Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகிந்த அரசின் எதிர்காலமும் சிங்கள இராணுவமும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

-புரட்சி (தாயகம்)-

காலத்திற்கு காலம் சிறிலங்கா அரசின் தலைவர்களும் அவர்களின் இராணுவத் தளபதிகளும் புலிகளைப் போரில் வென்று வருவதாகவும் விரைவில் அவர்களை முழுமையாகத் தோற்கடிக்கப்போவதாகவும் தெரிவித்துவருவது வழக்கமாகும்.

பௌத்த பேரினவாதிகள் மற்றும் இனவாத கடும்போக்காளர்கள் இவ்வாறான கருத்துக்களுக்கு ஆதரவு தெரிவித்து தமிழ் மக்களுக்கு எதிராக ஊர்வலம் நடத்துவதும் தென்னிலங்கை சிங்கள, ஆங்கில ஊடகங்கள் இவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து செய்திகளை முதற்பக்கத்தில் வெளியிடுவதும் நாம் எல்லோரும் அறிந்ததே.

எவ்வாறெனினும் சிங்கள அரச தலைவர்கள் மற்றும் சிங்கள பேரினவாதிகள் எதிர்பார்;க்கும் பாரிய இராணுவ வெற்றிகள் எதனையும் துட்டகைமுனுவின் மைந்தர்கள் இதுவரை பெற்றுக்கொடுக்கத் தவறிவிட்டார்கள். இது சிங்கள பேரினவாதிகளுக்கு மிகுந்த ஏமாற்றத்தையும் சலிப்பையும் அளிக்கும் விடயமாகவே கடந்த இரண்டு தசாப்த காலங்களுக்கு மேலாக இருந்துவருகின்ற அதேவேளை ஏமாற்றத்தையும் விரக்தியையும்தான் இவர்களுக்குத் தொடர்ந்து கைமுனுவின் மைந்தர்கள் பரிசாக அளிக்கப்போகின்றார்கள் என்பதுதான் இங்கு செய்தியாக இருக்கின்றது.

இற்றைக்கு 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ~போரியற்கலை| என்ற கோட்பாட்டை உலகிற்கு வழங்கிய சீன இராணுவ மேதையான சன் சூ அவர்களின் கருத்துக்களின் படியும், 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த படைத்துறை மூலோபாய வல்லுனர்களான கார்ல் வொன் குளோஸ்விச் மற்றும் அன்ரோனி கென்றி யோமினி ஆகியோர்களின் கோட்பாடுகளின்படியும் ஒரு போரில் வெற்றி பெறுவது என்பது பின்வருமாறு குறிப்பிடப்படுகின்றது. (இந்த இரண்டு இராணுவ மேதைகளும் மாவீரன் நெப்போலியன் காலத்தில் வாழந்தவர்கள். இவர்களின் கோட்பாடு தொடர்பாகவும் சீன இராணுவ மேதை சன் சூவின் போரியல் கலை மற்றும் ஏனைய போரியல் கோட்பாடுகள் தொடர்பாகவும் பின்னைய அத்தியாயங்களில் விரிவாக ஆராய்வோம்.)

~ஒரு போரின் அடிப்படை நோக்கமே எதிரியின் இராணுவ வளங்களையும் அவனது போரிடும் ஆற்றலையும் அழிப்பதாகும். போரின் வெற்றி என்பது இதனடிப்படையிலேயே தீர்மானிக்கப்படுகின்றது|.

இராணுவ வளங்கள் என்று நாம் இங்கு குறிப்பிடுவது படையணிகள், வழங்கல் விநியோகங்கள், கவசப்படை, ஆட்டிலறிகள், பீரங்கிகள், மருத்துவ உதவிகள், கடற்படை, வான்பலம், கட்டளைப்பீடம், புலனாய்வு (அணு ஆயுதங்கள், விண்வெளி ஆதிக்கம்) போன்றனவற்றையாகும்.

இதனடிப்படையில் சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட பாரிய இராணுவ நடவடிக்கைகள் சிலவற்றை நாம் இங்கு கவனிப்போம்.

சிறிலங்கா படைகளினால் மூன்று கட்டங்களாக 1995-96 ஆண்டுகாலப்பகுதியில் யாழ். குடாநாட்டைக் கைப்பற்றுவதற்காக சூரியக்கதிர் 1,2,3 நடவடிக்கைகள் பெரும் எடுப்பில் சந்திரிகா அம்மையாரின் ஆட்சிக்காலத்தில் மேற்கொள்ளப்பட்டன. யாழ். குடாநாட்டினைக் கைப்பற்றி புலிகளின் முதுகெலும்பை முறித்துவிட்டாயிற்று என்று சிங்கள பேரினவாதிகளும் தென்னிலங்கை ஊடகங்களும் வெற்றி முழக்கங்களை எழுப்பினார்கள். ஜெனரல் அனுருத்த ரத்வத்த சப்புமல் குமரய்யாவின் நவீன அவதாரமாக மாறி தனது மருமகளாகிய சந்திரிகா அம்மையாரிடம் வெற்றிச்செய்தி ஓலையை கையளித்ததை சிங்கள அரச தொலைக்காட்சி ஒளிபரப்பியது.

