Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வதற்கு மதத்­த­லை­வர்­கள் பங்களிக்க வேண்டும்

Featured Replies

நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வதற்கு மதத்­த­லை­வர்­கள் பங்களிக்க வேண்டும்

 

நாட்டில் யுத்தம் முடி­வ­டைந்து 8 வரு­டங்கள் கடந்­து­விட்ட நிலை­யிலும் நாடு இன்னும் சமா­தான சக­வாழ்வை உரு­வாக்­கிக்­கொள்­வதில் பாரிய சவால்­களை சந்­தித்து வரு­கி­றது. குறிப்­பாக யுத்­தத்தின் பின்­ன­ரான நாட்டில் நல்­லி­ணக்­கத்தை முன்­னெ­டுப்­பதும் இனங்­க­ளுக்­கி­டையில் தேசிய ஒற்­று­மையை உறு­திப்­ப­டுத்­து­வதும் சமூ­கங்­க­ளுக்­கி­டையில் புரிந்­து­ணர்வை ஏற்­ப­டுத்­து­வதும் இன்னும் பாரிய சவா­லான விட­ய­மா­கவே காணப்­ப­டு­கி­றது.

2015ஆம் ஆண்டு பத­விக்கு வந்த அர­சாங்கம் நல்­லி­ணக்க செயற்­பா­டு­க­ளையும் தேசிய ஒற்­று­மை­யையும் முன்­னெ­டுப்­ப­தற்கு குறிப்­பி­டத்­தக்­க­ளவு நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டாலும் அவை பாரிய சவால் மிகுந்­த­தா­கவே காணப்­ப­டு­கின்­றன. நல்­லி­ணக்க ஏற்­பா­டு­களை முன்­னெ­டுப்­பதில் அனைத்து தரப்­பி­னரும் தமது அர்ப்­ப­ணிப்பை வெளிக்­காட்­ட­வேண்­டி­யது அவ­சி­ய­மா­கி­றது. இவ்­வாறு அர­சாங்கம், சிவில் சமூகம், மதத்­த­லை­வர்கள் மற்றும் பொது­மக்கள் என அனைத்து தரப்­பி­னரும் ஆக்­க­பூர்­வ­மான முறையில் பங்­க­ளிப்பை வழங்­கினால் மட்­டுமே நாட்டில் இதய சுத்­தி­யுடன் கூடி­ய­தான நல்­லி­ணக்­கத்தை எதிர்­பார்க்க முடியும். இங்கு சர்­வ­மதத் தலை­வர்­களின் பங்­க­ளிப்பு என்­பது மிகவும் இன்­றி­ய­மை­யா­த­தாகும். சர்­வ­மத தலை­வர்­களின் ஆக்­க­பூர்­வ­மான பங்­க­ளிப்பு இன்றி நாட்டில் சமூ­கங்­க­ளுக்­கி­டை­யிலும் இனங்­க­ளுக்­கி­டை­யிலும் நல்­லி­ணக்­கத்­தையும் தேசிய ஒற்­று­மை­யையும் முன்­னெ­டுக்க முடி­யாது என்­பதே யதார்த்­த­மா­ன­தாகும்.

எனவே நாட்டின் சர்­வ­மதத் தலை­வர்கள் யுத்­தத்­துக்கு பின்­ன­ரான இலங்­கையில் நல்­லி­ணக்க செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்து ஒரு நிரந்­தர சமா­தா­னத்தை அடைந்து இந்த நாட்டை கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கு அர்ப்­ப­ணிப்­புடன் தமது பங்­க­ளிப்பை வழங்­க­வேண்டும். சர்­வ­மத தலை­வர்­களின் வழி­காட்­டு­தலின் ஊடா­கவே இதில் நாடு மற்றும் சமூகம் வெற்­றியை அடை­ய­மு­டியும். அந்­த­வ­கையில் தேசிய சக­வாழ்வு கலந்­து­ரை­யாடல் மற்றும் அரச கரு­ம­மொ­ழிகள் அமைச்சர் மனோ கணேசனின் முயற்­சியில் கொழும்பில் நேற்று முன்­தினம் சக வாழ்வு குறித்து சர்­வ­மதத் தலை­வர்­களின் மாநாடு ஒன்று நடத்­தப்­பட்­டது. இந்த மாநாட்டில் அனைத்து மதங்­க­ளி­னதும் பிர­தி­நி­திகள் கலந்­து­கொண்­டி­ருந்­த­துடன் தேசிய சக வாழ்வின் அவ­சியம் தொடர்பில் உரை­யாற்­றி­யி­ருந்­தனர். இந்த மாநாட்டில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றிய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன சக வாழ்வின் முக்­கி­யத்­துவம் குறித்து பல்­வேறு விட­யங்­களை வலி­யு­றுத்­தி­யி­ருந்தார்.

