Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நினை­வேந்தல் நிகழ்வும் அரசின் நிலைப்­பாடும்

Featured Replies

நினை­வேந்தல் நிகழ்வும் அரசின் நிலைப்­பாடும்

 

வடக்கு, கிழக்கில் மாவீரர் தின நிகழ்­வுகள் மிகவும் உணர்­வெ­ழுச்­சி­யுடன் நடை­பெற்­றுள்­ளன. அப்­ப­கு­தி­யி­லுள்ள மாவீரர் துயிலும் இல்­லங்­களில் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான மக்கள் 27ஆம் திகதி மாலை ஒன்­று­கூடி பொதுச்­சுடர் ஏற்றி மறைந்த போரா­ளி­க­ளுக்கு அஞ்­சலி செலுத்­தி­யுள்­ளனர். 2009ஆம் ஆண்டு மே மாதம் யுத்தம் முடி­வுக்குக் கொண்­டு­வ­ரப்­பட்­ட­ பின்னர் எட்டு வரு­டங்கள் கழிந்த நிலையில் முதற்­ற­ட­வை­யாக மாவீரர் தினம் உணர்­வெ­ழுச்­சியுடன் வட­கி­ழக்கில் இடம்­பெற்­றுள்­ளது.

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவின் ஆட்­சிக்­கா­லத்தில் யுத்­தத்தில் உயி­ரி­ழந்த உற­வு­களைக் கூட தமிழ் மக்கள் பகி­ரங்­க­மாக நினை­வு­கூர முடி­யாத நிலைமை இருந்­தது. இறு­தி­யுத்­தத்தில் முள்­ளி­வாய்க்­காலில் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான தமிழ் மக்கள் கொன்று குவிக்­கப்­பட்­டனர். இவ்­வாறு படு­கொலை செய்­யப்­பட்ட மக்­க­ளைக்­கூட நினைவு­கூ­ரு­வ­தற்கு அன்­றைய அர­சாங்­க­மா­னது பெரும் தடை­களை விதித்­தி­ருந்­தது.

நல்­லாட்சி அர­சாங்கம் பத­வி­யேற்­ற­தை­ய­டுத்து 2015ஆம் ஆண்டு மே மாதம் கெடு­பி­டி­க­ளுக்கு மத்­தியில் முள்­ளி­வாய்க்கால் நினை­வேந்தல் நிகழ்வு நடை­பெற்­றது. இந்த நிகழ்வில் தமிழ் அர­சியல் தலை­வர்­களும் பங்­கேற்­றி­ருந்­தனர். இதனைத் தொடர்ந்து 2016ஆம் ஆண்டு, 2017ஆம் ஆண்­டு­களில் முள்­ளி­வாய்க்கால் நினை­வேந்தல் நிகழ்வு உணர்­வெ­ழுச்­சி­யுடன் நடத்­தப்­பட்­டி­ருந்­தது.

ஆனாலும் யுத்­தத்தில் உயி­ரி­ழந்த போரா­ளி­களை நினை­வு­கூரும் மாவீரர் நாள் நிகழ்வு யுத்தம் முடி­வுக்குக் கொண்­டு­வ­ரப்­பட்­ட­தை­ய­டுத்து வட­கி­ழக்கில் உணர்­வு­பூர்­வ­மாக நடத்­தப்­ப­ட­வில்லை. விடு­த­லைப்­பு­லி­களை நினை­வு­கூ­ரக்­கூ­டாது என்று கடந்த அர­சாங்­க ­காலத்தில் கடு­மை­யான உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டி­ருந்­தது. நாட்டில் தடை செய்­யப்­பட்­டுள்ள இயக்­க­மான விடு­த­லைப்­பு­லி­களை நினை­வு­கூ­ரு­வ­தற்கு அனு­ம­திக்க முடி­யாது என்றும் அவ்­வாறு நினை­வு­கூ­ரு­ப­வர்கள் மீது கடும் நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்றும் அறி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

