Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்.மாநகர சபையின் அடுத்த மேயர் யார்?

Featured Replies

யாழ்.மாநகர சபையின் அடுத்த மேயர் யார்?

 

 
 

யாழ்.மாநகர சபையின் மேயர், பிரதிமேயர் பதவி களை இலக்கு வைத்து கள மிறக்குவதற்காக நால்வரின் பெயர்களை இலங்கை தமிழரசுக் கட்சி பரிசீலனை செய்து வருவதாக அக்கட்சியின் உயர் மட்டத் தகவல்கள் தெரிவித் துள்ளன. 

வடமாகாண சபை உறுப்பி னர்களான இ.ஜெயசேகரம், ஆர்னோல்ட், முன்னாள் பாரா ளுமன்ற உறுப்பினர் சொலமன் சிறில் மற்றும் சிரேஷ்ட ஊடகவியலாளர் ந.வித்தியாதரன் ஆகியோரின் பெயர்களே இவ்வாறு பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. 

குறிப்பாக அண்மையில் வடமாகாண சபை உறுப்பினரான தெரிவு செய்யப்பட்டுள்ள இ.ஜெயசேகரத்தினை மேயர் வேட்பாளராக களமிறக்க வேண்டும். அதன் மூலமாக யாழ்.மாநாகரசபையானது மிகக்கூடிய பலன்களை பெற்றுக்கொள்ளுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளன. ஆகவே ஜெயசேகரத்திற்கு குறித்த பதவியை வழங்க வேண்டும் என்று யாழ்.வணிகர் சங்கம் உள்ளிட்ட சில தரப்புக்கள் பரிந்துரைத்துள்ளன. 

அதேநேரம் வடமாகாண சபை உறுப்பினர் ஆர்னோல்ட் இளம் தலைமுறையை பிரதி நிதித்துவப்படுத்துபவராகவும் சட்டத்துறையைச் சார்ந்தவராகவும் காணப்படுவதால் அவரை யாழ்.மேயர் வேட்பாளராக களமிறக்குவது பொருத்தமானதாக இருக்கும் என்று இலங்கை தமிழரசுக்கட்சியின் முக்கிய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரே தமிழரசுக் கட்சியின் தலைமையிடத்தல் பரிந்துரைத்துள்ளார்.

இதேநேரம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சொலமன் சிறில் ஏற்கனவே யாழ்.மாநகரசபையின் பிரதி மேயராக கடமையாற்றியவர். அத்துடன் மூத்த அரசியல்வாதி. ஆகவே அவருக்கான அங்கீகாரத்தினை வழங்கும் முகமாகவும் அவருடைய அனுபவத்தின் பிரகாரமும் தற்போதைய நிலையில் மேயர் பதவிக்கு மிகப்பொருத்தமானவராக இருப்பதால் மேயர் வேட்பாளராக அவரையே களமிறக்க வேண்டும் என்று தமிழரசுக்கட்சின் முக்கியஸ்தர்கள் சிலர் பரிந்துரை செய்துள்ளர்.

இவற்றுக்கெல்லாம் மேலாக சிரேஷ்ட ஊடகவியலாளரான ந.வித்தியாதரனை மேயர் வேட்பாளராக களமிறக்குவது தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுவருகின்றது. குறிப்பாக தமிழரசுக்கட்சியின் தலைமை மற்றும் முக்கியஸ்தர்களிடத்தில் வித்தியாதரனின் நிருவாகத்திறமை சம்பந்தமான சாதகமான பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் வடமாகாண சபை உறுப்பினர்களாக இருக்கும் இருவரையும் மேயர் வேட்பாளர்களாக களமிறக்குவதை விடவும் சொலமன் சிறில் மற்றும் வித்தியாதரன் ஆகியோரை மேயர், பிரதி மேயர் பதவிகளை இலக்குவத்தைு வேட்பாளர்களாக களமிறக்குவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் இதில் யாரை மேயர் வேட்பாளராக களமிறக்குவது யாரை பிரதி மேயர் பதவிக்கு தயார் படுத்துவதென்பதில் சிக்கல்கள் காணப்படுகின்றன. 

எவ்வாறாயினும் இவ்விடயம் குறித்து சிரேஷ்ட தலைவர் சம்பந்தனின் ஆலோசனையுடன் கட்சித்தலைமை உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் சிலரே இறுதி முடிவு எடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/27933

  • தொடங்கியவர்

யாழ்.மாநகரசபை மேயர் வேட்பாளர் யார்?

