Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடகிழக்கு இணைந்த சுயநிர்ணய அடிப்படையில் சமஷ்டி அரசியலமைப்பே உருவாக்கப்படவேண்டும்

Featured Replies

வடகிழக்கு இணைந்த சுயநிர்ணய அடிப்படையில் சமஷ்டி அரசியலமைப்பே உருவாக்கப்படவேண்டும்

p28-07df49cf6240fa6c7d51d897f978930ca0ef04ae.jpg

 

தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு விஞ்ஞாபனத்தில் வலியுறுத்து
(எம்.நியூட்டன்)

தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கு இணைந்த ஒரு மாகாண மாக உருவாக்கப்படுவதோடு சுயநிர்ணய உரிமையின் அடிப் படையில் ஒரு சமஷ்டி அரசி  யல் அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்ற கொள்கை யினை ஏற்றுக்கொண்ட சகல அமைப்புக்களும் எமது   கூட்டமைப்பில் இணைந்து  கொள்ளலாம் என அழைப்பு விடுத்துள்ள தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு தேர்தலுக்குப் பின்னர் கொள்கையில் ஒன்றுபட்ட அமைப்புக்களை இணைத்துக்கொண்டு தமிழ் மக்களின் உரிமைப்போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் உறுதிபடத் தெரிவித்துள்ளது. 

தந்தை செல்வா, ஜிஜி பென்னம்பலம் மற்றும் அமிர்தலிங்கம் போன்றவர்கள் கட்சிளுக்கிடையில் ஐக்கியம் பேணப்படவேண்டும் என்று கருதி தமிழர் விடுதலைக் கூட்டணியை உருவாக்கினார்கள். அவர்களால் உருவாக்கப்பட்டு விடுதலைப் புலிகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணியின் சின்னமான உதயசூரியன் சின்னத்திலேயே உள்ளுராட்சி மன்றத்தேர்தலில் களமிறங்கியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள அக்கூட்டமைப்பானது, தமிழ் மக்களின் அனைத்து அடிப்படைக் கோரிக்கைகளும் நிராகரிக்கப்பட்டு வெளிவந்துள்ள புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கையை தமிழரசுக் கட்சியும், அதனுடன் இணைந்திருக்கும் தமிழீழ விடுதலை இயக்கமும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகமும் ஏற்றுக்கொண்டுள்ளன. இத்தோதலில் மக்களின் ஆணையைப் பெற்று அத்தகைய இடைக்கால அறிக்கையை தமிழ் மக்களும் ஏற்றுக்கொண்டதாக ஒரு மாயையை ஏற்படுத்த முயற்சிக்கின்றார்கள். ஆகவே எமது தலையில் நாமே மண்ணை அள்ளிப்போடக்கூடாது எனவும் வலியுறுத்தியுள்ளது.

உள்ளுராட்சி மன்றத்தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில்போட்டியிடும் தமிழர் விடுதலை கூட்டணி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, ஈழப் புரட்சி அமைப்பு, ஜனநாயக தமிழரசுக் கட்சி, புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் மற்றும் சமூக அமைப்புகள் இணைந்து் உருவாக்கப்பட்டுள்ள தமிழ் தேசிய விடுதலை கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் நேற்று புதன்கிழமை யாழ்.இளங்கலைஞர் மண்டபத்தில் வெ ளியிடப்பட்டுள்ளது.

அவ்விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு,

2018 பெப்ரவரி 10ஆம் திகதி இலங்கையின் அனைத்து உள்ராட்சி சபைகளுக்குமான தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலானது வழக்கமான உள்ளுராட்சி தேர்தல்களை விட மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். இது உள்ராட்சி சபைகளை தெரிவு செய்வதற்கான தேர்தலாக இருந்தபோதும், தமிழ் மக்களின் தலைவிதியைத் தீர்மானிக்கக்கூடிய தேசிய முக்கியத்துவத்தையும் கொண்டுள்ளது.

இலங்கை அரசின் இனப்பிரச்சினை தீர்வு தொடர்பான இடைக்கால அறிக்கையை தமிழரசுக் கட்சியும் அதன் பங்காளிக் கட்சிகளும் ஏற்றுக்கொண்டுள்ளன. எனவே இதனை ஏற்றுக்கொண்டவர்களுக்கு அளிக்கப்படுகின்ற ஒவ்வொரு வாக்கும் இடைக்கால அறிக்கைக்கு ஆதரவாக அளிக்கப்படும் வாக்குகளாக அரசினாலும் தமிழரசுக் கட்சி மற்றும் அதன் பங்காளிக் கட்சிகளாலும் வியாக்கியானப்படுத்தப்பட்டு மாகாணசபை முறைமையையே இறுதித் தீர்வாகத் திணிக்கும் அபாயம் உள்ளது.

