Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இடைக்­கால அறிக்கை இடைத்தங்கல் ஆகுமா?

Featured Replies

இடைக்­கால அறிக்கை இடைத்தங்கல் ஆகுமா?

as-1fc22d73512a28545dc10bf6e476bcb64288da93.jpg

 

சர்­வ­தேச ரீதியில் ஐ.நா. வில் இலங்கை போர்க்­குற்­றத்­தையும் ஏற்றுக்கொண்டு பொறுப்புக் கூற­லையும் ஒப்புக்கொண்டு இணை அனு­ச­ர­ணை­யையும் பெற்றுக்கொண்­டி­ருக்­கி­றது. போருக்­கான காரணம் பேரின யாப்பே எனக் கரு­தித்தான் பல்­லின வடிவம் சர்­வ­தே­சத்தால் வலி­யு­றுத்­தப்­ப­டு­கி­றது.

இம்­மாதம் 27 ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 23 ஆம் திக­தி­வரை ஐ.நா. வில் இலங்­கைக்கு மேலும் நெருக்­குதல் காத்­தி­ருக்­கி­றது. இத்­த­கைய இக்­கட்­டான காலகட்­டத்­திலும் கூட சர்­வ­தேசம் ஏற்றுக் கொள்ளும் வடிவம் முன்­வைக்­கப்­ப­டா­விட்டால் அதிக சாதகம் தமிழ் தரப்­புக்கே என சம்­பந்தன் கரு­து­கி­றார்போல் தெரி­கி­றது. தமிழ் ஆயுதப் போரா­ளி­களின் காலத்­திலும் இலா­வ­க­மாகச் சமா­ளித்த சம்­பந்தன் இப்­போது சர்­வ­தே­சத்­தையும் ஐ.நா. வையும் கையா­ளு­கிறார். இந்­நி­லையில் இலங்கை அரசு அவ­ரிடம் பிடி­கொ­டுத்து ஆட்­ட­மி­ழந்­து­வி­டாமல் இருக்க வேண்­டு­மாயின் பேரி­ன­வா­தத்தைத் தவிர்க்க வேண்டும். முன்பு புலி­களின் பிடி இருந்­தது. பின்பு இந்­தி­யாவின் பிடி இருந்­தது. இப்­போது சர்­வ­தேசப் பிடி இருக்­கி­றது.

ஆக அர­சோடு சம்­பந்தன் இடைக்­கால அறிக்கை விட­யத்தில் கலந்து கொண்­டி­ருந்­தது தனித்­துவ இலட்­சி­யத்தைத் தாரை வார்த்துக் கொடுப்­ப­தற்­கா­க­வல்ல என்­பதும் தெரி­கி­றது. இதைத் தவிர மாற்று வழி இல்லை. பேச்­சு­வார்த்தை மட்டுமே வழி என்றால் மாற்றுத் தரப்­பி­ன­ரதும் கருத்­துக்­களை உள்­வாங்­கியே பேச வேண்­டி­யி­ருக்­கி­றது.

இடைக்­கால அறிக்கை இறுதி முடிவு அல்ல. இது யாப்­புக்கு முன்­னா­லான இடைக்­கால அறிக்­கையா? இறுதி அறிக்­கைக்­கான இடைக்­கால அறிக்­கையா? நாடி பிடித்துப் பார்க்­கப்­படும் மருத்­துவ அறிக்கை போன்­றதா? ஒரு­வ­ரோ­டொ­ருவர் இணங்கிப் போகும் முறை­யி­லன்றி ஒரு­வரை ஒருவர் இணங்கச் செய்யும் முறை­யி­லேயே இடைக்­கால அறிக்கை அமைந்­தி­ருக்­கி­றது. தமிழ் தரப்­பினர் யுத்­தத்தால் முடி­யா­ததைப் பேச்­சு­வார்த்தை மூலம் பெற முயல்­வ­தாகப் பேரி­ன­வா­திகள் கூறு­கி­றார்கள் அல்­லவா? இல்லை பேரி­ன­வா­திகள் தமிழ் தரப்­பி­னரை யுத்­தத்தில் வென்­றது போல் பேச்­சு­வார்த்­தை­யிலும் வெல்­லவே முயல்­கி­றார்கள். எனினும் இடைக்­கால அறிக்­கையை இடைத் தங்­க­லாக ஆக்கிக் கொள்­ளாது தமிழ் தரப்­பினர் தொடர்ந்தும் பேசிக் கொண்­டி­ருக்க வேண்டும்.

