Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் தினகரன் ஆதரவு எம்.பி-க்கள்!

Featured Replies

எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் தினகரன் ஆதரவு எம்.பி-க்கள்!

 
 

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இல்லத்துக்கு தினகரன் ஆதரவு மாநிலங்களவை எம்.பி-க்கள் மூன்று பேர் வருகை தந்துள்ளனர். அவர்கள் மூன்று பேரும் தினகரன் அணியில் இருந்து எடப்பாடி பழனிசாமியின் அணிக்குத் தாவலாம் என்று கூறப்படுகிறது. 

எடப்பாடி பழனிசாமி மற்றும் தினகரன்

 

அடுத்த மாதம், 5-ம் தேதி ஜெயலலிதாவின் முதல் நினைவு நாள் வருகிறது. இதையொட்டி, தமிழக அரசு சார்பில் அமைதி ஊர்வலம் ஏற்பாடு செய்யப்படலாம் என்று அ.தி.மு.க வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இது குறித்து சென்னை, பசுமைவழிச் சாலையில் இருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் அ.தி.மு.க-வின் முக்கிய நிர்வாகிகள் ஆலோசித்து வருகின்றனர். இந்தக் கூட்டத்துக்கு தினகரன் அணியில் இருக்கும் மூன்று மாநிலங்களவை எம்.பி-க்களான விஜிலா சத்தியானந்த், நவநீதகிருஷ்ணன், கோகுல கிருஷ்ணன் ஆகியோர் வருகை தந்துள்ளனர். இதனால், அவர்கள் தினகரன் அணியில் இருந்து எடப்பாடி அணிக்குத் தாவலாம் என்று கூறப்படுகிறது. 

https://www.vikatan.com/news/tamilnadu/109066-dinakaran-faction-mps-at-palanisamys-residence.html

  • தொடங்கியவர்

தினகரன் ஆதரவு எம்பிக்கள் 3 பேர் அணி தாவினர்: எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு

 

 
64ce144b-0084-4ea3-82b2-cc5e57d958bcjpg

அதிமுகவில் அடுத்தடுத்து ஏற்படும் பரபரப்பால் எம்.பிக்கள் எம்.எல்.ஏக்கள் அணி தாவி வருகின்றனர். இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் தினகரன் அணிக்கு ஏற்பட்ட பின்னடைவை அடுத்து அவரது அணியிலிருந்த மூன்று எம்பிக்கள் எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு தாவினர்.

அதிமுக ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஒபிஎஸ் அணி, இபிஎஸ் அணி என இரண்டானது. தினகரன் தலைமையில் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் செயல்பட்டு வந்த நிலையில் திடீரென தினகரன் ஓரங்கட்டப்பட்டார். பின்னர் ஓபிஎஸ் தனது ஆதரவு எம்.எல்.ஏ, எம்பிக்களுடன் எடப்பாடி அணியுடன் இணைந்தார்.

இதனால் தினகரன் அணி தனியாகவும், எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் இணைந்து ஒரு அணியாகவும் இயங்கி வந்தனர். இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் தினகரன் அணிக்கு ஏற்பட்ட பின்னடைவும், தினகரன் அணிக்குள்ளேயே புதிதாக ஏற்பட்டுள்ள முட்டல் மோதலும் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

தினகரன் அணியில் இருந்த ராஜ்ய சபா எம்பிக்கள் விஜிலா சத்யானந்த், கோகுல கிருஷ்ணன், நவநீதகிருஷ்ணன் ஆகியோர் திடீரென இன்று எடப்பாடி அணிக்கு தாவினர். மூவரும் இன்று மதியம் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசினர். அப்போது அதிமுக அமைச்சர்களும் எடப்பாடியுடன் இருந்தனர். தினகரன் ஆதரவு எம்பிக்கள் எடப்பாடி பழனிசாமியை சந்தித்திருப்பதன் மூலம் தினகரன் தரப்புக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

