Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அகதிகளை சுமக்கும் மட்டக்களப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அகதிகளை சுமக்கும் மட்டக்களப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில தினங்களான அரச படையினர் மேற்கொண்டுவரும் தொடர்ச்சியான தாக்குதல் சம்பவங்களால் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் தமது வாழ்விடங்களை உடைமைகளை இழந்து இடம்பெயர்ந்துள்ள பெரும் அவல நிலைமையொன்று உருவாகியுள்ளது.

விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்களான வெல்லாவெளி, பட்டிப்பளை, வவுணதீவு, கிரான், செங்கலடி பிரதேச செயலகப் பிரிவுகளை நோக்கி அரச படையினர் மேற்கொண்டு வரும் மிகக் கடுமையான ஷெல் தாக்குதல்களையடுத்தே அப்பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறி இராணுவக் கட்டுப்பாட்டு பிரதேசங்களை நோக்கி இடம்பெயரத் தொடங்கியுள்ளனர்.

மட்டக்களப்பு நகரின் மையத்திலுள்ள பிரதான படைத்தளம், கல்லடி முகாம், வவுணதீவு முகாம், ஆரையம்பதி விசேட அதிரடிப்படை முகாம் மற்றும் கிரான், செங்கலடி, கும்புறுமூலை, வாழைச்சேனை காகித ஓலை ஆகிய பிரதான படைத்தளங்களிலிருந்தே விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களான படுவான்கரைப் பிரதேசங்களை நோக்கி கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியான கடும் ஷெல் மற்றும் பல்குழல் ரொக்கட் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

மிக உக்கிரமாக மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த ஷெல் தாக்குதல்களிலிருந்து தமது உயிர்களைக் காப்பாற்றிக் கொள்ளுமுகமாக கடந்த வியாழக்கிழமை வரை இப்பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் 40 ஆயிரம் பேர் மட்டக்களப்பு மாவட்டத்தின் இராணுவக் கட்டுப்பாட்டு பிரதேசங்களுக்கு இடம்பெயர்ந்து வந்து பெரும் துயர நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

வியாழக்கிழமை வரை இடம்பெற்ற இந்தத் தாக்குதல் சம்பவங்கள் காரணமாக மூவர் உயிரிழந்தும் 50 இற்கு மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதுடன் நூற்றுக்கு மேற்பட்ட கால்நடைகளும் 200 இற்கு மேற்பட்ட வீடுகள் மிகக் கடுமையாக சேதமடைந்துள்ளதாக அங்கிருந்து இடம்பெயர்ந்து வந்தவர்கள் ஊடாக அறியமுடிந்துள்ளது.

விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கும் இராணுவக் கட்டுப்பாட்டு பிரதேசத்திற்குமிடையிலான மட்டக்களப்பு வாவியையும் சோதனைச் சாவடிகளையும் மிகக் கடும் சிரமத்திற்கு மத்தியில் கடந்தே வயோதிபர்கள், குழந்தைகள், சிறுவர்கள், கர்ப்பிணித் தாய்மார்கள் கால்நடையாக பல மைல் தூரம் கடந்து இராணுவக் கட்டுப்பாட்டு பிரதேசங்களுக்கு வந்து சேர்ந்துள்ள போதிலும் எந்தவொரு அடிப்படை வசதிகளுமின்றி உணவுக்கு கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு நகரப்பகுதி, செங்கலடி, கிரான், கல்லடி, நாவற்குடா, ஆரையம்பதி, பட்டிருப்பு ஆகிய பிரதேசங்களுக்கு இடம்பெயர்ந்து வந்து உறவினர், நண்பர் வீடுகளிலும் பாடசாலைக் கட்டிடங்களிலும் பொது இடங்களிலும் தங்கியுள்ள இந்த மக்களுக்கான உணவு உட்பட எந்தவொரு அடிப்படை வசதிகளையும் பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் இதுவரையும் எந்தவொரு நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லையென்றே குற்றஞ்சாட்டப்படுகின்றது.

இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள பகுதிகளைச் சேர்ந்த பிரதேச செயலாளர்களும் மாவட்ட செயலகமும் தம்மிடமுள்ள குறைந்தபட்ச வசதிகளை பயன்படுத்தியே பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கிவருவதாக மாவட்ட செயலக அதிகாரியொருவர் தெரிவித்தார்.

ஏற்கனவே, வாகரைப் பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் கூடார வாழ்க்கைக்குள் திணிக்கப்பட்டு பெரும் அவலநிலையொன்றை எதிர்கொண்டுள்ளனர். மீண்டும் பெரும் எண்ணிக்கையான மக்கள் படுவான்கரைப் பிரதேசங்களிலிருந்து தொடர்ச்சியாக இடம்பெயரத் தொடங்கியுள்ள நிலையில் மாவட்ட செயலகம் ஊடாக அவர்களுக்கான உணவு, சுகாதாரம் மற்றும் அடிப்படை வசதிகளை வழங்குவது தொடர்பில் தாம் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்ட அதிகாரி மேலும் தெரிவித்தார்.

