Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அடுத்த மாதம் சட்டசபை ஆளும் கட்சிக்கு சவால்

Featured Replies

அடுத்த மாதம் சட்டசபை ஆளும் கட்சிக்கு சவால்
 
 
 

தமிழக சட்டசபை கூட்டம், ஜனவரி இரண்டாவது வாரத்தில் நடைபெற உள்ளது. புத்தாண்டில் நடைபெறும், சட்டசபை கூட்டம், ஆளும் கட்சிக்கு பெரும் சவாலாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

 

அடுத்த மாதம் ஆளும் கட்சிக்கு சவால்

தமிழக சட்டசபை கூட்டம், கடைசியாக, ஜூனில் துவங்கி, ஜூலையில் நிறைவு பெற்றது. அப்போது, மானிய கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. ஆறு மாதங்களுக்கு ஒரு முறை, சட்டசபை கூட்டப்பட வேண்டும். எனவே, ஜனவரி, 8ல், சட்டசபை துவங்க உள்ளதாக கூறப்படுகிறது. புத்தாண்டின் முதல் கூட்டம் என்பதால், அன்று, சட்டசபையில் கவர்னர், பன்வாரிலால் புரோஹித் உரையாற்றுவார்.

முதல் முறை




அதன்பின், கவர்னர் உரை மீது, ஒரு வாரம் விவாதம் நடைபெறும். அ.தி.மு.க., அணிகள் இணைந்த பின், முதல் முறையாக, சட்டசபை நடைபெற உள்ளது.

முதல்வர் பதவியை இழந்த பின், சாதாரண உறுப்பினராக, கடந்த சட்டசபை கூட்டத்தில் பங்கேற்றபன்னீர்செல்வம், இம்முறை, துணை முதல்வராக பங்கேற்கவுள்ளார். அதேபோல், சென்னை, ஆர்.கே.நகரில் சுயேச்சையாக வெற்றி பெற்றுள்ள தினகரனும், முதல் முறையாக சட்டசபைக்கு வருகிறார்.
 

அரசுக்கு பெரும்பான்மை



சட்டசபையில், தற்போது, அ.தி.மு.க.,விற்கு, 116 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். இவர்களில், ஐந்து பேர், ஏற்கனவே தினகரனுக்கு ஆதரவு அளித்தவர்கள். தி.மு.க., கூட்டணிக்கு, 98 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். சுயேச்சை எம்.எல்.ஏ., தினகரன், அவரது ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள், ஐந்து பேர், தி.மு.க.,விற்குஆதரவாக செயல்பட்டால், அரசுக்கு எதிரான எம்.எல்.ஏ.,க்கள் எண்ணிக்கை, 104 ஆக உயரும்.
 

 

 

முதல்வர் பதில் அளிப்பார்.



மேலும், எட்டு எம்.எல்.ஏ.,க்களை இழுத்தால், அரசுக்கு பெரும்பான்மை இல்லாத நிலை ஏற்படும். சட்டசபையில், கவர்னர் உரை மீதான விவாதம் முடிந்த பின், முதல்வர் பதில் அளிப்பார். அதன்பின், கவர்னருக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் கொண்டு வரப்படும். அன்றைய தினம், ஆளும் கட்சி எம்.எல்.ஏ.,க்களில், எட்டு பேர் வராமல் இருந்தால், தீர்மானம் தோல்வி அடையும் நிலை ஏற்படும்.அவ்வாறு ஏற்பட்டால், அரசுக்கு சிக்கல் ஏற்படும். எனவே, ஆளும் கட்சி எம்.எல்.ஏ.,க்களை இழுக்கும் பணியில், தினகரன் தரப்பினரும், தி.மு.க.,வினரும் ஈடுபட்டுள்ளனர். இதனால், அ.தி.மு.க.,வில் பரபரப்பு நிலவுகிறது.
- நமது நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1926818

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.