அதா­வது மிக­நீண்ட கால­மாக இந்த நாட்டில் மூவின மக்கள் மத்­தியில் பல்­வேறு முரண்­பா­டுகள், கோபங்கள், சந்­தே­கங்கள், அதி­ருப்­திகள் இருந்து வந்­துள்­ளன. இதன் விளை­வாக மூன்று தசாப்­த­கால யுத்தம் ஒன்­றுக்கு முகங்­கொ­டுக்க வேண்­டிய நிலைமை ஏற்­பட்­டது. இது இறு­தியில் ஆயு­தத்தின் மூல­மாக முடி­வுக்கு கொண்­டு­வ­ரப்­பட்­டது. இந்த நாட்­டினை பிள­வு­ப­டுத்த போரா­டிய பயங்­க­ர­வா­திகள் ஆயு­தத்தின் மூல­மாக தோற்­க­டிக்­கப்­பட்­டனர். எனினும் யுத்தம் தோற்­க­டிக்­கப்­பட்ட போதிலும் யுத்­தத்தின் மூல­மாக உரு­வான கருத்­தி­யலை இன்னும் எம்மால் தோற்­க­டிக்க முடி­யா­துள்­ளது என்று ஜனா­தி­பதி கூறி­யி­ருக்­கின்றார்.

நாம் சரி­யான செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்க முன்­வ­ர­வேண்டும். இதில் மதத் தலை­வர்­களின் ஒத்­து­ழைப்பும் வழி­காட்­டலும் மிகவும் முக்­கி­ய­மா­ன­தாகும். இதில் பெளத்த விகாரை, இந்துக் கோவில், கிறிஸ்­தவ தேவா­லயம், இஸ்­லா­மிய பள்­ளி­வாசல் ஆகிய எதிலும் முரண்­பா­டுகள் இருக்­காது என நான் நம்­பு­கிறேன். மதத் தலை­வர்கள் எப்­போ­துமே சரி­யான விட­யத்­தி­னையே சமூ­கத்தில் முன்­வைத்து வரு­கின்­றனர். எமது நாட்டில் சக­வாழ்வு இல்­லாத கார­ணத்­தினால் தான் இன்றும் நாம் சக­வாழ்வு பற்றி பேசி வரு­கின்றோம் எனவும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கிறார்.

அத்­துடன் முன்­னேற்றம் கண்ட நாடு­களில் ஆயுதம் ஏந்த விரும்­பமாட்­டார்கள். அவர்கள் சமூக நோக்கில் நம்­பிக்கை வைத்­துள்­ளனர். நாம் நல்­லி­ணக்கம் சக­வாழ்வு பற்றி பேசும் போது சிலர் எங்­களை ஏளனம் செய்­கின்­றனர். எனினும் நாம் மகிழ்ச்­சி­ய­டைய சில கார­ணிகள் உள்­ளன. இன்று மாண­வர்கள் முதல் பெரி­ய­வர்கள் வரை இந்த நாட்டின் நல்­லி­ணக்கம் சக­வாழ்வு பற்றி அறிந்­துள்­ளனர். சகோ­த­ரத்­து­வத்­துடன், அமை­தி­யாக வாழக்­கூ­டிய சூழலை நாம் எதிர்­பார்க்க முடியும். யுத்தம் ஒன்று இல்­லாத நாட்­டினை எம்மால் உரு­வாக்க முடியும். அதற்­கான நகர்­வு­களை முன்­னெ­டுப்போம். இனி ஒரு­போதும் ஒரு யுத்தம் ஏற்­ப­டாத ஒரு யாதார்த்­த­மா­னதும் நிரந்­த­ர­மான ஒரு சமா­தா­னத்தை உரு­வாக்கும் நாட்­டினை கட்­டி­யெ­ழுப்­பு­வதே எமது ஒரே நோக்­க­மாகும். இன்­னொரு யுத்­தத்­திற்கு இட­ம­ளிக்க முடி­யாது. அவ்­வா­றான ஒரு நாட்­டினை உரு­வாக்க சகல தரப்­பி­னரும் கைகோர்த்து செயற்­ப­டுவோம் என்றும் ஜனா­தி­பதி நல்­லி­ணக்கம் மற்றும் சக­வாழ்வின் அவ­சியம் தொடர்பில் மிகவும் வலு­வான முறையில் வலி­யு­றுத்­தி­யி­ருக்­கின்றார்.