இத்­த­கைய இக்­கட்டு இலங்­கைக்கு ஏன் ஏற்­பட்­டது தெரி­யுமா? சிறு­பான்­மை­களின் அடிப்­படை உரி­மை­க­ளுக்­கு­ரிய காப்­பீட்­டுக்­காக 1946 ஆம் ஆண்டு சேர் ஐவர் ஜெனிங்ஸ் தனது சோல்­பரி யாப்பில் 29 ஆம் ஷரத்தை இயற்­றி­யி­ருந்தார். பாரா­ளு­மன்­றத்தில் மூன்றில் இரண்டு பெரும்­பான்மை ஆச­னங்­க­ளாலும் கூட சிறு­பான்­மை­களின் அடிப்­படை உரி­மை­களை அகற்ற முடி­யாது என்­பதே அந்த காப்­பீ­டாகும்.

அதையும் கூடப் பொருட்­ப­டுத்­தாது தான் 1949 ஆம் ஆண்டு பிர­தமர் டி.எஸ். சேனா­நாயக்க கிழக்கில் சிங்­களக் குடி­யேற்­றத்தை நடை­மு­றைப்­ப­டுத்தி மலை­யக தோட்டத் தொழி­லா­ளர்­களின் குடி­யு­ரி­மை­யையும் இரத்துச் செய்­தி­ருந்தார்.

அப்­போது அகில இலங்கை தமிழ் காங்­கி­ரஸும் அந்த ஆட்­சியில் அங்கம் வகித்­ததால் அதன் தலைவர் ஜி.ஜி. பொன்­னம்­பலம் அமைச்­ச­ராக இருந்தார். எனினும் அவர் இவற்றை ஆட்­சே­பிக்­க­வில்லை. அதன் பிறகே அவ­ரது கட்­சியில் அவ­ரு­ட­னி­ருந்த எஸ்.ஜே.வி. செல்­வ­நா­யகம் 1949 ஆம் ஆண்டு அகில இலங்கை தமிழ் காங்­கி­ரஸை விட்டும் விலகி அகில இலங்கை தமி­ழ­ரசுக் கட்­சியை ஆரம்­பித்தார். மலை­யகத் தொழி­லா­ளரின் குடி­யு­ரிமை இரத்தும் கிழக்கு முஸ்­லிம்­களின் மத்­தி­யி­லான சிங்­களக் குடி­யேற்­றமும் சிறு­பான்­மை­களை பல­வீ­னப்­ப­டுத்திப் பேரின ஆதிக்­கத்தை நிலை­நாட்டும் செயற்­பா­டுகள் என்றே தந்தை செல்வா கரு­தினார். அதன் பிறகு அதே ஜி.ஜி. பொன்­னம்­ப­லத்தை தன்­னோடு இணைத்துக் கொண்டு கோடீஸ்­வரன் வழக்­கின்­போது தந்தை செல்வா வெற்­றி­பெற்று 29 ஆம் ஷரத்தின் காப்­பு­று­தியை நிலை நாட்­டி­யி­ருந்தார்.

தமிழ் மக்­களால் தந்தை செல்வா என எஸ்.ஜே.வி. செல்­வ­நா­யகம் ஏன் அழைக்­கப்­ப­டு­கிறார் தெரி­யுமா? இலங்கை காந்தி எனவும் அழைக்­கப்­ப­டு­கி­றாரே ஏன் தெரி­யுமா? முஸ்­லிம்­களின் தனித்­துவத் தலைவர் அஷ்­ரபும் கூட அவரை நினைத்து கண்­க­லங்­கி­யதை நான் கண்­டி­ருக்­கிறேன்.

