Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சீரற்ற காலநிலையினால் 7பேர் பலி; ஐவர் மாயம்

Featured Replies

சீரற்ற காலநிலையினால் 7பேர் பலி; ஐவர் மாயம்

1-46030d415d3ff9bc34be3abaa0a03c5c854da17d.jpg

 

18 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு; புயல் அபாயம் தொடர்கிறது

மீட்பு குழுக்கள் தயார் நிலையில்

மண்சரிவு அபாய எச்சரிக்கை

பொலிஸாரின் விடுமுறைகள் இரத்து

நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் உயர்வு

(ஆர்.யசி)

நாட்டில் ஏற்­பட்டுள்ள சீரற்ற கால­நிலை கார­ண­மாக ஏழு பேர் உயி­ரி­ழந்­துள்­ள­துடன் ஐவர் காணாமல்போயுள்­ளனர். 18781 பேர் பாதிப்­புக்­குள்­ளா­கி­யுள்­ளனர். வங்­காள விரி­கு­டாவில் மையம் கொண்­டுள்ள தாழ­முக்கம் இலங்­கையை கடந்­துள்ள போதிலும்  புய­லாக மாற்றம் பெறும் வாய்ப்­புகள் உள்­ள­தாக வளி­மண்­ட­ல­வியல் திணைக்­களம் தெரி­வித்­துள்­ளது. கடந்த இரு தினங்­களில் சீரற்ற கால­நி­லை­யினால் பதி­னொரு மாவட்­டங்கள் பாதிக்­கப்­பட்­டுள்­ளன. வங்­காள விரி­கு­டாவில் மையம் கொண்­டி­ருந்த தாழ­முக்கம் கார­ண­மாக கடந்த சில தினங்­க­ளாக நாட்டின் கால­நி­லையில் பாரிய மாற்­றங்கள் ஏற்­பட்­டுள்­ளன.  

இந்­நி­லையில் நேற்று முன்­தினம் பெய்த கன­மழை மற்றும் கடுங்­காற்று கார­ண­மாக நாட்டின் பதி­னொரு மாவட்­டங்­க­ளிலும் 20 ஆயி­ரத்­துக்கும் அதி­க­மான பொது­மக்கள் பாதிக்­கப்­பட்­டுள்­ள­துடன் எழு பேர் அனர்த்­தத்தில் சிக்கி உயி­ரி­ழந்­துள்­ளனர்.

இது­வ­ரையில் ஐந்து பேர் காணமால் போயுள்­ளனர். அம்­பாந்­தோட்டை, மற்றும் அக்­கு­ரணை ஆகிய பகு­தி­களில் மீன­வர்கள் நான்கு பட­கு­களில் மீன்­பி­டிக்க சென்­றுள்­ளனர். இவர்­களில் நால்வர் அனர்த்­தத்தில் சிக்கி உயி­ரி­ழந்­துள்ள நிலையில் ஒருவர் மீட்­கப்­பட்­டுள்ளார். மேலும் நால்வர் கடலில் காணா­மல்­போ­யுள்­ளனர். இந்த மீன­வர்­களை மீட்கும் பணியில் கடற்­ப­டை­யினர் ஈடு­பட்டு வரு­கின்­றனர்

சீரற்ற கால­நி­லை­யினால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு அர­சாங்கம் முப்­ப­டை­க­ளுடன் இணைந்து நிவா­ரண உத­வி­களை வழங்கி வரு­வ­துடன், அனர்த்­தங்­களில் சிக்­குண்­டுள்ள மக்­களை மீட்கும் நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றது. அத்­துடன் மோச­மான கால­நிலை தொடரும் நிலையில் சில வேளை­களில் மீண்டும் கன­மழை பெய்யும் சாத்­தியம் உள்­ள­தா­கவும் வளி­மண்­ட­ல­வியல் திணைக்­களம் தெரி­வித்­துள்­ளது.

இந்­நி­லையில் மக்­களை பாது­காக்­கவும் அனர்த்­தங்கள் ஏற்­படும் நிலையில் மீட்பு பணி­களை மேற்­கொள்­ளவும் பாது­காப்பு படைகள் தயார் நிலையில் உள்­ள­தாக முப்­படை அதி­கா­ரிகள் தெரி­வித்­துள்­ளனர். இரா­ணு­வத்தில் 160 குழுக்­களும் மீட்பு வாக­னங்­களும், கடற்­ப­டையில் 30 குழுக்­களும் மீட்புக் கப்­பல்­களும், விமா­னப்­ப­டையில் 24 குழுக்­களும் மீட்பு விமா­னங்­களும் தயார் நிலையில் உள்­ள­தாக முப்­ப­டை­களின் ஊடகப் பேச்­சா­ளர்­களும் தெரி­வித்­துள்­ளனர்.