அந்­த­வ­கையில் நாட்டின் தலைவர் என்ற வகையில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இனங்கள் மற்றும் சமூ­கங்­க­ளுக்­கி­டை­யி­லான நல்­லி­ணக்கம், சக­வாழ்வு, தேசிய ஒற்­றுமை என்­பன தொடர்பில் மிகவும் வலு­வான ரீதியில் புரிந்­து­வைத்­தி­ருக்­கின்­றமை வர­வேற்­கத்­தக்க விட­ய­மாக இருக்­கி­றது. ஆனால் இந்த செயற்­பா­டுகள் கொள்கை அள­விலும் பேச்­ச­ள­விலும் மட்டும் நின்­று­வி­டாமல் செயற்­பாட்டு ரீதியில் உயிர்ப்­பிக்­கப்­பட வேண்­டு­மென்­பது மிகவும் அவ­சி­ய­மா­கின்­றது.

இந்த மதத் தலை­வர்­களின் சக­வாழ்வு மாநாட்டை ஏற்­பாடு செய்த அமைச்சர் மனோ கணேசன் நாட்டின் தேசிய ஒற்­று­மையின் அவ­சியம் தொடர்பில் பல்­வேறு விட­யங்­களை வெளி­யிட்­டி­ருக்­கிறார்.

அதா­வது நாட்டின் உரி­மை­களை வென்­று­கொள்ள வடக்­கிலும் சரி தெற்­கிலும் சரி இனி­யொ­ரு­போதும் ஆயுதம் எந்தக் கூடாது என்­பது எமது இலக்­காகும். அத்­துடன் எமது வர­லாற்றை திரும்­பிப்­பார்த்தால் அதில் தவ­ற­விட்ட விட­யங்­களை திருத்­திக்­கொண்டு சரி­யான பாதையில் பய­ணிக்க வேண்டும் என்ற கட்­டா­யமும் உள்­ளது. மேலும் ஒரே நாட்­டுக்குள் அதி­கா­ரங்­களை பகிர்ந்­து­கொண்டு முன்­னோக்கி செல்ல வேண்டும். நாட்டில் பிரி­வினை, இன­வாதம், ஆயுத மோதல் அனைத்­தையும் முடி­வுக்கு கொண்­டு­வந்து அதி­கா­ரங்­களை அனை­வ­ருக்கும் பகிர்ந்து வழங்க வேண்டும் என்று அமைச்சர் மனோ கணேசன் குறிப்­பிட்­டி­ருக்­கிறார்.

