Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரஜினிக்காக ரெடியாகிறது தொகுதி!

Featured Replies

ரஜினிக்காக ரெடியாகிறது தொகுதி!

 
 

 

‘‘நான் 25 ஆண்டுகள்தான் கர்நாடகாவில் வளர்ந்தேன். ஆனால், தமிழ்நாட்டில் 37 வருடங்களுக்கும் மேலாக இருக்கிறேன். என்னை நீங்க பச்சைத் தமிழனா ஆக்கிட்டீங்க. வார்த்தைக்கு வார்த்தை என்னை ‘கன்னடர்’ என்று பேசி, சிலர் தமிழ்நாட்டிலிருந்து பிரித்துவைக்க ஆசைப்படுகிறாங்க. ஆனால், என் பூர்வீகம் தமிழ்நாடுதான். என் மூதாதையர், பெற்றோர் எல்லாம் கிருஷ்ணகிரி மாவட்டம் நாச்சிக்குப்பத்தில் பிறந்தவர்கள். இன்றைக்கும் சிலர் அங்கு இருக்கிறார் கள். பிழைப்புத்தேடி பெங்களூரு போனதுதான் எங்கள் குடும்பம்’’ என்று முன்பு ஒருமுறை ரசிகர்கள் மத்தியில் உணர்ச்சிகரமாகச் சொன்னார் ரஜினிகாந்த்.

அரசியலுக்கு வரப்போவதாக ரஜினிகாந்த் அறிவிப்பை வெளியிட்டதும், நாச்சிக்குப்பம் கிராமத்தை உற்சாகம் பற்றிக்கொண்டது. ரஜினியின் அரசியல் பிரவேசத்தை வரவேற்கும் இந்தக் கிராமத்தினர், ‘‘எங்கள் கிராமம் இருக்கும் வேப்பனப்பள்ளி தொகுதிதான், ரஜினிக்கு சொந்தத் தொகுதி. இந்தத் தொகுதியில்தான் அவர் போட்டியிட வேண்டும்’’ என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

p12b_1516366424.jpg

ரஜினியின் குடும்பத்துக்குப் பூர்வீகம், மகாராஷ்ட்ர மாநிலம் புனே அருகேயுள்ள மாவடி கடேபதார் என்ற கிராமம். அந்தக் கிராமமே இப்போதும் ரஜினியைக் கொண்டாடினாலும், இதுவரை அந்த ஊருக்கு ரஜினி போனதில்லை. ரஜினியின் தாத்தா காலத்திலேயே அவர்களின் குடும்பம் அங்கிருந்து கர்நாடகாவுக்கு வந்து, பிறகு நாச்சிக்குப்பத்தில் குடியேறியது. ரஜினியின் தந்தை ரானோஜிராவ் நாச்சிகுப்பத்தில் பிறந்தவர். பிழைப்புக்காக கர்நாடக மாநிலத்துக்குச் சென்று சோமன ஹள்ளியில் குடியேறினார். அவர், ராம்நகர் மாவட்டம், கனகபுரா தாலுகாவில் உள்ள நேரலட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்த ராம்பாயைத் திருமணம் செய்தார். பிறகு, பெங்களூருவின் ஹனுமந்த நகரில் ரஜினியின் தந்தை குடும்பம் செட்டிலானது.

