Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்கா - இந்திய கூட்டுக்கடல் கண்காணிப்பை ஏற்படுத்த சிறிலங்கா அரசு சதி

Featured Replies

[திங்கட்கிழமை, 12 மார்ச் 2007, 06:02 ஈழம்] [அ.அருணாசலம்]

இந்திய மீனவர்கள் மீது தாம் தாக்குதல்களை நடத்தவில்லை என சிறிலங்கா கடற்படையினர் மறுத்துள்ளதுடன், இரு தரப்பு கடல் எல்லைகளின் இருபுறமும் மீனவர்களை கண்காணிப்பதற்கு இந்தியாவும் சிறிலங்காவும் இணைந்து செயற்படும் திட்டம் ஒன்றையும் சிறிலங்கா அரசு முன்வைத்துள்ளது.

இரு தரப்பும் இணைந்து கடல் எல்லைகளை கண்காணிப்பதுடன், மீனவர்களின் நகர்வுகள் தொடர்பாக தகவல்களையும் பரிமாறிக் கொள்ளும் திட்டம் ஒன்றை செய்து கொள்ள சிறிலங்கா அரசு விரும்புவதாக அதன் வெளிவிவகார அமைச்சு நேற்று ஞாயிற்றக்கிழமை தெரிவித்துள்ளது.

அண்மையில் சிறிலங்கா கடற்படையினர் நடத்திய தாக்குதலில் இந்திய மீனவர்களுக்கு காயங்களும், உயிரிழப்புக்களும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இது தொடர்பான விசாரணைகளுக்கு முழுமையாக ஒத்துழைப்பதாகவும், அதற்குரிய குழுவை இந்தியாவிற்கு அனுப்புவதாகவும் சிறிலங்கா தெரிவித்துள்ளது.

இந்த மாதம் 10 ஆம் நாள் கச்சதீவின் தென்மேற்கு பகுதியில் சிறிலங்கா கடற்படையினர் நடத்திய தாக்குதலில் இந்திய மீனவர் ஒருவர் பலியாகி இருந்தார். எனினும் எமது கடற்படை ஒருபோதும் இந்திய கடல் எல்லைக்குள் சென்றதில்லை. அவர்கள் நவீன உபகரணங்களை கப்பல்களில் கொண்டிருப்பதனால் தவறுகள் நிகழ வாய்புக்கள் இல்லை எனவும் எம்மீது பழியைப் போடுவதற்காக விடுதலைப் புலிகளே தாக்குதலை நடத்தியிருக்கலாம் எனவும் சிறிலங்கா அரசு தெரிவித்துள்ளது.

ஆனால் சிறிலங்கா கடற்படையினர் திட்டமிட்டு இந்திய மீனவர்கள் மீது தாக்குதலை நடத்தி அதன் மூலம் இந்திய - சிறிலங்கா கூட்டுக்கண்காணிப்பு என்ற வலைக்குள் இந்திய கடற்படையினரையும் இந்திய அரசையும் வீழ்த்துவதற்கு முயன்று வருவதாகவும் இந்த தந்திரோபாய விளையாட்டில் அப்பாவி இந்திய மீனவர்களின் உயிர்களும் உடமைகளும் இழக்கப்பட்டு வருவதாகவும் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

நன்றி : புதினம்

  • கருத்துக்கள உறவுகள்

'' இந்திய மீனவர்கள் மீது தாம் தாக்குதல்களை நடத்தவில்லை என சிறிலங்கா கடற்படையினர் மறுத்துள்ளதுடன் இரு தரப்பு கடல் எல்லைகளின் இருபுறமும் மீனவர்களை கண்காணிப்பதற்கு இந்தியாவும் சிறிலங்காவும் இணைந்து செயற்படும் திட்டம் ஒன்றையும் சிறிலங்கா அரசு முன்வைத்துள்ளது."

இந்த செய்தியின்படி ஸ்ரீலங்கா அரசு நேர்மையான முறையில் எதையும் சாதிப்பதில்லை என்பது தெட்டத் தெளிவாக புரிகிறது. அதாவது உதாரணமாக உள்நாட்டில் அரசியல் என்றால் என்ன அல்லது யுத்தம் என்றால் என்ன எதை எடுத்துக்கொண்டாலும் நேர்வழியில் மோதி தமிழர்களை வெல்ல முடியாது என்பது அவர்களுக்கு நல்லாக தெரியும்.

ஆனால் இந்தியா விடயத்தில் ராஜபக்ச நினைக்கிற மாதிரி இலகுவில் சாதிக்கிற அளவுக்கு அறிவுள்ளவர் இல்லை என்பதையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த சந்தர்ப்பத்தில் ஜே. ஆர். ஜெயவர்தனா இருந்திருக்க வேனும் நிலமை வேறுவிதமாக இருந்திருக்கும்.

என்ன இருந்தாலும் சிங்களவர்கள் ஒரு விடயத்தில் கெட்டிக்காரர் அதாவது உள்நாட்டில் தமிழர்களை தமிழர்களுடனும், வெளிநாடுகளில் தமிழர்களின் நட்பு நாடுகளை தமிழர்களுடனும் மோத விட்டு காரியத்தை சாதிப்பதில் சாணக்கியர்கள்.