மேலும் நாட்டில் ஏற்­பட்­டுள்ள அனர்த்த நிலை­மைகள் தொடர்பில் விசேட கட­மை­க­ளுக்­காக அனைத்து பொலிஸ் உத்­தி­யோ­கஸ்­தர்­க­க­ளுக்கும் விடு­முறை இரத்து செய்­யப்­பட்­டுள்­ளது. சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்­நா­யக, பதில் பொலிஸ்மா அதிபர் சி. டி. விக்­கி­ர­ம­ரத்­ன­விற்கு இதற்­கான உத்­த­ரவை பிறப்­பித்­துள்ளார். மேலும் அனர்த்­தங்கள் இடம்­பெற்­றுள்ள பகு­தி­களில் கள­வுகள் குற்­றங்கள் இடம்­பெ­றாத வகையில் பொலிசார் பாது­காப்பு கட­மையில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளனர்.

மண்­ச­ரிவு அபாய எச்­ச­ரிக்கை

கடந்த சில தினங்­க­ளாக பெய்த கன­ம­ழையை அடுத்து நாட்டில் மலை­யாக பகு­தி­களில் மண்­ச­ரிவு எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டி­ருந்­தது. எனினும் நேற்­றைய தினம் பிற்­பகல் வரையில் கன­மழை பெய்­யாத போதிலும் மண்­ச­ரிவு அபாய எச்­ச­ரிக்கை தொடர்ந்தும் நீட்­டிக்­கப்­பட்­டுள்­ளது. குறிப்­பாக இரத்­தி­ன­புரி, காலி, மாத்­தறை, அம்­பாந்­தோட்டை,, நுவ­ரெ­லியா, பதுளை, மொன­ரா­கலை மற்றும் மாத்­தளை ஆகிய மாவட்­டங்­க­ளுக்கு தொடர்ந்தும் மண் சரிவு அபாய எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது. நேற்­றைய தினமும் மலை­ய­கத்தில் சில பகு­தி­களில் மண்­ச­ரிவு ஏற்­பட்­டுள்­ளது.

பெர­கலை கொழும்பு -பதுளை பிர­தான வீதியில் மண்­மேடு சரிந்து விழுந்­துள்­ளதை அடுத்து பிர­தான வீதி போக்­கு­வ­ரத்­துகள் நேற்­றைய தினமும் பாதிக்­கப்­பட்­டி­ருந்­தது. அத்­துடன் கொழும்பு பதுளை புகை­யி­ரத போக்­கு­வ­ரத்தும் நானு ஓய­வுடன் நிறுத்­தப்­பட்­டி­ருந்­தது. அதேபோல் நுவ­ரெ­லியா மற்றும் இரத்­தி­ன­புரி ஆகிய மாவட்­டங்­களில் சில பகு­தி­க­ளிலும் மண்­ச­ரிவு அபாயம் ஏற்­பட்­டுள்­ளது.

கள­னி­வெளி புகை­யி­ரத வீதி, அவி­சா­வளை தொடக்கம் கொட்­டாவ வரை­யி­லான புகை­யி­ரத வீதியில் பல இடங்­களில் மரங்கள் முறிந்து விழுந்­த­துடன் தெமோ­தரை, ஹப்­புத்­தளை போன்ற பகு­தி­களில் சில இடங்­களில் மண்­ச­ரி­வுகள் பதி­வா­கி­யுள்­ளன. எல்ல பிர­தே­சத்தில் மண்­ச­ரி­வு­களை ஏற்­படும் என்­பதை கருத்தில் கொண்டு நேற்­றைய தினம் 53 குடும்­பங்­களை உட­ன­டி­யாக வெளி­யேற்­றி­யுள்­ள­தாக அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலையம் தெரி­வித்­துள்­ளது. அத்­துடன் மேலும் 100 குடும்­பங்­களை உட­ன­டி­யாக வெளி­யே­று­மாறும், வெள்­ளப்­பெ­ருக்கு மற்றும் மண்­ச­ரிவு அபாய எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்ள பகு­தி­களில் அறி­விப்பு வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.

