Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முந்தும் ‘தம்பி சார்’... பிந்தும் ‘மாப்பிள்ளை சார்’

Featured Replies

மிஸ்டர் கழுகு: முந்தும் ‘தம்பி சார்’... பிந்தும் ‘மாப்பிள்ளை சார்’

 

 

p44a_1517316907.jpg

‘முந்தும் தம்பி சார்... பிந்தும் மாப்பிள்ளை சார்’ என்று காகிதத்தில் எழுதி எடுத்துவந்து காண்பித்தார் கழுகார். முதலில் நமக்குப் புரியவில்லை. அதன்பிறகு, ‘தி.மு.க’ என்று எழுதி அதைக் காண்பித்தார். ‘புரிந்துவிட்டது’ என்று தலையசைத்தோம். சிரித்தபடியே செய்திகளைச் சிதறவிட்டார் கழுகார்.

“தி.மு.க-வில், ‘தலைவர்’ என்றால் கலைஞர்; ‘தளபதி’ என்றால் ஸ்டாலின். இது அனைவருக்கும் தெரியும். நெருங்கியவர்களுக்கு மட்டும்தான், ‘தம்பி சார்’ என்றால் உதயநிதி, ‘மாப்பிள்ளை சார்’ என்றால் சபரீசன் என்று தெரியும்.”

‘‘ஓஹோ!”

‘‘அதனால்தான், ‘தம்பி சார் முந்துகிறார்’ என்று சொன்னேன். உதயநிதி ஸ்டாலினின் அரசியல் பிரவேசம் குறித்து இரண்டு இதழ்களுக்கு முன்பு நான் கொடுத்த விஷயங்களெல்லாம் அச்சுப்பிசகாமல் அப்படியே நடக்கின்றன. மா.சுப்பிரமணியன் நடத்திய பொங்கல் விழாவில் உதயநிதி பங்கெடுத்ததுகூட ஆச்சர்யம் இல்லை. பேருந்துக் கட்டண உயர்வை எதிர்த்து தாம்பரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திலும் கலந்துகொண்டு அதிர்ச்சியைக் கொடுத்தார் உதயநிதி. அந்த நிகழ்ச்சிதான், அவரது அரசியல் பயணத்தின் தொடக்கமாக அமைந்தது.’’

‘‘தாம்பரத்திலிருந்து புதிய தலைவர் புறப்பட்டுவிட்டார் என்கிறீரா?”

‘‘அப்படித்தான் சொல்கிறார்கள் தி.மு.க-வில். மு.க.ஸ்டாலினின் மகன் என்ற அளவிலும், திரைப்பட நடிகர் என்ற அளவிலும்தான் உதயநிதி ஸ்டாலினை வெளியில் எல்லோருக்கும் தெரியும். ஆனால், முரசொலி அறக்கட்டளையின் தலைவர் பொறுப்பில் உதயநிதிதான் இருக்கிறார். ‘முரசொலி’ பத்திரிகையின் நிர்வாக இயக்குநரும் உதயநிதிதான். கடந்த ஏழு வருடங்களாக அவர் இந்தப் பொறுப்பில் இருக்கிறார். முரசொலி அலுவலகத்தை நவீனப்படுத்தியது அவர்தான். ஆனாலும், நேரடி அரசியலிலிருந்து அவர் ஒதுங்கியே இருந்தார். முரசொலி பவள விழா நிகழ்ச்சிகளில்தான், மேடைக்கு வந்து முன்வரிசையில் அமர்ந்தார். முரசொலியின் நிர்வாக இயக்குநர் என்ற வகையில், அவர் உட்கார வைக்கப்பட்டதாக அப்போது சொன்னார்கள். இந்த நிலையில், கையில் கொடி பிடிக்கவும் ஆரம்பித்துவிட்டார் உதயநிதி.”

‘‘ஏன் இந்தத் திடீர் ஆசை?”

