Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

152 ஆண்டுகளுக்குப் பின்னர் ஒரே நாளில் வானில் நிகழவுள்ள மூன்று அரிய நிகழ்வுகள்

Featured Replies

152 ஆண்டுகளுக்குப் பின்னர் ஒரே நாளில் வானில் நிகழவுள்ள மூன்று அரிய நிகழ்வுகள்

 

supermoonமூன்று அரிய சந்திர நிகழ்வுகளான, முழு சந்திர கிரகணத்துடன் கூடிய இரத்த நிலவு, சுப்பர் நிலவு, நீல நிலவு என்பன, 152 ஆண்டுகளுக்குப் பின்னர், நாளை மறுநாள் ஒரே நாளில் வானத்தில் தோன்றவுள்ளது.

இதுகுறித்து தகவல் வெளியிட்டுள்ள கொழும்பு பல்கலைக்கழக வானியல் மற்றும் விண்வெளி விஞ்ஞான அலகின் பணிப்பாளர் பேராசிரியர் சந்தன ஜெயரத்ன,

“இந்த மூன்று அரிய சந்திர நிகழ்வுகளையும் ஒருங்கே, நாளை மறுநாள் மாலை 6.15 மணிக்குப் பின்னர் கிழக்குத் திசையில் காண முடியும். 1866ஆம் ஆண்டுக்குப் பின்னர், நிகழும் அரிய நிகழ்வு இதுவாகும்.

இதன்போது சந்திரன், பூமிக்கு நெருக்கமாக வருவதால், கடல் அலைகள் உயரமாக மெலேழும்.

இதுபோன்ற வானியல் நிகழ்வுகள் கடந்த காலத்தில் ஏற்பட்ட போது, பூமி அதிர்ச்சிகளோ, வேறு இயற்கை அனர்த்தங்களோ ஏற்பட்டதாக பதிவாகவில்லை.

அன்றைய நாளில் பூமி அதிர்ச்சி, ஆழிப்பேரலை, சூறாவளி ஏற்படும் என்று கூறப்படுவது வெறும் வதந்திகளேயாகும்.

முழு அளவிலான சந்திர கிரகணம் இரத்த நி்லவு என்று அழைக்கப்படுகிறது. ஏனென்றால், சந்திரன் பூமியின் நிழலில் முழுமையாக மறைக்கப்படும் போது செந்நிறமாக காட்சியளிக்கும்.

சந்திரன், பூமிக்கு மிக நெருக்கமாக வரும் போது, அது சுப்பர் நிலவு என்று அழைக்கப்படுகிறது.

ஒரே மாதத்தில் வரும் இரண்டு முழு நிலவுகளில், இரண்டாவதாக வரும், முழு நிலவு, நீல நிலவு என்று அழைக்கப்படும். ஆனால் இது நீல நிறத்தில் காட்சியளிக்காது.

இந்த மூன்று அரிய நிகழ்வுகளும் ஒரே நாளில்- வரும் 31ஆம் நாள் இடம்பெறவுள்ளது.

சிறிலங்காவில் முழு சந்திர கிரகணத்தை, மாலை 6.15 மணியில் இருந்து பார்வையிட முடியும்.

ஆனால் சிறிலங்கா நேரப்படி மாலை 4.21 மணிக்கு சந்திர கிரகணம் ஆரம்பமாகி, 9.38 மணியளவில் நிறைவடையும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

http://www.puthinappalakai.net/2018/01/29/news/28706

  • தொடங்கியவர்

152 வருடங்களின் பின் இடம்பெறும் அபூர்வம் : காணத்தவறாதீர்கள் !

