Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆளுனர் அர்ஜூன் மகேந்திரன் உள்ளிட்ட மூவரை சந்தேகநபர்களாக நீதிமன்றம் அறிவிப்பு

Featured Replies

ஆளுனர் அர்ஜூன் மகேந்திரன் உள்ளிட்ட மூவரை சந்தேகநபர்களாக நீதிமன்றம் அறிவிப்பு

arjun-2.jpg?resize=578%2C250
பிணை முறி கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பிலான வழக்கில் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரன் , ட்ரசரீஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி அர்ஜூன் அலோசியஸ் கசுன் பலியசேன ஆகிய மூன்று பேரை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் சந்தேகநபர்களாக பட்டியலிட்டுள்ளது

சம்பவம் தொடர்பாக குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்படுகின்ற விசாரணைகளுக்ககமைவாக இவர்கள் மூவரும் சந்தேகநபர்களாக பெயரிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதாக வழக்கு இன்றையதினம் விசாரணைக்கு வந்த போதே மேற்படி தீர்மானம் அறிவிக்கபப்பட்டுள்ளது.

மேலும் அர்ஜூன் மகேந்திரனை எதிர்வரும் 15ம் திகதிக்கு முன்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் அளிக்குமாறு உத்தரவிட்ட நீதிமன்றம் வழக்கினை எதிர்வரும் 16ம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது

http://globaltamilnews.net/2018/64847/

  • கருத்துக்கள உறவுகள்

ரவி, போன்ற, பெரிய சுறா தப்ப இவயள் தான் மாட்டப் போகினம்.

  • தொடங்கியவர்

மகேந்திரன், அலோசியஸ் பலியசேன சந்தேகநபர்கள்

aa-43b378c9cf031cc8a092d594fa7777e7997666fd.jpg

 

கொழும்பு கோட்டை நீதிமன்றில் பெயரிடப்பட்டனர்; குற்றப் புலனாய்வு பிரிவில் ஆஜராகவும் உத்தரவு

(எம்.எப்.எம்.பஸீர்)

இலங்கை மத்­திய வங்­கியின் பிணை முறி விநி­யோ­கத்தில் இடம்­பெற்­ற­தாகக் கூறப்­படும் மோசடி தொடர்பில் முன்­னெ­டுக்­கப்­பட்­டு­வரும் விசா­ர­ணை­களில் முன்னாள் மத்­ திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்­திரன், அவ­ ரது மரு­மகன்  பேப்­பச்­சுவல் ட்ரசரீஸ் நிறு­வ­னத்தின் தலைவர் அர்­ஜுன அலோ­சியஸ்,  அந் நிறு­வ­னத்தின் பிர­தான நிறை­வேற்று அதி­காரி  கசுன் பலிய­சேன ஆகியோர் சந்­தேக நபர்­க­ளாக பெய­ரி­டப்­பட்­டுள்ள நிலையில் அவர்கள் நாட்டை விட்டு வெளி­யேற கோட்டை  நீதிவான் நீதி­மன்றம் நேற்று தடை உத்­த­ரவு பிறப்­பித்­தது. 

இலங்கை மத்­திய வங்­கியின் பிணை முறி விநி­யோக நட­வ­டிக்­கையின் போது, வெளிப்­ப­டுத்த முடி­யாத நிதி தொடர்­பி­லான இர­க­சிய தக­வல்­களை, மத்­திய வங்­கியின் சில பிரி­வினர் வழங்­கி­யுள்­ளார்­களா என விசா­ரணை ஒன்­றினை நடாத்­து­மாறு மத்­திய வங்கி ஆளுநர் கலா­நிதி இந்தி­ரஜித் குமா­ர­சு­வாமி கடந்த 2016.11.25 அன்று பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜய­சுந்­த­ர­விடம் செய்த முறைப்­பாடு தொடர்பில் விசா­ர­ணைகள் குற்றப் புல­னாய்வுப் பிரி­வி­னரால் முன்­னெ­டுக்­கப்பட்­டுள்ள நிலை­யி­லேயே, அந்த விசா­ர­ணையின் பிர­காரம் இந்த உத்­தரவு கோட்டை நீதிவான் லங்கா ஜய­ரத்­ன­வினால் பிறப்­பிக்­கப்பட்­டது. 