ஆக மலை­யக தொழி­லா­ளர்கள் பிர­ஜா­வு­ரிமை பெறவும் ஸ்ரீமா – சாஸ்­திரி ஒப்­பந்தம் நிக­ழவும் வித்­திட்­டவர் தந்தை செல்­வா­வே­யாவார். 1957 ஆம் ஆண்டு திரு­மலை மாநாட்டில் முஸ்லிம் அலகைப் பிர­க­ட­னப்­ப­டுத்தி பண்டா – செல்வா ஒப்­பந்­தத்­திலும் கூட இடம்­பெறச் செய்­ததன் மூலம் டி.எஸ். சேனா­நா­யக்க செய்த சிறு­பான்­மை­க­ளுக்கு எதி­ரான மலை­யக குடி­யு­ரிமை பறிப்பு முஸ்­லிம்­களின் மத்­தி­யி­லான பேரினக் குடி­யேற்றம் ஆகிய செயற்­பா­டு­க­ளுக்கு விமோ­சனம் வழங்­கி­யி­ருந்தார். இவர் முன்­வைத்த சமஷ்டி தனி நாடு அல்ல, சிறு­பான்­மைகள் தமது அடிப்­படை உரி­மை­களை உத்­த­ர­வா­தப்­ப­டுத்­திக்­கொண்டு பெரும்­பான்­மை­யோடு ஒரே நாட்­டுக்குள் இணங்கி வாழும் அர­சியல் ஏற்­பா­டே­யாகும். எனினும் இது சிறு­பான்மைக் காப்­பீ­டான சோல்­பரி யாப்பின் 29 ஆம் ஷரத்து இருந்தால் தான் சாத்­தி­ய­மாகும். 1972 ஆம் ஆண்டு பேரின யாப்­பின்­படி 29 ஆம் ஷரத்து நீக்­கப்­பட்ட பின் சமஷ்டி சாத்­தி­யப்­ப­டாது. காரணம் பேரின வடி­வ­முள்ள மத்­திய அரசின் கீழ் சிறு­பான்­மையின் மாநில சமஷ்டி வலுப்­பெறாது.

எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநா­யக்க, தந்தை செல்­வா­வுடன் செய்த ஒப்­பந்­தத்தைக் கிழித்­த­போதும் ஒப்பம் போட்ட பிற­கு­தானே கிழித்தார். அதைக் கிழிக்க வைப்­பதில் முன்­னின்ற ஜே.ஆர். தானே டட்­லி­யுடன் தந்தை செல்வா ஒப்­பந்தம் செய்த போது தடுக்­க­வில்லை. எனவே சிங்­களத் தலை­வர்­கள்தான் காலத்­துக்குக் காலம் தெளிவு இல்­லா­தி­ருந்­தி­ருக்­கி­றார்­களே தவிர தந்தை செல்வா அல்ல. இதே தான் இதே நிலைதான் தற்­போதும் இருக்­கி­றது.

ஏரா­ள­மான நாடு­களை ஆட்சி புரிந்து அனு­பவ முதிர்ச்சி பெற்­றி­ருந்த ஆங்­கி­லேயர் இலங்­கையைப் பல்­லின நாடு எனக் கணித்தே சிறு­பான்மைக் காப்­பீ­டாக 29 ஆம் ஷரத்தை வழங்­கி­யி­ருந்­தனர்.

காரணம் இரண்டாம் உலக மகா யுத்தம் முடி­வுற்­றதும் ஐ.நா. சபை உரு­வாக்­கப்­பட்டு, மனித உரிமை சாசனம் வகுக்­கப்­பட்டு, தனித் தனி இனங்­க­ளுக்கு சம உரி­மை­யோடு சுய நிர்­ணய இறை­மைக்­கான உரி­மையும் அங்­கீ­க­ரிக்­கப்­பட்­ட­தாகும். இந்த விதி­மு­றையின் அடிப்­ப­டை­யி­லேயே தந்தை செல்வா 29 ஆம் ஷரத்­து நீக்­கத்­தையும் சமஷ்டி மறுக்­கப்­பட்­ட­தையும் எதிர்த்து சுய­நிர்­ணய இறைமைக் கோரிக்­கையை முன்­வைத்­தி­ருந்தார்.

