Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாதியற்ற நிலையில் தமிழ்ச்சாதி இல்லை!

Featured Replies

நாதியற்ற நிலையில் தமிழ்ச்சாதி இல்லை!

தமிழர் தம் தேச இறைமையை மீட்டு தமிழீழம் எய்தும் வரலாற்றின் காலப்பகுதி தற்போது நடைபெறுகிறது எனறே தமிழினம் உணர்கிறது.

ஆபத்தான ‘சமாதானம்’ எனும் நெருப்பாற்றை வெற்றியோடு கடந்து புடம்போட்ட புதிய புலிகளாக தமிழினமும் விடுதலைப்புலிகள் அமைப்பும் எழுந்து நிற்கும் இக்காலப்பகுதி, தமிழரின் வீரம் செறிந்த, குருதியாலும் சதைகளாலும் வெல்லப்பட்ட விடுதலைவேள்வியை முடித்துவைக்கும் கணங்கள் என்றே எம் உளங்களும் உயிர்களும் கருதுகின்றன.

புதிய தேசத்தை பிரசவிக்க பிரசவவேதனை தொடங்கிய உணர்வு உலகத்தமிழரை ஆட்கொள்ள தொடங்கிவிட்டது. இவை ஆவேச வார்த்தைகள் அல்ல(rhetoric) அது களயதார்த்தமாகும். ( ground reality).

நீண்டபோராட்டத்தினதும் சமாதானப் பயணத்தினதும் இறுதியில் தமிழரின் அரசியல் நிலைப்பாடும் யதார்த்தமும் அனைத்துலகிற்கு மீளவலியுறுத்தப்பட்ட நிலையில், அமையப்போகும் தேசத்தை உள்ளடக்க (Accomodate) சிலநாடுகள் தயாராவது போன்ற தோற்றம் கூடதெரிகிறது.

இக்கணங்களில் தமிழ்தேசிய நிலைப்பாட்டுடன் செயற்படும் தமிழ் ஊடகங்களின் பங்கு மகத்தானது. வெற்றிக்கு மக்களை தயார்படுத்தும் அதேவேளை எதிரியின் உளவியற்போரை முறியடிக்கும் வல்லமையும் கடமையும் தமிழ் ஊடகங்களையே சாரும்.

அண்மையில் கொழும்பில் இருந்து வெளியாகும் வீரகேசரி நாழிதளில் ‘நாதியற்ற நிலையிலா தமிழ் சாதி?’ என்ற தலைப்பில் ஆசிரியர் தலையங்கம் தீட்டப்பட்டிருந்தது.

சிறீலங்கா தேசம் தோல்வியுற்ற கேடுகெட்ட நாடாகிவிட்ட (failed & rogue state) நிலையில் தீவெங்கும் நிகழும் அரச படைகளினதும் ஒட்டுக்குழுக்களினதும் கடத்தல், காணாமல் போதல் சித்திரவதைகள், கோரப்படுகொலைகள் அன்றாடம் நிகழும் நிலையில் விரக்கியுற்ற நிலையில் எழுதிய ஆசிரியரின் சிலகருத்துக்கள் தமிழ்மக்களை கவலையுறச் செய்தும் உள்ளன.

நாட்டின் கோர நிலமையை சிறப்பாக வர்ணித்த வீரகேசரி ஆசிரியர் "தமிழ் மக்களின் இரட்சகர் யார் என்பது தான் இதுவரை தெரியவில்லை சிலர் இரட்சகர்களாக காட்சி தருகின்றனர். ஆனால், நடைமுறையில் தமிழ் மக்கள் முகம் கொடுக்கின்ற அவலங்களுக்கு தீர்வு கிடைப்பதாக இல்லை. அப்படியானால் தமிழ் சாதி நாதியற்ற நிலையில் இருக்கின்றதா?"

என்று குறிப்பிட்டிருந்தார்.

தமிழ மக்களின் இரட்சரககள் யார் என்று தெரியாத நிலையில் அவர் (வீரகேசரி ஆசிரியர்) இருந்தாரா என்பதே இங்குள்ள கேள்வி.

இலங்கைத்தீவில் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள சிறீலங்கா அரச பயங்கரவாத கொடுமையை நிறுத்த தமிழ்சமூகமும் அதேவழிமுறையை கையாளமுடியாது. வேறுவழிமுறைகளையே கையாள முடியும். மிகக்கவனமாக நகர்த்தப்பட்ட புலிகளின் இராணுவ அரசியல் வியூகமே தமிழர்கள் சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள் என்ற பல அனைத்துலக நாடுகளின் நிலைப்பாட்டிற்கு காரணமானது.

மிகக்கவனமாக கட்டியெழுப்பப்பட்ட தமிழீழத்தின் இராஜதந்திர இருப்பை நாம் உணர்ச்சி வயப்பட்டு உடைக்கமுடியாது. எமது விரக்கியை வெளிக்காட்டும் எழுத்துக்கள் ‘விடுதலை வாசலில் நாம் நின்றுகொண்டிருக்கின்றோம்’ என்ற இலட்சோப இலட்சம் தமிழ் மக்களின் உளங்களை பாதித்து நம்பிக்கையிழக்கச் செய்யக் கூடாது என்பதே தமிழ்மக்களின் எதிர்பார்ப்பாகும்.

http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

  • கருத்துக்கள உறவுகள்

'' நீண்டபோராட்டத்தினதும் சமாதானப் பயணத்தினதும் இறுதியில் தமிழரின் அரசியல் நிலைப்பாடும் யதார்த்தமும் அனைத்துலகிற்கு மீளவலியுறுத்தப்பட்ட நிலையில் அமையப்போகும் தேசத்தை உள்ளடக்க (Accomodate) சிலநாடுகள் தயாராவது போன்ற தோற்றம் கூடதெரிகிறது."

மேல் குறிப்பிடப்பட்ட கருத்து இன்றைய சூழ்நிலையில் மிகவும் உன்னிப்பாக கவனிக்கவேண்டிய ஒரு விடயமாகும். அதாவது விடுதலைப் புலிகளின் அமைதி காத்தலின் பின்னணியில் இதுவும் ஒரு காரணமாக கதை அடிபடுகின்றது. எது எப்படி இருப்பினும் தமிழர் தரப்பின் ராஜதந்திர நகர்வுகள் வெற்றி நடை போடுகின்றது என்பது மட்டும் உண்மை. ஆனால் வெளித் தோற்றப்பாட்டின் படி தோல்வி மாதிரி புலப்படலாம் ஆனால் உண்மை அதில்லை என்று கூறிக்கொண்டு தற்காலிகமாக விடைபெறுகிறேன்.

Edited by Valvai Mainthan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.