முன்னாள் மத்­திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்­திரன், அவ­ரது மரு­மகன்  பேப்­பச்­சுவல் ட்ர்சரீஸ் நிறு­வ­னத்தின் தலைவர் அர்­ஜுன அலோ­சியஸ்,  அந் நிறு­வ­னத்தின் பிர­தான நிறை­வேற்று அதி­காரி  கசுன் பலி­சேன ஆகியோர் இந்த விவ­கா­ரத்தில் சந்­தேக நபர்­க­ளாக குற்றப் புல­னாய்வுப் பிரி­வி­னரால் பெய­ரி­டப்­பட்­டுள்ள நிலையில் அவர்­க­ளுக்கு எதி­ராக 7 குற்­றச்­சாட்­டுக்கள் சுமத்­தப்­பட்­டுள்­ளன.

குற்­றச்­சாட்­டுக்கள்:

இலங்கை அர­சுக்கு தேவை­யான கடன் தொகையை குறைந்த செலவில் பெற்­றுக்­கொண்டு அந்த கடன் தொகையை அர­சுக்கு கொடுக்க கட­மைப்­பட்­டுள்ள இலங்கை மத்­திய வங்­கியின் பிர­தான நிறை­வேற்று அதி­கா­ரி­யான அது தொடர்பில் பூரண அறி­வுள்ள இலங்கை மத்­திய வங்­கியின் ஆளு­ந­ராக இருந்­து­கொண்டு ல­க் ஷமன் அர்ஜுன் மகேந்­திரன் வஞ்­­சக­மான முறையில் அந்த கடன் தொகையைப் பெற்­றுக்­கொள்ள நட­வ­டிக்கை எடுத்து அந்த தொகையை சட்ட விரோ­த­மாக பயன்­பாட்­டுக்கு எடுத்­தமை ஊடாக திட்­ட­மிட்டு நம்­பிக்கை துரோகம் செய்­துள்ளார்.

இது 1988 ஆம் ஆண்டின் 76 ஆம் இலக்க, 1999 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க பொதுச் சொத்து துஷ்­பி­ர­யோக சட்­டத்தின் கீழ் செய்­யப்­பட்ட  குற்­ற­மாகும். அத்­துடன் இது தண்­டனை சட்டக் கோவையின் 389,381 இன் கீழும் குற்­ற­மாக கரு­தப்­ப­டு­கின்­றது.

2. சட்ட விரோத பயன்­பாடு எனும் குற்றம் பொதுச் சொத்­தான அரச பணம் தொடர்பில் புரி­யப்­பட்­டுள்­ளதால், மத்­திய வங்கி ஆளு­ந­ராக இருந்­து­கொண்டு லக் ஷ்மன் அர்ஜுன் மகேந்­திரன் 1988  ஆம் ஆண்டில் 76 ஆம் இலக்க மற்றும் 1999 ஆம் ஆண்டின் 26 ஆம் இலக்க  மற்றும் 1982 ஆம் ஆண்டின்  12 ஆம் இலக்க பொதுச் சொத்து துஷ்­பி­ர­யோக சட்­டத்தின் கீழ் புரி­யப்­பட்ட குற்றம் எனும் அடிப்­ப­டையில்  அதன் 5(1) ஆம் அத்­தி­யா­யத்தின் கீழ் கூறப்­படும் தண்­டனை சட்டக் கோவையின் 386 ஆவது அத்­தி­யா­யத்தின் கீழான குற்­ற­மாகும்.