‘‘ரஜினி, கமல், விஷால் என நட்சத்திரப் பட்டாளம் மொத்தமும் அரசியலை நோக்கி நகர்ந்துவருவதைப் பார்த்துத்தான், உதயநிதியும் உள்ளே இறங்கத் தயாராகிவிட்டதாகச் சொல்லப்படுகிறது. பொங்கல் தினத்தன்று ஸ்டாலினிடம் ஆசீர்வாதம் வாங்கிவிட்டு, அரசியல் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார் உதயநிதி. அப்போது, அரசியலுக்கு நடிகர்கள் வருவது பற்றிப் பேச்சு வந்தது. ‘அவங்க அரசியலுக்கு வர்றாங்க. நான் அரசியல்லயே இருக்கேன். இனி, நானும் எல்லா கூட்டங்களுக்கும் வர்றேன்’ என்று உதயநிதி சொல்ல... அதற்கு ஸ்டாலினும் தலையாட்ட... அரசியல் பிரவேசம் நடந்துள்ளது.”

p44d_1517316938.jpg

‘‘ஸ்டாலினின் மருமகன் சபரீசன்தானே இதுவரை ஆக்டிவாக இருந்தார்?”

‘‘ஸ்டாலினின் ‘நமக்கு நாமே’ பயணம் தொடங்கி, கடந்த ஐந்து ஆண்டுகளாக அவருக்கு ‘ஆல் இன் ஆல்’ ஆக இருந்தவர் சபரீசன். ‘ஸ்டாலினின் கட்டளையே சாசனம்’ என்று செயல்பட்டவர் அவர். ‘உதயநிதிக்கு அரசியல் ஆர்வம் இல்லை. அதனால், சபரீசனைக் கொண்டுவருகிறார்கள்’ என்று அப்போது பேச்சு எழுந்தது. இப்போது, உதயநிதிக்கே அந்த ஆசை வந்துவிட்டது. அதனால், சபரீசன் வழக்கம்போல் பின்னால் இருந்து செயல்படுவாராம். உதயநிதியையும் சபரீசனையும் ஒன்றாக உட்கார வைத்து ஸ்டாலின் பேசியுள்ளார். சபரீசனின் சம்மதத்துடன்தான், உதயநிதியின் செயல்பாடுகள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அதை வைத்துத்தான், ‘தம்பி சார் முந்துகிறார்... மாப்பிள்ளை சார் பிந்துகிறார்’ என்று சொன்னேன்.”

‘‘ஓஹோ!”

‘‘உதயநிதி ஸ்டாலினின் அரசியல் பிரவேசம், பொங்கல் நாளன்றே ஒத்திகை பார்க்கப்பட்டது என்கிறார்கள்.”

‘‘என்ன ஒத்திகை?”

‘‘ஒவ்வோர் ஆண்டும் பொங்கல் திருநாளன்று, கட்சிக்காரர்களை வீட்டில் வைத்து மு.க.ஸ்டாலின் சந்திப்பார். அப்போது, ஒவ்வொருவருக்கும் புதிய 20 ரூபாய் நோட்டை ஸ்டாலின் கொடுப்பார். இந்த ஆண்டும் அந்த நிகழ்வு நடைபெற்றது. மு.க.ஸ்டாலின் வழக்கம்போல், 20 ரூபாய் நோட்டைக் கொடுத்துக் கொண்டிருந்தார். அவருக்குப் பக்கத்தில் நின்று, நோட்டுகளை எடுத்துக்கொடுத்தவர் மகேஷ் பொய்யாமொழி. திடீரென்று மகேஷ் பொய்யாமொழி இடத்துக்கு உதயநிதி வந்தார். அவரே 20 ரூபாயை எடுத்துக்கொடுத்தார். அப்போதே அங்கிருந்தவர்களின் புருவங்கள் ஆச்சர்யத்தில் உயர்ந்தன. உதயநிதி, சபரீசன், மகேஷ் பொய்யாமொழி, கார்த்திக் மோகன் ஆகிய நால்வர் அணி உருவாகிவிட்டது. இதுதான், இனி தி.மு.க-வின் புதிய படையாகச் செயல்படப் போகிறது.”

‘‘ம்!”

‘‘சமீபத்தில் நாளிதழ் ஒன்றுக்கு ஸ்டாலின் பேட்டியளித்தார். அப்போது, ‘உங்களுக்கு அடுத்த நிலையில் வலுவான அடுத்த தலைமுறைத் தலைவர்கள் வரிசை ஒன்று வெளியே தெரியவில்லையே. அப்படி இருக்கிறார்களா? இருந்தால், அவர்களை எப்போது எப்படி வெளியே கொண்டுவரப் போகிறீர்கள்?’ என்று கேட்கப்பட்டது. அதற்கு ஸ்டாலின், ‘ஒரு படையே இருக்காங்க. சீக்கிரம் பார்ப்பீங்க’ என்று சொல்லியிருந்தார் ஸ்டாலின். அவர் சொல்லும் படை இதுதான் போலும்!”

