Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊவா மாகாண முதலமைச்சர் பதவி விலகினார்

Featured Replies

ஊவா மாகாண முதலமைச்சர் பதவி விலகினார்

 

 

பதுளை தமிழ் பெண் அதிபரின் குற்றச்சாட்டு மற்றும் அது தொடர்பான அழுத்தங்களையடுத்து, தாம் உடனடியாகப் பதவி விலகுவதாக ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் அறிவித்துள்ளார்.

13_Chamara.JPG

தன் மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்த விசாரணைகள் நிறைவு பெறும் வரை தாம் அந்தப் பதவியை மீண்டும் பொறுப்பேற்கப் போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

http://www.virakesari.lk/article/29710

பதவி துறந்தார் ஊவா மாகாண முதலமைச்சர்
 

image_fb4f0ec54b.jpgஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தனது கல்வி அமைச்சர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.

பாடசாலை அதிபர் ஒருவரை முழந்தாழிட வைத்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகள் நிறைவடையும் வரை தான் கல்வி அமைச்சர் பதவியை இராஜினாமா செய்யப் போவதாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பான உத்தியோகப்பூர்வ கடிதத்தை ஜனாதிபதி மற்றும் ஆளுநருக்கு விரைவில் அனுப்பவுள்ளதாகவும் ஊவா மாகாண முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/பதவி-துறந்தார்-ஊவா-மாகாண-முதலமைச்சர்/175-210544

  • தொடங்கியவர்

பதுளை அதிபரை மண்டியிட வைத்த விவகாரம் : கல்வி அமைச்சுப் பதவியை துறந்தார் ஊவா முதலமைச்சர்

1-2ced62c87fbab8533ca156d9b90451002b5c81bc.jpg

 

விஷேட பொலிஸ் விசாரணைகள் ஆரம்பம்; பொய்யான வாக்குமூலத்தை வழங்க அச்சுறுத்தியமை குறித்தும் அவதானம்
(எம்.எப்.எம்.பஸீர்,பதுளை,பண்டாரவளை நிருபர்கள்)

பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலய அதிபரை, மாகாண முதலமைச்சர் மண்டியிட வைத்தமை,மன்னிப்பு கோரச்செய்தமை, தொடர்பில் பொய்யான வாக்குமூலத்தை வழங்க அச்சுறுத்தியமை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விசேட விசாரணை ஒன்று ஆரம் பிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று கல்வி அமைச்சுப் பதவியில் இருந்து தான் இராஜினாமா செய்வதாக ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க அறிவித்தார். 

ஊவா முதலமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்கவிடம் இருந்த ஊவா கல்வி அமைச் சினை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொன்டுவருமாறு ஊவா மாகாண ஆளுநருக்கு ஜனாதிபதி மைதிரிபால சிரிசேன ஆலோசனை வழங்கிய நிலையிலேயே முதலமைச்சர் கல்வி அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்துள்ளார். 

பாதிக்கப்பட்ட குறித்த பெண் அதிபரான பவானி பதுளை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டை மையப்படுத்தி இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, உடன் விசாரணை நடாத்த பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு உத்தரவிட்ட நிலையிலேயே மத்திய மற்றும் ஊவா சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எஸ்.எம். விக்ரமசிங்கவின் மேற்பார்வையில் பதுளை பிரதிப் பொலிஸ் மா அதிபர் டி.ஆர்.ஜி.எம்.பி. எல்லேபொல, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஏ.பி.டி. வீரசேகர ஆகியோரின் ஆலோசனைக்கு அமைவாக பதுளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் இது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

எவ்வாறாயினும் அதிபரை முழந்தாலிடச் செய்த விவகாரம் தொடர்பிலான சம்பவம் பொலிஸ் மற்றும் அரசியல் பலத்தை வைத்து மூடி மறைக்கப்படுவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், அமைச்சுப் பதவியில் இருந்து இராஜினாமா செய்ததன் ஊடாக மட்டும் குற்றவியல் சம்பவத்துக்கான பொறுப்புக் கூறலில் இருந்து முதலைமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க தப்பித்துவிட முடியாது எனவும் மனித உரிமைகளுக்கான கேந்திர மையத்தின் நிறைவேற்று பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் தெரிவித்தார்.

முழந்தாளிட்ட சம்பவத்தின் பின்னர் அப்படியொன்றும் நடக்கவே இல்லை என ஊடகங்களிடம் கருத்துக் கூற அச்சுறுத்தியதாக கூறப்படும் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவரின் மனைவியான மாகாண கல்வி அமைச்சின் செயலர் சந்தியா அம்பன்வல உள்ளிட்டோருக்கு எதிராகவும் குற்றவியல் விசாரணை அவசியம் எனவும் அவர்களும் முதலமைச்சருடன் சேர்த்து கைது செய்யப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

இவற்றை விட இவ்விவகாரம் தொடர்பில் நாளை 23ஆம் திகதி பாராளுமன்றக் கட்டிடத்தொகுதியில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக, பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் தெரிவித்தார்.

