Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நித்யானந்தாவை கைது செய்ய நேரிடும்: உயர் நீதிமன்றம் எச்சரிக்கை

Featured Replies

நித்யானந்தாவை கைது செய்ய நேரிடும்: உயர் நீதிமன்றம் எச்சரிக்கை

 

 

download%202

நித்யானந்தா, உயர் நீதிமன்றம்   -  கோப்புப் படம்

மதுரை ஆதீன மடத்தின் இளைய மடாதிபதியாக தன்னைத் தானே அறிவித்துக் கொண்ட நித்யானந்தாவை கைது செய்ய உத்தரவிட நேரும் என சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மதுரை ஆதீனத்தின் 293-வது மடாதிபதியாக நித்யானந்தா பொறுப்பு ஏற்றுக் கொண்டார். இதை எதிர்த்து, ஜெகதலபிரதாபன் என்பவர், மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது.

நித்யானந்தா மடாதிபதியாக அறிவித்துக் கொண்டது சட்டவிரோதம் என்று தமிழக அரசு பதில் அளித்தது. மடாதிபதி உயிருடன் இருக்கும்போது, மற்றொருவர், மடாதிபதியாக பொறுப்பு ஏற்க முடியாது என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

அப்போது நித்யானந்தா சார்பில், தான் இளைய மடாதிபதியாகத்தான் பொறுப்பு ஏற்றுக் கொண்டேன். அதில் இருந்து விலக முடியாது என்று தெரிவிக்கப்பட்டது. அதற்கு, பொறுப்பில் இருப்பது செல்லாது. அந்தப் பதவியை விட்டு விலகியதாக அறிவித்துவிட்டு, பதில் மனு தாக்கல் செய்யும்படி நித்யானந்தாவுக்கு நீதிபதி ஆர். மகாதேவன் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், நீதிபதி சகாதேவன் மதுரை உயர் நீதிமன்றத்தில் இருந்து சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றலானார். இந்த வழக்கு இன்று நீதிபதி சகாதேவன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை, சிறப்பு வழக்காக எடுத்து இன்று விசாரித்தார்.

நித்யானந்தா சார்பில் இவ்வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யப்படவில்லை. இதை கேட்ட நீதிபதி ஈராயிரம் பழமை வாய்ந்த மடத்தின் பெயரை கெடுக்கக் கூடாது. இந்த வழக்கில், பிப்ரவரி 2 ஆம் தேதிக்குள் நித்யானந்தா பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் . இல்லையேல், அவரை கைது செய்ய உத்தரவிட நேரிடும் என்று நீதிபதி எச்சரித்தார்.

http://tamil.thehindu.com/tamilnadu/article22550204.ece?homepage=true

  • தொடங்கியவர்

நித்யானந்தா வழக்கு விசாரணை; செல்போனில் ரகசியமாக பதிவு செய்த பக்தர்: போலீஸாரிடம் ஒப்படைக்க நீதிபதி உத்தரவு

 

download%205

நித்யானந்தா, செல்போன் பதிவு   -  கோப்புப் படம்

நித்யானந்தா வழக்கு விசாரணை உயர் நீதிமன்றத்தில் நடந்தது. இதை ரகசியமாக பதிவு செய்த நித்யானந்தாவின் பக்தரின் செல்போனை பறிமுதல் செய்து அவரை போலீஸாரிடம் ஒப்படைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

நித்யானந்தா மதுரை இளைய ஆதினமாக தன்னை நியமித்துக்கொண்டதை எதிர்த்து ஜகதல பிரதாபன் என்பவர் தொடர்ந்த வழக்கு மதுரை உயர் நீதிமன்றத்தை தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடக்கிறது.

இன்று வழக்கு, நீதிபதி மகாதேவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நித்யானந்தாவை இளைய பீடாதிபதி என்று குறிப்பிட்டு தாக்கல் செய்த வரிகளை நீக்கி தாக்கல் செய்ய உத்தரவிட்டதன் மீது மேலும் அவகாசம் கேட்டதால் நீதிபதி சில உத்தரவுகளை பிறப்பித்தார்.

அப்போது நீதிமன்ற அறையில் இருந்த நித்யானந்தா பக்தர் நரேந்திரன் என்பவர், வழக்கு விசாரணை நிகழ்வுகளை தனது செல்போனில் வரிக்கு வரி பதிவு செய்து அனுப்பிக்கொண்டிருந்தார். இவ்வாறு நீதிமன்ற வாதங்களை பதிவு செய்வதோ அதை அனுப்புவதோ கோர்ட் நடைமுறைப்படி குற்றம்.

நித்யானந்தாவின் பக்தர் இவ்வாறு டைப் செய்து அனுப்புவதை நீதிபதி மகாதேவனே நேரடியாக பார்த்துவிட்டார். யார் அவர், செல்போனை பயன்படுத்தி என்ன செய்துக்கொண்டிருக்கிறார் என்று கேள்வி எழுப்பிய நீதிபதி நீதிமன்ற வாதங்களை வரிக்கு வரி அந்த நபர் டைப் செய்து அனுப்பிக்கொண்டிருப்பதை பார்த்து உடனடியாக நீதிமன்ற காவலர்களிடம் செல்போனை பறிமுதல் செய்ய உத்தரவிட்டார்.

இதையடுத்து, அங்கு இருந்த நீதிமன்ற ஊழியர்கள் அவரை பிடித்து, அவரிடம் இருந்த செல் போனை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் நீதிமன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

செல்போனில் நீதிமன்ற வாதங்களை பதிவு செய்திருந்தால், வீடியோ, புகைப்படம் எடுத்திருக்கிறாரா என சோதித்து உண்மையிருந்தால் நடவடிக்கை எடுங்கள் என நீதிபதி மகாதேவன் உத்தரவிட்டார்.

இதையடுத்து அந்த நபரை உயர்நீதிமன்ற போலீஸார் பிடித்து ஸ்டேஷனுக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் அந்த நபரின் பெயர் நரேந்திரன் எனவும், பெங்களூரை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது.

செல்போனில் அவர் நீதிமன்ற நிகழ்வுகளை பதிவு செய்திருப்பது நிரூபணமானால் அவர் கைது செய்யப்படலாம் என போலீஸார் தெரிவித்தனர்.

http://tamil.thehindu.com/tamilnadu/article22550642.ece?homepage=true

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.