நேரலட்டியில் இப்போதும் ரஜினியின் உறவினர்கள் பலர் வசித்து வருகிறார்கள். அந்தக் கிராமத்துக்குச் சென்றோம். அங்கு, விட்டல் ராவ் என்ற 80 வயதைக் கடந்த பெரியவரைச் சந்தித்தோம். “ஆமாங்க, ரஜினி எங்கள் உறவினர்தான்” என்று கன்னடமும், தமிழும் கலந்து பேச ஆரம்பித்தார். ‘‘இந்தக் கிராமத்தில் பிறந்த ரானோபாய், துளசிபாய், எக்கம்மாபாய், லட்சுமிபாய், ரானோஜி ராவ் ஆகிய ஐந்து பேரும் ஒரு தாய் பிள்ளைகள். நான், ரானோஜிராவின் மகன். எனக்கு நான்கு அத்தைகள். ரானோபாய் அத்தையின் மகள் ராம்பாய் என்பவரை, சோமனஹள்ளியில் ரானோஜிராவ் என்பவருக்குத் திருமணம் செய்து கொடுத்தோம். அந்தத் தம்பதிக்கு நான்காவதாகப் பிறந்தவர்தான் ரஜினி. கடைசி அத்தை (ரஜினிக்கு பாட்டி முறை) லட்சுமிபாயை நாச்சிக்குப்பத்தில் விஸ்வநாத் ராவ் என்பவருக்குத் திருமணம் செய்துகொடுத்தோம். அவருக்கு துக்காராம் ராவ் என்ற மகன் உள்ளார். இது மட்டுமே எனக்குத் தெரிந்த தகவல்’’ என்றார் விட்டல் ராவ்.

p12_1516366507.jpg

நேரலட்டி கிராமத்தில் யசோதாபாய் என்பவரைத் தேடிச்சென்று பேசினோம். ரஜினியின் தந்தைக்குச் சகோதரி மகள் இவர். ‘‘ரஜினி எனக்குத் தாய்மாமன் மகன். 2008 வரை என் அம்மா ரானோபாய்க்கு மாதம்தோறும் 5,000 ரூபாய் கொடுத்து ரஜினி உதவிவந்தார். அம்மா இறந்த பிறகு பணம் வருவது நின்றுவிட்டது. ரஜினியின் மகள் திருமணத்துக்கு நான் போயிருந்தேன்.அவர்களே என்னை அழைத்துச்சென்று, திருமணம் முடிந்ததும் பத்திரமாக அனுப்பி வைத்தனர். ரஜினி, எங்களுக்கு நிறைய உதவிகள் செய்துள்ளார்.  நேரலட்டியில் கிணறு வெட்டிக் கொடுத்துள்ளார்” என்றார் யசோதாபாய். அந்தத் தகவலை மற்றொரு உறவினரான என்.எஸ் மாதேவ்ராவும் உறுதிப்படுத்தினார்.

நாச்சிக்குப்பத்தில், லட்சுமிபாய் - விஸ்வநாத் ராவ் குடும்பத்தினரைத் தேடினோம். அவர்களின் பேரன் நாராயணராவ் இருந்தார். “ரஜினி, எங்கள் பாட்டி வழி உறவினர் என அப்பாவும், அம்மாவும் சொல்வார்கள். பெங்களூரில் ரஜினி குடும்பத்தின் விசேஷங்களுக்கெல்லாம் அப்பா போயிட்டு வருவார். அடிக்கடி சென்னைக்குப் போய் ரஜினியை அப்பா பார்த்துவிட்டு வருவார். இதோ பாருங்கள், அப்பாவும் ரஜினியும் எடுத்துக்கொண்ட போட்டோ...” என்று ஒரு புகைப்படத்தை நம்மிடம் காண்பித்தார்.

p12a_1516366527.jpg

நாரயணராவின் தாயார் சரஸ்வதியிடம் பேசினோம். “பெங்களூரு சென்றபோது, ரஜினியை நான் பார்த்துள்ளேன். ரஜினி சிறு குழந்தையாக இருந்தபோது, அவரை அவருடைய அப்பா இங்கு அழைத்து வந்துள்ளார். எங்கள் மாமனாரும், மாமியார் லட்சுமிபாயும் இருந்தவரை எங்களுக்குள் தொடர்பு இருந்தது. அதன் பிறகு, என் கணவர் மட்டும் சென்னைக்குப் போய் ரஜினியைப் பார்த்துவிட்டு வருவார்” என்றார் சரஸ்வதி. 

