Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மலையகத் தமிழரைக் காக்கவேண்டியது நமது கடமை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மலையகத் தமிழரைக் காக்கவேண்டியது நமது கடமை

- வீர. மதுரகவியிடம் நேர்காணல்

இந்தியாவின் தென்பகுதியிலிருந்து பெருந்தோட்டப் பயிர்ச் செய்கைக்காக கூலிகளாக அழைத்துச் செல்லப்பட்டவர்களில் இலட்சக்கணக்கானோர் 15க்கும் மேற்பட்ட நாடுகளிலும் தீவுகளிலும் வாழ்ந்து வருகிறார்கள்.

ஆனால், இவ்வாறு அழைத்துச் செல்லப்பட்ட இந்திய வம்சாவழித் தமிழ் மக்களில் இலங்கையில் மலையகத்தில் வாழும் தமிழ் மக்கள் சொல்லொண்ணா வேதனைகளை அனுபவித்து வருவது குறித்து தாய்நாட்டு மக்களுக்கு இதுவரை முழுமையாகத் தெரியாமலிருப்பது ஆச்சரியப்பட வேண்டிய விடயமாகும்.

எனவே இலங்கை வாழ். இந்திய வம்சாவழித் தமிழ் மக்களின் நிலைமை குறித்து இந்திய அரசாங்கத்தினதும் தமிழ்நாட்டு அரசாங்கத்தினதும் ஐக்கிய நாட்டுச் சபையினதும் கவனத்துக்குக் கொண்டுவருவது ஒவ்வொரு இந்திய வம்சாவளித் தமிழ்க் குடிமகனினது கடமையாகும். புதுச்சேரியின் குரல் செய்தி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் வீர மதுர கவி இவ்வாறு தெரிவித்தார்.

ஜெர்மன் உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கத்தின் புதுச்சேரி கிளையின் தலைவரும் புதுச்சேரியின் குரல் செய்தி பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான வீர மதுரகவி, கடந்த வாரம் மலையகப் பகுதிகளுக்கு விஜயம் செய்து இம்மக்களின் வாழ்வியல் அம்சங்களை நேரில் பார்த்து உணர்ந்து கொண்டார்.

அவர் வீரகேசரி வார வெளியீட்டுக்காக வழங்கிய விசேட பேட்டியின் விபரம் வருமாறு:-

கேள்வி : புதுச்சேரியின் குரல் என்ற பெயரில் தாங்கள் வெளியிடும் பத்திரிகை பற்றி கூறுங்களேன்?

பதில் : சுமார் பத்து லட்சம் தமிழ் மக்கள் வாழும் புதுச்சேரி பிரதேசத்தில் இச்செய்தி பத்திரிகையை நடத்தி வருகிறேன். மாதமிருமுறை இச்செய்தி பத்திரிகை வெளியிடப்படுகின்றது.

பெரும்பாலும் இந்திய வம்சாவழித் தமிழ் மக்கள் வாழும் நாடுகள், தீவுகளுக்கு நேரடியாக விஜயம் செய்து அவர்கள் தற்போதைய நிலையை ஆராய்ந்துவந்து, இப்பத்திரிகையில் செய்திக் கட்டுரைகளாக வெளியிட்டு வருகின்றேன். சில சந்தர்ப்பங்களில் பிரெஞ்சு மொழியிலும் இப்பத்திரிகையை வெளியிடுகின்றேன்.

கேள்வி : இந்திய வம்சாவழித் தமிழ் மக்கள் கூலிகளாக அழைத்துச் செல்லப்பட்ட நாடுகளில் அவர்களின் வாழ்க்கைத் தரம் எவ்வாறு உள்ளது?

பதில் : ஐரோப்பியர் மற்றும் ஆங்கிலே யர் ஆட்சிக் காலத்தில் தமிழ்நாட்டிலிருந்து இலட்சக்கணக்கான தமிழர்கள் பெருந் தோட்டப் பயிர்ச் செய்கைக்காக இலங்கை, மலேசியா, நியூகலேடுனியன், பிஜி, டைக்த் து, பர்மா, மொரிசியஸ், ரியனியோ, கரிபின், பிரேசில், பிரிட்டிஷ், கயானா, மார்த்தினிக் போன்ற தீவுகளுக்கு அழைத்துச் செல்லப் பட்டனர். நான் இத்தீவுகளுக்கு விஜயம் செய்து இம்மக்களின் நிலைமை குறித்து பல விடயங்களை அறிந்துகொண்டேன்.