இவ­ரிடம் சந்­தர்ப்­பத்­துக்கு ஏற்ப அர­சி­யலில் நடிக்கும் தன்மை அறவே இருக்­க­வில்லை. ஒரு­முறை ஒரு தேர்­த­லின்­போது வாக்­கு­களைக் கோரி ஒரு குழு­வினர் வீடு வீடாகச் செல்­கையில் இவரும் கூடவே சென்­றி­ருந்தார். அப்­போது எதிரே ஒரு கோயில் தென்­பட்­டதும் எல்­லோரும் அதற்குள் நுழைய முற்­ப­டு­கையில், இவர் தன்­னோடு வந்த உதுமா லெப்­பையைப் போக விடாமல் தடுத்­து­விட்டார். அப்­போது அவர் சொன்ன வார்த்தை என்ன தெரி­யுமா? உதுமா லெப்ப நீ முஸ்லிம், நான் கிறிஸ்­தவன். எல்­லோரும் கோயி­லுக்குப் போகி­ன­மெண்டு நாமளும் போக­ணுமோ? நீ மசூ­திக்குப் போ, நான் சேர்ச்­சுக்குப் போறேன். எதையும் போலி­யாகச் செய்­யக்­கூ­டாது. இது ஹைபொக்­கிசம். இத்­த­கை­யவன் வேட்­பா­ள­னா­கவும் முடி­யாது. இவ­னுக்கு வாக்­க­ளிக்­கவும் கூடாது என்றார்.

இன்­னொ­ரு­முறை இதே வகை­யி­லான ஒரு சந்­தர்ப்­பத்தில் மசூர் மௌலா­னா­விடம் தந்தை செல்வா இப்­படிக் கூறி­யி­ருந்தார். தமி­ழரின் வீட்­டுக்குப் போனதும் வழி­காட்­டு­பவர் 'த' என உச்­ச­ரித்து அடை­யாளம் காட்­டு­வதும், முஸ்­லிமின் வீட்­டுக்குச் சென்­றதும் ‘மு’ என அடை­யாளம் காட்­டு­வதும், சிங்­கள வீட்­டுக்குப் போனதும் ‘சி’ என அடை­யாளம் காட்­டு­வதும் பின்னர் அவ­ர­வ­ருக்கு ஏற்­ற­வாறு முரண்­பா­டு­க­ளோடு பேசு­வதும் கூடாது. எதையும் முரண்­பா­டற்ற முறையில் தெளி­வா­கவே முன்­வைக்க வேண்டும் என்றார்.

உண்­மையில் சுதந்­தி­ரத்­துக்குப் பின் இலங்­கையில் வாழ்ந்த அத்­தனை அர­சியல் தலை­வர்­க­ளிலும் தந்தை செல்­வா­வுக்கு இணை­யாக யாருமே இல்லை. இப்­போது தந்தை செல்­வாவின் அர­சியல் வாரி­சாக நான் சம்­பந்தன் அவர்­க­ளையே காணு­கிறேன்.

எனினும் தந்தை செல்வா உள் எதிர்ப்பைக் காண­வில்லை, சம்­பந்தன் கண்டு கொண்­டி­ருக்­கிறார். அர­சியல் சூழலின் மாற்­றமே இதற்குக் கார­ண­மாகும். கொடூர யுத்­தத்தின் இழப்­புக்­களைச் சந்­தித்த பின் குற்­று­யிரும் குலை­யு­யி­ரு­மாகக் கிடப்­ப­வர்­களின் கடு­மை­யான எதிர்ப்­புக்­களைத் தாங்கிக் கொள்ளும் சம்­பந்­தனின் மனப் பக்­குவம் தந்தை செல்­வா­வையே ஞாபக மூட்­டு­கி­றது.

