Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடத்தப்பட்ட 7 உறுப்பினர்களும் உயிரிழந்து விட்டனர்: தமிழர் புனர்வாழ்வுக் கழகம்

Featured Replies

கடத்தப்பட்ட 7 உறுப்பினர்களும் உயிரிழந்து விட்டனர்: தமிழர் புனர்வாழ்வுக் கழகம்

[புதன்கிழமை, 14 மார்ச் 2007, 15:14 ஈழம்] [கிளிநொச்சியிலிருந்து ந.கிருஸ்ணகுமார்]

கடந்த 2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 29, 30 ஆம் நாட்களில் கடத்தப்பட்ட 7 தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பணியாளர்களும் உயிரிழந்து விட்டதாக தமிழர் புனர்வாழ்வுக் கழகம் அறிவித்துள்ளது.

இவர்கள் பொலநறுவ மாவட்டம் வெலிக்கந்தையில் சிறிலங்கா இராணுவத்தினருடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினரால் கடத்தப்பட்டிருந்தனர்.

இதனை இன்று புதன்கிழமை தமிழர் புனர்வாழ்வுக் கழகம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

மட்டக்களப்பைச் சேர்ந்தவர்களான தம்பிராசா வசந்தராசா

சண்முகநாதன் சுஜேந்திரன்

கைலாசபிள்ளை இரவீந்திரன்

அருள்தேவராசா சதீஸ்கரன்

கிளிநொச்சியைச் சேர்ந்தவர்களான தனுஸ்கோடி பிறேமினி

கதிர்காமர் தங்கராசா

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த காசிநாதர் கணேசலிங்கம்

ஆகிய பணியாளர்களே உயிரிழந்ததாக தமிழர் புனர்வாழ்வுக் கழகம் அறிவித்துள்ளது.

பணியாளர்களின் உயிரிழப்பு தொடர்பாக தமிழர் புனர்வாழ்வுக்கழக தலைவர் சிவனடியார் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையில்:

"எமது பணியாளர்களின் விபரம் தொடர்பாக ஆராய்வதற்கு கால அவகாசம் தேவைப்பட்டது. கடத்தல் சம்பவம் இடம்பெற்ற ஆரம்பத்தில் பல தகவல்கள் எங்களை வந்து சேர்ந்திருந்தாலும் அத்தகவல்களை உறுதி செய்வதில் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் நீண்ட கரிசனை செலுத்தியது.

இது பற்றி கொழும்பு நகரில் ஊடகவியலாளர் மாநாட்டையும், கடத்தல் சம்பவம் இடம்பெற்ற ஓராண்டில் ஓரு நாள் அடையாள உண்ணாவிரதம் போன்ற நிகழ்வுகளையும் நடத்தியது.

கொழும்பில் இருந்து வெளியாகும் ஆங்கில நாளேட்டில் வெளியிடப்பட்ட செய்தியின் அடிப்படையிலும் மேலும் பல ஆய்வுகளை செய்ததன் அடிப்படையிலும் எமது பணியாளர்கள் உயிரிழந்து விட்டார்கள் என்பதனை உறுதி செய்துள்ளோம்" என்றார்.

உயிரிழந்த 7 தமிழர் புனர்வாழ்வுக்கழக பணியாளர்களின் வணக்க நிகழ்வு கிளிநொச்சியில் உள்ள தமிழர் புனர்வாழ்வுக்கழக நடுவப் பணியகத்தில் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு நடைபெற்றது.

- மூலம் : புதினம்

மக்களின் துயர்துடைப்பு பணியில் ஈடுபட்டு உயிர்நீத்த இவர்களுக்கு அஞ்சலிகள்

Edited by Aalavanthan

தாயகத் தமிழீழத்தில் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் தமிழ் மக்களிற்கு மகத்தான சேவைகள் ஆற்றி வருகின்றது. கடத்தப்பட்ட ஏழு தமிழர் புனர்வாழ்வுக்கழக தொண்டர்கள் கூலிக்குழுக்களால் கொலைசெய்யப்பட்ட செய்தி அதிர்ச்சியைத் தருகின்றது.

தாயகத்திற்காக புனிதத் தொண்டு ஆற்றிய சமயம் கட்டாக்காலி நாய்களால் கொலைசெய்யப்பட்ட தமிழர்புனர்வாழ்வுக்கழக தொண்டர்களிற்கு கண்ணீர் அஞ்சலிகள்!

இந்தக் கொலைக்கு காரணமானவர்கள் விரைவில் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களிற்கு மிகக் கடுமையான தண்டனை கொடுக்க தமிழ் மக்கள் படை முன்வர வேண்டும்.

தழிழர் துயர் துடைப்புப் பயணத்தில் தங்கள் உயிர்களை இழந்த இவர்களுக்கு கண்ணீர் அஞ்சலிகள்.

கண்ணீர் அஞ்சலிகள்

கொலைசெய்த நாய்கள் என சொல்லி நாயை கேவலப்படுத்த வேண்டாம் மாப்பு இது புதிய ரக மிருகங்கள் ராகுலா எனவும் சொல்லலாம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.