இலங்கை, மலேசியா நாடுகளைத் தவிர்த்த ஏனைய தீவுகளில் வாழும் இந்திய வம்சாவழித் தமிழ் மக்கள் கரும்புப் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கின்றது. வாழ்வியல் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

கேள்வி : தாங்கள் இலங்கைக்கு குறிப்பாக மலையகப் பகுதிகளுக்கு விஜயம் செய்ததன் நோக்கம் என்ன?

பதில் : ஜெர்மன் நாட்டைத் தலைமையகமாகக் கொண்ட உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கத்தின் மாநாடு கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம 16ஆம், 17ஆம், 18ஆம் திகதிகளில் புதுச்சேரியில் நடைபெற்றது. இம்மாநாட்டில் உலகநாடுகளைச் சேர்ந்த தமிழ்ப் பேராளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இம்மாநாட்டில் மலையக மக்கள் முன்னணியின் தலைவர் பெ. சந்திரசேகரன் உட்பட சில முக்கியஸ்தர்கள், இலங்கையிலிருந்து வந்து கலந்து கொண்டனர்.

மாநாட்டின் போது இலங்கை வாழ் இந்திய வம்சாவழித் தமிழ் மக்கள் குறித்து விரிவாகப் பேசுவதற்கு போதிய கால அவகாசம் கிடைக்கவில்லை.

மேலும் இவர்கள் குறித்து அறிந்து கொள்வதற்கும் பேராளர்கள் மத்தியில் ஆர்வமும் இருக்கவில்லை. இச்சம்பவம் எனது மனத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.இதனைத் தொடர்ந்து இலங்கைக்கு விஜயம் செய்து, இந்திய வம்சாவழித் தமிழ் மக்கள் குறித்து உரிய முறையில் அறிந்து கொண்டு அவர்களைப் பற்றி உலகத் தமிழர்களுக்கு அறிவிக்க வேண்டும் என்ற நோக்கத்துடனேயே நான் இலங்கைக்கு விஜயம் செய்தேன்.

கேள்வி: மலையகப் பகுதிகளுக்கு விஜயம் செய்த நீங்கள் இம்மக்களின் நிலைமை குறித்து எவற்றை அறிந்து கொண்டீர்கள்?

பதில் : சுமர் 150 வருடங்களுக்கும் மேலாக சுமார் 20 லட்சம் இந்திய வம்சாவழித் தமிழ் மக்கள் இலங்கையில் மிகுந்த துன்பத்துடன் வாழ்ந்து வருவதை நேரில் பார்த்து மிகுந்த வேதனை அடைகின்றேன்.

அடிப்படை வசதிகளற்ற குடியிருப்புகளில் வாழ்கிறார்கள். சுகாதாரம், வைத்திய, போக்குவரத்துச் சேவைகள் உரிய முறையில் கிடைக்காது மிகுந்த கஷ்ட நிலையில் வாழ்வதை உணரக்கூடியதாகவுள்ளது.

கல்வி மற்றும் ஏனைய வாய்ப்புகள் மறுக்கப்பட்ட மக்களாக இவர்கள் வாழ்ந்து வருகின்றார்கள். இவர்களின் நல்வாழ்வு குறித்து அக்கறையோடு செயற்படாத தலைமைகள் குறித்து கவலையடைகின்றேன்.

கேள்வி : இலங்கை வாழ் இந்திய வம்சாவழி மலையகத் தமிழ் மக்கள் குறித்து தமிழ் நாட்டு மக்கள் எவ்விதத்தில் அறிந்து வைத்துள்ளார்கள்?

பதில்: இம் மக்களின் இத்தகைய நிலைமை குறித்து, தமிழ்நாட்டு மக்களுக்குப் பூரணமாக எதுவும் தெரியாது. இதுவரை காலமும் தீவுகளுக்கு இடம் பெயர்ந்த இந்திய வம்சாவழித் தமிழர்களையே நாம் கைவிடப்பட்ட தமிழர்களாகக் கருதிவந்தோம். ஆனால் இப்போதுதான் தெரிகிறது. இலங்கையில் மலைநாட்டுப் பகுதியில் வாழும் சுமார் 20 இலட்சம் இந்திய வம்சாவழித் தமிழர்கள்தான் உண்மையில் கைவிடப்பட்ட தமிழர்கள் என்று சொல்லத் தோன்றுகிறது.

