Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு வாரத்தில் தேர்தல் இல்­லா­விடின் கொழும்பை சுற்­றி­வ­ளைப்போம் : காலக்கெடு விதித்தது ஜே.வி.பி.

Featured Replies

ஒரு வாரத்தில் தேர்தல் இல்­லா­விடின் கொழும்பை சுற்­றி­வ­ளைப்போம் : காலக்கெடு விதித்தது ஜே.வி.பி.

4-68c802d0970d6653164831c5e6635a50a1ddcdd1.jpg

 

(ஆர்.யசி)

மஹிந்த ராஜ­ப­க் ஷ­வுடன் ஒட்­டிக்­கொண்டு தமது இருப்பை தக்­க­வைக்கும் முயற்­சி­க­ளையே ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன முன்­னெ­டுத்து வரு­கின்றார். தேர்­தலை பிற்­போ­டு­வதன் முழுப்­பொ­றுப்­பையும் ஜனா­தி­ப­தியே ஏற்­று­க்கொள்ள வேண்டும் என மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலைவர் அனு­ர­கு­மார திஸா­நா­யக்க தெரி­வித்தார்.

இந்த வாரத்­தினுள் தேர்தல் குறித்து அர­சாங் கம் மௌனம் கலைக்­கா­விட்டால் நாடு பூரா­கவும் மக்­களை ஒன்­று­தி­ரட்டி கொழும்பை சுற்­றி­வ­ளைப்போம் எனவும் அவர் குறிப்­பிட்டார்.  மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் செய்­தி­யாளர் சந்­திப்பு நேற்று கட்சி அலு­வ­ல­கத்தில் இடம்­பெற்­றது.  

இதில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்கும் போதே அவர் இதனைக் குறிப்­பிட்டார். அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்  உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் எந்த வகை­யி­லேனும் பிற்­போ­வ­தையே பிர­தான இரண்டு கட்­சி­களும் விரும்­பு­கின்­றன . அர­சாங்­கத்தின் மீதான அவ­நம்­பிக்கை வெளிப்­பட்­டு­விடும் என்­பது அர­சாங்­கத்­திற்கு நன்­றாக தெரிந்தே தற்­போது தேர்­தலை பிற்­போட்டு வரு­கின்­றது. தேர்­த­லுக்கு முகங்­கொ­டுப்­பதில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சி­யினர் பாரிய நெருக்­க­டி­களை சந்­தித்து வரு­கின்­றனர். ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கும் மஹிந்த ராஜபக் ஷவிற்கும் தன்னை விட ஆத­ரவு அதி­க­ரித்­துள்­ளது என்­பதை தெரிந்தே இன்று ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சி­யினர் தேர்­தலை திட்­ட­மிட்டு பிற்­போட்டு வரு­கின்­றனர்.  

கடந்த ஜனா­தி­பதி தேர்­தலில் 62 இலட்சம் மக்­களின் வாக்­கு­களை பெற்று மைத்­தி­ரி­பால சிறி­சேன ஜனா­தி­ப­தி­யாக தெரி­வா­கிய போதிலும் இன்று அவ­ரது மக்கள் செல்­வாக்கு என்­ன­வென்­பது தெளி­வாக வெளிப்­ப­டு­கின்­றது. இந்­நி­லையில் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் தலை­மையில் மக்­களை சந்­தித்தால் இறு­தியில் பாரிய பின்­ன­டைவை தாம் சந்­திக்க நேரிடும் என்­பது அவர்­க­ளுக்கு தெரிந்­துள்­ளது.

உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலை நடத்­து­வதில் மாற்­றங்­களை கொண்­டு­வர வேண்டும் என்ற நிலைப்­பாட்டில் அர­சாங்­கத்தின் சில செயற்­பா­டு­க­ளுக்கு நாமும் ஆத­ரவு தெரி­வித்தோம். அதை மறுக்க முடி­யாது. ஏனெனில் கடந்த காலத்தில் முன்­னைய அர­சாங்கம் முன்­னெ­டுத்த எல்லை நிர்­ணய முறை­மையில் மிகப்­பெ­ரிய சிக்கல் இருந்­தது. ஆகவே புதிய எல்லை நிர்­ணய முறை­மையின் கீழ் சகல தரப்­பையும் பலப்­ப­டுத்தும் மக்­க­ளுக்­கான சரி­யான நிர்­வாகம் ஒன்று உரு­வாக வேண்டும் என்ற நிலைப்­பாட்டில் இருந்து நாம் ஒத்­து­ழைப்பு வழங்­கினோம்.