ஆனாலும் நல்­லாட்சி அர­சாங்கம் பத­வி­யேற்­றதன் பின்னர் கடந்த வருடம் பெரும் கெடு­பி­டி­க­ளுக்கு மத்­தியில் கிளி­நொச்சி, முல்­லைத்­தீவு உட்­பட பல பகு­தி­க­ளிலும் மாவீரர் நாள் நினை­வேந்தல் நிகழ்வு நடத்­தப்­பட்­டது. தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் மற்றும் அர­சி­யல்­வா­தி­களின் தலை­மை­யி­லேயே இந்த நிகழ்­வுகள் கடந்த வருடம் நடை­பெற்­றன. ஆனால் இம்­முறை பொது அமைப்­புக்­களின் ஏற்­பாட்டில் மாவீரர் நாள் நினை­வேந்தல் நிகழ்­வுகள் நடை­பெற்­றி­ருந்­தன. வடக்கு, கிழக்கில் மாவட்­டம்­தோறும் அமைக்­கப்­பட்­டி­ருந்த மாவீரர் துயிலும் இல்­லங்கள் புன­ர­மைக்­கப்­பட்டு அங்கு அலங்­கா­ரங்கள் மேற்­கொள்­ளப்­பட்டு உணர்­வெ­ழுச்­சி­யுடன் இந்த நிகழ்­வுகள் நடத்­தப்­பட்­டன.

இத­னை­விட யாழ்ப்­பாணப் பல்­க­லைக்­க­ழகம், கிழக்குப் பல்­க­லைக்­க­ழ­கத்­திலும் மாவீரர் தின நிகழ்­வுகள் மாண­வர்­க­ளினால் நடத்­தப்­பட்­டன. இத­னை­விட கடந்த 26ஆம் திகதி புலி­களின் தலைவர் பிர­பா­க­ர­னது பிறந்த தினமும் வடக்கில் பல பகு­தி­க­ளிலும் கொண்­டா­டப்­பட்­டி­ருந்­தது. வல்­வெட்­டித்­துறை­யி­லுள்ள பிர­பா­க­ர­னது வீடு அமைந்­தி­ருந்த வளா­கத்தில் கேக் வெட்டி இந்த நிகழ்வு நடை­பெற்­றது. யாழ். பல்­க­லைக்­க­ழ­கத்­திலும் பிர­பா­க­ரனின் பிறந்த தினம் கொண்­டா­டப்­பட்­டது.

இந்த வருடம் பிர­பா­க­ரனின் பிறந்த தினத்­தையும் மாவீரர் தின நிகழ்­வு­க­ளையும் நடத்­து­வ­தற்கு நல்­லாட்சி அர­சாங்­க­மா­னது மறை­மு­க­மாக அனு­மதி அளித்­தி­ருந்­­த­தா­கவே கரு­த­வேண்­டி­யி­ருந்­தது. கோப்பாய் உட்­பட ஒரு­சில இடங்­களில் இரா­ணு­வத்­தி­னரால் இடை­யூ­றுகள் மேற்­கொள்­ளப்­பட்ட போதிலும் ஏனைய பகு­தி­களில் எத்­த­கைய இடை­யூ­று­களும் இன்­றிய நிலையில் மாவீ­ரர் நினை­வேந்தல் நிகழ்­வுகள் இடம்­பெற்­றி­ருந்­தன.

யுத்­தத்தில் உயி­ரி­ழந்த போரா­ளி­களை நினை­வு­கூர முடி­யுமா என்ற சர்ச்சை யுத்தம் நிறை­வ­டைந்த பின்னர் நில­வி­வந்­தது. கடந்த அர­சாங்க காலத்தில் புலி­களை நினை­வு­கூ­ரக்­கூ­டாது என்று கண்­டிப்­பான உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டி­ருந்­த­மை­யினால் பொது­மக்கள் பகி­ரங்­க­மாக மாவீரர் நினை­வு­நாளை அனுஷ்­டிக்க முடி­யாத நிலைமை ஏற்­பட்­டி­ருந்­தது. மறை­முக இடங்­களில் தமிழ் கட்­சி­களின் தலை­வர்கள் மற்றும் சில பொது­மக்கள் இந்த நிகழ்­வினை அனுஷ்­டித்­தி­ருந்­தனர். யாழ். பல்­க­லைக்­க­ழ­கத்தில் இந்த நிகழ்­வினை அனுஷ்­டிப்­ப­தற்கு மாண­வர்கள் முயன்ற வேளையில் பெரும் களே­ப­ரமே ஏற்­பட்­டி­ருந்­தது.

