Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லண்டன் ஒக்ஸ்போர்ட் நிலக்கீழ் புகையிரத நிலையத்தில் அசம்பாவிதம்

Featured Replies

லண்டன் ஒக்ஸ்போர்ட் நிலக்கீழ் புகையிரத நிலையத்தில் அசம்பாவிதம்

oxford-circus-5.jpg

லண்டன் ஒக்ஸ்போர்ட் நிலக்கீழ் புகையிரத  நிலையத்தில் அசம்பாவித நிகழ்வு ஒன்று இடம்பெற்றிருப்பதாக அறிவிக்கப்படுகிறது. சம்பவ இடத்திற்கு காவல்துறையினர்  விரைந்திருக்கிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அசம்பாவித இடத்தை காவல் துறையினர் சூழ்ந்திருப்பதாக அறிவிக்கப்படுகின்ற அதேவேளை மக்களை குறித்த பகுதியை தவிர்க்குமாறும் கோரியுள்ளனர்.
மேலும்   குறித்த சம்பவம் தொடர்பான விபரங்கள் எவையும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

 

oxford-circus-2.jpgoxford-circus-3.jpgoxford-circus-6.jpgoxford-circus.jpg

http://globaltamilnews.net/archives/51346

  • தொடங்கியவர்

ஒக்ஸ்போர்ட் நிலக்கீழ் புகையிரத நிலையப் பகுதியில் இடம்பெற்றது அச்சமூட்டும் நிகழ்வே

oxford-circus-5.jpg

 

லண்டன் ஒக்ஸ்போர்ட் நிலக்கீழ் புகையிரத  நிலையம் வழமைக்கு திரும்பியுள்ளதாகவும் இதுவொரு   என காவல்துறைத்தரப்பு தெரிவித்துள்ளது.
மேலும்  இந்த சம்பவத்தின் போது ஒருவருக்கு மாத்திரம் ஓடும் போது சிறு காயம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://globaltamilnews.net/archives/51346

  • தொடங்கியவர்

லண்டன் ரயில் நிலைய தாக்குதல் பீதி முடிவுக்கு வந்தது

9890108645b34f30-f166-4fb1-8ccf-e05a7aba

களத்தில் இறங்கிய காவல் துறை   -  Getty Images

லண்டன் ஆக்ஸ்ஃபோர்ட் சர்கஸ் சுரங்கப் பாதை ரயில் நிலையத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து களத்தில் இறங்கிய ஆயுதம் தாங்கிய போலீசாரின் தீவிர நடவடிக்கையை அடுத்து, இரண்டு ரயில் நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட்டன.

ஆக்ஸ்ஃபோர்ட் வீதி அருகே பல இடங்களில் துப்பாக்கிச் சூடு நடத்தப்படுவதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. அதனால், பெருமளவில் மக்களிடம் பீதி ஏற்பட்டது.

சந்தேகத்துக்குரிய எந்த நபரையோ, துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது அல்லது பாதிக்கப்பட்டவர்களைப் பற்றிய அடையாளம் எதையுமோ தாங்கள் பார்க்கவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து, ஆக்ஸ்ஃபோர்ட் சர்கஸ் மற்றும் பாண்ட் வீதி சுரங்கப் பாதை ரயில் நிலையங்கள் மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டன.

பீதியால் மக்கள் கூட்ட நெரிசலில் முந்தியடித்துக் கொண்டு ரயில் நிலையத்திலிருந்து வெளியேறியபோது, அந்த நெரிசலில் சிக்கி ஒரு பெண் காயமடைந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

9890108645b34f30-f166-4fb1-8ccf-e05a7aba

களத்தில் இறங்கிய காவல் துறை   -  Getty Images

மாலை 4.38 மணிக்கு, துப்பாக்கிச் சூடு நடத்தப்படுவதாக பெருமளவில் தங்களுக்கு தகவல்கள் வந்ததாகவும், துவக்கத்தில் அந்த சம்பவத்தை பயங்கரவாத் தாக்குதல் சம்பவம் போல கருதி நடவடிக்கையில் இறங்கியதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

பெரும் கூட்டம் கூடுவதைத் தவிர்ப்பதற்காக, அருகில் உள்ள பாண்ட் வீதி சுரங்க ரயில் நிலையமும் மூடப்பட்டது.

98901089964f5091-bc80-46bd-9534-a767e25d

துரித நடவடிக்கை   -  Reuters

போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி, எந்த சம்பவமும் நடந்ததற்கு ஆதாரம் இல்லை என்பதை உறுதி செய்த பிறகு தங்களது நடவடிக்கைகளை மாலை 6.05 மணிக்கு போலீசார் நிறுத்திக் கொண்டனர்.

வெள்ளிக்கிழமை மாலை பொதுமக்கள் தீவிர வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த சமயத்தில் இந்தப் பதற்றம் ஏற்பட்டது.

பெருமளவில் மக்கள் பதற்றத்துடன் ரயில் நிலையத்திலிருந்து வெளியே ஓடிவந்தனர் என்றும், பலர் அழுது கொண்டும், பீதியில் கூச்சலிட்டவாறும் ஓடிவந்ததாகவும், பலர் தங்கள் கையில் வைத்திருந்த பொருட்களை கீழே போட்டுவிட்டு ஓடியதாகவும் பிபிசி செய்தியாளர் ஹெலன் புஷ்பி தெரிவித்தார்.

சிறப்புப் படை போலீசார் மிக விரைவாக செயல்பட்டு களத்தில் இறங்கியதை லண்டன் மேயர் சாதிக் கான் பாராட்டியுள்ளார்.

http://tamil.thehindu.com/bbc-tamil/article20819895.ece

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.