‘‘சென்னையின் அடுத்த மேயர் உதயநிதி என இப்போதே தி.மு.க-வில் ஒரு குரூப் கிளம்பிவருகிறதே?”

‘‘உதயநிதியை முதலில் சென்னை மேயராகக் கொண்டுவருவதுதான் இவர்களது திட்டமாம். அதனால்தான், அவருக்கு அரசியல் பயிற்சி கொடுக்கும் பொறுப்பை சென்னை மாநகர முன்னாள் மேயரும், தற்போதைய எம்.எல்.ஏ-வுமான மா.சுப்பிரமணியன் வசம் ஒப்படைத்துள்ளனர். மாநகராட்சி நிர்வாக வேலைகள் பற்றித் துல்லியமாகத் தெரிந்தவர் மா.சுப்பிரமணியன். ‘சென்னை மாநகராட்சி என்பது தமிழக அரசாங்கத்தின் ‘மினி மாடல்’. அது ஒரு குட்டி அரசாங்கம். அங்கு மேயராக இருப்பவருக்கு, ஏறத்தாழ தமிழக முதலமைச்சருக்கு இருப்பதைப்போலவே நிர்வாக வேலைகள் இருக்கும். பட்ஜெட் போடுவது முதல் மற்ற நடைமுறைகளும் தமிழக அரசாங்கத்தைப் போலத்தான் சென்னை மாநகராட்சியிலும். அதனால், அந்தப் பதவியில் இருந்து உதயநிதி முதலில் பயிற்சி எடுக்கட்டும் என நினைக்கின்றனர்’ என்று சொல்கிறார்கள் தி.மு.க-வில்!” என்றபடி எழுந்தார் கழுகார்.

டேபிளில் இருந்த அல்வா பொட்டலத்தை அவர் பக்கம் திருப்பினோம். பார்த்துச் சிரித்தவர், ‘‘நடராசன் அனுப்பி வைத்த ‘அல்வா நியூஸ்’ பற்றிச் சொல்கிறேன் கேளும்...’’ என்றார்.

‘‘சொல்லும்’’ என்றோம்.

p44e_1517316961.jpg

‘‘சென்னையில் ஜனவரி 27 மற்றும் 28 ஆகிய நாள்களில் உலக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்கள் மாநாடு நடைபெற்றது. உலகம் முழுவதுமிருந்து வந்திருந்த கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்கள் கலந்துகொண்டனர். சமீபத்தில், கல்லீரல் மற்றும் கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட சசிகலாவின் கணவர் நடராசனும் அதில் கலந்துகொண்டார். அவருக்கு, அந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து காப்பாற்றிய டாக்டர் முகமது ரீலாவும் அதில் கலந்து கொண்டார். இரண்டாவது நாள் நிகழ்ச்சியில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்வதாக இருந்ததால், அன்று நடராசன் போகவில்லை. முதல் நாள் நிகழ்ச்சியில் காலை 10.30 மணிக்கு கலந்துகொள்ள வந்தவர், மதியம் 1.30 வரை இருந்தார். அதன்பிறகு, டாக்டர் ரீலா வீட்டில் விருந்து நடைபெற்றது. அந்த விருந்தில், நடராசன் சார்பில் அனைவருக்கும் திருநெல்வேலி அல்வா, தூத்துக்குடி மக்ரூன், கோவில்பட்டி கடலை மிட்டாய், பண்ருட்டி முந்திரி ஆகியவை அடங்கிய பை ஒன்று வழங்கப்பட்டது. அந்தப் பைகளில் ஒன்றை, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலாவுக்கும் அனுப்பிவைத்தார் நடராசன்’’ என்றபடி பறந்தார்.

படம்: கே.குணசீலன்


‘‘அமைச்சர் மிரட்டவில்லை!’’

