Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கை கழுவுகிறதா டெல்லி?

Featured Replies

மிஸ்டர் கழுகு: கை கழுவுகிறதா டெல்லி?

 
 

 

p44d_1516364511.jpg

‘‘மேடையில் ரஜினி, கமல். முன்வரிசை யில் நான்கு அமைச்சர்கள்... எப்படியிருக்கிறது இந்தக் காட்சி?’’ என்று கேட்டபடி வந்தார் கழுகார்.

‘‘எங்கே இந்தக் காட்சி?’’ என்றோம்.

‘‘எம்.ஜி.ஆர் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்துக்குப் பிறகு உருவாக்க நினைத்த ‘கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு’ படம், இப்போது அனிமேஷனில் தயாராகிறது. அதன் துவக்க விழாவின்போது நடந்த காட்சி இது.  பிரபுதேவா வுடன் இணைந்து ஐசரி கணேஷ் தயாரிக்கும் இந்தப் படத்தின் துவக்க விழாவில் கலந்துகொள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் முக்கியத் தலைவர்களை அவர் அழைத்திருந்தார். பார்வையாளர்கள் பகுதியில் முதல் வரிசையில் ரஜினி கம்பீரமாக அமர்ந்திருந்தார். ரஜினி இருப்பதை அறியாமல் நான்கு அமைச்சர்கள் அணிவகுத்து நடந்துவர... சட்டென்று அவர்களைக் கவனித்த ரஜினி, மரியாதை நிமித்தம் எழுந்து நின்று வணக்கம் சொன்னார். ஒரு கணம் நிலைதடுமாறிய அமைச்சர்கள், பதிலுக்கு வணக்கம் தெரிவித்துவிட்டு அவசரமாக நகர்ந்தனர். ரஜினி கண்ணில் படாத அளவுக்குத் தள்ளிப்போய் அமர்ந்தனர். ரஜினியும் கமலும் மேடையைவிட்டு இறங்கிச் சென்றபிறகுதான், இந்த அமைச்சர்கள் மேடையேறினர். சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர், உடுமலை ராதா கிருஷ்ணன், கடம்பூர் ராஜு மற்றும் பாலகிருஷ்ண ரெட்டி ஆகிய நால்வர்தான் அவர்கள். பிளட் பிரஷர் எகிறி வியர்த்துக்கொட்டியதாம் இவர்களுக்கு. ‘ஆட்சியைப் பற்றி ரஜினியோ, கமலோ விமர்சித்துவிடுவார்களோ’ என்று தவித்தார்கள். ஆனால், மேடையில் யாரையும் பேச விடாமல் நாசூக்காகத் தவிர்த்து விட்டார் ஐசரி கணேஷ். அதனால் அமைச்சர்களுக்கு நிம்மதி.’’

‘‘ஆறு மாதங்களில் தேர்தல் வந்தாலும் சந்திக்கத் தயார் என்று ரஜினி சொல்லியிருக்கிறாரே?’’

‘‘ரஜினி தன் மக்கள் மன்றத்தை அரசியல் கட்சியாக மாற்றுவதற்கான ஏற்பாடுகளை விறுவிறுப்பாகச் செய்துகொண்டிருக்கிறார். அதேநேரத்தில், தமிழகத்தில் அ.தி.மு.க ஆட்சியை இதுநாள் வரை தாங்கிப்பிடித்துக்கொண்டிருந்த பி.ஜே.பி., இப்போது அதைக் கைவிடுவதுபோல் தெரிகிறது. ‘துக்ளக்’ ஆண்டு விழாவில் அதன் தற்போதைய ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி பேசியதும், அந்தப் பேச்சையடுத்து அ.தி.மு.க-வில் எழுந்துள்ள சலசலப்பும் அதைத்தான் காட்டுகின்றன. ‘நாங்கள் சசிகலாவைச் சிறைக்கு அனுப்பி, அவரிடமிருந்து அ.தி.மு.க-வைக் காப்பாற்றி, பிரிந்துகிடந்த ஓ.பி.எஸ்-இ.பி.எஸ் அணிகளை இணைத்து, இரட்டை இலையை மீட்டுக் கொடுத்தோம். ஆனால், அதன்பிறகும் அந்தக் கட்சி வலிமைபெற முடியவில்லை’ என்பதுதான் அவர் பேச்சின் சாரம். ‘ஆண்மை யற்ற அமைச்சர்கள்’ என்று ஏற்கெனவே பேசியிருந்த குருமூர்த்தி, இப்போது கொஞ்சம் நாகரிகமாக விமர்சித்ததுடன், ஆளும்தரப்புமீது மிகப்பெரிய பழியை வெளிப்படையாக சுமத்தினார். மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியைப் பக்கத்தில் வைத்துக்கொண்டே அவர் அதைச் சொன்னது, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.’’

