Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்பில் வெள்ளைவான் எப்படி இயங்குகின்றது - தப்பி வந்தவர் ஒருவர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜ சனிக்கிழமைஇ 17 மார்ச் 2007 ஸ ஜ விமலேஸ்வரன் ஸ

கொழும்பில் வெள்ளைவான் என்றால் பலருக்கும் தெரியும் கொழும்பில் 6 பிரிவுகளாக 60க்கு மேற்பட்ட பொலிசார் வெள்ளைவான் வைத்து படம் காட்டுகிறார்கள். அனைத்து வெள்ளைவான்களும் முன்பு பொலிசாருக்கும் இராணுவத்தினருக்கும் அரச உளவுத்துறையினருக்கும் பயன்படுத்தபட்டு வந்த வாகனங்கள் இவற்றின் வாகன தகட்டு இலக்கங்கள் மட்டுமே கழட்டுபட்டுள்ளது. கொழும்பில் வெள்ளைவானுக்கு பொறுப்பாக இருப்பவர்கள் இருவர் ஒருவர் முதலாவது நபர் நாலாம்மாடிக்கு பொறுப்பாக இருக்கும் பெல்பிட்டிய மற்ற நபர் எஸ்.ஜ றொட்றிகோ. இவர்கள் இருவரும் மிகவும் வெறிகொண்டவர்களாக இந்த வெள்ளைவான் திருவிளையாடல்களை நடாத்தி வருகின்றார்கள். கோட்டகேனா பகுதியில் வெள்ளைவானில் கடத்தப்படுவோர் சென்லூசியஸ் சேச்சிற்கு அருகில் உள்ள மைதானத்தில் வைத்து வேறு வாகனத்திற்கு மாற்றபட்டு கொண்டு செல்லபடுகின்றனர் ஆனால் வாகனம் மாற்றபடும் இடத்துடன் ஒட்டுக்குழுவின் வேலை முடிந்துவிடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது அதாவது ஒருநபரை கடத்தி வாகனம் மாற்றும்வரைக்கும் ஒட்டுக்குழக்கள் பொலிசாருடன் வருகின்றது அதன் பின்னர் பொலிசார் கடத்தப்பட்டவர்களை கொண்டு சென்றுவிடுகிறார்களாம். இலங்கையில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையத்திலும் டி.சி.டிபி என்ற ஒரு பிரிவு தற்பொது இயங்கி வருகிறது அவர்களுடைய அனைத்து தொடர்பாடல்களும் வெள்ளைவான் குழுவினருக்கு இணைக்கப்பட்டுள்ளது அதாவது இந்த வெள்ளைவான் குழுவினர் அனைத்து பொலிஸ் நிலையத்திலும் உள்ள டி.சி.டிபி என்ற பிரிவுடன் மட்டும் தொடர்பில் இருப்பார்கள். இலங்கையில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையமும் தாம் சந்தேகிப்பவர்கள் விசாரிக்கபடவேண்டியவர்கள் குறித்த பிரதேசத்திற்கு புதிதாக வந்தவர்கள் தமக்கு இலஞ்சம் தரமறுப்பவர்கள் என்று அனைத்து தகவல்களையம் இந்த விசேட பிரிவுக்கு கையளிக்கின்றனர் இந்த வெள்ளைவான் விசேட பிரிவு தனது கைங்கரியத்தை கச்சிதமாக செய்கின்றது. இந்த டி.சி.டி.பி என்ற பிரிவுகள் கட்டாயம் இலங்கையில் உள்ள ஊடகத்துறையினருடனும் தொடர்பகளை வைத்திரக்கின்றார்கள். இந்த பிரிவினருக்கு உடனடி தற்கால செய்தி நிலவரங்களை வழங்கி வருவது ஊடகத்துறையினர் ஆகவே காலமாற்றங்களுக்கு ஏற்றவாறு டி.சி.டிபி தனது சேகரித்த தகவல்களை வைத்து ஒட்டுக்குழுவின் உதவியுடன் தனது வேலைகளை நடாத்துகின்றது.

http://www.nitharsanam.com/?art=22355

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளைவான் கடத்தலும் நிதர்சனத்தின் தேடலும் - பாகம். 2

ஜ திங்கட்கிழமைஇ 19 மார்ச் 2007 ஸ ஜ ஜோசெப் ஸ

கோத்தபாய ராஜபக்சவின் கையெழுத்துடன் கொழும்பின் குற்ற புலனாய்வு பிரினரின் விசேட பிரிவினரான எக்ஸ் பயில் நடவடிக்கைக்கு உரிய குழுவான தெமட்ட கொடவில் இருந்து இயங்கும் ஒரு பொலிஸ் இராணுவ மற்றும் தமிழ் ஒட்டுக் குழுக்கள் இணைந்து உருவாக்கபட்ட குழவினரே இந்த வெள்ளைவான் கடத்தில் ஈடுபடுகின்றனர். இந்த வெள்ளைவான் குழுவுக்கு பயன்படுத்தபடுவோர் முன்னர் பாதாள உலக குழு போதைவஸ்து குழுவினரை தேடி அலைந்தவர்கள் தற்போது அவர்களிடம் தமிழரை கடத்தும் பணி கொடுக்கபட்டுள்ளது. கடத்தப்படுவோர் முதலில் சாயித்தியா வீதி எனப்படும் பழைய பாஸ்போட் காரியாலயத்திற்கு அருகில் உள்ள ஒரு 4 மாடி நில அறைக்கு கொண்ட செல்லபடுகின்றனர். அந்த கட்டித்தில்தான் தற்காலிகமாக கடத்தபடுவோர் கொண்டு சென்று நிலத்தில் குந்தி இருக்குமாறு உத்தரவிடப்படுகின்றனர். இந்த அறைக்குள் வைத்து அடிக்கும்போது இறப்போர் அல்லது கொல்லப்படுவோர் இரவு 2 மணியளவில் இடைவீதியால் பொறளை கொண்டு செல்லபட்டு பொறளை ஊடாக கந்தானை பிரதேசத்தில் கொண்டு சென்று வீசப்படுகின்றனர். இவர்களின் நடமாட்டத்தை இரவு 2 மணியில் இருந்து 4 மணிக்கு முன்னதாக அவதானிக்க முடீயும் என்று கைது செய்யப்பட்டு விடுதலையானவர் விபரிக்கின்றார்.

http://www.nitharsanam.com/?art=22379

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.