 

 

கடந்த 1866 ஆம் ஆண்டின் பின்னர் முதற் தடவையாக முழு வட்ட சந்திரனையும், பூரண சந்திர கிரகணத்தையும் நாளை மறுதினம் புதன்கிழமை தென்படும் பௌர்ணமி தினத்தன்று இலங்கை மக்கள் பார்வையிடலாம்.

 blue-moon.jpg

கொழும்பு பல்கலைக்கழகத்தின் விண்வெளி விஞ்ஞான பிரிவின் பணிப்பாளர் சந்தன ஜயரட்ன இதுதொடர்பில் தெரிவிக்கையில்,

 நீல நிலவு என்றழைக்கப்படும் இந்த சந்திரனை எந்த தடங்கலும் இன்றி முழுமையாக இலங்கையிலுள்ளவர்களுக்கு காணக் கிடைக்கின்றமை சிறப்பம்சமாகும். 

ஏனைய பௌர்ணமி தினங்களை விட 14 சதவீதம் பெரிதாகவும் 30 சதவீதம் வெளிச்சமாகவும் இந்த சந்திரன் தென்படும். 

சந்திரன் பூமிக்கு நெருக்கமாக வருகின்றமையே இதற்கான காரணமாகும் என்று தெரிவித்தார்.

 

 குறித்த கிரகணம் பிற்பகல் 4.21 இற்கு தென்படும். பூரண சந்திர கிரகணம் மாலை 6.22 முதல் 7.38 வரை தென்படும். இரவு 7.31 முதல் 8.41 வரை பாதியளவில் சந்திரன் தென்படவுள்ளது. இரவு 9.31 இற்கு சந்திர கிரகணம் நிறைவடையும்.

http://www.virakesari.lk/article/30073

  • தொடங்கியவர்

இன்று நிகழவுள்ள அரிய சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கலாமா? முக்கிய தகவல்கள்

 
 

இன்று மாலை மிக முக்கியமான சந்திர கிரகணம் நிகழவுள்ளது. இந்நிலையில் இந்த சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கக்கூடாது என்பது போன்ற தகவல்கள் பரவி வரும் நிலையில் இன்று தோன்றக்கூடிய சந்திரன் சுமார் 151 ஆண்டுகளுக்கு பிறகு வரவுள்ள காரணத்தாலும், மேலும் சில காரணங்களாலும் சிறப்புவாய்ந்த சந்திர கிரகணம் என பிபிசி தமிழிடம் பேசிய தமிழக அரசின் அறிவியல் மற்றும் தொழிலநுட்ப மையத்தின் இணை இயக்குனர் முனைவர் சவுந்திரராஜ பெருமாள் தெரிவித்துள்ளார். மேலும் இந்த கிரகணத்தை வெறும் கண்களால் காணலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சந்திர கிரகணம்படத்தின் காப்புரிமைFRANK RUMPENHORST

ஏன் இன்று தோன்றும் சந்திர கிரகணம் சிறப்பு வாய்ந்தது?

''இன்று மாலை தோன்றவுள்ளது முழு சந்திர கிரகணம். இந்தியா உட்பட பல நாடுகளில் இந்த கிரகணம் தெரியும். இந்திய நேரப்படி மாலை 5.18க்கு துவங்கி இரவு 8.41 வரை இந்த கிரகணம் தெரியும். உலகம் முழுவதும் இந்த நேரங்களில் எந்தெந்த நாட்டுக்கு இரவு நேரமோ எந்தெந்த நாடுகளில் எல்லாம் இந்த கிரகணத்தை பார்க்கலாம்.

வழக்கமான சந்திர கிரகணத்தை விட இன்று தோன்றவுள்ள சந்திர கிரகணத்துக்கு கூடுதல் முக்கியத்துவம் கிடைத்து வருகிறது. ஏனெனில் நீல நிலா தினம் என சொல்லப்படும் தினத்தில் இந்த கிரகணம் தோன்றுகிறது. ஒரு மாதத்தில் இரண்டாவது முறை பௌர்ணமி வருவதை புளூ மூன் என ஆங்கிலத்தில் சொல்கிறார்கள். நீல நிலா என்பதும் வழக்கமானதே வானியல் அடிப்படையில் அதில் மிகச்சிறப்புகள் எதுவும் கிடையாது.

