Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

2020 இல் நாட்டின் தலைவராக யார் வரவேண்டும் ; மவ்பிம வெளியிட்ட ஆய்வு முடிவுகள் இதோ ..

Featured Replies

2020 இல் நாட்டின் தலைவராக யார் வரவேண்டும் ; மவ்பிம வெளியிட்ட ஆய்வு முடிவுகள் இதோ ..

 
24131655_1558096894276637_32555503549201
 
2020 ஆம் ஆண்டில் இந்த நாட்டில் ஜனாதிபதியாக நாட்டை நேசிக்கின்ற, படித்த, ஏகாதிபத்திய
இராணுவ பாணி ஆட்சி அமைப்பை கொண்டதலைவரே பொருத்தமானவர்என்று கொழும்பு பல்கலைக்கழக  ஊடகப் பிரிவு நடத்திய  ஆய்விக்தெரியவந்துள்ளதாக மவ்பிம நாழிதழ் தெரிவித்துள்ளது.
 
இந்த ஆய்வின் முடிவுகளின் படி 2020ஆம் ஆண்டில் இலங்கையின்தலைவராக கோட்டாபய ராஜபக்‌ஷ வருவதற்கு 38.18 % பேர்களின் விருப்பைப்பெற்றுள்ளார் அடுத்த இடம் 28.64 % விருப்பு சஜித் பிரேமதாசாவுக்குகிடைத்துள்ளது.
 
எதிர் கட்சி தலைவராக அனுர குமார திசாநாயக்க அதிக பேர்களின்விருப்பை பெற்றுள்ள அதேவேளை ஜனாதிபதி மைத்திரிபாலசிரிசேனாவுக்கு 9.18 % பிரதமர் ரனில் விக்கிரமசிங்கவும் 8.64 %  விருப்புதெரிவித்துள்ளனர்.
 
நுவரெலியா,கேகாலை,இரத்தினபுரி மாவட்டங்களை சேர்ந்த 18-75 வயதுக்குஇடைப்பட்டவர்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.madawalanews.com/2017/12/2020.html?m=1

  • தொடங்கியவர்
  • 2020 இல் கோத்­தாவே அரச தலை­வ­ரா­வா­ராம்!!
2020 இல்  கோத்­தாவே அரச  தலை­வ­ரா­வா­ராம்!!
 
 

2020 இல் கோத்­தாவே அரச தலை­வ­ரா­வா­ராம்!!

2020ஆம் ஆண்டு அரச தலை­வ­ரா­கத் தெரிவு செய்­யப்­ப­டப்­போ­வது யார்? என்று தற்­போது நாட்­டில் பிர­பல்­ய­மாக உள்ள ஐந்து பேரின் பெயர்­களை முன்­னி­லைப்­ப­டுத்­திய கொழும்பு பல்­க­லைக்­க­ழ­கத்­தின் ஊட­கப்­பி­ரிவு நடத்­திய கருத்­துக்­க­ணிப்­பில் முன்­னாள் பாது­காப்­புச் செய­லர் கோத்த­பா­ய ராஜ­ப­க்சவே அரச தலை­வ­ரா­கத் தெரிவு செய்­யப்­ப­டு­வார் என்று அதி­க­மா­ன­வர்­கள் கூறி­யுள்­ள­னர்.

18 தொடக்­கம் 35 வய­து­வ­ரை­யான 505 பேரி­டம் நடத்­திய இந்­தக் கருத்­துக்­க­ணிப்­பில் கோத்த­பா­ய ராஜ­பக்ச, அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன, தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, அமைச்­சர் சஜித் பிரே­ம­தாச, மக்­கள் விடு­தலை முன்­ன­ணி­யின் தலை­வர் அநு­ர­கு­மார திசா­நா­யக்க உள்­ளிட்ட ஐவ­ரின் பெயர்­கள் முன்­னி­லைப்­ப­டுத்­தப்­பட் டன.

இதில் 39.18 வீத­மா­ன­வர்­கள் கோத்தபா­ய ராஜ­பக்­ச­வுக்­கும், 28.64 வீத­மா­ன­வர்­கள் சஜித் பிரே­ம­தா­ஸ­ வுக்­கும், 9.18 வீத­மா­ன­வர் கள் மைத் தி­ரி­பால சிறி­சே­ன­வுக்­கும், 8.64 வீத­மா­ன­வர்­கள் ரணில் விக்­கி­ர­ம­ சிங்­க­வுக்­கும் வாக்­க­ளித்­துள்­ள­னர்.

நாட்­டில் செப்­ரெம்­பர் முதல் நவம்­பர் மாதம் வரை­யான காலப்­ப­கு­தி­யில் இடம்­பெற்ற அர­சி­யல் நில­மை­களை அடிப்­ப­டை­யாக கொண்டே இந்­தக் கருத்­துக்­க­ணிப்பு நடத்­தப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

http://newuthayan.com/story/52129.html

  • தொடங்கியவர்

2020 இல் கோத்தா நாட்டின் தலை­வ­ரா­கு­வாரா?

