ் கார்டன் இல்லத்தில் தொடர்ந்து சோதனை! #ITRaids #LiveUpdates

ஆதரவாளர்கள் கூடுவதற்கு போலீஸாரிடம் அனுமதி கேட்டுள்ளோம்: தினகரன் தரப்பு வழக்கறிஞர் ராஜசுந்தர பாண்டியன்

போலீஸிடம் பேசும் ராஜசுந்தர பாண்டியன்

 

தினகரன் தரப்பு வழக்கறிஞர் ராஜசுந்தர பாண்டியன் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, `விவேக் தற்போது போயஸ் இல்லத்துக்கு உள்ளே சென்றுள்ளார். அவர் வெளியே வந்த பிறகுதான் தெளிவாக எதுவாயினும் கூற முடியும். அதேவேளையில், எங்கள் தொண்டர்கள் இங்கு அமைதியான முறையில் கூடுவதற்கு காவல்துறையிடம் அனுமதி கேட்டுள்ளோம்' என்று கூறியுள்ளார்.

https://www.vikatan.com/news/tamilnadu/108140-it-officials-raids-poes-garden.html

  • தொடங்கியவர்

ஜெயலலிதாவுக்கு அவப்பெயர் ஏற்படுத்துவே இந்த சோதனை: ஜெ.தீபா ஆவேசம்! #ITRaids #LiveUpdates

 
 
 

போயஸ் கார்டன் இல்லத்துக்கு ஜெ.தீபா வருகை!
 

ஜெ.தீபா

 

போயஸ் கார்டனுக்கு வருகை தந்த ஜெ.தீபா, `சசிகலா குடும்பத்தின் கட்டுப்பாட்டில்தான் போயஸ் இல்லம் இருக்கிறது. ரெய்டு குறித்து எனக்கு எந்தத் தகவலும் கூறவில்லை. செய்தியைப் பார்த்துதான் இங்கே வந்துள்ளேன். போயஸ் இல்லம் குறித்து நான் வழக்கு தொடர்ந்துள்ளதால், எனக்கு ரெய்டு குறித்து தெரியபடுத்தியிருக்க வேண்டும். ரெய்டுக்கு யார் பொறுப்பு என்றெல்லாம் எனக்குத் தெரியாது. என் சகோதரர் தீபக்கிடமும் ரெய்டு குறித்து எந்த அனுமதியும் அதிகாரிகள் பெறவில்லை. என்னிடமும் அனுமதி பெறவில்லை. சசிகலா குடும்பத்திடம் அனுமதி பெற்று இந்த ரெய்டு நடந்து கொண்டிருக்கிறது. வேதா இல்லம் மற்றும் பூர்வீக சொத்து எங்களுக்குச் சொந்தமானது. அதை மீட்பது எனது கடமை. சசிகலா குடும்பத்தின் முழு ஒத்துழைப்போடுதான் இந்த சோதனை நடந்து கொண்டிருக்கிறது. ஜெயலலிதாவுக்கு அவப்பெயர் ஏற்படுத்தவே இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சோதனை அரசியல் உள்நோக்கம் கொண்டதாகத்தான் தெரிகிறது' என்று கூறியுள்ளார். 

https://www.vikatan.com/news/tamilnadu/108140-it-officials-raids-poes-garden.html

  • தொடங்கியவர்

போயஸ் கார்டன் ரெய்டில் கைப்பற்றப்பட்ட பொருள்கள் என்னென்ன..? - விவேக் தகவல்! #ITRaids #LiveUpdates

ஜெயலலிதாவின் அறையை சோதனையிட அனுமதிக்கவில்லை: விவேக் தகவல்!

