Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அடுத்த ஜனா­தி­பதி தேர்­த­லுக்கு முன்னர் அர­சியல் தீர்வு தருவேன் உறு­தி­யாக கூறு­கிறார் பிர­தமர் ரணில் விக்கி­ர­ம­சிங்க

Featured Replies

அடுத்த ஜனா­தி­பதி தேர்­த­லுக்கு முன்னர் அர­சியல் தீர்வு தருவேன்

 

உறு­தி­யாக கூறு­கிறார் பிர­தமர் ரணில் விக்கி­ர­ம­சிங்க 

(எம்.எம்.மின்ஹாஜ்)

புதிய அர­சி­ய­ல­மைப்பு பணிகள் உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­தலின் பின்னர் ஆரம்­ பிக்­கப்­படும். இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வு காணு­வதில் இரா.சம்­பந்தன் மாத்­தி­ர­மல்ல நானும் பல நெருக்­க­டி­களை சந்­தித்து வரு­கின்றேன். ஆகவே இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வு காண வடக்­கிலும் தெற்­கிலும் உள்ள எமது பிர­தி­வா­தி­களை இணைத்துக் கொண்டே நாம் பய­ணிக்க வேண்­டி­யுள்­ளது. இதன்­படி அடுத்த ஜனா­தி­பதி தேர்­த­லுக்கு முன்னர் அனை­வ­ரையும் ஒன்­றி­ணைத்து கொண்டு  தேசிய பிரச்­சி­னைக்கு தீர்வு காண நட­வ­டிக்கை எடுப்போம் என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார்.   

அத்­துடன் வடக்கு கிழக்கு இணைப்­புக்கு கிழக்கு முஸ்­லிம்கள் ஆத­ர­வில்லை. கிழக்கு மக்கள் எதிர்ப்பு வெளி­யிடும் போது இரு மாகாண இணைப்பு ஒரு­போதும் சாத்­தி­ய­மா­காது. எனவே ஒற்­றை­யாட்­சிக்குள் அதி­கா­ரத்தை பகிர்வோம். மேலும் தற்­போ­தைக்கு அர­சியல் கைதிகள் அனை­வரும் விடு­விக்­கப்­பட்டு விட்­டனர். தற்­போது பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் கீழ் கைது செய்­யப்­பட்­டோரே சிறையில் உள்­ளனர். இவர்­களை அர­சியல் கைதிகள் என்று என்னால் ஏற்க முடி­யாது என்றும் அவர் குறிப்­பிட்டார்.

உள்­ளூ­ராட்சி தேர்­தலை அடிப்­ப­டை­யாக கொண்டு சம­கால அர­சியல் நில­வரம் குறித்து கேசரி வழங்­கிய விசேட செவ்­வியின் போதே பிர­தமர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

கேச­ரி­யு­ட­னான செவ்­வியில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்த முக்­கிய விட­யங்கள் வரு­மாறு

தேசிய ஐக்­கியம் பல­மா­கி­யுள்­ளது. இந்­நி­லையில் அனைத்து தரப்­பி­ன­ரையும் நாம் ஒன்­றி­ணைக்க வேண்டும். எனினும் தேசிய நல்­லி­ணக்கம் தொடர்­பான எமது நிலைப்­பாட்டில் வேறு யாரும் இல்லை. இதன்­படி ஏனை­யோ­ரையும் ஒரு நிலைப்­பாட்­டுகுள் கொண்டு வர வேண்டும். தற்­போது பேச்­சு­வார்த்தை நடத்தி வரு­கின்றோம். இதனை அவ­ச­ர­மாக தீர்க்க முடி­யாது. புதிய அர­சி­ய­ல­மைப்பு பணி­க­ளுக்கு எவ­ரா­வது எதிர்ப்பு வெளி­யிட்டால் எதிர்ப்பு வெளி­யி­டுவோர் தொடர்பில் மக்கள் தீர்­மா­னிப்பர்.