Question-New_CI.jpg
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழ்.மாநகர சபை மேயர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு  தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் சிரிப்பையே பதிலாக கொடுத்தார்.

யாழில்.இன்றைய தினம் வியாழக்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்த போது , யாழ்.மாநகர சபை மேயர் வேட்பாளராக , வடமாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர்களான இ.ஆர்னோல்ட் மற்றும் ஜெயசேகரம் , மூத்த ஊடகவியலாளரும் காலைக்கதிர் பத்திரிகை ஆசிரியருமான என். வித்தியாதரன் , மற்றும் சொலமன் சிறில் ஆகிய நால்வர் போட்டியிட உள்ளதாகவும் , அதில் யாரை நியமிப்பது என்பது தொடர்பில் தமிழரசு கட்சிக்குள் இழுபறி ஏற்பட்டு உள்ளதாகவும் வெளியாகியுள்ள தகவல் தொடர்பில்  ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போதே சுமந்திரன் சிரித்துக்கொண்டு அந்த கேள்விக்கு பதிலளிப்பதை தவிர்த்துக்கொண்டார்,

http://globaltamilnews.net/archives/53626

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த யாழ். மாவட்ட மாநகர முதல்வராக வித்தியாதரன்?

உள்ளூராட்சித் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் இன்னொரு புறம் யாழ். மாநகரசபை முதல்வருக்கான தெரிவும் தற்போது சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.

யாழ். மாவட்டத்தைப் பொறுத்தவரையில், யாழ். மாநகர சபையின் முதல்வராக  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினரே தெரிவுசெய்யப்படவேண்டும்.அதனை அவர்கள் மற்றயகட்சிகளுக்கு விட்டுக்கொடுக்கத் தயாரில்லை.

யாழ். மாநகரசபை முதல்வர் தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஈபிஆர்எல்எவ், ஈபிடிபி, முற்போக்கு தமிழ்த் தேசியக் கட்சி உட்பட பல கட்சிகள் போட்டியிடவுள்ளன.

ஆனாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளிருந்து, ஆறுபேர் மாநகர முதல்வர் கதிரைக்குப் போட்டியிடுகின்றனர்.

இவர்களுள், யாழ். பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பாலசுந்தரப் பிள்ளையும் ஒருவர். இவர் ஆரம்பத்தில் தேர்தலில் போட்டியிட மறுத்தாலும், இறுதியில் சம்மதித்துள்ளார்.

அடுத்ததாக, ராஜதேவன், இவர் முன்னாள் மாநகரசபை முதல்வர். வெளிநாட்டில் வசிக்கும் இவர் தேர்தலில் போட்டியிடப்போவதாக சிறிலங்காவுக்கு வருகை தந்துள்ளார்.

அத்துடன், வடமாகாணசபை உறுப்பினர் ஜெயசேகரனும் மாநகரசபையின் முதல்வராக வருவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளார். ஆனால், ஜெயசேகரனை நியமிப்பதற்கு தமிழரசுக் கட்சியில் சிலர் விரும்பவில்லை.

அடுத்ததாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சொலமன் சிறில் மற்றும் ஆர்னோல்ட் ஆகிய இருவரில் சொலமன் சிறில் அரசியலில் பிரகாசிக்காதவராகையால், அவர் அனைவராலும் நிராகரிக்கப்பட்ட நிலையில், ஆர்னோல்டால் அதிக வாக்கினைப் பெறமுடியும். ஆர்னோல்ட் அதிக வாக்குகளைப் பெற்றாலும், அவர் காப்புறுதி நிறுவனம் ஒன்றில் அதிகாரியாகப் பணி புரிகின்றார். இதனால் இவரை முதல்வராக நியமிப்பதற்கு கட்சி எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

இறுதியாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவனின் மச்சானான வித்தியாதரனை நியமிப்பதற்கு கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் பேச்சாளர் சுமந்திரன் ஆகியோர் விருப்பம் தெரிவித்துள்ளனர். இதற்கு சரவணபவன் கடுமை எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார். இருப்பினும் அவரைச் சமாதானப்படுத்தி வித்தியாதரனை அடுத்த மாநகர முதல்வராக நியமிப்பதற்கு இரா.சம்பந்தன் முயற்சி எடுத்துள்ளார்.

இன்னும் இரண்டொரு நாட்களுக்குள் வித்தியாதரன் யாழ். மாநகர முதல்வர் வேட்பாளராக  நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 

http://inioru.com/அடுத்த-யாழ்-மாவட்ட-மாநகர/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.