இது ஒருபுறமிருக்க, 2015ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் வடக்கு-கிழக்கு இணைப்பு, தமிழ் மக்களுக்கான சுயநிர்ணய உரிமை, பகிரப்பட்ட இறையாண்மை ஆகியவற்றின் அடிப்படையிலான அரசியல் யாப்பு ஒன்றை உருவாக்குவதற்கு தம்ழரசுக் கட்சியின் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்களிடம் ஆணை கேட்டிருந்தது. மக்களும் அந்தக் கோரிக்கைகளை ஏற்று வடக்கு-கிழக்கில் பதினாறு பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்து தமது முழுமையான ஆதரவினையும் தெரிவித்தார்கள்.

இவற்றின் அடிப்படையிலான சம‘்டி அரசியல் அமைப்பொன்றை உருவாக்குவதற்கான ஆணையைப் பெற்றவர்கள் அரசியல் தீர்வின் மிக அடிப்படைக் கோரிக்கைகளான இணைந்த வடக்கு-கிழக்கில் சுய நிர்ணய அடிப்படையில் சமஷ்டி ஆட்சி ஒன்றினை உருவாக்குவதற்கு மக்கள் அளித்த ஆணையைக் கைவிட்டு, ஒற்றையாட்சிக்குள் அதிகாரப் பரவலாக்கல் என்பதையும், வடக்கு-கிழக்கு இணைக்கப்படமாட்டாது என்பதையும், வடக்கு-கிழக்கு உள்ளிட்ட இலங்கை முழுவதும் பௌத்த மதத்திற்கு முதலிடம் என்பதையும் ஏற்றுக்கொண்டதன் ஊடாக, சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்டுவிட்டார்கள். மக்கள் ஆணையைப் புறக்கணித்து சகல அடிப்படைக் கோரிக்கைகளையும் கைவிட்ட தமிழரசுக் கட்சியினர் ஏனைய கட்சிகளைப் பார்த்து இயலுமானால் வடக்கு-கிழக்கை இணைத்துக் காட்டுங்கள் பார்க்கலாம் என்று சவால் விடும் அளவிற்கு இவர்களின் கொள்கைப் பிடிப்பு வீழ்ச்சியடைந்துள்ளது.

புதிய அரசியல் யாப்பு தொடர்பில் வந்திருக்கின்ற இடைக்கால அறிக்கையானது தென்பகுதி மக்களை மகிழ்ச்சிப் படுத்தக்கூடிய வகையில் தமிழ் மக்களின் அனைத்து அடிப்படைக் கோரிக்கைகளும் நிராகரிக்கப்பட்டு வௌிவந்துள்ளது. இதனை தமிழரசுக் கட்சியும், அதனுடன் இணைந்திருக்கும் தமிழீழ விடுதலை இயக்கமும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகமும் ஏற்றுக்கொண்டதன் ஊடாக இந்த இடைக்கால அறிக்கையை தமிழ் மக்களும் ஏற்றுக்கொண்டதாக ஒரு மாயையை ஏற்படுத்த முயற்சிக்கின்றார்கள்.

நடைபெறவுள்ள உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலில் வீட்டிற்கோ அல்லது ஆளும் கட்சிக்கோ அல்லது அவர்களின் முகவர்களுக்கோ வாக்களித்து வெற்றிபெறச் செய்தால் வௌிவந்துள்ள இடைக்கால அறிக்கையை தமிழ் மக்கள் ஏற்றுக்கொண்டதாக தவறான பிரச்சாரத்தினை அரசும் அதன் பங்காளிகளும் செய்வதற்கு நாம் வழிசமைத்துக் கொடுத்தவர்களாவோம். அவ்வாறான ஒரு நிலை உருவாகி எமது தலைகளில் நாமே மண்ணை அள்ளிக்கொட்டிக் கொள்ளாமல் தவறானதும் பொய்யானதுமான பிரச்சாரங்களை மேற்கொண்டுவரும் தமிழரசுக் கட்சியைத் தோற்கடிப்பது எம்மினத்தின் எதிர்காலத்தைக் காப்பாற்றுவதற்கான முக்கிய கடமையாகும்.

இந்த நிலையில், தமிழ் மக்களின் உரிமைகளைப் பெற்றுக்கொள்ளவும் கிராமிய, மாகாண அபிவிருத்தியை வினைத்திறனுடன் முன்னெடுக்கவும் ஒரு மாற்று ஐக்கிய முன்னணியின் அவசியம் உணரப்பட்டது. அவ்வாறான ஒரு மாற்று அமைப்பின் அவசியம் கருதியே தமிழ் மக்கள் பேரவையும் உருவாக்கப்பட்டது. அந்தத் தமிழ் மக்கள் பேரவையில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியும் அங்கம் வகித்ததுடன், தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பில் அங்கம் வகிப்பவர்களும் தமிழ் மக்கள் பேரவையை பலப்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டோம். ஆயிரமாயிரம் மக்களைத் திரட்டி யாழ்ப்பாணத்திலும் மட்டக்களப்பிலும் எழுக தமிழ் என்ற பிரம்மாண்டமான பேரணியை நடத்தி தமிழ் மக்களின் கோரிக்கைகளையும் அபிலாசைகளையும் மீண்டும் ஒருமுறை அனைவருக்கும் வௌிப்படுத்திக் காட்டினோம்.