31
.1.18 ஜூ.வி இதழில் ‘நிர்மலா சீதாராமனை மிரட்டினாரா வேலுமணி?’ என்ற கட்டுரை வெளியாகியிருந்தது. அதில் நம்மிடம் பேசிய பி.ஜே.பி-யின் எஸ்.ஆர்.சேகர், ‘‘அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கொடீசியா உள்ளிட்ட தொழில் அமைப்புகளை மிரட்டினார்’’ என்று கூறியிருந்தார். இதையடுத்து நம்மைத் தொடர்புகொண்ட கோவை கொடீசியா அமைப்பின் தலைவர் சுந்தரம், ‘‘அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எங்களை மிரட்டவில்லை. அமைச்சர் நிர்மலா சீதாராமன் எங்கள் அமைப்பின் உறுப்பினர்களுடன் ஒரு கலந்துரையாடலுக்கு வந்திருந்தார். அதன் முடிவில் அவர் 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு அறிவித்தது, நாங்களே எதிர்பார்க்காதது. மத்திய அரசும் மாநில அரசும் எங்களின் எல்லா முயற்சிகளுக்கும் ஆதரவாக உள்ளன” என்றார்.


‘‘உங்களைப் பார்க்கத்தான் வந்தேன்!’’

 

p44ee_1517316843.jpg

மிழகத்துக்கு கர்நாடகாவிடமிருந்து காவிரி நீர் பெற்றுத் தர வலியுறுத்தி,  அனைத்து விவசாய சங்கங்கள் மற்றும் அனைத்துக் கட்சிகள் சார்பில், தஞ்சாவூரில் வைகோ தலைமையில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. உடல்நலக் குறைவுடன் இருந்த எல்.கணேசன், வைகோ வந்திருப்பதைக் கேள்விப்பட்டு அவரைச் சந்திப்பதற்காகவே போராட்டத்துக்கு வந்தார். ம.தி.மு.க-விலிருந்து விலகி தி.மு.க-வில் சேர்ந்த எல்.கணேசன், பல ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் வைகோவைச் சந்தித்தார். ‘‘எப்படிண்ணே இருக்கீங்க, உடம்பு இப்ப பரவாயில்லையா! இந்த நிலையில் நீங்க ஏன் இங்க வந்தீங்க?’’ என எல்.கணேசன் கைகளைப் பற்றிக்கொண்டு வைகோ, நா தழுதழுக்க வாஞ்சையுடன் விசாரித்தார். ‘‘நான் உங்களைப் பார்க்கத்தான் வந்தேன்’’ என்றார் எல்.கணேசன். இருவரும் கொஞ்சம் நேரம் ஒருவருக்கொருவர் பார்த்துக்கொண்டு கண் கலங்கினர்.


p44c_1517316880.jpg

‘மக்கள் சந்திப்பு புரட்சிப் பயணம்’ என்று பிப்ரவரி 2-ம் தேதியிலிருந்து மாவட்டவாரியாக சுற்றுப்பயணம் செல்கிறார் தினகரன். தஞ்சை வடக்கு மாவட்டத்தில் தனது பயணத்தைத் தொடங்குகிறார். ‘‘நான் இந்தப் பயணத்தை முடிக்கும்போது இந்த ஆட்சி கலைந்திருக்கும்’’ என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லியிருக்கிறார் தினகரன்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தலை நடத்த, கடந்த 25-ம் தேதி அறிவிக்கை வெளியிடப்பட்டது. அரசியல் கட்சிகளை மிஞ்சும் அளவுக்கு இப்போதே களேபரங்கள் ஆரம்பித்துவிட்டன. பல கோடிக்கு பணப்புழக்கம் இருக்கும் என்று சொல்கிறார்கள்.

‘கடந்த சில வருடங்களில் ரஜினி குடும்பத்தினர் பல ஃபைனான்சியர்களுடன் நிகழ்த்திய கொடுக்கல் வாங்கல்களில் பிரச்னையானது எத்தனை, இன்னும் நிலுவையில் உள்ளவை எவை எவை?’ என்று தமிழக உளவுத்துறையினர் தகவல் சேகரித்து வருகிறார்கள்.

கோவை மாநகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் சூதாட்ட கிளப்கள் ஜெகஜோதியாக நடக்கின்றன. அந்தந்த ஏரியா ஆளுங்கட்சிப் பிரமுகர்களுக்குத் தினமும் பத்தாயிரம் ரூபாயை வங்கிக்கணக்கில் போடுகிறார்களாம். கப்பம் கட்டாத ஒரு சூதாட்ட கிளப்பில் 12 லட்ச ரூபாயை போலீஸார் பிடித்தார்களாம். போலீஸ் கல்லா களைகட்டுகிறதாம்.

https://www.vikatan.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.