இதற்கு சரியாக மூன்று மாதங்களின் பின்னர் விடுதலைப் புலிகள் முல்லைத்தீவு இராணுவ படைத்தளம் மீது தரை மற்றும் கடல் மார்க்கமாக பாரிய தாக்குதலை தொடுத்து முல்லைத்தீவு முழு நகரையும் மீளக் கைப்பற்றினார்கள். இத்தாக்குதலில் சிறிலங்கா முப்படைகளையும் சேர்ந்த 1,600க்கும் அதிகமான சிங்களப் படையினர் கொல்லப்பட்டார்கள்.

இதேபோன்று 13 ஆம் திகதி மே மாதம் 1997 ஆம் ஆண்டிலிருந்து 4ஆம் திகதி டிசம்பர் மாதம் 1998 ஆம் ஆண்டு வரை நீடித்த யாழ். குடாநாட்டிற்கான தரைவழிப்பாதையை திறப்பதற்காக வவுனியாவில் இருந்து மேற்கொள்ளப்பட்ட ஜெயசிக்குறு நடவடிக்கை படுதோல்வியில் முடிவடைந்ததோடு விடுதலைப் புலிகள் ஓயாத அலைகள் மூன்று இராணுவ நடவடிக்கை மூலம் ஜெயசிக்குறு நடவடிக்கையில் ஈடுபட்ட படையினரை ஓட ஓட விரட்டி அடித்து இந்நடவடிக்கையின் மூலம் சிங்களப் படையினர் ஆக்கிரமித்த பிரதேசங்கள் முழுவதையும் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தார்கள். அது மாத்திரமல்லாது ஆனையிறவு பெருந்தளத்தையும் கைப்பற்றி யாழ். குடாநாட்டின் வாசல் வரையும் தமது படையணிகளை நகர்த்தினார்கள்.

இதன்பின் சிறிலங்கா இராணுவம் யாழ். குடாநாட்டில் இருந்து ஆனையிறவைக் கைப்பற்றுவதற்காக 2001 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அக்கினி கீல (தீச்சுவாலை) என்ற இராணுவ நடவடிக்கையினை மேற்கொண்டது. இந்த இராணுவ வலிந்த தாக்குதலை எதிர்த்து விடுதலைப் புலிகள் மூர்;க்கத்தனமான எதிர்தாக்குதலைத் தொடுத்து படையினருக்கு பாரிய இழப்புக்களை ஏற்படுத்தியதோடு சிறிலங்கா இராணுவத்தின் சண்டையிடும் படையணிகள் நீண்ட காலத்திற்கு தாக்குதல் நடவடிக்கைகள் எதிலுமே ஈடுபடமுடியாதளவிற்கு சிதைக்கப்பட்டன.

விடுதலைப் புலிகள் கடந்த மூன்று தசாப்த காலப்பகுதியில் போரியல் தொடர்பாக அவர்கள் பெற்ற அனுபவங்களும் இராணுவ வெற்றிகளும் அவர்களை ஒரு சிறந்த மரபு வழிப்படையாக மாற்றியது. அத்துடன் அவர்களின் மரபு வழி படை வலுவானது சிறிலங்கா அரச படைகளுக்கு நிகராக விளங்கியமையினால் ஒரு படைவலுச் சமநிலை இரண்டு தரப்பினருக்கும் இடையே தோன்றியது.

இவ் வலுச்சமநிலையே போர்நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திட்டமைக்கும் அதன்பின்னாக அமைதி முயற்சிகள் இடம்பெற்றமைக்கும் காரணமாக அமைந்தது. அத்துடன் சிறிலங்கா அரசும் விடுதலைப் புலிகளும் சமதரப்பு என்று சர்வதேச சமூகத்தாலும் அனுசரணையாளர்களினாலும் கணிக்கப்படுவதற்கும் இவ்வலுச்சமநி;லையே பிரதானமான காரணியாகும்.

தற்போது போர் நி;றுத்த உடன்படிக்கை ஐந்து ஆண்டுகளைப் ப+ர்த்தி செய்துள்ள நிலையில், இக்காலப்பகுதியில் வலிந்த தாக்குதல்கள், ஒரு தரப்பி;ன் பிரதேசங்களை மற்றைய தரப்பு ஆக்கிரமித்தல் போன்ற பல்வேறு மீறல்கள் இடம்பெற்றுள்ளன. அத்துடன் தரப்பினர் மாத்திரமல்லாது நோர்வே அனுசரணையாளர்களே போர்நிறுத்த ஒப்பந்தம் கடதாசியில் மாத்திரமே இருக்கின்றது என்று கூறியுள்ள நிலையில் நாம் தற்போது உருவாகியிருக்கின்ற இப்புதிய சூழலில் வலுச்சமநிலை தொடர்பாக விரிவாக ஆராயவேண்டியுள்ளது.

இராணுவ வலுச்சமநிலை எனக் கூறும்பொழுது மூலோபாய ரீதியிலே ஒரு தரப்பின் படையணிகள் மற்றும் அதன் இராணுவ வளங்கள் எவ்வாறு எதிரிகளுக்கு எதிராக நிலைப்படுத்தப்பட்டிருக்கின

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.