புதிய எல்லை நிர்­ணய முறை­மைக்கு எந்­த­வொரு கட்­சியும் எதிர்ப்பு தெரி­விக்­க­வில்லை. இந்­நி­லையில் நீண்­ட­கால போராட்­டத்தின் பின்னர் பிரச்­சி­னைகள் அனைத்­தையும் தீர்த்து இந்த ஆண்டு நவம்பர் மாதம் முதலாம் திகதி சகல வகை­யிலும் தேர்­தலை நடத்தும் வர்த்­த­மானி அறி­வித்தல் விடுக்­கப்­பட்­டது. எனினும் இன்று பல்­வேறு கார­ணி­களை கூறி தேர்­தலை பிற்­போடும் வகையில் நீதி­மன்­றத்தில் வழக்கு தொடர்ந்து சூழ்ச்­சி­களை செய்­கின்­றனர்.

தேர்­தலை பிற்­போடும் சூழ்ச்­சிக்கு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன முழு­மை­யாக பொறுப்­பேற்க வேண்டும். ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் திட்­டத்தில் அவர்­களின் நபர்­களை கொண்டே வழக்கு தாக்கல் செய்து நாட­க­மாடி வரு­கின்­றனர். இன்று இவர்கள் தேர்­தலை பிற்­போட ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சிக்கும் பொது எதி­ர­ணிக்கும் இடையில் உள்ள அர­சியல் வழக்­கு­களே கார­ண­மாகும்.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தன்­னையும் தனது அதி­கா­ரத்­தையும் தக்­க­வைத்­துக்­கொள்ள மஹிந்த ராஜபக் ஷவுடன் இணைந்து பய­ணிக்க முயற்­சித்து வரு­கின்றார். யாரு­ட­னா­வது ஒட்­டிக்­கொண்டு தனது அர­சி­யலை முன்­னெ­டுத்து செல்­லவே அவர் முயற்­சிக்­கின்றார். மீண்டும் மஹிந்த தரப்­புடன் ஒட்­டிக்­கொண்டு செல்­ல­வேண்டும் என்ற முயற்­சியில் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி செயற்­ப­டு­கின்­றது. பொது எதி­ர­ணியும் இந்த வாய்ப்பை பயன்­ப­டுத்தி தாமும் தப்­பித்­துக்­கொள்ள முயற்­சிக்­கின்­றது. இவர்­களின் உடன்­ப­டிக்கை சரி­யாக பொருந்தும் வரையில் தேர்தல் பிட்­போ­டப்­பட்டு வரு­கின்­றது.

உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலை முழு­மை­யாக நடத்த முன்னர் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி இணைய வேண்டும். அவ்­வாறு இல்­லையேல் தேர்­தலை முழு­மை­யாக நடத்த இய­லாது. இப்­போது அனு­ம­திக்­கப்­பட்­டுள்ள 93 சபை­களின் தேர்­தலை நடத்­தி­னாலும் கூட ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சி­யினால் பாரிய பின்­ன­டை­வினை சந்­திக்க நேரிடும். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் மக்கள் செல்­வாக்கு என்­ன­வென்­பதை அவர் உணந்­துள்ள நிலை­யிலும் , மஹிந்த நிரா­க­ரிக்­கப்­பட்டு வரும் நிலை­யிலும் இரு­வரும் இணைந்தால் மாத்­தி­ரமே அவர்­களின் அர­சியல் சாத்­தி­ய­மாகும்.