தமிழகத்தில் வாழும் ஆறு கோடி தமிழர்களும் இலங்கையில் வட-கிழக்கைத் தவிர்த்து ஏனைய பகுதிகளில் சிங்களவர்கள் மட்டும்தான் வாழ்கிறார்கள் என்று தான் இதுவரை தெரிந்து வைத்திருக்கிறார்களே தவிர, மலையகத் தமிழ் மக்கள் குறித்து எதுவும் அவர்களுக்குத் தெரியாது. அந்தளவுக்கு மலையகத் தமிழர்கள் பிரச்சினை மூடி மறைக்கப்பட்டுள்ளது வேதனைத் தரக்கூடிய விடயமாகும்.

கேள்வி : இதற்கு என்ன காரணம் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?

பதில் : இலங்கையில் மலையகப் பகுதிகளில் செயற்படும் அரசியல் தலைமைகள் இம்மக்கள் குறித்து இந்திய அரசாங்கத்துக்கோ தமிழ் நாட்டு மக்களுக்கோ உரிய முறையில் அறிவிக்கவில்லை. எனவே மலையகத் தலைவர்கள் மனசு வைத்தால் எதையும் சாதிக்கலாம். தற்போது இந்தியாவின் குடியரசுத் தலைவராக தமிழ்க்குடிமகனான அப்துல் கலாம் இருக்கிறார். இச்சந்தர்ப்பத்தில் இலங்கை வாழ் இந்திய வம்சாவழித் தமிழ் மக்களின் நிலைமை குறித்து இவரின் கவனத்துக்குக் கொண்டு வரவேண்டும். அத்தோடு தமிழக அரசின் கவனத்துக்கும் கொண்டுவரவேண்டும். மேலும் இவ்விடயம் ஐக்கிய நாட்டுச் சபையின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட வேண்டும். ஏனெனில் இச்சபையினூடாக இலங்கை மலையகத் தமிழர்களின் மீது மானிதாபிமான ரீதியில் அக்கறை கொண்டு இவர்களுக்கான உரிமைகளைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்க முடியும்.

கேள்வி: இலங்கை வாழ் இந்திய வம்சாவழித் தமிழ் மக்கள் குறித்து இந்திய அரசாங்கம் அக்கறை செலுத்துமா?

பதில் : கட்டாயம் அக்கறை செலுத்தியாக வேண்டும். ஏனெனில், இந்திய வம்சாவளி மக்கள் உலகமெங்கும் பரந்து வாழ்கிறார்கள். இவர்களின் நலனில் இந்திய அரசாங்கம் அக்கறையுடன் செயற்படுகின்றது. ஆனால் உரியவகையில் அரசாங்கத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட வேண்டும்.

மத்திய கிழ:ககு போரின்போது மத்திய கிழக்கு நாடுகளில் வாழ்ந்த வட இந்தியர்களையும் குஜராத்தி, பஞ்சாபி, மலையாளத்தவர்களையும் இந்திய அரசாங்கம் உரிய வகையில் காப்பாற்றியது. அதேபோல் இலங்கையில் துன்பப்படும் இந்திய வம்சாவழித் தமிழ் மக்களையும் இந்திய அரசாங்கம் காப்பாற்ற வேண்டும்.

கேள்வி: இலங்கையில் வட-கிழக்குத் தமிழ் மக்கள் குறித்து தமிழ் நாட்டு மக்கள் எந்தளவு அறிந்து வைத்திருக்கிறார்கள்?

இலங்கையின் வட-கிழக்குத் தமிழர்களின் தாயகப்போராட்டம் குறித்து 1979ஆம் ஆண்டிலிருந்து தமிழ்நாட்டில் மிகப்பெரிய அளவில் விளம்பரப்படுத்தப்பட்டு வருகின்றது. அந்த அளவுக்கு அவர்கள் செய்தி ஊடகங்களைப் பயன்படுத்தி வருகின்றனர். இலங்கை யுத்தத்தினால் பாதிப்படைந்த கட்டிட இடிபாடுகள், கொலைகள், யுத்தப் பாதிப்புகள், பாலியல் துஷ்பிரயோகங்கள் ஆகியன தொடர்பாக புகைப்படங்களின் கண்காட்சிகள் தமிழகப் பிரதேசத்தில் இடம் பெறும்.

இவ்வாறு மலையகத் தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து தமிழ் நாட்டு மக்களுக்கு முன்பே விளம்பரப்படுத்தப்பட்டிருந்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.