ஆனாலும் நல்­லாட்சி அர­சாங்­க­மா­னது மாவீரர் தின நிகழ்வை நடத்­து­வ­தற்கு மறை­மு­க­மாக அனு­மதி அளித்­தி­ருந்­தது. ஆனாலும் நினை­வேந்தல் நிகழ்வு நடை­பெற்­றதன் பின்னர் தற்­போது இத்­த­கைய நிகழ்­வு­களை நடத்­தியோர் மீது கடும் நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்று அர­சாங்க அமைச்­சர்கள் சிலர் கருத்­துக்­களை தெரி­வித்­துள்­ளனர்.

வடக்கில் புலி­களின் தலைவர் பிர­பா­க­ரனின் பிறந்த தினத்தை அனுஷ்­டித்த நபர்­க­ளுக்கு எதி­ராக கடு­மை­யான நட­வ­டிக்கை எடுப்­ப­தற்கு தீர்­மா­னித்­துள்­ள­தா­கவும் புல­னாய்­வுத்­துறையின் உத­வி­யுடன் பொலிஸார் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்து வரு­வ­தா­கவும் பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்சர் ருவான் விஜ­ய­வர்த்­தன தெரி­வித்­துள்ளார்.

வடக்கில் சாதா­ரண மக்கள் மத்­தியில் மீண்டும் குழப்­பங்­களை ஏற்­ப­டுத்தும் செயற்­பா­டு­க­ளா­கவே இத்­த­கைய விவ­காரம் அமைந்­துள்­ளது. விடு­த­லைப்­பு­லிகள் தடை செய்­யப்­பட்ட இயக்­க­மாகும். பயங்­க­ர­வாதப் பட்­டி­யலில் உள்­ள­டக்­கப்­பட்­டுள்ள இயக்­க­மாகும். அவ்­வாறு இருக்­கையில் வடக்கில் இவ்­வாறு செயற்­பட்ட நபர்கள் குறித்து கடு­மை­யான நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வேண்டும். மக்கள் ஜன­நா­ய­கத்தின் பக்கம் திரும்­பி­யுள்ள நிலையில் அவர்­களை மீண்டும் ஆயு­தக்­க­லா­சா­ரத்தின் மீது கொண்டு செல்ல வடக்கின் தமிழ் அடிப்­ப­டை­வாத அர­சி­யல்­வாதிகள் சிலர் முயற்­சித்து வரு­கின்­றனர். இதற்கு அர­சாங்கம் இட­ம­ளிக்க மாட்­டாது என்றும் அமைச்சர் ருவான் விஜ­ய­வர்த்­தன கூறி­யுள்ளார்.

இதே­போன்றே ஜாதிக ஹெல­உ­று­மய கட்­சியின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான சம்­பிக்க ரண­வக்க மாவீரர் தின நினை­வேந்தல் நிகழ்வு குறித்து கருத்து தெரி­விக்­கையில், புலி­களை நினை­வு­கூர்ந்­த­வர்கள் மீது கடு­மை­யான நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வேண்டும். இவ்­வாறு புலி­களை நினை­வு­கூர்ந்­த­வர்கள் அவர்­க­ளினால் தென்­ப­கு­தியில் படு­கொலை செய்­யப்­பட்ட அப்­பாவி பொது­மக்­களின் உயிர்­க­ளுக்கு பொறுப்­புக்­கூ­ற­வேண்டும் என்று கடும் தொனியில் கூறி­யி­ருக்­கின்றார்.

