Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இடம்பெயர்ந்தோர் முகாம்களில் கருணா குழுவினர்: அனைத்துலக மன்னிப்புச் சபை

Featured Replies

இடம்பெயர்ந்தோர் முகாம்களில் கருணா குழுவினர்: அனைத்துலக மன்னிப்புச் சபை

சிறிலங்காவின் அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளில் செயற்பட்டு வரும் துணை இராணுவக்குழுவான கருணா குழுவினர், புதிதாக இடம்பெயர்ந்து வரும் மக்கள் தங்கியுள்ள முகாம்களுக்குள் நடமாடுவதுடன் மக்களையும் கடத்தி வருவதாக அம்னஸ்டி இன்டர்நசனல் எனப்படும் அனைத்துலக மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

கருணா குழுவினரின் நடவடிக்கைகளை அரச கட்டுப்பாட்டுப் பகுதியில் தடுப்பதற்கு அரசாங்கம் இயன்ற நடவடிக்கைகளை எடுக்கும் என்று பி.பி.சிக்கு வழங்கிய நேர்காணலில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளர் கேகலிய ரம்புக்வெல அண்மையில் தெரிவித்திருந்தார்.

கடந்த வாரம் முதல் இடம்பெற்று வரும் இராணுவ நடவடிக்கைகளினால் மட்டக்களப்பு, திருகோணமலைப் பகுதிகளில் இருந்து பெருமளவான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இது இடம்பெயர்ந்த மக்களின் எண்ணிக்கையை 120,000 ஆக உயர்த்தியுள்ளது.

சீருடை தரித்த கருணா குழுவினர், ஆயுதங்களுடன் முகாம்களுக்குள் நடமாடுவதுடன், மக்களுக்கான நிவாரணப் பொருட்களின் விநியோகங்களிலும் தடங்கல்களை ஏற்படுத்துவதாக எமக்கு அறிக்கைகள் கிடைத்துள்ளன என மன்னிப்புச் சபையின் ஆசிய பசுபிக் பிராந்திய பணிப்பாளர் பூர்னா சென் தெரிவித்தள்ளார்.

கருணா குழுவானது அரசின் ஆதரவுடன் மட்டக்களப்பு நகரின் எல்லாப்பகுதிகளிலும் இயங்கி வருகின்றது.

பலவந்தமாக இடம்பெயரச் செய்யப்படும் மக்கள் மிகவும் நெருக்கடியான சூழலில் இருப்பவர்கள். அவர்கள் தமது அத்தியாவசியப் பொருட்களையும் தமது இல்லங்களையும் விட்டு இடம்பெயர்ந்தவர்கள். அவர்களுக்கு புதிய இடங்கள் தொடர்பாக எதுவும் தெரியாது எனவே அச்சத்துடன் வாழ்கின்றனர்.

எனவே அந்த மக்களின் பாதுகாப்பிற்கு அரசாங்கமே பொறுப்பானது. அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுப் பகுதியான இந்த பிரதேசங்களில் ஆயுதங்களுடன் சிலர் நடமாடுவது ஏற்றுக்கொள்ள முடியாதது.

கடந்த மார்ச் 9 ஆம் நாள் முறையிடப்படாத ஒரு சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது. இடம்பெயர்ந்தோருக்கான முகாமுக்கு அண்மையில் பேரூந்துக்காக காத்திருந்த 15 வயது சிறுவனை வெள்ளை வானில் வந்த ஆயுததாரிகள் கடத்திச் செல்ல முற்பட்டனர்.

சிறுவன் எதிர்ப்புத் தெரிவித்ததுடன் சத்தங்களை எழுப்பியதால் அங்கு திரண்ட மக்கள் கடத்தல் காரர்களை தாக்கியுள்ளனர். இதனால் கடத்தல்காரர்கள் தமது முயற்சியை கைவிட்டு ஓடிவிட்டனர்.

எனினும் இதனை பார்த்துக்கொண்டு நின்ற சிறிலங்கா இராணுவத்தினர் சிறுவனுக்கு உதவ முன்வரவில்லை என அதனைப் பார்த்த சாட்சி ஒருவர் தெரிவித்துள்ளார் என மன்னிப்புச்சபை மேலும் தெரிவித்துள்ளது.

