Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை கடற்படையைக் கண்டித்து திமுக பேரணி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பேரணியில் கலந்து கொண்ட திமுக ஆதரவாளர்கள்

இலங்கை கடற்படைக்கு எதிராக தமிழக தலைநகர் சென்னையில் திங்கட்கிழமையன்று தமிழ்நாட்டை ஆளும் திமுக சார்பில் கண்டனப் பேரணியும் ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டன.

இந்தியா மற்றும் இலங்கைக் கிடையிலான கடற்பரப்பில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தி தாக்குவதாகவும்இ இதில் தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதும் படுகாயமடைவதும் தொடர்வதை இனியும் அனுமதிக்க முடியாது என்றும் ஊர்வலத்தில் வந்தவர்கள் கோஷங்களை எழுப்பினார்கள்.

இன்றைய ஊர்வலத்திற்கு தமிழ்நாட்டின் மீன்வளத்துறை அமைச்சர் கே.பி.பி.சாமி தலைமை தாங்கினார். தமிழக முதல்வர் மு.கருணாநிதியின் மகனும் தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சருமான மு.க.ஸ்டாலின் உட்பட தமிழக அமைச்சர்கள் பெரும்பாலானவர்கள் இந்த ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்.

ஆர்பாட்டத்தின் முடிவில்இ தமிழக அமைச்சர்கள் குழு ஒன்றுஇ சென்னையில் இருக்கும் இலங்கை துணைத்தூதர் அம்சா அவர்களின் அலுவலகத்திற்கு சென்று அவரை நேரில் சந்தித்தனர். அப்போது தங்களின் கண்டனத்தையும் கவலைகளையும் தெரிவிக்கும் மகஜர் ஒன்றையும் இவர்கள் அம்சாவிடம் கையளித்தனர்.

பேரணியில் கலந்துகொண்ட சிலர்

இந்தச் சந்திப்பின்போது பேசப்பட்ட விடயங்கள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர் மு.கருணாநிதிஇ தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் குறித்து இந்தியப் பிரதமர் அலுவலகம் இலங்கை துணைத்தூதரிடம் விவரங்கள் கேட்டதாக தெரிவித்தார்.

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தவில்லை என்றும்இ விடுதலைப்புலிகளோ அல்லது வேறு குழுவினரோ இதை செய்திருக்கலாம் என்றும் இலங்கை இராணுவ தரப்பில் கூறப்படுவதை பற்றி கேட்டபோதுஇ இலங்கை அரசின் இந்த மறுப்பை தாக்கப்பட்ட தமிழக மீனவர்கள் ஏற்கவில்லை என்றும் கருணாநிதி கூறினார்.

இதற்கிடையே இலங்கை கடற்படையினரின் தாக்குதலை கண்டித்து இராமேசுவரம்இ பாம்பன்இ தங்கச்சிமடம்இ மண்டபம் போன்ற பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் இன்று திங்கட்கிழமை முதல் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். நாளை செவ்வாய்க்கிழமையும் இந்த போராட்டம் நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பேரணியில் கலந்துகொண்ட சிலர்

இதேவேளைஇ தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்கள் குறித்துஇ இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் தமிழக உறுப்பினர்கள் இலங்கையை கண்டித்து பேசினார்கள்.

மேலும் தமிழ்நாட்டை சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள் குழுவினர் இன்று இந்திய பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்துப் கோரிக்கை மனு ஒன்றை கையளித்தனர். அதில் தமிழக மீனவர்கள் அடிக்கடி இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதாகவும் அதனால் தமிழக மீனவர்களை பாதுகாக்கும் விதமாக மத்திய அரசு உடனே இதில் தலையிட்டுஇ இலங்கை கடற்படையின் அத்து மீறலை தடுக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

http://www.bbc.co.uk/tamil/news/story/2004...ntaffairs.shtml

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.