p44c_1516364529.jpg

‘‘அப்படி என்ன சொன்னார்?’’

‘‘குருமூர்த்தி, ‘அ.தி.மு.க-விடமிருந்து ஐயாயிரம் கோடி ரூபாய் பிடிபட்டுள்ளது. அது வெறும் ஐந்து சதவிகிதம்தான். இன்னும் தோண்டத் தோண்ட வந்துகொண்டிருக்கிறது’ என்றார். அதோடு, ‘இப்படிப்பட்டவர்களும்  தினகரனும் இணையக்கூடாது; அப்படி இணைந்தாலும் அந்த அ.தி.மு.க வலுப்பெறாது. அதனால், அ.தி.மு.க தொண்டர்கள் அதை அனுமதிக்கக்கூடாது’ என்றார். இந்த இடத்தில் மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால், ‘சசிகலா குடும்பத்திடமிருந்து ஐயாயிரம் கோடி ரூபாய் பிடிபட்டது’ என்று குருமூர்த்தி சொல்லவில்லை. மாறாக, ‘அ.தி.மு.க-விடமிருந்து பிடிபட்டுள்ளது. இன்னமும் பிடிபடும்’ என்ற தொனியில் சொன்னார். அது தமிழக முதலமைச்சர் எடப்பாடி, துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ் உள்பட அனைவரையும் கதிகலங்க வைத்துள்ளது.’’

‘‘தினகரனும் அ.தி.மு.க-வும் இணையக்கூடாது என்று குருமூர்த்தி சொன்னார் என்றால், இணைப்புக்கான பேச்சுவார்த்தைகள் ஏதாவது நடந்ததா?’’

‘‘அப்படியும் ஒரு மூவ் நடந்துகொண்டுதான் இருக்கிறது. சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சில தினங்களுக்கு முன்பு தினகரனைத் தனியாகச் சந்தித்துப் பேசியுள்ளார். மிக ரகசியமாக நடந்த அந்தச் சந்திப்பு, தினகரன்- அ.தி.மு.க நல்லுறவுக்கான முதல் விதை என்று பார்க்கப்படுகிறது. அந்த விஷயம் குருமூர்த்திக்குத் தெரியாமலா இருக்கும்? ‘இப்போது தமிழகத்தில் நடப்பது வசூல் அரசாங்கம். மேலே இருந்து கீழே வரை வசூல்தான் நடக்கிறது. தடியெடுத்தவன் தண்டல்காரன் என்பதுபோல, எல்லா அமைச்சர் களும் வசூல் செய்கின்றனர். பன்னீரை எடப்பாடி பழனிசாமி ஓரம்கட்ட நினைத்தார். அதனால்தான், அவர்களால் அ.தி.மு.க-வை உறுதிப்படுத்த முடியவில்லை’ என்றார் குருமூர்த்தி.’’

p44b_1516364556.jpg

‘‘அப்படியானால் டெல்லியுடன் பன்னீர் சுமுகமாக இருப்பதாகத்தானே அர்த்தம். அவரின் டெல்லி பயணத்தில் ஏதும் விசேஷம் உண்டா?’’