இவ­ருக்கு வாக்­க­ளித்து எதிர்க்­கட்சித் தலை­வ­ராகத் தெரி­வா­ன­தற்­காக எல்லாப் பொறுப்­புக்­க­ளையும் சுமத்தி முழுப் பழி­யையும் இவர் மீதே போடு­வது நியா­ய­மல்ல. எனினும் தனக்­கேற்­பட்­டுள்ள இந்த நிலை தவிர்க்க முடி­யா­தது என்­பது இவ­ருக்கே தெரியும். புலிகள் வலி­மை­யோடு இருந்­த­போது இவர் கண்ட அனு­பவம் வேறு, யுத்தம் முடிந்த பின் இவர் கண்ட அனு­பவம் வேறு. அர­சுடன் பேசும்­போது காணும் அனு­பவம் வேறு. ஓடும் மீன் ஓட உறுமீன் வரும்­வரை காத்­தி­ருக்­குமாம் கொக்கு என்­பது போல் சர்­வ­தேசத் தீர்வு வரும்­வரை இவர் தரப்பில் இணக்­கப்­பாட்­டுக்கு விருப்­ப­மில்லை எனும் குறை­பாடு ஏற்­ப­டா­தி­ருக்­கவே மேலோட்­ட­மாகப் பேசிக் கொண்­டி­ருக்­கிறார் போல் தெரி­கி­றது.

இதன் மூலம் சிங்­கள தரப்பின் தற்­போ­தைய நிலைப்­பாட்டை சர்­வ­தேசம் புரிந்து கொள்ளும் வாய்ப்­பையே ஏற்­ப­டுத்திக் கொண்­டி­ருக்­கிறார் போல் தெரி­கி­றது. ஒரு கையால் கொடுத்து மறு­கையால் எடுக்கும் செயற்­பா­டா­கவே இடைக்­கால அறிக்கை காணப்­ப­டு­கி­றது.

யாப்பில் மாற்றம் செய்ய வேண்­டு­மாயின் பாரா­ளு­மன்­றத்தில் மூன்றில் இரண்டு பெரும்­பான்­மை­யோடு செனட் சபை­யிலும் மூன்றில் இரண்டு பெரும்­பான்மை பெற வேண்டும் எனக் காணப்­ப­டு­கி­றது. நாட்டின் மொத்த சனத்­தொ­கையில் 74% வீதம் சிங்­கள மக்­களே அதுபோல் பாரா­ளு­மன்­றத்­திலும் செனட் சபை­யிலும் நான்கில் மூன்­றாக சிங்கள மக்­களே இருப்­பார்கள். இந்­நி­லையில் பாரா­ளு­மன்­றத்­திலும் செனட் சபை­யிலும் மட்­டு­மல்ல, சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­பிலும் கூட சிறு­பான்­மை­களின் அடிப்­படை உரி­மை­களை யாப்­பி­லி­ருந்து அகற்றி விடலாம். எனவே மூன்றில் இரண்டு வேண்டும் எனக் கூறப்­ப­டாது மூன்றில் இரண்­டாலும் முடி­யாது எனக் கூறப்­படும் வகையில் யாப்பு அமைய வேண்டும்.

சனத்­தொகை கூடிய மாகா­ணத்­துக்கும், சனத்­தொகை குறைந்த மாகா­ணத்­துக்கும் செனட் சபையில் சம அளவு பிர­தி­நி­தித்­துவம் வழங்­கப்­ப­டுமாம். சனத்­தொ­கைக்­கேற்ப பிர­தி­நி­தித்­துவம் வழங்­கப்­ப­டாமை நியா­ய­மான பங்­கீடு அல்­லவே. அப்­ப­டி­யானால் ஏன் சம அந்­தஸ்தில் வைத்து யாப்பை இயற்ற முடி­யாது.

வடக்கு, -கிழக்கு மக்கள் மட்­டுமே அதி­கா­ரப்­ப­ர­வலை பிர­தேச ரீதியில் கேட்­டி­ருக்­கையில், ஏனைய ஏழு சிங்­கள மாகா­ணங்­க­ளுக்­குமே பிர­தேச அதிகாரப் பகிர்வு வழங்­கப்­படும் என இடைக்­கால அறிக்கை குறிப்­பி­டு­கி­றது. அந்த வகையில் இடைக்­கால அறிக்கை இன­ரீ­தி­யான அதி­காரப் பர­வலை மீண்டும் மறுத்­தி­ருக்­கி­றது. மாகாண உள்­ளூ­ராட்சி போன்ற அதி­காரப் பர­வ­லையே முன்­வைக்­கி­றது.