ஆனால், தமிழ் மக்கள் பேரவையானது ஒரு மக்கள் இயக்கமாகத் தன்னை மட்டுப்படுத்திகொண்ட காரணத்தினால் ஒரு மாற்று அரசியல் தலைமையாக உருவாக முடியவில்லை. இந்நிலையில் தமிழ் மக்கள் பேரவையில் அங்கம் வகித்த ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியானது ஒரு மாற்று அணியை உருவாக்கும் பொருட்டு நீண்டநாட்களாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் போன்றவற்றுடன் தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துவந்த போதிலும் அந்த முயற்சிகள் கைகூடவில்லை. குறைந்தபட்சம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் (அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ்) நேரடிப் போட்டிகளைத் தவிர்ப்பதற்கு நாம் மேற்கொண்ட முயற்சிகளும் பயனளிக்கவில்லை.

இந்நிலையில் குறைந்தபட்ச பொதுக்கொள்கையின் அடிப்படையில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழர் விடுதலை கூட்டணி, ஜனநாயக தமிழரசுக் கட்சி, ஈழப் புரட்சி அமைப்பு, புனர்வாழ்வு பெற்ற போராளிகள் மற்றும் சமூக அமைப்புக்கள் பலவும் ஒன்றிணைத்து தமிழ் தேசிய விடுதலை கூட்டமைப்பை உருவக்கினோம். அதனுடைய பொதுச்சின்னமாக உதயசூரியன் சின்னத்தையும் எல்லோரும் ஏற்றுக்கொண்டனர். அதனை உத்தரவாதப் படுத்தும் வகையில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது.

வடக்கு-கிழக்கு என்பது தமிழர்களின் தாயகம், அது இணைந்த ஒரு மாகாணமாக உருவாக்கப்படவேண்டும். சுயநிர்ணய உரிமை என்பது தமிழ் மக்களின் அடிப்படை உரிமை. இவற்றின் அடிப்படையில் ஒரு சமஷ்டி அரசியல் அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்ற கொள்கையினை ஏற்றுக்கொண்ட சகல அமைப்புக்களும் இப்புதிய கூட்டமைப்பில் இணைந்துகொள்ளலாம். தேர்தலுக்குப் பின்னர் கொள்கையில் ஒன்றுபட்ட இத்தகைய அமைப்புக்களை இணைத்துக்கொண்டு தமிழ் மக்களின் உரிமைப்போராட்டத்தை தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு முன்னெடுக்கும். தமிழ் மக்களின் விடுதலைக்கு தமிழ் மக்கள் ஒன்றுபடுதல் என்பது மிக முக்கியமானது. ஆனால் ஐக்கியம் என்ற பெயரில் தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை விலைபேசி விற்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதனால்தான் நாம் ஒரு மாற்று அணியை உருவாக்கியுள்ளோம்.

அவ்வாறான மாற்று அணியொன்றை பலப்படுத்த வேண்டியதும் அதனை வெல்ல வைக்க வேண்டியதும் தமிழ் மக்களின் கடமையாகும். தந்தை செல்வா, ஜிஜி பென்னம்பலம் மற்றும் அமிர்தலிங்கம் போன்றவர்கள் கட்சிளுக்கிடையில் ஐக்கியம் பேணப்படவேண்டும் என்று கருதி தமிழர் விடுதலைக் கூட்டணியை உருவாக்கினார்கள். அவர்களால் உருவாக்கப்பட்டு விடுதலைப் புலிகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணியின் சின்னமான உதயசூரியன் சின்னத்திலேயே நாம் உள்ராட்சித் தேர்தலில் போட்டியிடுகின்றோம்.

கடந்த உள்ராட்சி மன்றத் தேர்தல்களில் கரைச்சி, பச்சிலைப்பள்ளி மற்றும் பூனகரி பிரதேச சபைகளின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டபொழுது உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றதன் மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கௌரவத்தைக் காப்பாற்றியதும் இந்த உதயசூரியன் சின்னம்தான் என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் மக்களுக்கு சேவை செய்ய பின்னின்றாலோ அல்லது ஊழல் லஞ்சம் பெறுவதாக அறிந்தாலோ அவ்வுறுப்பினர்களின்மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.கடந்த காலத்தில் பல்வேறுபட்ட சபைகளிலும் ஊழல்கள் தலைவிரித்தாடியதுடன் ஈபிடிபி போன்ற கட்சிகளுடன் இணைந்து பல்வேறுபட்ட சபைகளின் நடவடிக்கைகள் முடக்கப்பட்ட சம்பவங்களையும் நாம் அறிவோம். இவற்றின்மீது தமிழரசுக் கட்சித் தலைமை எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் ஒரு அசமந்தப் போக்கைக் கடைப்பிடித்திருந்தது. அவ்வாறான நிலைமைகள் ஏற்படாமல் மக்களுக்கு நேர்மையான சேவைகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றுள்ளது.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-01-04#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.