தேசிய பிரச்­சி­னைக்கு தீர்வு காணும் விட­யத்தில் எதிர்க்­கட்சி தலைவர் இரா. சம்­பந்­த­னுக்கும் வடக்கில் நெருக்­க­டி­யுள்­ளது. அவ­ருக்கு மாத்­தி­ர­மின்றி எனக்கும் நெருக்­க­டிகள் உள்­ளன. எனினும் அனை­வ­ரையும் இணைத்துக் கொண்டே நாம் பய­ணிக்க வேண்டும். நாம் ஒன்­றி­ணைந்­த­மை­யினால் எம்­மிடம் மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்மை இல்லை. ஆகவே அனைத்து தரப்­பையும் ஒன்­றி­ணைக்க வேண்டும்.

சமிஷ்­டிக்கு சமாந்­த­ர­மான தீர்­வி­னையே தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு வலி­யு­றுத்­து­கின்­றது. எனினும் நாம் ஒற்­றை­யாட்­சிக்கு பாதிப்பு ஏற்­ப­டாத முறை­மையை வலி­யு­றுத்­து­கின்றோம். ஒற்­றை­யாட்சி இருக்­கின்­றது என்­ப­தற்­காக அதி­கா­ர­ப­ர­வ­லாக்­கத்தை கட்­டு­ப­டுத்த முடி­யாது. அதி­கார பர­வ­லாக்­கத்­துடன் கூடிய ஒற்­றை­யாட்­சியை ஏற்­ப­டுத்த வேண்டும். இதன்­படி ஒற்­றை­யாட்­சிக்கு பாதிப்பு ஏற்­ப­டாத அதி­கார பர­வ­லாக்­கத்தை நாம் முன்­னெ­டுப்போம்.

அத்­துடன் புதிய அர­சி­ய­ல­மைப்பு பணியை பொறுத்­த­வ­ரையில் இடைக்­கால அறிக்­கையை சமர்ப்­பித்­துள்ளோம். புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான நட­வ­டிக்­கை­களை உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­தலின் பின்னர் ஆரம்­பிப்போம். மேலும் ஜனா­தி­பதி தேர்­த­லுக்கு முன்னர் தேசிய பிரச்­சி­னைக்கு தீர்வு காண நட­வ­டிக்கை எடுப்போம்.

அதே­போன்று தற்­போது யாழ்ப்­பாணம் முதல் தெவிந்­துர முனை வரை அனைத்து இன மக்­களும் சுதந்­தி­ர­மாக வாழ்­கின்­றனர். நினைத்­த­வாறு போராட்­டங்­களை நடத்­து­கின்­றனர். ஆகவே வடக்கில் உள்­ள­வர்­க­ளுக்கு சுதந்­திரம் இல்லை என்று கூற முடி­யாது. மூவின மக்­க­ளுக்கும் ஜன­நா­யக சுதந்­தி­ரத்தை வழங்­கி­யுள்ளோம். எனினும் அர­சியல் ரீதி­யான உரிமை மாத்­தி­ரமே வழங்க வேண்­டி­யுள்­ளது.

தற்­போது அர­சியல் கைதிகள் எவரும் இல்லை. பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்­யப்­பட்டோர் மாத்­தி­ரமே உள்­ளனர். அத்­துடன் வடக்­கி­லுள்ள காணி­களை விடு­விப்­ப­தற்­கான நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. பெரும்­பா­லான காணிகள் தற்­போது விடு­விக்­கப்­பட்­டுள்­ளன. மேலும் காணாமல் போன­வர்கள் தொடர்பில் விசேட அலு­வ­ல­கத்தை நிறு­வி­யுள்ளோம். இதற்­கான நட­வ­டிக்­கைகள் ஆரம்­பித்­த­வுடன் பணிகள் முன்­ந­கர்த்தி செல்­லப்­படும்.