நீல நிலா என சொல்லப்படுவதால் பொதுமக்கள் சரியான புரிதலின்றி அன்றைய தினம் தோன்றக்கூடிய சந்திரன் நீல நிறத்தில் இருக்கும் என நினைக்கிறார்கள். ஆனால் அன்றைய தினம் சந்திரன் வழக்கமான நிறத்திலேயே தோன்றுவதுதான் யதார்த்தம்.

நீல நிலா தினம் என சொல்லப்படும் தினத்தில் சந்திர கிரகணம் நிகழ்வது சற்று அரிதானது. இதற்கு முன்னதாக 1866 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31-ஆம் தேதி நீல நிலா தினத்தில் முழு சந்திர கிரகணம் நிகழ்ந்தது. அதற்கு பிறகு 151 ஆண்டுகள் கழித்து இன்றைய தினத்தில்தான் இப்படியொரு நிகழ்வு நடைபெறவுள்ளது. இதற்கு பிறகு 2028 டிசம்பர் 31 ஆம் தேதி இதே போன்ற நிகழ்வு நடைபெறும்'' என்கிறார் சவுந்திரராஜ பெருமாள்.

சந்திர கிரகணம் குறித்து பேசியபோது, '' சூரியனைச் சுற்றி பூமி வருகிறது. பூமியை சுற்றுகிறது நிலா. இது அடிப்படை தகவல். சூரியன்- பூமி -நிலா ஆகியவை கிட்டத்தட்ட ஒரே கோட்டில் வரும்போது நிலாவை சூரியனிடமிருந்து ஏறத்தாழ மறைக்கும் விதமாக இடையில் புவி இருக்கும் தினத்தை பௌர்ணமி என்கிறோம்.

சந்திர கிரகணம்படத்தின் காப்புரிமைABID KATIB

இந்த சமயங்களில் புவியின் நிழல் 14 லட்சம் கிலோ மீட்டருக்கு கூம்பு வடிவத்தில் நீளும். ஆகவே சூரிய வெளிச்சம் முழுமையாக நிலாவுக்கு கிடைக்காது. பெரும்பான்மையான சமயங்களில் புவியின் நிழலை தொடாமல் சில கோணங்கள் விலகி நிலவு சென்றுவிடும். ஏனெனில் நிலவு புவியைச் சுற்றும் வட்டப்பாதை சுமார் ஐந்து டிகிரி அளவுக்கு சாய்வாக இருப்பதால் நிழலை தொடாமல் நிலவு மேலேயே கீழேயோ சென்றுவிடும்.

புவியின் நிழலுக்குள் வந்து சூரியனின் நேரடி பார்வையில் இருந்து நிலா முழுமையாக மறைக்கப்படும் சற்று அரிய நிகழ்வை முழு சந்திர கிரகணம் என்கிறோம். இந்த முழு சந்திர கிரகணம் ஒரே ஆண்டில் அதிக முறை நிகழாது. குறிப்பாக சொல்ல வேண்டுமெனில் பௌர்ணமி சீரான இடைவெளிகளில் வரும். ஆனால் எல்லா பௌர்ணமியும் சந்திர கிரகணம் அல்ல'' என சந்திர கிரகணம் குறித்து அடிப்படை விளக்கத்தை விரிவாக எடுத்துரைத்தார் தமிழக அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தின் இணை இயக்குனர்.

சந்திர கிரகணத்தால் மனிதர்கள் உடல் நலனுக்கு ஏதேனும் பாதிப்புகள் வருமா என கேட்டபோது, '' பௌர்ணமி சமயங்களில் உடலுக்கு எப்படி பாதிப்பு கிடையாதோ அதே போல் சந்திர கிரகணத்தாலும் உடலுக்கு எவ்வித பாதிப்பும் கிடையாது. வழக்கமாக பௌர்ணமியின்போது கடல் அலை சற்று அதிகமாக இருப்பது போலவே இன்றைய சந்திர கிரகணத்தின்போதும் கடல் அலை சீற்றம் சற்று அதிகமாக இருக்கும். இதனால் மனிதர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை'' என்றார் சவுந்திரராஜ பெருமாள்.

