Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

படையினரின் வசமிருந்த யாழ் – வயாவிளான் காணி விடுவிப்பு!

Featured Replies

 
படையினரின் வசமிருந்த யாழ் – வயாவிளான் காணி விடுவிப்பு!
 
 

படையினரின் வசமிருந்த யாழ் – வயாவிளான் காணி விடுவிப்பு!

 

யாழ் குடாநாட்டில் இராணுவத்தினாின் பாவனையில் இருந்த பொது மக்களுக்கு சொந்தமான மேலும் ஒரு தொகுதி நிலப்பரப்பு இன்று விடுவிக்கப்பட்டது.

வலி வடக்கு வயாவிளான் வடமூலை பகுதியில் இதுவரை காலமும் படையினரின் பாவனையில் இருந்த 29 ஏக்கர் நிலப்பரப்பே விடுவிக்கப்பட்டது.

வசாவிளான் உத்தரியமாதா ஆலய முன்றலில் நடைபெற்ற நிகழ்வில் காணிகளை விடுவித்ததற்கான உறுதிச்சான்றிதளை யாழ் மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியராட்சி யாழ் மாவட்ட அரச அதிபர் நாகலிங்கம் வேதநாயகனிடம் கையளித்தார்.

இந்த நிகழ்வுக்கு மேலதிக மாவட்ட காணி ஆணையாளர் எஸ்.முரளிதரன் தெல்லிப்பளை பிரதேச செயலாளர் சிவசிறி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனா்.

உயர் பாதுகாப்பு வலயப்பகுதியில் உள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி வயாவிளான் பகுதி மக்கள் இம் மாத முற்பகுதியில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றினை பலாலி இராணுவ நுழைவாயிலில் மேற்கொண்டிருந்தனர்.

20171130_095049.jpg

20171130_095058.jpg

IMG-e2746ca33d5de684d002dc1da9fd5752-V.j

http://newuthayan.com/story/51415.html

  • தொடங்கியவர்

30 ஆண்டுகளின் பின் இராணுவத்தின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டது மக்களின் நிலப்பபகுதி

 

 இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள வலிகாமம் வடக்குப் பிரதேசத்தின் வசாவிளான்  கிராமத்தின் 29 ஏக்கர் நிலப் பகுதி இன்று இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டுள்ளது.

jaffna.jpg

வசாவிளான்  உத்தரிய மாதா தேவாலயம், றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை மற்றும்  J/245 கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட  நிலப் பகுதிகள் இன்று இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டுள்ளது. 

fffffffff.jpg

யாழ். ஆயர் உள்ளிட்ட குழுவினர் மேற்கொண்ட தொடர் முயற்சியின் பலனாகக் கடந்த 30 ஆண்டுகளின் பின்னர் குறித்த பகுதியை விடுவிப்பதற்கு இராணுவத்தினர் இணங்கியுள்ளனர்.

fseedd.jpg

எனினும், வசாவிளானின் எஞ்சிய பகுதி விடுவிக்கப்படாமை தொடர்பில் பொதுமக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். 

fsfgd.jpg

இந் நில விடுவிப்பு  நிகழ்வில் யாழ் மாவட்ட இராணுவத் தளபதி, யாழ் அரசதிபர், வலிவடக்கு பிரதேச  செயலர் உள்ளிட அரச அதிகாரிகள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

fsss.jpg

sfdfde.jpg

ss.jpg

vali.jpg

vali2.jpg

 

http://www.virakesari.lk/article/27712

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.