3. முதல் இரு குற்­றங்­களைப் புரிய சதி செய்தல் தொடர்பில் இலங்கை மத்­திய வங்­கியின் ஆளு­ந­ராக இருந்த லக்ஷ்மன் அர்ஜுன் மகேந்­திரன், பெப்­பச்­சுவல் ட்ரசரீஸ் நிறு­வ­னத்தின் உத்­தி­யோ­க­பூர்­வ­மற்ற பிர­தான நிறை­வேற்றுப் பணிப்­பாளர், பேப்­பச்­சுவல் ஹோல்டிங்ஸ் நிறு­வ­னத்தின் பணிப்­பா­ள­ரான அர்ஜுன் ஜோசப் அலோ­சியஸ், ஆகி­யோரால் 1988 ஆம் அண்டின் 76 ஆம் இலக்க, 1999 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க 12 ஆம் இலக்க பொதுச் சொத்து துஷ்­பி­ர­யோக சட்­டத்தின் கீழ் குற்றம் ஒன்­றினை புரிந்­துள்­ளனர். அச்­சட்­டத்தின் 5(1) ஆம் அத்­தி­யா­யத்தின் படி அக்­குற்றம் தண்­டனை சட்டக் கோவையின் 389/391 ஆம் அத்­தி­யா­யத்தின் கீழ் குற்­ற­மாகும்.

4.1ஆம், 2 ஆம் குற்றங்­களை புரிய ஒத்­தாசை வழங்­கி­யமை தொடர்பில் பெப்­பச்­சுவல் ட்ரசரீஸ் நிறு­வ­னத்தின் உத்­தி­யோ­க­பூர்­வ­மற்ற பிர­தான நிறை­வேற்றுப் பணிப்­பாளர், பேப்­பச்­சுவல் ஹோல்டிங்ஸ் நிறு­வ­னத்தின் பணிப்­பா­ள­ரான அர்ஜுன் ஜோசப் அலோ­சியஸ், அந் நிறு­வ­னத்தின் நிறை­வேற்று பணிப்­பாளர் பலி­சேன அப்­பு­ஹா­மி­லாகே கசுன் பலி­சே­னவும் தண்­டனை சட்டக் கோவையின் 102, 389/381 ஆம் அத்­தி­யா­யத்தின் கீழ் குற்­ற­மி­ழைத்­துள்­ளனர்.

5. 2015 பெப்ர­வரி மாதம் 27 ஆம் திகதி இடம்­பெற்ற பிணை முறி ஏலத்தின் போது கேள்­வி­மனு தொடர்பில் தீர்­மா­னிக்கும் போதும் இர­க­சிய நிதித் தக­வல்­களை உள்­ள­டக்­கி­ய­தான  அத­னுடன் தொடர்­பு­பட்ட விட­யங்­களின் போதும் இலங்கை மத்­திய வங்­கியின் ஆளு­ந­ராக இருந்த லக்ஷ்மன் அர்ஜுன் மகேந்­திரன் பெப்­ப­ச்சுவல் ட்சரீஸ் நிறு­வ­னத்தின் உத்­தி­யோ­க­பூர்­வ­மற்ற பிர­தான நிறை­வேற்றுப் பணிப்­பாளர், பேப்­பச்­சுவல் ஹோல்டிங்ஸ் நிறு­வ­னத்தின் பணிப்­பா­ள­ரான அர்ஜுன் ஜோசப் அலோ­சியஸ், அந் நிறு­வ­னத்தின் நிறை­வேற்று பணிப்­பாளர் பலி­சேன அப்­பு­ஹா­மி­லாகே கசுன் பலி­சேன ஆகி­யோரும் 1937 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க சட்­டத்தின் 56 அ (1) ஆம் அத்­தி­யா­யத்தின் கீழ் குற்­ற­மி­ழைத்­துள்­ளனர்.

6. 5 ஆவது குற்றத்தை புரி­வ­தற்­காக இலங்கை மத்­திய வங்கி ஆளு­ந­ராக இருந்த லக்ஷ்மன் அர்ஜுன் மகேந்­திரன், பெப்­பச்­சுவல் ட்ரசரீஸ் நிறு­வ­னத்தின் உத்­தி­யோ­க­பூர்­வ­மற்ற பிர­தான நிறை­வேற்றுப் பணிப்­பாளர் , பேப்­ப­ச்சுவல் ஹோல்டிங்ஸ் நிறு­வ­னத்தின் பணிப்­பா­ள­ரான அர்ஜுன் ஜோசப் அலோ­சியஸ், அந் நிறு­வ­னத்தின் நிறை­வேற்று பணிப்­பாளர் பலி­சேன அப்­பு­ஹா­மி­லாகே கசுன் பலி­சே­னவும் உதவி ஒத்­தாசை புரிந்­தமை தொடர்பில் தண்­டனை சட்டக் கோவையின் 113 ஆ அத்­தி­யா­யத்தின் கீழ் குற்­ற­மி­ழைத்­துள்­ளனர். 