அத்துடன் இவ் விவகாரம் குறித்து, ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவை விசாரணைக்குற்படுத்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி விரைவில் நடவடிக்கைகளை மேற்கொள்ளவிருப்பதாகவும், அமைச்சர் சுசில் பிரேம ஜயந்தவும் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் அதிபரை முழந்தாழிடச் செய்த நடவடிக்கையினை முற்றாக மறுத்துவரும் முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க, தனது பெயருக்கு களங்கத்தினை ஏற்படுத்தியவர்களுக்கெதிராக 500 மில்லியன் ரூபா நட்ட ஈடு கோரி வழக்கு தாக்கல் செய்யப் போவதாகவும், அது குறித்து சட்டத்தரணிகளுடன் ஆலோசித்து வருவதாகவும் தெரிவித்தார்.

கடந்த ஜனவரி மூன்றாம் திகதி முதலாம் தரத்துக்கான அனுமதி தொடர்பில் முதலமைச்சரின் கோரிக்கையை அதிபர் நிராகரித்த சம்பவத்தை மையப்படுத்தி, அதிபரை முதலமைச்சரின் வாசஸ்தலதிற்கு வரவழைத்து நிந்தித்தமை, அதிபரை மண்டியிட்டு மன்னிப்பு கோர அழுத்தம் பிரயோகித்தமை தொடர்பில் ஊடகங்கள் ஊடாக வெளிக்கொணரப்பட்டதையடுத்து இது தொடர்பில் சர்ச்சை வெடித்தது.

எனினும் இந்த சர்ச்சைகளிடையே அதிபர் ஆர். பவானியின் வாககு மூலம் ஒன்றும் ஊடகங்களில் வெளிப்படுத்தப்பட்டன. அதில் முழந்தாழிடச் செய்த சம்பவம் ஒன்று நடக்கவே இல்லை எனவும், முதலமைச்சரும் ஏனைய அதிகாரிகளும் பாடசாலையின் ஒவ்வொரு விடயத்திலும் அக்கறையுடன் செயற்படுவதாகவும், இது அரசியல் பருவ காலம் என்பதால் இவ்வாறு ஒரு கதை சொல்லப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

 எனினும் கடந்த வெள்ளியன்று அந்த வாக்கு மூலமானது அச்சுறுத்திப் பெறப்பட்டது என்பதை அதிபர் ஆர். பவானி வெளிப்படுத்தினார். 'நான் அச்சுறுத்தப்பட்டதினால், ஊடகங்களுக்கு நடந்த சம்பவத்தை முற்றாக மாற்றி, அப்படியொன்றும் நடக்கவில்லையென்று தெரிவித்தேன். அன்று நடந்த சம்பவம் எனது மனநிலையினை வெகுவாகப் பாதித்துவிட்டது. எனக்கும், எனது பாடசாலைக்கும் களங்கம் ஏற்பட்டதை எண்ணி மன்திற்குள்ளேயே குமுறிக்கொண்டிருக்கின்றேன். என்னை கபபாற்ற வேண்டியவர்கள் கைவிட்டனர். அவர்கள் எழுதித் தந்ததையும் சொல்லித் தந்ததையுமே அன்று நான் ஊடகங்களுக்கு கூறினேன். அது என நிர்ப்பந்தம்.எனது நிலை குறித்து மக்கள் பிரதிநிதிகள் எவருமே, எனக்கு ஆறுதல் கூற முன் வரவில்லை. எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால், மாகாண முதலமைச்சர், மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் , மாகாண கல்விப் பணிப்பாளர் ஆகியோரே பொறுப்பேற்க வேண்டும் என அழுதவாறே அவர் தெரிவித்தார். அமைச்சர் வடிவேல் சுரேஷ் முன்னிலையிலேயே அவர் இதனை ஊடகங்களிடம் தெரிவித்த நிலையில்,அங்கிருந்த மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சந்தியா அம்பன்வெல, வித்தியாலய அதிபர் ஆர்.பவானி பொய்யுரைப்பதாக சப்தமிட்டார்.

 இந் நிலையில் இந்த விடயம் ஜனாதிபதி, பிரதமரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், பிரதமரின் பணிப்பின் பேரில் வித்தியாலய அதிபர், மாகாண முதலமைச்சர், மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், மாகாண கல்விப்பணிப்பாளர் உள்ளிட்டவர்கள் நாளை 23ந்திகதி பாராளுமன்ற கட்டிடத்தொகுதிக்கு சமூகம் தருமாறு பணிக்கப்பட்டுள்ளனர். கல்வி மற்றும் உயர் கல்வி அமைச்சுக்களி்ன் பாராளுமன்றக்குழுக்களின் தலைவராக பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் இருந்து வருவதினால், அவர் தலைமையில், பிரதமரின் முன்னிலையில் வித்தியாலய அதிபருக்கும், மாகாண முதலமைச்சருக்குமான விவகாரம் விசாரனை செய்யப்படவுள்ளதாக அறிய முடிகின்றது.