சிங்­கள மாகா­ணங்­களை விடவும் தமிழ் மாகா­ணத்­திற்கே அதிக அதி­காரம் என சம்­பந்தன் சொல்­கிறார். இது பார­பட்சம் என சிங்கள மாகா­ணங்கள் ஆட்­சே­பிக்க மாட்­டாவா? பல்­லின மத்­திய அரசு அமை­யாமல் பெரும்பான்மைச் சமூ­கத்தின் ஆதிக்­க­முள்ள சிறு­பான்மை மாகாண சபை நிலைக்­குமா?

அதி­கா­ரப்­ப­ர­வலில் மாற்­றங்கள் செய்­வ­தாயின் குறித்த மாகாண பிர­தி­நி­திகள் தமது நிலைப்­பா­டு­களை எப்­படிக் கூறு­வது என்­பது பற்­றியும் தற்­போது ஆலோ­சிக்­கப்­ப­டு­கி­றது. எனினும் முடிவு இன்னும் காணப்­ப­ட­வில்லை எனவும் சம்­பந்தன் குறிப்­பிட்­டி­ருந்தார்.

தமது மாகாண பிர­தி­நி­திகள் தமது நிலைப்­பா­டு­களைக் கூறும் முறையே இன்னும் முடிவு காணாது ஆலோ­சிக்­கப்­ப­டு­கி­றது என்றால், எதைக் கூறு­வது? எப்­படிக் கூறு­வது? எப்­போது கூறு­வது? தற்­போ­தைய ஆட்சி அமைந்து மூன்று வரு­டங்கள் கழிந்­துமா இந்த நிலை?

இன்­னு­மொரு விட­யமும் பரி­சீ­ல­னையில் உள்ளதாம். அதிகாரப்பகிர்வில் மாற்றங்கள் செய்யவோ பகிரப்பட்ட அதிகாரங்களை மத்திய அரசு அதிகாரம் செய்யவோ அவற்றை அரசு தன்னிச்சையாக மீளப்பெறவோ முடியாது என்பதே சமஷ்டி முறை எனக் கூறும் சம்பந்தன் பாராளுமன்ற செனட் சபை மூன்றில் இரண்டு பெரும்பான்மையால் முடியும் எனக் கூறி விட்டு, அதற்கு மேலதிக பாதுகாப்பு பற்றி பரிசீலிக்கப்படுகிறது என்கிறார். பெரும்பான்மைச் சமூகத்திடம் மூன்றில் இரண்டுக்கும் மேல் இருக்கின்றதே பாதுகாப்பு கிடைக்குமா?

சிறு­பான்­மை­களின் அடிப்­ப­டை உரி­மை­களைத் தவிர்ந்த வேறு விட­யங்­க­ளுக்கு மட்டும் என்றே அது வரை­ய­றுக்­கப்­பட வேண்டும். ஒவ்­வொரு மாகா­ணத்­திலும் ஐந்து ஐந்து செனட் சபை உறுப்­பி­னர்­களில் மும்­மூ­வ­ரா­வது போதுமா இதை அங்­கீ­க­ரிக்க எனவும் விவா­திக்­கப்­படு­கி­றதாம் எனக் கூறும் சம்­பந்தன், அதி­கா­ரங்­களை பயன்­ப­டுத்­து­வதும் மீளப்­பெறு­வதும் தடுக்­கப்­ப­டவும் கடி­ன­மாக்­கப்­ப­டு­வ­தற்­கு­மான ஒழுங்­குகள் உள்­வாங்­கப்­பட வேண்டும் என்­கிறார். அத்­த­கைய ஏற்­பாடே சமஷ்டி எனவும் இன்றேல் ஒற்­றை­யாட்சி முறை­யா­கி­விடும் எனவும் இவர் அர­சிடம் கூறி­யுள்­ளாராம். இதிலும் முடிவு இல்லை. ஆக அரசு அவரிடம் பின் தங்கியிருக்கிறது.   

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-01-27#page-4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.