மேலும் கொழும்பு, கம்­பஹா, களுத்­துறை உள்­ளிட்ட நகர் பகு­தி­களில் நேற்று முன்­தினம் பெய்த கன­மழை மற்றும் கடுங் காற்று கார­ண­மாக வீதி­க­ளிலும் கட்­டி­டங்­களின் மேலும், வாக­னங்­களின் மீதும் மரங்கள் சரிந்து விழுந்­ததில் நேற்­றிய தினம் பல்­வேறு பகு­தி­களில் வாகன போக்­கு­வ­ரத்தும் தடைப்­பட்­டது. அத்­துடன் சில பகு­தி­க­ளிலும் வீட்டுத் தொகு­தி­க­ளிலும் வெள்­ளநீர் நிரம்­பி­யதில் மக்­களும் அதி­க­ளவில் பாதிக்­கப்­பட்­டனர். ஹட்டன், நோர்வூட், மஸ்­கெ­லிய ஆகிய பகு­தி­களில் சில பாட­சா­லை­க­ளிலும் மக்கள் தஞ்சம் புகுந்­தி­ருந்­தனர்.

கன­மழை தொடரும்

கடந்த இரண்டு தினங்­க­ளாக காற்றின் வேகம் அதி­க­ரித்து காணப்­பட்­ட­துடன், மழை­வீழ்ச்­சியும் அதி­க­ளவில் பதி­வா­கி­யி­ருந்­தது. நேற்று அதி­காலை வரையில் கொழும்பு, களுத்­துறை , கம்­பஹா, காலி, கேகாலை, மாத்­தறை, நுவ­ரெ­லியா, இரத்­தி­ன­புரி ஆகிய மாவட்­டங்­களில் 100தொடக்கம் 150 மில்­லி­மீற்றர் வரை­யி­லான மழை­வீழ்ச்சி பதி­வா­கி­யுள்­ளது. மலை­யக பகு­தி­களில் காற்றின் வேகமும் மணிக்கு 80தொடக்கம் 90 கிலோ­மீற்றர் வேகத்தில் பதி­வா­கி­யி­ருந்­த­துடன் கரை­யோர பகு­தி­களில் 120 கிலோ­மீற்றர் வேகத்­திலும் பதி­வா­கி­யி­ருந்­தது . எனினும் நேற்­றைய தினம் பகல் வேளையில் காற்றின் வேகம் குறை­வாக காணப்­பட்­ட­துடன், மழை­வீழ்ச்­சியும் 60 தொடக்கம்70 மில்­லி­மீற்றர் வரையில் பதி­வா­கி­யி­ருந்­தது.

எனினும் இன்றும் நாளையும் நாட்டில் பல பகு­தி­களில் மீண்டும் கன­மழை பெய்­வ­துடன் காற்றின் வேகம் அதி­க­ரிக்­கவும் வாய்ப்­புகள் உள்­ள­தாக வளி­மண்­ட­ல­வியல் திணைக்­களம் தெரி­வித்­துள்­ளது. குறிப்­பாக வங்­கக்­க­டலில் ஏற்­பட்­டுள்ள தாழ­முக்கம் மீண்டும் இலங்­கையை நோக்கி நகரும் நிலையில் மிகவும் மோச­மான கால­நிலை தொடரும் என எச்­ச­ரித்­துள்­ளது.

கடல் கொந்­த­ளிப்பு - மீன­வர்கள் கட­லுக்கு செல்ல வேண்டாம்.

 கரை­யோர பகு­திளில் தொடர்ந்தும் அனர்த்த எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது. அடுத்து கட­லுக்கு செல்­வதை தவிர்த்­துக்­கொள்­ளு­மாறு கடற்­தொ­ழி­லா­ளர்­க­ளுக்கு அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலையம் அறி­வித்­துள்­ளது. மேலும் சில தினங்­க­ளுக்கு நாட்டை சுற்­றி­யுள்ள கடற்­ப­கு­தியில் காற்றின் வேகம் அதி­க­ரித்து வீசக்­கூடும் என அந்த நிலையம் வெளி­யிட்­டுள்ள அறி­வு­றுத்­தலில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

குறிப்­பாக தென் மற்றும் தென்­மேற்கு பிர­தே­சங்­களில் கடும் மழை மற்றும் விட்டு விட்டு வீசும் கடு­மை­யான காற்று மணிக்கு சுமார் 80 கிலோ­மீற்றர் வரை அதி­க­ரித்து வீசக்­கூடும் என தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. கடற்­பி­ர­தே­சங்­களில் மணிக்கு சுமார் 100 கிலோ­மீற்றர் வேகத்தில் காற்றின் வேகம் காணப்­படும் எனவும் தெரி­வித்­துள்­ளது. இந்­நி­லையில் மீன­வர்கள் மிகுந்த அவ­தா­னத்­துடன் செயற்­ப­டு­மாறும் , கடற்­படை உரிய பாது­காப்­பு­களை வழங்க நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

 பாட­சா­லை­க­ளுக்கு விடு­முறை.