 பதுளை தமிழ் மகளீர் மகா வித்தியாலயத்தில் மாணவி ஒருவரை அனுமதிக்க மாகாண முதலமைச்சரான கல்வி அமைச்சரை பெற்றோர் நாடியுள்ளார்.

அதையடுத்து, முதலமைச்சரின் பிரத்தியேகச் செயலாளரின் கடிதத்துடன், அப் பெற்றோர் மேற்படி வித்தியாலயத்திற்கு சென்று, அதிபரிடம் கடிதத்தைக் கொடுத்து, தமது பிள்ளையை அனுமதிக்குமாறு கேட்டுள்ளார். குறிப்பிட்ட வகுப்பிற்கு போதியளவு பிள்ளைகளை அனுமதித்திருப்பதால், புதிதாக அனுமதிப்பதற்கு இயலாமலிருப்பதாகவும், அனுமதிக்கப்பட்ட பிள்ளைகளில் எவராவது வராதிருந்தால், புதிய பிள்ளையை அனுமதிப்பதாகவும் அதிபர் கூறியுள்ளார்.

அதிபரின் இவ் விளக்கம் முதலமைச்சருக்கு திரித்துக் கூறப்பட்டதினால், அதிபரை முதலமைச்சரின் வாசஸ்தலத்திற்கு வரவழைத்து, நிந்தித்தமை மற்றும் மண்டியிட்டு மன்னிப்பு கேட்க வைத்தமை போன்ற சம்பவங்கள் இடம்பெற்றதாக அறிய முடிகின்றது.

எவ்வாறாயினும் இது தொடர்பில் நேற்று அதிபர் பவானியை, முதலமைச்சர் சாமர சம்பத்தின் இல்லத்துக்கு அழைத்துச் சென்ற பொலிஸார் அங்கு வைத்து ஸ்தல விசாரணைகளை அவர் அடையாளம் காட்டியதன் பிரகாரம் நடாத்தினர். பின்னர் அதிபரை சட்ட வைத்திய அதிகாரி ஒருவர் முன்னிலையில் முற்படுத்தினர்.

 சட்டவைத்திய அதிகாரிக்கு வழங்கப்படும் கேள்விக் கொத்தில் மன நிலை தொடர்பிலான கேள்வி இருந்ததால், அதிபரை மன நிலை குறித்து சந்தேகம் எழுப்பி விசாரணைகளை திசை திருப்ப எண்ணுவதாக கூறி பொலிஸ் நிலையத்திலும் வைத்தியசாலையிலும் பதற்றம் ஏற்பட்டது.

 இது தொடர்பில் பதுளை பொலிஸ் நிலைய பொருப்பதிகாரியை தொடர்புகொண்ட கேட்டபோது, தனக்கு அளிக்கப்பட்டுள்ள முறைப்பாட்டின் பிரகாரம் சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் அதிபரை ஆஜர் செய்து அறிக்கைப் பெற வேண்டியது அவசியம் எனவும், அது தொடர்பில் அதிபரை தெளிவுபடுத்தி அவர் சம்மதத்துடன் அவரி ஆஜர்ச் செய்து அறிக்கை பெற்றதாக அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் சட்டத்தரணி ருவன் குணசேகர, நேற்று ஸ்தல விசாரணையும் சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையையும் பெற நடவடிக்கைஎடுத்ததாக குறிப்பிட்டார், குறிப்பாக இவ்வாறான சம்பவங்கள் ஏர்படும் போது, உடல் ரீதியிலான காயங்கள் இல்லாத நிலையில், பாதிக்கப்பட்ட மன நிலை தொடர்பில் உறுதி செய்ய இவ்வாறான சட்ட வைத்திய சோதனை அவசியம் எனவும், மாற்றமாக விசாரணைகளை திசை திருப்புவதற்காக இதனை செய்யவில்லை எனவும் அவர் தெரிவித்தார். முதலமைச்சரின் செயலால் தான் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளானதாக முறைப்பாட்டாளர் கூறும் நிலையில், அது தொடர்பிலான தீர்மானத்துக்கே இந்த சோதனை செய்யப்பட்டதாகவும், மாற்றமாக அதிபரை மன ரீதியாக பாதிக்கப்பட்டவர் என காட்டும் எந்த நோக்கங்களும் இல்லை என அவர் தெரிவித்தார்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-01-22#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.