விவேக்

 

ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது வாழ்ந்த போயஸ் கார்டன் வேதா இல்லத்தில் வருமானவரித்துறை கடந்த நான்கு மணி நேரங்களாக சோதனை நடத்தியது. ரெய்டு, தற்போது முடிவுக்கு வந்துள்ள நிலையில், ஜெயா டிவியின் சி.இ.ஓ விவேக் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், `ஒரு லேப்டாப் மற்றும் இரண்டு பென்ட்ரைவை சோதனையிட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் எடுத்துச் சென்றனர். ஜெயலலிதாவின் அறையை சோதனையிட நாங்கள் அனுமதிக்கவில்லை. ஜெயலலிதாவுக்கு வந்த கடிதங்களையும் எடுத்துச் சென்றுள்ளனர் அதிகாரிகள்' என்று விவேக் தெரிவித்துள்ளார். 

ரெய்டுக்கு முழுக்காரணம் மாநில அரசுதான்: வி.பி.கலைராஜன்

வி.பி.கலைராஜன்

போயஸ் கார்டனில் நடந்த வருமான வரி சோதனைக்கு மாநில அரசே முழுக்காரணம். சோதனையைக் கண்டு அ.தி.மு.க-வின் உண்மைத் தொண்டார்கள் கொதித்து போயுள்ளனர் என்று தினகரன் ஆதரவாளர் கலைராஜன் போயஸ் கார்டனில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்துள்ளார். 

https://www.vikatan.com/news/tamilnadu/108140-it-officials-raids-poes-garden.html

  • தொடங்கியவர்

ஜெ., அறையில் வைரக் குவியலோ, தங்கக் குவியலோ இல்லை! - கலகலத்த தினகரன்

"எந்த நடவடிக்கைக்கும் அச்சுறுத்தல்களுக்கும் நான் பயப்பட மாட்டேன்” என தினகரன் கூறியுள்ளார்.

தினகரன்

 

சசிகலா மற்றும் டி.டி.வி. தினகரன் ஆகியோரின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இல்லங்களில், கடந்த 9-ம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையைத் தொடங்கினர். சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் 187 இடங்களில் ஒரே நேரத்தில் ஐந்து நாள்களாக சோதனை நடத்தப்பட்டது. இந்த நிலையில், ஜெயலலிதா வசித்த போயஸ் கார்டன் வீட்டில் நேற்று இரவு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர். சென்னை அடையாறில் உள்ள பூங்குன்றன் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில், போயஸ் கார்டனில் இந்தச் சோதனை நடத்தப்பட்டதாகக் கூறப்பட்டது.

 

இந்த ரெய்டுகுறித்து தினகரன் கூறுகையில், “ஜெயலலிதா இல்லமான போயஸ்கார்டனில் சோதனை நடத்தப்பட்டதில் சதி உள்ளது. சேகர் ரெட்டி வீட்டிலிருந்ததுபோல ஜெயலலிதாவின் அறையில் வைரக் குவியலோ, தங்கக் குவியலோ இல்லை. பாழாய்ப்போன இரண்டு லேப் டாப்களை எடுத்துச்சென்றுள்ளனர். இதுபோன்ற எந்த நடவடிக்கைக்கும் அச்சுறுத்தல்களுக்கும் பயப்பட மாட்டேன்” எனக் கூறினார்.

https://www.vikatan.com/news/tamilnadu/108176-dinakaran-over-the-continuous-it-raids.html

  • தொடங்கியவர்

போயஸ் கார்டனில் ஐ.டி.சோதனை ஏன்? வருமானவரித்துறை உயரதிகாரி விளக்கம் #ITRaid

 

போயஸ் கார்டன்

Chennai: 

சசிகலா குடும்பத்தினரிடையே நடத்தப்பட்ட சோதனையில் கிடைத்த ஆவணங்கள் அடிப்படையில்தான் போயஸ் கார்டனில் சோதனை நடத்தப்பட்டதாக வருமானவரித்துறை உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும், அவர், சோதனையின்போது சிக்கிய லேப்டாப் மற்றும் பென் டிரைவ்வை ஆய்வு செய்தபிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். 