அத்­துடன் நாம் நடு­நி­லை­யாக இருந்து நாட்­டினை பாது­காக்கும் செயற்­பாட்­டினை முன்­னெ­டுத்து வரு­கின்றோம். இதில் மதத் தலை­வர்கள் அனை­வ­ரதும் ஆலோ­சனை, ஒத்­து­ழைப்­புகள் எமக்கு அவ­சியம். இத­னையே ஜனா­தி­பதி தொடர்ச்­சி­யாக எமக்கு வலி­யு­றுத்தி வரு­கின்றார். ஆகவே அர­சாங்­கத்தின் பய­ணத்தில் மதத் தலை­வர்கள் அனை­வ­ரதும் ஒத்­து­ழைப்­பினை பெற்­றுக்­கொண்டு பல­மான அர­சாங்­கத்­தினை கொண்டு செல்ல வேண்டும் என்றே நாம் நினைக்­கின்றோம் எனவும் அமைச்சர் மனோ கணேசன் கூறி­யி­ருக்­கிறார். உண்­மையில் தற்­போ­தைய சூழலில் மற்றும் நல்­லி­ணக்கம், சக­வாழ்வு என்­ப­வற்றின் தேவை மிக அதி­க­மாக இருக்­கின்ற இந்த சந்­தர்ப்­பத்தில் விட­ய­தா­னத்­துக்கு பொறுப்­பான அமைச்சர் மனோ ­க­ணேசன் இவ்­வா­றா­ன­தொரு மாநாட்டை ஏற்­பாடு செய்­தமை சிறந்த விட­ய­மாகும். இவ்­வா­றான மாநா­டுகள் ஊடாக சமூ­கங்­க­ளுக்­கி­டையில் புரிந்­து­ணர்­வையும் நம்­பிக்­கை­யையும் ஏற்­ப­டுத்த முடி­யு­மென்­பது மிக முக்­கி­ய­மா­ன­தொரு விட­ய­மாகும். அந்­த­வ­கையில் நல்­லி­ணக்­கத்­தையும் சக­வாழ்­வையும் வலுப்­ப­டுத்த இந்த சர்வமதத் தலை­வர்கள் எந்­த­ளவு தூரம் முக்­கி­யத்­து­வ­மிக்க பங்­க­ளிப்பை வழங்­க­வேண்­டு­மென்­பது இவ்­வா­றான மாநா­டுகள் மூலம் சுட்­டிக்­காட்­டப்­ப­டு­கி­றது. எனவே மதத் தலை­வர்கள் சமூ­கங்­களை ஒன்­றி­ணைப்­ப­தற்­கான நல்­லி­ணக்க வேலைத்­திட்­டத்தில் தமது பங்­க­ளிப்பு தொடர்பில் புரிந்­து­கொண்டு செயற்­ப­ட­வேண்டும்.

குறிப்­பாக நாட்டின் நீண்­ட­கால பிரச்­சி­னைக்கு ஒரு நிரந்­தரத் தீர்வைக் காணும்­வ­கையில் புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்கும் முயற்­சிகள் முன்­னெ­டுக்­க­ப்­பட்டு வரு­கின்­றன. இந்த அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்கும் முயற்­சி­யிலும் சர்­வ­மதத் தலை­வர்கள் ஆக்­க­பூர்­வ­மான பங்­க­ளிப்பை வழங்கவேண்டும். கடந்த காலங்களில் இந்த விடயங்களில் சில துரதிர்ஷ்டவசமான அறிவிப்புகள் இடம்பெற்றமை எமக்குத் தெரியும். எனவே இதுபோன்ற தூரநோக்குள்ள விடயங்களை மிகவும் ஆழமாக ஆராய்ந்து பார்க்கவேண்டியது அனைத்து தரப்பினரதும் பொறுப்பாகும்.

அந்தவகையில் மதத் தலைவர்கள் மட்டுமே இந்த நாட்டில் நல்லிணக்கத்தையும் சகவாழ்வையும் ஏற்படுத்துவதற்கு அர்த்தமுள்ள மற்றும் ஆழமிக்க பங்களிப்பை வழங்கமுடியும். அவ்வாறான சூழலில் இதுபோன்ற மாநாடுகள் முக்கியத்துவம் பெறுகின்றன. எனவே இந்த நாட்டின் நீண்டகாலப் பிரச்சினைகளுக்கு நிரந்தர மற்றும் சகலரும் ஏற்கும் தீர்வைப் பெறவும் அனைத்து மக்களும் நல்லிணக்கத்துடனும் புரிந்துணர்வுடனும் சம உரிமைகளைப் பெற்றும் வாழ்வதற்கான ஆக்கபூர்வமான பங்களிப்பை மதத் தலைவர்கள் வழங்குவார்கள் என எதிர்பார்க்கிறோம். தற்போதைய நிலைமையிலும் மதத் தலைவர்களின் பங்களிப்பு அளப்பரியதாக இருக்கிறது. அவை மேலும் வலுவடைய வேண்டுமென்பதே எமது எதிர்பார்ப்பாகும்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-12-14#page-4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.