இதே­வேளை சீரற்றக் கால­நிலை கார­ண­மாக பாதிக்­கப்­பட்­டுள்ள 11 மாவட்­டங்­களின் பல பாட­சா­லை­க­ளுக்கு விடு­முறை வழங்­கப்­பட்­டுள்­ள­துடன் தென், மேல், மத்­திய மற்றும் ஊவா மாகா­ணங்­களின் பாட­சா­லைகள் தவணைப் பரீட்­சைகள் பிற்­போ­டப்­பட்­டுள்­ள­தாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரி­ய­வசம் தெரி­வித்­துள்ளார். எனினும் சாதா­ரண தரப் பரீட்­சைக்கு எந்­த­வித பாதிப்பும் ஏற்­ப­டப்­போ­வ­தில்லை எனவும் அவர் குறிப்­பிட்டார்.

நீர்த்­தேக்­கங்­க­களில் நீர்­மட்டம் உயர்வு

மலை­யக பகு­தி­களில் அதிக மழை­வீழ்ச்சி பதி­வா­கி­யுள்­ளதை அடுத்து நீர்த்­தேக்­கங்கள் நிரம்­பி­யுள்­ளன . மேல் கொத்­மலை , நில்­வல கங்கை ஆகி­ய­வற்றின் நீர் மட்டம் உயர்­வ­டைந்­துள்­ளதை அடுத்து மேல் கொத்­மலை நீர்த்­தேக்­கத்தின் நான்கு வான்­க­த­வுகள் திறக்­கப்­பட்­டுள்­ள­துடன் நில்­வல கங்­கையின் இரு வான் கத­வு­களும் திறக்கப்பட்டுள்ளன. ஜிங்கங்கை, களுகங்கை ஆகியவற்றிலும் நீர் மட்டம் உயரும் சாத்தியம் உள்ளதாகவும், வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. பிரதான ஆறுகளின் நீர்மட்டங்கள் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தாழ்நிலப்பகுதிகளில் உள்ள மக்கள் மற்றும் நீர்த்தேக்கங்களை அண்டியுள்ள பொதுமக்கள் தற்காலிகமாக மாற்றுப் பகுதிகளில் இடம்பெயருமாறும் அவதானமாக இருக்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மக்கள் அசௌகரியம் , மின் துண்டிப்பு

மேலும் நேற்று முன்தினம் இரவு தொடக்கம் அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. பிரதான மின் பிறப்பாக்கிகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அவற்றை சரிசெய்யும் நடவடிக்கைகளை இலங்கை மின்சார சபை முன்னெடுத்து வருவதாகவும், சில பகுதிகளில் மின் கம்பங்கள் சேதமடைந்துள்ள நிலையில் மின்சாரம் வழங்குவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது. 

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-12-01#page-1

  • தொடங்கியவர்

மக்களே எச்சரிக்கை !  உயர்கிறது காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம்

Published by Priyatharshan on 2017-12-01 12:06:30

 
 

 

காசல்ரீ நீர்தேக்கத்தின் நீர்மட்டம் வெகுவாக உயர்வடைந்துள்ளமையினால் அதனை அன்டிய பிரதேச மக்கள் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு லக்சபான மின்சார சபை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

kasalre.jpg

தொடர்ச்சியாக பெய்துவரும் அடை மழையினால் காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு நீர் வழங்கும்  கெல்கமுவ ஓயா மற்றும் அட்டன் ஓயா ஆகியவை  பெருக்கெடுத்துள்ளது.

 

காசல்ரீ  நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம்  இன்று 4 அடிகள் மாத்திரமே உச்சமட்டதை அடைய உள்ளமையினால்  காரையோர மக்களும் காசல்ரீ ஓயா பகுதிகளை சேர்ந்த ஒஸ்போன், நோட்டன், ஆத்தடி, கிளவட்டன் பிரதேச மக்கள் அவதானத்துடன் இருக்குமாறும் அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

http://www.virakesari.lk/article/27739

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.