 

சசிகலா குடும்பத்தினர் வீடு, அலுவலகங்கள், கம்பெனிகள் ஆகியவற்றில் கடந்த 9ம் தேதி முதல் 13ம் தேதி வரை வருமானவரி சோதனை நடத்தப்பட்டது. இந்தச் சோதனையின்போது கிடைத்த ஆவணங்கள், நகைகள், பணம், வைரங்கள் குறித்து விசாரணை நடந்துவருகிறது. ஆவணங்களை வரிவிடாமல் ஆய்வு செய்துவரும் வருமானவரித்துறையினருக்கு முக்கியத் தகவல்கள் கிடைத்துள்ளன. அதன்அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கையில் வருமான வரித்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

அதில் ஒரு கட்டமாக நேற்றிரவு சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டது. வருமானவரித்துறையினர் தேடி வந்த தடயங்கள் கிடைத்ததும் அங்கிருந்து புறப்பட்டுவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால்தான் போயஸ் கார்டன் வீடு முழுமையாக சோதனை நடத்தப்படவில்லை என்று உள்விவர வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுகுறித்து வருமானவரித்துறை உயரதிகாரி ஒருவரிடம் பேசினோம். "ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில்தான் சசிகலா, இளவரசி மற்றும் மன்னார்குடியைச் சேர்ந்த சிலர் தங்கியிருந்தனர். அந்த வீட்டின் ஊழியர்கள், மன்னார்குடி குடும்பத்தினருக்குத் தொடர்புடையவர்கள். சசிகலாவின் முகவரியே போயஸ் கார்டன், வேதா நிலையம்தான். சமீபத்தில் சசிகலா குடும்பத்தினரிடையே நடந்த சோதனையில் எங்களிடம் சிக்கிய ஆவணங்களை ஆய்வு செய்ததில் அதன்தொடர்புடைய சில ஆவணங்கள் போயஸ் கார்டனில் இருக்கலாம் என்ற சந்தேகம் எங்களுக்கு ஏற்பட்டது. ஜெயலலிதாவின் வீட்டில் சோதனை செய்த முறைப்படி நீதிமன்ற அனுமதியை பெற்றோம். தற்போது, அந்த வீடு, மன்னார்குடி உறவுகளின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. நீதிமன்ற அனுமதி கிடைத்ததும் சம்பந்தப்பட்டவர்களுக்குத் தகவல் தெரிவித்தோம்.

போயஸ் கார்டன் வீட்டுக்கு வரும் விவேக் ஜெயராமன்

 போயஸ் கார்டனில் சோதனை நடக்கும்போது நிச்சயம் பிரச்னை ஏற்படும் என்று தெரிந்துதான் முன்கூட்டியே போலீஸாரிடமும் பாதுகாப்பு கேட்டிருந்தோம். அதன்படி போலீஸ் பாதுகாப்புடன் சோதனைக்கு எங்களின் அதிகாரிகள் சென்றனர். பகலில் சோதனை நடத்தினால் சிரமம் ஏற்படும் என்று கருதிதான் இரவில் சோதனை நடத்தத் திட்டமிட்டோம். ஆனால், இந்தச் சோதனை தகவல் எங்களின் உயரதிகாரிகளில் சிலருக்குத்தான் தெரியும். அந்தளவுக்கு ரகசியமாக சோதனை தகவலை வைத்திருந்தோம்.

எங்களின் திட்டப்படி போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா வீட்டுக்குள் சென்றோம். நீதிமன்ற உத்தரவைக் காட்டியபிறகுதான் எங்களை உள்ளே அனுமதித்தார்கள். எங்களுக்குக் கிடைத்த தகவலின்படி சசிகலா, ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் ஆகியோரின் அறைகளில் சோதனை நடத்தினோம். அங்கிருந்த லேப்டாப், பென் டிரைவ், சில கடிதங்கள் ஆகியவை கிடைத்துள்ளன. லேப்டாப், பென் டிரைவில் என்ன இருக்கிறது என்பதை ஆய்வு செய்தபிறகே அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்போம்" என்றார்.