வெள்ளை வான் கடத்தல்கள் ஒரு உளவியல் தாக்கம் எனவும் இது தொடர்பாக முறைப்பாடுகள் செய்யப்பட்டால் காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பார்கள் எனவும் கேகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

http://www.tamilwin.com/article.php?artiId...;token=dispNews

  • கருத்துக்கள உறவுகள்

இடம்பெயர்ந்தோர் முகாம்களில் கருணா குழுவினர்: அனைத்துலக மன்னிப்புச் சபை

சிறிலங்காவின் அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளில் செயற்பட்டு வரும் துணை இராணுவக்குழுவான கருணா குழுவினர், புதிதாக இடம்பெயர்ந்து வரும் மக்கள் தங்கியுள்ள முகாம்களுக்குள் நடமாடுவதுடன் மக்களையும் கடத்தி வருவதாக அம்னஸ்டி இன்டர்நசனல் எனப்படும் அனைத்துலக மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

கருணா குழுவினரின் நடவடிக்கைகளை அரச கட்டுப்பாட்டுப் பகுதியில் தடுப்பதற்கு அரசாங்கம் இயன்ற நடவடிக்கைகளை எடுக்கும் என்று பி.பி.சிக்கு வழங்கிய நேர்காணலில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளர் கேகலிய ரம்புக்வெல அண்மையில் தெரிவித்திருந்தார்.

கடந்த வாரம் முதல் இடம்பெற்று வரும் இராணுவ நடவடிக்கைகளினால் மட்டக்களப்பு, திருகோணமலைப் பகுதிகளில் இருந்து பெருமளவான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இது இடம்பெயர்ந்த மக்களின் எண்ணிக்கையை 120,000 ஆக உயர்த்தியுள்ளது.

சீருடை தரித்த கருணா குழுவினர், ஆயுதங்களுடன் முகாம்களுக்குள் நடமாடுவதுடன், மக்களுக்கான நிவாரணப் பொருட்களின் விநியோகங்களிலும் தடங்கல்களை ஏற்படுத்துவதாக எமக்கு அறிக்கைகள் கிடைத்துள்ளன என மன்னிப்புச் சபையின் ஆசிய பசுபிக் பிராந்திய பணிப்பாளர் பூர்னா சென் தெரிவித்தள்ளார்.

கருணா குழுவானது அரசின் ஆதரவுடன் மட்டக்களப்பு நகரின் எல்லாப்பகுதிகளிலும் இயங்கி வருகின்றது.

பலவந்தமாக இடம்பெயரச் செய்யப்படும் மக்கள் மிகவும் நெருக்கடியான சூழலில் இருப்பவர்கள். அவர்கள் தமது அத்தியாவசியப் பொருட்களையும் தமது இல்லங்களையும் விட்டு இடம்பெயர்ந்தவர்கள். அவர்களுக்கு புதிய இடங்கள் தொடர்பாக எதுவும் தெரியாது எனவே அச்சத்துடன் வாழ்கின்றனர்.

எனவே அந்த மக்களின் பாதுகாப்பிற்கு அரசாங்கமே பொறுப்பானது. அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுப் பகுதியான இந்த பிரதேசங்களில் ஆயுதங்களுடன் சிலர் நடமாடுவது ஏற்றுக்கொள்ள முடியாதது.

கடந்த மார்ச் 9 ஆம் நாள் முறையிடப்படாத ஒரு சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது. இடம்பெயர்ந்தோருக்கான முகாமுக்கு அண்மையில் பேரூந்துக்காக காத்திருந்த 15 வயது சிறுவனை வெள்ளை வானில் வந்த ஆயுததாரிகள் கடத்திச் செல்ல முற்பட்டனர்.

சிறுவன் எதிர்ப்புத் தெரிவித்ததுடன் சத்தங்களை எழுப்பியதால் அங்கு திரண்ட மக்கள் கடத்தல் காரர்களை தாக்கியுள்ளனர். இதனால் கடத்தல்காரர்கள் தமது முயற்சியை கைவிட்டு ஓடிவிட்டனர்.

எனினும் இதனை பார்த்துக்கொண்டு நின்ற சிறிலங்கா இராணுவத்தினர் சிறுவனுக்கு உதவ முன்வரவில்லை என அதனைப் பார்த்த சாட்சி ஒருவர் தெரிவித்துள்ளார் என மன்னிப்புச்சபை மேலும் தெரிவித்துள்ளது.

வெள்ளை வான் கடத்தல்கள் ஒரு உளவியல் தாக்கம் எனவும் இது தொடர்பாக முறைப்பாடுகள் செய்யப்பட்டால் காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பார்கள் எனவும் கேகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

http://www.tamilwin.com/article.php?artiId...;token=dispNews

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.