சென்னை வந்து புகழின் உச்சிக்குச் சென்றபிறகு ஒருமுறைகூட நாச்சிக்குப்பத்துக்கு ரஜினி வந்ததில்லை. இடையில் இரண்டு முறை அவர் இங்கு வருவதாகச் சொல்லி, ரசிகர் மன்றம் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனால், இரண்டு முறையுமே, ‘வெளியூரில் படப்பிடிப்பில் இருக்கிறார்’ என்று கூறி, நிகழ்ச்சி ரத்துசெய்யப்பட்டன.

p12c_1516366408.jpg

2009-ம் ஆண்டு இந்தக் கிராமத்தில், ஸ்ரீராகவேந்திரா பொதுநல அறக்கட்டளை மூலம் ஒன்றரை ஏக்கர் நிலம் வாங்கியுள்ளார் ரஜினி. ‘‘இங்கு தன் பெற்றோருக்கு நினைவு இல்லம் அமைத்து, ஆதரவற்றவர் களுக்கான இல்லம், திருமண மண்டபம், நூலகம் போன்றவற்றை அமைக்க ரஜினி திட்டமிட்டுள்ளார்’’ என்கிறார்கள். இப்போதைக்கு இங்கு ‘ரானோஜிராவ் ராம்பாய் நினைவகம்’ என்ற போர்டு மட்டும் வைத்து, வேலி போடப்பட்டுள்ளது. இந்த வளாகத்தில் தண்ணீர்த் தொட்டி அமைத்து, மக்கள் தண்ணீர் எடுக்கவும், ஆடு மாடுகள் தண்ணீர் குடிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரஜினியின் அண்ணன் சத்யநாராயண ராவ் இங்கு அடிக்கடி வந்து செல்வாராம்.

p12d_1516366479.jpg

கிருஷ்ணகிரி மாவட்ட ரஜினி ரசிகர் மன்றப் பொறுப்பாளர்கள் மதியழகன் மற்றும் கே.ஆர்.சீனிவாசன் ஆகியோரைச் சந்தித்தோம். “ரஜினியின் தாத்தா, பாட்டி உள்ளிட்ட முன்னோர்கள் நாச்சிக்குப்பத்தில்தான் வாழ்ந்தார்கள். இந்தக் கிராமத்தின் நினைவுகள் பற்றி ரஜினியே எங்களிடம் கூறியுள்ளார். வரும் சட்டமன்றத் தேர்தலில் எங்கள் தொகுதியில்தான் ரஜினி போட்டியிட வேண்டும். இதை அவரிடம் கோரிக்கையாக வைப்போம்’’ என்றனர்.

- எம்.வடிவேல்
படங்கள்: கே.மணிவண்ணன்


மூன்று மொழி தொகுதி!

2011
தேர்தலின்போது, கிருஷ்ணகிரி மற்றும் ஓசூர் தொகுதிகளிலிருந்து சில பகுதிகளைப் பிரித்து புதிதாக உருவாக்கப்பட்டது வேப்பனப்பள்ளி தொகுதி. தேன்கனிக்கோட்டையிலிருந்து சூளகிரி வரை சுமார் 60 கிலோமீட்டர் தூரத்துக்கு நீளும் இந்தத் தொகுதி, பரப்பளவில் மிகப்பெரியது. நகராட்சி, பேரூராட்சி என எதுவும் இல்லாமல் முழுக்க முழுக்க கிராமங்கள் நிறைந்தது. ஓசூர், தேன்கனிக்கோட்டை மற்றும் கிருஷ்ணகிரி வட்டங்களில் உள்ள 73 ஊராட்சிகளை ஒரு சுற்று வருவது என்பதே மலைப்பான விஷயம். ஆந்திரா மற்றும் கர்நாடக எல்லையில் உள்ளதால் தெலுங்கு மற்றும் கன்னடம் பேசும் மக்கள் நிறைய உள்ளனர். இஸ்லாமியர்களும் கணிசமாக உண்டு. கடந்த இரண்டு தேர்தல்களாக இங்கே தி.மு.க-வே ஜெயித்துள்ளது.

https://www.vikatan.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.