இதுகுறித்து தினகரன் ஆதரவாளர்கள் கூறுகையில், "ஜெயலலிதா உயிரோடு இருந்தசமயத்தில் போயஸ் கார்டன் பக்கமே வரத் தயங்குபவர்கள் இப்போது துணிச்சலுடன் வீட்டுக்குள் நுழைகின்றனர். ஜெயலலிதா வாழ்ந்த இல்லம் எங்களுடைய கோயில். வருமானவரி சோதனையால் வீட்டின் புனிதம் கெட்டுவிட்டது. தமிழக அரசுக்குத் தெரியாமல் இந்தச் சோதனை நடக்க வாய்ப்பில்லை. இதற்கெல்லாம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பதில்சொல்ல வேண்டும். வருமானவரி சோதனை குறித்து அவர்கள் இருவரும் எந்தவித பதிலும் தெரிவிக்காமல் அமைதியாக இருக்கின்றனர். போயஸ் கார்டன் ஜெயலலிதா வீட்டில் சோதனை நடத்திய வருமானவரித்துறையினர் தொழிலதிபர் சேகர்ரெட்டி வீட்டில் கைப்பற்றிய டைரியில் உள்ளவர்கள்மீது ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. அமைச்சர் விஜயபாஸ்கரிடம் நடத்தப்பட்ட சோதனையில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தங்களது கடமையை வருமானவரித்துறையினர் நியாயமாக செய்ய வேண்டும்" என்றனர். 

 

வருமானவரித்துறை வட்டாரங்கள் கூறுகையில், "சசிகலா குடும்பத்தினரிடையே நடத்தப்பட்ட சோதனையின்போதே போயஸ் கார்டன் வீட்டிலும் சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் நடைமுறை சிக்கலால் போயஸ் கார்டன் வீட்டில் சோதனை நடத்தப்படவில்லை. சசிகலா குடும்பத்தினரிடையே சோதனை நடந்தபிறகு ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீடு எங்களின் கண்காணிப்பில்தான் இருந்தது. அந்த வீட்டுக்குள் செல்பவர்களை ரகசியமாகக் கண்காணித்து வந்தோம். கடந்த 4 நாள்களாக போயஸ் கார்டன் வீட்டிலிருந்து எதுவும் வெளியில் எடுத்துச் செல்லப்படவில்லை. ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு அந்த வீட்டில் முக்கியமான ஆவணங்கள் எதுவும் இருக்க வாய்ப்பில்லை என்பது எங்களுக்கும் தெரியும். இருப்பினும் சசிகலா குடும்பத்தினரிடமிருந்து கைப்பற்ற ஒரு ஆவணத்தின் தொடர்ச்சி ஆவணம் போயஸ் கார்டன் தொடர்புடையதாக இருந்தது. இதனால்தான் அங்கு அதிரடியாக சோதனை நடத்தினோம்" என்றனர்.

https://www.vikatan.com/news/tamilnadu/108186-income-tax-department-officers-statement-about-poes-garden-it-raid.html

  • தொடங்கியவர்

ஜெயலலிதா வீட்டில் 5 மணி நேரம் நடந்த வருமான வரித்துறை சோதனை: 8 பென்-டிரைவ் ஆதாரங்கள் சிக்கின - சொத்துகள், பணப் பரிமாற்றம் குறித்த ஆவணங்களும் கிடைத்ததாக தகவல்

 

 
 

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வீட்டில் நடைபெற்ற வருமானவரித் துறை சோதனையைத் தொடர்ந்து, போயஸ் கார்டன் பகுதியில் செல்லும் புதிய நபர்களை செல்போனில் புகைப்படம் எடுத்த பிறகே போலீஸார் அனுமதித்தனர்.   -  படம்: க.ஸ்ரீபரத்

பணப்பரிமாற்ற ஆவணங்கள் தொடர்பாக கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியது தெரியவந்துள்ளது. இந்த சோதனையின்போது 8 பென்-டிரைவ்கள், 2 ஹார்டுடிஸ்க் ஆதாரங்களும் சொத்துகள் தொடர்பான ஆவணங்களும் சிக்கியுள்ளன.