அதேபோல் மஹிந்த ராஜ­ப­க்ஷ­விற்கும் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விற்கும் இடையில் தனிப்­பட்ட முரண்­பா­டுகள் இருக்­கின்­றதே தவிர கொள்கை ரீதியில் பிள­வுகள் இல்லை. தனது செய­லாளர் தனக்கு எதி­ராக கள­மி­றங்கி தன்னை வீழ்த்­தினார் என்ற கோபம் மஹிந்த ராஜபக் ஷவிடம் உள்­ளதை போலவே ஜனா­தி­பதி தேர்­தலில் தோல்­வியை சந்­தித்­தி­ருந்தால் தனது உயி­ருக்கு மஹிந்த ராஜபக் ஷ கேடு வைத்­தி­ருப்பார் என்­பது ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் கோப­மாக உள்­ளது. இதை தவிரை இவர்கள் முன்­னெ­டுக்கும் அனைத்­துமே அர­சியல் நாட­க­மாகும். இதனை மக்கள் இன்றும் நம்பி செயற்­ப­டு­கின்­றார்­களா என்ற கேள்வி எம்­மிடம் உள்­ளது.

எவ்­வாறு இருப்­பினும் உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­தலை நடத்தி மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வை பெற்­றுத்­த­ரு­வதில் நாம் முழு­மை­யான பொறுப்­பினை ஏற்­றுக்­கொள்­கின்றோம். தேர்­தலை நடத்­து­வதில் பாரா­ளு­மன்­றத்தில் முன்­னெ­டுக்க வேண்­டிய போராட்­டத்தை நாம் பொறுப்­பு­மிக்க கட்­சி­யாக முன்­னெ­டுத்து வரு­கின்றோம். கட்சி தலை­வர்கள் கூட்­டத்­திலும், விவா­தங்­களில் எமது அழுத்தம் பிர­யோ­கிக்­கப்­பட்டு வரு­கின்­றது.

அதே­போன்று தேர்­தலை நடத்­து­வது ஜனா­தி­பதி தலை­யிட்டால் சாத்­தி­ய­மாகும். அவர்கள் தொடுத்­துள்ள வழக்கை அவர்கள் மீளப்­பெற்றால் தேர்தல் எந்­த­வித தடை­களும் இல்­லாது இடம்­பெறும். ஆகவே ஜனா­தி­ப­திக்கு கடிதம் மூல­மாக நாம் அதனை வலி­யு­றுத்தி வரு­கின்றோம். இந்­நி­லையில் இம்­மாதம் 30 ஆம் திகதி இந்த வழக்கை விசா­ர­ணைக்கு எடுக்­கவும் சில நகர்­வுகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. எமது தரப்பின் சட்ட வல்­லு­நர்­களும் இந்த வழக்கில் தலை­யி­ட­வுள்­ளனர். இதை நீதி­மன்றம் சார் எமது நகர்­வாக முன்­னெ­டுத்து வரு­கின்றோம்.

இதற்கு அப்பால் அர­சியல் ரீதி­யிலும் இந்த மக்கள் விடு­தலை முன்­னணி பாரிய நகர்­வு­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றது. நாட்டில் பல்­வேறு பகு­தி­களில் எமது ஆர்ப்­பாட்­டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எனினும் அரசாங்கம் தேர்தலை பிற்போட ஏதேனும் சூழ்ச்சிகளை செய்யுமாயின் நாட்டின் சகல பகுதிகளில் இருந்தும் மக்களை ஒன்றுதிரட்டி கொழும்பை சுற்றிவளைக்கவும் நாம் தயாராக இருக்கின்றோம்.

இந்த வாரம் மட்டுமே அரசாங்கத்திற்கு காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. அதற்குள் தேர்தல் குறித்து அரசாங்கம் மௌனம் கலைக்காவிடின் அடுத்த வாரம் பல்லாயிரக்கணக்கான மக்களை கொழும்பில் குவித்து பாரிய போராட்டத்தை நடத்தி தேர்தலையும் அரசாங்கம் நடத்துவதற்கான எதிர்ப்பு அலை போராட்டத்தையும் நடத்திக்காட்டுவோம். மக்கள் விடுதலை முன்னணி எதற்கும் தயார். அரசாங்கம் இனியும் ஏமாற்ற முடியாது என்றார்

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-11-29#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.