சிறைச்­சா­லையில் இருந்த பெரும்­பா­லான அர­சியல் கைதி­களை நாம் விடு­வித்­துள்ளோம். தற்­போது வழக்கு தாக்கல் செய்­யப்­பட்­ட­வர்கள் அர­சியல் கைதிகள் அல்ல. அவர்கள் நீதி­மன்ற தீர்ப்பின் பிர­காரம் தடுத்து வைக்­கப்­பட்­ட­வர்­க­ளாகும். ஆகவே இவர்­களை அர­சியல் கைதிகள் என என்னால் ஏற்க முடி­யாது. ஏனெனில் தற்­போது சிறையில் உள்­ள­வர்கள் முன்­னெ­டுத்த செயற்­பா­டுகள் பார­தூ­ர­மா­ன­வை­யாகும்.

வடக்கு கிழக்கு அபி­வி­ருத்­தி­களை நாம் முன்­னெ­டுத்து வரு­கின்றோம். வடக்கு மாகாண சபை வேறு அடிப்­ப­டையில் அபி­வி­ருத்­தி­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றது. யுத்­தத்­தினால் வடக்கின் அபி­வி­ருத்தி முழு­மை­யாக பாதிக்­கப்­பட்­டது என்­ப­தனை நினைவில் வைத்துக் கொள்­ளுங்கள். இதனை மீளவும் கட்­டி­யெ­ழுப்ப வேண்டும். அங்கு சமூக கட்­ட­மைப்பு முழு­மை­யாக இல்­லாமல் போயுள்­ளது. கிரா­மத்தின் தலை­வர்கள் , பிர­ப­ல­மா­ன­வர்கள் வெளி­நாடு சென்­றுள்­ளனர். ஆகவே யாழ்ப்­பா­ணத்தின் பிரச்­சினை கிழக்கு மாகா­ணத்தை போன்­ற­தல்ல. எனவே ஆரம்ப கட்ட நட­வ­டிக்­கை­களை நாம் ஆரம்­பித்­துள்ளோம்.

வடக்கு கிழக்கு இணைப்­புக்கு கிழக்கின் முஸ்­லிம்­களின் ஆத­ர­வில்லை. ஆகவே வடக்கு கிழக்கு இணைப்பு சாத்­தி­ய­மற்­றது. வடக்கில் ஆத­ரவு இருந்­தாலும் கிழக்கில் கிடை­யாது. ஐக்­கிய நாடுகள் மனித உரிமை மார்ச் மாத அமர்வின் போது அர­சாங்கம் வெற்­றி­க­ர­மாக அதற்கு முகங்­கொ­டுக்கும். அத்­துடன் பலஸ்­தீ­னத்­திற்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்­த­மைக்கு அமெ­ரிக்கா எமக்கு எந்­த­வொரு தடையும் விதிக்­க­வில்லை. உலக நாடுகள் பெரும்­பா­லா­னவை பலஸ்­தீ­னத்­துக்கு ஆத­ர­வா­கவே வாக்­க­ளித்­தன.

புதிய பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தை உரு­வாக்கும் வரை தற்­போ­தைய சட்டம் அமுலில் இருக்கும். ஏனெனில் சர்­வ­தேச பயங்­க­ர­வா­தத்­திற்கு ஏற்ற வகையில் பயங்­க­ர­வாத எதிர்ப்பு சட்டம் உரு­வாக்க வேண்டும். அதனை கவ­ன­மாக செய்ய வேண்டும். கொள்கையின் பிரகாரம் இதனை நீக்க வேண்டும்.

விடுதலை புலிகள் கொழும்பை மாத்திரமின்றி யாழ்ப்பாணத்தை அழித்தனர். தமிழ் தலைவர்களை அழித்தது இராணுவமல்ல விடுதலை புலிகளாகும். விடுதலை புலிகளின் பூரண கொள்கைகளை எந்த பாராளுமன்ற உறுப்பினர்களும் ஏற்க முடியாது. அப்படி செய்தால் அது சத்தியபிரமாணத்தை மீறும் செயலாகும். எனினும் விடுதலை புலிகளின் கலாசார,பண்பாடு ரீதியான கொள்கைகளை ஏற்க முடியும்.

மலையகத்தில் 15 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கவுள்ளோம். அப்பகுதியில் கல்வி ,சுகாதாரத்தை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுப்பேன். மலையகத்தில் அதிக தொழில்வாய்ப்புகளை ஏற்படுத்துவோம். 

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-02-01#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.