ஜெயா டிவி, நமது எம்ஜிஆர் அலுவலகங்கள் உட்பட சசிகலா, திவாகரன், தினகரன் குடும்பத்தினர் தொடர்புடைய இடங்களில் கடந்த 9-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை 5 நாட்கள் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் சிக்கிய ஆவணங்களின் அடிப்படையில் ஜெயா டிவி நிர்வாக இயக்குநர் விவேக், அவரது சகோதரிகள் கிருஷ்ணபிரியா, ஷகிலா, ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன், கர்நாடக மாநில அதிமுக செயலாளர் புகழேந்தி, ஜாஸ் சினிமாஸ் நிறுவன நிர்வாகிகள் ஆகியோரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வசித்த ‘வேதா இல்லம்’ வீட்டில் நேற்று முன்தினம் இரவு வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். இதில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல்கள் வந்துள்ளன.

இதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

சசிகலா உறவினர்கள் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தியபோதே போயஸ் தோட்டத்திலும் சோதனை நடத்த திட்டமிட்டு இருந்தோம். ஆனால், நடைமுறை சிக்கலால் அங்கு உடனடியாக சோதனை நடத்தவில்லை. சசிகலா குடும்பத்தினரிடம் சோதனை நடந்ததில் இருந்தே, ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீடு எங்களின் கண்காணிப்பில்தான் இருந்தது. அந்த வீட்டுக்குள் செல்பவர்களை ரகசியமாக கண்காணித்து வந்தோம். அந்த வீட்டுக்குள் இருந்து எதுவும் வெளியில் எடுத்துச் செல்லப்படவில்லை என்பதை எங்களால் உறுதியாக சொல்ல முடியும்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அந்த வீட்டில் முக்கியமான ஆவணங்கள் எதுவும் இருக்க வாய்ப்பில்லை என்று நினைத்தோம். ஆனால், ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன், இளவரசியின் மகள் ஷகிலா ஆகியோரிடம் நடத்திய விசாரணைக்குப் பிறகு போயஸ் தோட்டத்தில் எங்களுக்குத் தேவையான ஆவணங்கள் இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டோம்.

இதையடுத்து உடனடியாக 30 அதிகாரிகள் கொண்ட ஒரு குழுவை உருவாக்கி சோதனைக்கு தயாரானோம். ஜெயலலிதா வீடு என்பதால் சம்பந்தப்பட்ட பகுதி போலீஸிடம் முன்கூட்டியே தகவல் தெரிவித்து, பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்தோம். போயஸ் தோட்ட வீட்டில் ஒரு சில இடங்களைத் தவிர அனைத்து இடங்களையும் அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில் 8 பென்-டிரைவ்கள், 2 ஹார்டுடிஸ்குகள் மற்றும் சில ஆவணங்கள் கிடைத்தன.

 

தேடிய ஆதாரம் கிடைத்தது

முக்கியமான சில நிறுவனங்களின் பணப் பரிமாற்றங்கள் குறித்த தகவல்கள் இதில் இருந்தன. யார், யாருக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டுள்ளது என்ற விவரங்களும் கிடைத்துள்ளன. பணப் பரிமாற்றங்கள் குறித்த முக்கிய தகவல்கள் எங்களுக்கு கிடைத்தன. நாங்கள் தேடி வந்த ஆதாரங்கள் கிடைத்துவிட்டன. ஜெயலலிதாவின் அறையில் சோதனை நடத்தவில்லை. அந்த அறையில் முக்கிய ஆதாரங்கள் எதுவும் இருக்க வாய்ப்பு இல்லை என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அதிகாரி தெரிவித்தார்.

ஜெயலலிதா வீட்டில் சோதனை நடத்தப்பட்டது அதிமுகவினர் மத்தியில் மட்டுமின்றி, தமிழக அரசியல் வட்டாரத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சோதனையைத் தொடர்ந்து அதிமுகவினர் போராட்டங்கள் நடத்தக்கூடும் என்பதால், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித் துறை அலுவலகத்துக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பும் போயஸ் தோட்டம் பகுதியின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

http://tamil.thehindu.com/tamilnadu/article20554889.ece?homepage=true

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.