super moonபடத்தின் காப்புரிமைDAVID MCNEW

இன்றைய சந்திர கிரகணத்தின் இன்னொரு சிறப்பாக கருதப்படுவது சூப்பர் மூன் என சொல்லப்படும் நிலவு பெரிதாக, அதிக பிரகாசத்துடன் தெரியும் தினத்தில் சந்திர கிரகணம் வருவதாகும். இன்றைய தினம் நீல நிலா தினம், சூப்பர் மூன், சந்திர கிரகணம் மூன்றும் ஒரே சமயத்தில் வருகிறதா என்பது குறித்து சவுந்திரராஜ பெருமாள் பிபிசி தமிழிடம் விளக்கியுள்ளார்.

'' சந்திரன் பூமியை நீள் வட்டப்பாதையில் சுற்றி வருகிறது. சில சமயங்களில் புவிக்கு நெருக்கமாக சந்திரன் வரக்கூடும். அதாவது மூன்று லட்சத்து 56 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திலேயே நிலவு வந்துவிடும் அதன்பிறகு 4 லட்சத்து ஆறாயிரம் கிலோ மீட்டர் வரை விலகி செல்லும். அதாவது சுமார் ஐம்பாதாயிரம் கிலோ மீட்டர் வித்தியாசத்தில் 27 நாட்களுக்கு ஒரு முறை நிலவு பூமிக்கு நெருங்கி வருவதும் விலகிச் செல்வதுமாக இருக்கும்.

அதன்படி பார்த்தால் நேற்றைய தினம் (30.01.2018) அன்றுதான் நிலவு பூமியிடம் இருந்து மிக அருகில் அதாவது 3 லட்சத்து 58 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தது. இன்றைய தினம் 3 லட்சத்து 64 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் நிலவு இருக்கும். லட்சக்கணக்கான கிலோ மீட்டர் தூர அடிப்படையில் பார்க்கும்போது இது மிகப்பெரிய தூர அளவு வித்தியாசம் அல்ல.

நாளை தினம் புவிக்கு அருகில் நிலவு இருப்பதால் சற்று பெரிதாகவும் சற்று கூடுதல் பிரகாசத்துடன் தெரியும். இப்படிப்பட்ட தினத்தில் முழு சந்திர கிரகணம் நிகழ்வது கூடுதல் சிறப்பு எனச் சொல்லப்படுகிறது. நாளைய தினம் சூப்பர் மூன் தினம் என சொல்லமுடியாது. எனினும் புவிக்கு கிட்டத்தட்ட மிக அருகில் நிலவு வரும் தினத்திலும், நீல நிலா தினத்திலும், முழு சந்திர கிரகணம் நடைபெறுவதாலும் குளிர் காலத்தில் இத்தகைய அரிய நிகழ்வு நடப்பதாலும் அதிக மேக மூட்டங்கள் இன்றி தெளிவாக பார்க்க முடியும். இத்தகைய சிறப்புகள் இன்றைய தினத்தில் நிகழவுள்ளன.'' என்றார்.

எந்தெந்த இடங்களில் இருந்து பார்த்தால் தெளிவாக பார்க்கலாம் என கேட்டபோது '' சந்திர கிரகணம் மாலை 5.18க்கு துவங்குவதாக இருந்தாலும் சென்னையில் மாலை 6.05-இலும் கோயமுத்தூரில் மாலை 6.18 -இலும்தான் சந்திரன் உதயமாகிறது. அதனால் சந்திரன் உதயமாகும்போதே பகுதி சந்திர கிரகணமாக உதயமாகும். சென்னையில் இருப்பவர்கள் கடற்கரைகளில் இருந்து பார்த்தால் இன்று மாலை சந்திரன் உதயமாகும்போதே பகுதி சந்திரகிரகணமாக இருப்பதை பார்க்கலாம்.