அர­சாங்க அமைச்­சர்கள் இவ்­வாறு கருத்து தெரி­வித்­துள்ள நிலையில் பொது எதி­ர­ணியில் அங்கம் வகிக்கும் தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் தலை­வரும் பாராளுமன்ற உறுப்பினரு­மான விமல் வீர­வன்ச புலி­களை நியா­யப்­ப­டுத்தி வடக்கில் பிரி­வி­னை­வா­தத்தை பலப்­ப­டுத்­திக்­கொண்டு நாட்டில் நல்­லி­ணக்­கத்தை உரு­வாக்க முடி­யுமா? தமி­ழர்கள் வேதனை கொள்­வார்கள் என்­ப­தற்­காக இரா­ணுவ வெற்­றி ­தி­னத்தை நிரா­க­ரித்த அர­சாங்கம் ஏன் புலி­களின் மாவீரர் தினத்தை அனுஷ்­டிக்க அனு­ம­திக்­கி­றது என்று கேள்வி எழுப்­பி­யுள்ளார்.

இவ்­வாறு அர­சியல் தலை­வர்கள் கருத்து தெரி­வித்­துள்ள நிலையில் பிர­பா­கரனின் பிறந்­தநாள் மற்றும் மாவீரர் தின நிகழ்­வுகள் தொடர்பில் பொலிஸ் புல­னாய்­வுப்­பி­ரி­வினர் தக­வல்­களை சேக­ரித்து வரு­வ­தா­கவும் செய்­திகள் வெளி­யா­கி­யுள்­ளன.

தற்­போ­தைய நிலையில் மாவீரர் தின நினை­வேந்தல் நிகழ்வு நடத்­தப்­பட்­டு­விட்­டது. தமது பிள்­ளை­களை இழந்த உற­வுகள் ஒன்­று­கூடி அழு­து­பு­லம்பி அஞ்­சலி செலுத்­தி­யுள்­ளனர். மாவீரர் தின நிகழ்­வுகள் இடம்­பெ­ற­வுள்­ளதை அர­சாங்கம் முன்­னரே அறிந்­தி­ருந்­தது. ஆனாலும் அதற்கு எதி­ராக நட­வ­டிக்­கைகள் எத­னையும் எடுத்­தி­ருக்­க­வில்லை. இந்த நிலையில் மாவீரர் தின நினை­வேந்தல் நிகழ்­வு­களை நடத்­தி­யது தவறு என்றும் அத்­த­கை­ய­வர்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்றும் அமைச்­சர்கள் தற்­போது கூறு­வது ஏற்­றுக்­கொள்­ளத்­தக்க செயற்பாடல்ல.

தென்பகுதியில் ஜே.வி.பி. கிளர்ச்சியின் போது பெருமளவானோர் கொல்லப்பட்டிருந்தனர். இவ்வாறான கிளர்ச்சியில் ஈடுபட்ட ஜே.வி.பி. உறுப்பினர்களை நினைவுகூருவதற்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறது. ஜே.வி.பி. யினர் கார்த்திகை வீரர்கள் தினம் என்று தமது உயிரிழந்த போராளிகளை நினைவுகூர்ந்து வருகின்றனர். அதேபோன்றே போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலைப்புலிகளையும் நினைவு கூருவதற்கு அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை தற்போது வலுவடைந்திருக்கின்றது.

நாட்டில் நல்லிணக்கம் ஏற்படுத்தப்படவேண்டுமானால் யுத்தத்தில் உயிரிழந்த அனைவரையுமே அவர்களது உறவுகள் நினைவுகூருவதற்கு அனுமதிக்கவேண்டும். உயிரிழந்த ஒவ்வொரு வரையும் நினைவுகூருவதற்கு அவர்களது உறவினர்களுக்கு உரிமை உள்ளது. எனவே எதிர்காலத்தில் பழைய முரண்பாடுகளை மறந்து புத்தெழுச்சியுடன் நாட்டை கட்டியெழுப்புவதற்கு இந்த வேளையில் அனைவரும் ஒன்றிணையவேண்டியது இன்றியமையாதது என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-11-30#page-4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.