‘‘அவர் போனது மத்திய அரசின் பட்ஜெட் ஆலோசனைக் கூட்டத்துக்காக! ‘டெல்லியில் பிரதமர் மோடியைச் சந்தித்து, எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்கு வரச்சொல்லி பன்னீர் அழைப்பு விடுப்பார்’ என்றெல்லாம் ஆளும்தரப்பில் சொல்லப்பட்டது. பிரதமர் அலுவலகத்தில் விசாரித்தேன். ‘பிரதமரைப் பார்க்க பன்னீர் அப்பாயின்ட்மென்ட்டே கேட்கவில்லை’ என்கிறார்கள். பன்னீர்செல்வம் டெல்லிக்குப் போய் பிரதமரைச் சந்திக்காமல் வருவது இதுதான் முதல் முறை. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் போனபோதுகூட, மோடியைச் சந்தித்து அரை மணி நேரம் பேசிவிட்டு வந்தார். இம்முறை பட்ஜெட் ஆலோசனைக் கூட்டத்தில் பன்னீர் வாசித்த உரையும், மத்திய அரசின்மீதான விமர்சனம் போலவே இருந்தது. நிறைய திட்டங்களுக்கு மத்திய அரசின் நிதி குறைந்ததையும், சில திட்டங்களுக்கு நிதியைப் பாக்கி வைத்திருப்பதையும் குறிப்பிட்ட பன்னீர், ‘எல்லாவற்றையும் சரிசெய்ய வேண்டும்’ என்றார். அதை உன்னிப்பாகக் கவனித்த நிருபர்கள், கூட்டம் முடிந்தபிறகு ‘மத்திய அரருடன் உங்களுக்குப் பிரச்னையா?’ எனக் கேள்வி கேட்டனர். பன்னீர் திகைத்துவிட்டார். ‘தமிழக அரசுக்கும் சரி, தனிப்பட்ட எனக்கும் சரி, பிரதமருடனும் மத்திய அரசுடனும் எந்தப் பிரச்னையும் இல்லை’ என்று சமாளித்தார். அதனால், பன்னீரின் நிலையும் குழப்பமாகவே இருக்கிறது.’’

p44_1516364489.jpg

‘‘தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறேன் என்று சொன்ன தினகரன், திடீரென்று பல்டி அடித்தாரே?’’

‘‘ஆம். அது தினகரனுக்குப் பெரிய பிரச்னையை உண்டாக்கிவிட்டது. அவருடன் வந்ததால் எம்.எல்.ஏ பதவியைப் பறிகொடுத்த 18 பேரே அதை ஆதரிக்கவில்லை. ‘தனியாகக் கட்சி ஆரம்பித்தால், நாம் என்றைக்கும் இரட்டை இலையையோ, அல்லது அ.தி.மு.க-வையோ கைப்பற்ற முடியாது. நீங்கள் தனியாகக் கட்சி ஆரம்பித்து, அப்போது நாங்கள் உங்களை ஆதரித்தால், அது வேறுவிதமாகப் போய்விடும். தகுதிநீக்கத்தை எதிர்த்து நாங்கள் போட்டிருக்கும் வழக்கு மேலும் சிக்கலாகிவிடும். அதன்பிறகு, எதையும் எங்களால் எதிர்த்துச் செய்ய முடியாது’ என்று கறார் காட்டிவிட்டனர். அதனால்தான், தினகரன் அந்த முடிவைக் கைவிட்டார். ‘அ.தி.மு.க அம்மா அணி என்ற பெயரிலேயே செயல்பட அனுமதிக்க வேண்டும்’ என நீதிமன்றத்தில் வழக்குப்போட இருக்கிறார்.’’

‘‘ஜெயலலிதா மரணம் பற்றிப் பேசிய திவாகரனும் பல்டி அடித்துள்ளாரே?’’