ஆனால் இன்று விடுதலைப் புலிகள் கள நிலமையை வேறு விதமாக மாற்றியுள்ளதையும் ஏற்றுக்கொள்ளத் தான் வேனும்.

எப்படியென்றால் சிங்களவரையே சோதனைச் சாவடியில் நிற்பாட்டி சிங்களவனே சோதிக்கும் நிலைக்கு சரித்திரம் மாறியிருக்குது பார்த்தீங்களா?

இலங்கை கடற்படையைக் கண்டித்து திமுக பேரணி

இலங்கை கடற்படைக்கு எதிராக தமிழக தலைநகர் சென்னையில் திங்கட்கிழமையன்று தமிழ்நாட்டை ஆளும் திமுக சார்பில் கண்டனப் பேரணியும் ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டன.

இந்தியா மற்றும் இலங்கைக் கிடையிலான கடற்பரப்பில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தி தாக்குவதாகவும், இதில் தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதும் படுகாயமடைவதும் தொடர்வதை இனியும் அனுமதிக்க முடியாது என்றும் ஊர்வலத்தில் வந்தவர்கள் கோஷங்களை எழுப்பினார்கள்.

இன்றைய ஊர்வலத்திற்கு தமிழ்நாட்டின் மீன்வளத்துறை அமைச்சர் கே.பி.பி.சாமி தலைமை தாங்கினார். தமிழக முதல்வர் மு.கருணாநிதியின் மகனும் தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சருமான மு.க.ஸ்டாலின் உட்பட தமிழக அமைச்சர்கள் பெரும்பாலானவர்கள் இந்த ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்.

ஆர்பாட்டத்தின் முடிவில், தமிழக அமைச்சர்கள் குழு ஒன்று, சென்னையில் இருக்கும் இலங்கை துணைத்தூதர் அம்சா அவர்களின் அலுவலகத்திற்கு சென்று அவரை நேரில் சந்தித்தனர். அப்போது தங்களின் கண்டனத்தையும் கவலைகளையும் தெரிவிக்கும் மகஜர் ஒன்றையும் இவர்கள் அம்சாவிடம் கையளித்தனர்.

பேரணியில் கலந்துகொண்ட சிலர் post-3418-1173747693_thumb.jpg

இந்தச் சந்திப்பின்போது பேசப்பட்ட விடயங்கள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர் மு.கருணாநிதி, தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் குறித்து இந்தியப் பிரதமர் அலுவலகம் இலங்கை துணைத்தூதரிடம் விவரங்கள் கேட்டதாக தெரிவித்தார்.

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தவில்லை என்றும், விடுதலைப்புலிகளோ அல்லது வேறு குழுவினரோ இதை செய்திருக்கலாம் என்றும் இலங்கை இராணுவ தரப்பில் கூறப்படுவதை பற்றி கேட்டபோது, இலங்கை அரசின் இந்த மறுப்பை தாக்கப்பட்ட தமிழக மீனவர்கள் ஏற்கவில்லை என்றும் கருணாநிதி கூறினார்.

இதற்கிடையே இலங்கை கடற்படையினரின் தாக்குதலை கண்டித்து இராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடம், மண்டபம் போன்ற பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் இன்று திங்கட்கிழமை முதல் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். நாளை செவ்வாய்க்கிழமையும் இந்த போராட்டம் நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பேரணியில் கலந்துகொண்ட சிலர் post-3418-1173747425_thumb.jpg

இதேவேளை, தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்கள் குறித்து, இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் தமிழக உறுப்பினர்கள் இலங்கையை கண்டித்து பேசினார்கள்.

மேலும் தமிழ்நாட்டை சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள் குழுவினர் இன்று இந்திய பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்துப் கோரிக்கை மனு ஒன்றை கையளித்தனர். அதில் தமிழக மீனவர்கள் அடிக்கடி இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதாகவும் அதனால் தமிழக மீனவர்களை பாதுகாக்கும் விதமாக மத்திய அரசு உடனே இதில் தலையிட்டு, இலங்கை கடற்படையின் அத்து மீறலை தடுக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

தம்மிடம் அரசியல் பலம் இருக்கும் போது மிரட்டி மத்திய அரசை பணிய வைக்கும் சக்தி இருக்கின்ற போதும் கண்டன ஊர்வலம் நடத்தி தம்மையும் பேக்காட்டி தமிழக மக்களையும் பேக்காட்டி இந்திய அரசையும் பேக்காட்டு ஒட்டு மொத்த உலக தமிழர்களின் தலியில் மிளகாஅய் அரைக்கும் செயற்பாடே இது அல்லது திமுகாவின் கையாலாகாதனமா நானறியேன்

  • கருத்துக்கள உறவுகள்

ஈழவன் உங்களைப்போன்ற ஒத்த கருத்துடையவன் தான் நானும், இருந்தாலும் இதே போன்ற கருத்தை பதியும்போது வந்த வேகத்திலேயே மறைந்து விடுகின்றன கவனித்தீர்களா? அதுக்காக உண்மையை பொய்யாக்க முடியுமா என்ன?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.