தற்போது, இடம்பெற்று வரும் மிக மோசமான தாக்குதல் சம்பவங்கள் காரணமாக இடம்பெயர்ந்துவரும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில் இது தொடர்பாக அரச உயர் மட்டத்தினருக்கு மாவட்ட செயலக அதிகாரிகளால் அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் கவனம் செலுத்தப்படவில்லையென்றே குற்றஞ்சாட்டப்படுகின்றது.

இடம்பெயர்ந்து பாதிக்கப்படும் மக்களுக்கு உதவுவதற்கென பல்வேறு அமைச்சர்கள் உள்ள போதிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெயரும் தமிழ் மக்களின் அவலநிலையைப் போக்குவதில் பாரபட்சம் காட்டும் போக்கொன்றே மேலோங்கிக் காணப்படுகின்றது.

மூதூர் மற்றும் சேருநுவரப் பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் இடம்பெயர்ந்து வந்தபோதும் கொழும்பிலிருந்து விசேட ஹெலிக்கொப்டர்கள் மூலம் படையெடுத்துச் சென்ற அமைச்சர்களும் அதிகாரிகளும் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் தொடர்பில் பாரபட்சம் காட்டுவது எதனைச் சுட்டிக்காட்டுகின்றது என்பது எவருக்கும் புரியாத ஒரு விடயமல்ல.

இதனை விட மட்டக்களப்பு மாவட்டத்தில் பெருமளவு அரச சார்பற்ற நிறுவனங்கள் உள்ள போதிலும் அவை தமது செலவினங்களுக்கு பயன்படுத்தும் தொகையை விட குறைந்தளவிலான உதவிகளையே வழங்கி வருவதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

ஆடம்பர வாகனங்களில் சுற்றித்திரியும் அரசசார்பற்ற நிறுவனப் பிரதிநிதிகள் இடம்பெயரும் மக்களின் எண்ணிக்கையை கணக்கெடுத்து நிதியுதவிகளைப் பெறுவதிலேயே கவனம் செலுத்துவதாகவும் அந்த மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவது தொடர்பில் ஆர்வம் செலுத்துவதில்லையென்றும் மாவட்ட செலயக வட்டாரங்கள் குற்றஞ்சாட்டியுள்ளன.

இதனைவிட செங்கலடி - கறுத்தப்பாலம் வீதியூடாகவும், புளுக்குணாவை, சியம்பலாண்டுவ பகுதிகளிலிருந்தும் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்களை நோக்கிய படை நகர்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கிருந்து வெளியேறும் மக்களின் எண்ணிக்கை பல மடங்காக அதிகரிக்கப்படவுள்ள நிலையில் அப்பாவி மக்கள் உயிராபத்துக்களையும் எதிர்கொண்டுள்ளனர்.

அத்துடன், உக்கிரமான கடும் ஷெல் தாக்குதல்கள் காரணமாக படுகாயமடைந்த பல பொதுமக்கள் சிகிச்சையின்றி உயிராபத்தை எதிர்கொண்டுள்ளதாகவும் அவர்களை மட்டக்களப்பு பொது வைத்தியசாலைக்கோ ஏனைய வைத்தியசாலைகளுக்கோ அழைத்துவர முடியாத நிலைமை காணப்படுவதாகவும் இடம்பெயர்ந்துவரும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதனிடையே புளுக்குணாவை முகாமிலிருந்து தாந்தாமலைப் பிரதேசத்திற்குள் ஊடுருவிய படையினரால் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மாட்டுப் பண்ணைகளிலிருந்த 13 இளைஞர்கள் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாகவும் அவர்களின் நிலைமை என்னவென்று தெரியாமல் உறவினர்கள் ஏங்கித் தவிக்கின்றனர்.

ஷெல் தாக்குதல்கள் மற்றும் இராணுவத்தினரின் கட்டுப்பாடுகள் காரணமாக பெரும்போக நெற் செய்கையை இழந்து மிகவும் வறுமையான நிலைக்கு தள்ளப்பட்டுள்ள மக்களே இன்று படுவான்கரைப் பிரசேத்திலிருந்து வெறும் கையுடன் இடம்பெயரும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

அரச உத்தியோகமோ வேறு எந்தவொரு விசேட வருமானமுமின்றி விவசாயத்தையும் மீன்பிடித் தொழிலையும் பிரதானமாகக் கொண்ட இப்பிரதேச மக்கள் அடிக்கடி இடம்பெறும் இயற்கை அழிவுகளாலும் இராணுவ ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளாலும் தொடர்ச்சியாக பெரும் அழிவுகளை எதிர்கொண்டவர்களாகவேயுள்ளனர

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இடப்பெயர்வோடே சனம் செத்துப்போடும்

சிங்களவனத்தான் தமிழ்ஈழத்தில குடி அமர்த்தவேணும்

மொத்தத்தில விதச்சவன் அறுவடை செய்ய மாட்டான் வேடிக்கை பார்த்தவன் வயிறு நிறைக்கப்போறான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.