கோகுல கிருஷ்ணன் பாண்டிச்சேரி மாநிலம் சார்பில் தேர்வு செய்யப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர். ஏற்கனவே பாண்டிச்சேரி அதிமுக எம்.எல்.ஏக்கள் 4 பேர் எடப்பாடி அணிக்கு ஆதரவளித்து வந்த நிலையில் ராஜ்ய சபா எம்பி கோகுல கிருஷ்ணன் மட்டுமே தினகரன் அணியில் இருந்தார் தற்போது அவரும் அணி தாவியதன் மூலம் தினகரன் அணிக்கு பாண்டிச்சேரியில் ஆதரவு முற்றிலும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் நவநீத கிருஷ்ணன் இணைப்பின் மூலம் அவர் வகித்து வந்த மாநிலங்களவை தலைவர் பதவி அப்படியே இருக்கும் பட்சத்தில் அதிமுகவில் மாநிலங்களவை தலைவர் பதவிக்கு வருவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட மைத்ரேயனுக்கும் பின்னடைவு என்று அதிமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://tamil.thehindu.com/tamilnadu/article20995596.ece?homepage=true

  • தொடங்கியவர்

தினகரன் அணியில் இருந்து மேலும் இரு எம்.பி.க்கள் முதல்வர் பழனிசாமி அணிக்கு தாவினர்

 

 
senguttuvan%20udhayakumarjpg

செங்குட்டுவன், உதயகுமார் | கோப்புப் படம்.

இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் தினகரன் அணிக்கு ஏற்பட்ட பின்னடைவை அடுத்து அவரது அணியிலிருந்த மூன்று எம்.பி.க்கள் எடப்பாடி பழனிசாமி அணிக்கு தாவிய நிலையில் இன்று மேலும் இரு எம்.பி.க்கள் தாவினர்.

அதிமுகவில் அடுத்தடுத்து ஏற்படும் பரபரப்பால் எம்.பிக்கள் எம்.எல்.ஏக்கள் அணி தாவி வருகின்றனர். இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் தினகரன் அணிக்கு ஏற்பட்ட பின்னடைவை அடுத்து அவரது அணியிலிருந்த மூன்று எம்பிக்கள் எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு தாவினர்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக ஓபிஎஸ் அணி, ஈபிஎஸ் அணி என இரண்டானது. தினகரன் தலைமையில் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் செயல்பட்டு வந்த நிலையில் திடீரென தினகரன் ஓரங்கட்டப்பட்டார். பின்னர் ஓபிஎஸ் தனது ஆதரவு எம்.எல்.ஏ, எம்பிக்களுடன் எடப்பாடி அணியுடன் இணைந்தார். இதனால் தினகரன் அணி தனியாகவும், எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் இணைந்து ஒரு அணியாகவும் இயங்கி வந்தனர்.

இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமி அணிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், தினகரன் அணிக்கு பின்னடைவு ஏற்பட்டது.இதனால் தினகரன் அணிக்குள்ளேயே புதிதாக ஏற்பட்டுள்ள முட்டல் மோதலும் தற்போது வெளிச்சத்துக்கு வந்தது.

தினகரன் அணியில் இருந்த ராஜ்ய சபா எம்பிக்கள் விஜிலா சத்யானந்த், கோகுல கிருஷ்ணன், நவநீதகிருஷ்ணன் ஆகியோர் திடீரென நேற்று (திங்கட்கிழமை) எடப்பாடி அணிக்கு தாவினர். மூவரும் நேற்று மதியம் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினர். அப்போது அதிமுக அமைச்சர்களும் எடப்பாடியுடன் இருந்தனர்.

இந்நிலையில் இன்று திண்டுக்கல் எம்.பி. உதயகுமார், வேலூர் எம்.பி.செங்குட்டுவன் ஆகிய இரு எம்.பி.க்களும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துப் பேசினர். அதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர்கள் கூறுகையில், இரட்டை இலை சின்னத்துக்கு மதிப்பளிக்கும் வகையில் முதல்வர் அணியுடன் இணைந்ததாக தெரிவித்தனர்.

தினகரன் ஆதரவு எம்.பி.க்கள் எடப்பாடி பழனிசாமியை சந்தித்திருப்பதன் மூலம் தினகரன் தரப்புக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

http://tamil.thehindu.com/tamilnadu/article21039765.ece?homepage=true

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.