‘‘ஜெயலலிதா டிசம்பர் 4-ம் தேதியே இறந்துவிட்டதாக அவர் பேசியது இன்னும் குழப்பங்களை ஏற்படுத்தியது. அதையடுத்து, தினகரன் தரப்பிலிருந்து திவாகரனிடம் பேசியவர்கள், ‘நாம் வீடியோ வெளியிட்டதுடன், அந்தப் பிரச்னை ஓய்ந்துவிட்டது. இப்போது புதிதாக எதையாவது பேசி அதை மீண்டும் கிளற வேண்டாம்’ என்று சொன்னார்களாம். அதையடுத்துத் தான் திவாகரன் அதற்கு விளக்கம் கொடுத்து சமாளித்தார்’’ என்ற கழுகார் பறந்தார்.

அட்டைப்படம்: சொ.பாலசுப்ரமணியன்
 படம்: வி.ஸ்ரீனிவாசுலு


p44a_1516364467.jpg

சென்னை கிரீன்வேஸ் ரோட்டில் முதல்வர் வீடு இருக்கிறது. அதே ஏரியாவில் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் வீடுகளும் இருக்கின்றன. முதல்வர் வீடு இருப்பதால், பல நேரங்களில் மீடியாக்காரர்கள் திரண்டு நிற்பார்கள். ஒளிபரப்பு வேன்கள் அங்கே வட்டமிடும். ‘இந்தக் களேபரத்தால் நீதிபதிகளின் நிம்மதி பாதிக்கப்படும். எரிச்சல் அடைவார்கள்’ என்று சிலர் முதல்வரிடம் போட்டுக்கொடுக்க, மெயின் ரோட்டில் போலீஸ் செக்போஸ்ட் வைத்து மீடியாக் காரர்களை மட்டும் உள் ரோட்டுக்கு வர அனுமதிப்ப தில்லை. இயல் இசை நாடக மன்றம், லஞ்ச ஒழிப்புத்துறை தலைமை அலுவலகம்... எல்லாமே அந்த உள் ரோட்டில்தான் இருக்கின்றன. அங்கே போகவும் மீடியாக்களை போலீஸ் விடுவதில்லை.  

‘‘அவர் வந்தால் அவருக்குத் தலைமைப் பதவி தருவேன்’’ என்று தினகரன் வீசிய வலையில் இதுவரை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் சிக்கவில்லை. வலைவீச்சுக்குப் பயந்தோ, என்னவோ... லண்டனுக்குப் பயணமாகிறார் செங்கோட்டையன். துறைரீதியான ஏதோ செமினார் என்கிறார்கள். அடுத்த சில நாள்களுக்கு செங்கோட்டையன் சென்னையில் இல்லை. தினகரனுக்கு லண்டனில் நட்பு வட்டாரம் அதிகமாம். புலியிடம் தப்பி, முதலையிடம் மாட்டிக்கொண்ட கதையாகிவிடுமோ! 

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் தினகரனின் சின்னம் குக்கர். ‘அவரின் படமும், சசிகலா படமும் ஒட்டப்பட்ட குக்கரை மொத்தமாக வாங்கி, ரகசியமாக வாக்காளர்களுக்கு விநியோகித்தார்’ என்பது எதிர்க்கட்சியினரின் குற்றச்சாட்டு. கொடுக்காமல் மீந்துவிட்ட குக்கர்கள் என்ன ஆகின தெரியுமா? திருச்சி மாவட்டம் மாவட்டம் சூரியூரில் நடந்த ஜல்லிக்கட்டுப்போட்டியில் ஜெயித்தவர்களுக்குப் பரிசு தரும் வகையில், குக்கர்களை மலைபோல் குவித்து வைத்திருந்தார்களாம். இதைக் கவனித்துவிட்ட திருச்சி அ.தி.மு.க எம்.பி குமார், அந்த குக்கர்களின் பின்னணியை விசாரித்து தேர்தல் கமிஷனுக்குப் புகார் அனுப்பியிருக்கிறாராம்.

https://www.vikatan.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.