சந்திர கிரகணம்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

தொலைநோக்கி கொண்டு மட்டுமே பார்க்க வேண்டுமென்ற அவசியம் இல்லை வெறும் கண்களிலும் பார்க்கலாம். சந்திர கிரகணத்தின் போது நிலவின் சுற்றுவட்டார பகுதிகள் ஆரஞ்சு அல்லது செஞ்சிவப்பு நிறத்தில் மாறுவதை பார்க்கலாம். முழு கிரகணம் நடக்கும்போது இந்த நிறமாற்றம் ஏற்படும். எந்த நேரத்தில் இந்த நிறமாற்றங்கள் தோன்றும் என்பதை அறுதியிட்டு சொல்ல முடியாது. ஆகவே இன்றைய தினம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

முழு கிரகணம் தோன்றும் போது நிறமாற்றம் ஏற்படுவதென்பது வளிமண்டல மாசு அளவை பொறுத்தது. கிரகணத்தின் போது மாசு காரணமாக வளி மணடலத்தில் அதிக துகள்கள் இருந்தால் சூரிய வெளிச்சத்தை அது சிதறடித்துவிடும். அப்போது சிவப்பு நிற கூறு அதிகமாக இருக்கும் அவை நிலவில் விழுவதால் நிலவு சற்று ஆழமான சிவப்பு நிறத்தில் தோன்றும். மாசு குறைவாக இருந்தால் சற்று இளஞ்சிவப்பு நிறத்தில் நிலவு தெரியும். எனவே வளிமண்டல மாசுபாட்டையும் இதனை வைத்து கண்டறிய முடியும்.

இந்தியா முழுமையாகவே நாளை சந்திர கிரகணத்தை பார்க்கலாம். இந்தியாவுக்கு கிழக்கில் உள்ள சீனா, ஜப்பான், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மலேஷியா உள்ளிட்ட நாடுகளிலும் பசுபிக் பெருங்கடல் பகுதியிலும் முழுமையாக பார்க்க முடியும்'' என விரிவாக விளக்கிச் சொன்னார் சவுந்திர ராஜன்.

இந்தியா, சிங்கப்பூர் , மலேஷியா உள்ளிட்ட நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் இந்த சந்திர கிரகணத்தை இன்று நேரில் கண்டு ரசிக்கலாம். மீண்டும் ஒரு முறை கட்டுரையை படித்து கிரகணம் தோன்றும் நேரத்தை குறித்துக்கொண்டு நன்றாக நினைவில் வைக்கலாமே !

http://www.bbc.com/tamil/science-42879569

  • தொடங்கியவர்

இன்று தோன்றிய அரிய நிலவு

super-moon-_0138.jpg?resize=800%2C600

 

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மாதத்தின் இரண்டாவது பௌர்ணமியான இன்று புதன்கிழமை முழு சந்திர கிரகணம் ஏற்பட்டு இருந்தது. இன்றைய நாளில் இந்த முழு சந்திர கிரகணத்துடன் சூப்பர் நிலவு (சூப்பர் மூன்), நீல நிலவு (ப்ளூ மூன்) ஆகியவையும் தோன்றி இருந்தன. முழு சந்திர கிரகணம், சூப்பர் மூன், ப்ளூ மூன் ஆகியவை வழக்கமாக வரும் நிகழ்வுகளாக இருப்பினும், 152 ஆண்டுகளுக்குப் பிறகு, இன்றைய தினம் இவை மூன்றும் ஒரே நாளில் வருவது மிக அரிய நிகழ்வாக கருதப்படுகிறது

super-moon-_0034.jpg?resize=800%2C600super-moon-_0079.jpg?resize=800%2C518super-moon-_0092.jpg?resize=800%2C600super-moon-_0132.jpg?resize=800%2C600super-moon-0072.jpg?resize=800%2C600super-moon-_0135.jpg?resize=800%2C600super-moon-_0138-1.jpg?resize=800%2C600

http://globaltamilnews.net/2018/64498/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.