 

 
 

2020 ஆம் ஆண்டு  யார்  இலங்­கையின்  தலை­வ­ராக   வருவார் என்ற   வகையில்  எவ்­வி­த­மான  ஆய்­வையும் கருத்­துக்­க­ணிப்­பையும் கொழும்பு பல்க­லைக்­க­ழ­கத்தின் ஊடகப் பிரிவு மேற்­கொள்­ள­வில்லை என்றும் அது­தொ­டர்பில் பல்­க­லைக்­க­ழ­கத்­திற்கு உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­விக்­கப்­ப­ட­வில்­லை­யென்றும்  தாம் எந்தப் பொறுப்­பையும் ஏற்க மாட்டோம் என்றும் கொழும்பு பல்­க­லைக்­க­ழ­கத் தின் கலைப்­பீட  ஊட­கத்­து­றைப் ­பி­ரிவு தெரி­வித்­தி­ருக்­கின்­றது. 

கொழும்பு பல்­க­லைக்­க­ழ­கத்தின் ஊட­கப்­பி­ரிவு நடத்­திய கருத்­துக்­க­ணிப்­பொன்றில் 2020 ஆம்  ஆண்டில் இந்த நாட்டின் தலை­வ­ராக முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக்  ஷ தெரி­வு­ செய்­யப்­ப­டுவார் என்று நேற்று வெளியான  வார இறுதி சிங்­களப் பத்­தி­ரி­கை­யொன்றில் செய்தி  வெளி­யி­டப்­பட்­டி­ருந்­தது. அது தொடர்பில் கொழு ம்பு  பல்­க­லைக்­க­ழ­கத்தின் ஊடகப் பிரிவு விடுத்­ துள்ள அறிக்­கை­யி­லேயே  இந்த விட­யங்கள்  குறிப் பி­டப்­பட்­டுள்­ளன. 

இது தொடர்பில் கொழும்பு பல்­க­லைக்­க­ழ­கத்தின்  கலைப்­பீ­டத்தின் ஊட­கப்­பி­ரிவின்  இணைப்­பாளர்  பேரா­சி­ரியர் சமந்த ஹேரத் கையொப்­ப­மிட்டு விடுத்­துள்ள அறிக்­கையில்  மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,- குறித்த அறிக்­கையில் வெளி­யி­டப்­பட்­டுள்­ள­வாறு எவ்­வி­த­மான கருத்­துக்­க­ணிப்­பையும்  கொழும்பு பல்­க­லைக்­க­ழ­கத்தின் ஊடகப் பிரிவு செய்­ய­வில்லை.  இவ்­வாறு  கொழும்பு பல்­க­லைக்­க­ழகம் கருத்­துக்­க­ணிப்பை நடத்­தி­ய­தா­க, செய்­தியை வெளி­யி­டு­வதன் மூலம் வாச­கர்கள்   தவ­றாக வழி­ந­டத்­தப்­ப­டு­கின்­றனர்.  

எந்­த­வொரு நபரும் ஆய்­வொன்றை நடத்­து­வதும் அதனை பிர­சு­ரிப்­ப­தற்கும் உரி­மையைக் கொண்­டி­ருக்­கிறார். ஆனால்  அவ்­வா­றா­ன­தொரு   கருத்­துக்­க­ணிப்பை  கொழும்புப் பல்­க­லைக்­க­ழ­கத்தின் ஊட­கப்­பி­ரிவு செய்­தி­ருந்தால்  அதனை கொழும்பு பல்­க­லைக்­க­ழகம் செய்­த­தாக கூறு­வது வேறு­பட்ட அர்த்­தத்தைக் காட்டும்.  

இந்த செய்தி வெளி­யா­னதன் பின்னர்   இவ்­வா­றா­ன­தொரு  கருத்­துக்­க­ணிப்பை கொழும்பு பல்­க­லைக்­க­ழ­கத்தின் ஊடகப் பிரிவு  முன்­னெ­டுத்­ததா என்று பலர் என்­னிடம் கேட்­கின்­றனர். ஆனால்  அது தொடர்பில் எம்­மை ­யாரும்  தெளி­வு­ப­டுத்­த­வில்லை. அத­னால்தான் இது­தொ­டர்பில்  தெளி­வு­ப­டுத்தும் நோக்கில்  இந்த அறிக்­கையை நான் வெளி­யி­டு­கின்றேன். 

அந்தவகையில் 2020 ஆம் ஆண்டு தலைவர் யார் என்றவகையில் கொழும்பு பல்கலைக்கழகம் கருத்துக்கணிப்பை  நடத்தியுள்ளதாக வெளிவந் துள்ள செய்தி பொய்யானது என்பதை தெரிவித் துக்கொள்கின்றேன். இந்த விடயத்துடன்  கொழும்பு பல்கலைக்கழகமோ அல்லது ஊடகப்பிரிவோ எந்தவகையிலும் சம்பந்தப்படவில்லை.

http://www.virakesari.lk/article/27815

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.