7. 5 ஆவது குற்­றத்தை புரிய உத­வி­யமை ஊடாக இலங்கை மத்­திய வங்­கியின் ஆளு­ந­ராக இருந்த லக்ஷ்மன் அர்ஜுன் மகேந்­திரன் பிணை­யங்கள் சட்­டத்தின் 56 அ(1) கீழ் குற்­ற­மி­ழைத்­துள்ளார் என ஏழு குற்­றச்­சாட்­டுக்­களை குற்றப் புல­ன­ாய்வுப் பிரிவு சுமத்­தி­யுள்­ளது.

 இந் நிலை­யி­லேயே இது தொடர்பில் ஆராய்ந்த கோட்டை நீதிவான் லங்கா ஜய­ரத்ன முதல் சந்­தேக நப­ரான மத்­திய வங்கி முன்னாள் ஆளுநர் லக்ஷ்மன் அர்ஜுன் மகேந்­திரன், பெப்­பச்சுவல் ட்ரசரீஸ் நிறு­வ­னத்தின் உத்­தி­யோ­க­பூர்­வ­மற்ற பிர­தான நிறை­வேற்றுப் பணிப்­பாளர் , பேப்­பச்­சுவல் ஹோல்டிங்ஸ் நிறு­வ­னத்தின் பணிப்­பா­ள­ரான அர்ஜுன் ஜோசப் அலோ­சியஸ், அந் நிறு­வ­னத்தின் நிறை­வேற்று பணிப்­பாளர் பலி­சேன அப்­பு­ஹா­மி­லாகே கசுன் பலி­சேன ஆகியோர் விசா­ர­ணை­க­ளுக்கு ஒத்­து­ழைக்­காது நாட்டை விட்டு செல்­வ­தற்­கான வாய்ப்­புக்கள் உள்­ளதால்,  அவர்கள் நாட்டை விட்டு வெளி­யேற, உள் நுழைய முடி­யு­மான அனைத்து விமான நிலை­யங்கள், துறை­மு­கங்­க­ளுக்கும் 1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க குற்­ற­வியல் நடை­முறை சட்டக் கோவையின் 124 ஆம் அத்­தி­யா­யத்தின் பிர­காரம் பயணத் தடை விதித்து உத்­தரவிட்டார்.

அத்­துடன் சட்­ட­வி­ரோ­த­மாக சம்­பா­தித்­துள்ள 9147000000ரூபா நிதியை பேப்­ப­ச்சுவல் ட்ரசரீஸ் நிறு­வ­னத்­துக்கோ அல்­லது அத­னுடன் தொடர்­பு­டைய நிறு­வனம் ஒன்­றுக்கோ  பரி­மாற்­று­வ­தையும் தடை செய்து உத்­தர­விட்டார்.

அத்­துடன் பிணை முறி கொடுக்கல் வாங்க­லுடன் தொடர்­பு­டைய அனைத்து ஆவ­ணங்­க­ளையும்  குற்றப் புல­ன­ாய்வுப் பிரி­வுக்கு வழங்கு­மாறும்,  நீதி­மன்ற அனு­ம­தி­யின்றி பேப்­பச்­சுவல் ட்ரசரீஸ் நிறு­வ­னத்­துக்கு சொந்­த­மான பணம், சொத்­துக்கள் பறி­மாற்றல், பரி­சாக வழங்கல், வேறு கணக்கில் வைப்­பி­லிடல் உள்­ளிட்ட  அனைத்து கொடுக்கல் வாங்கல் நட­வ­டிக்­கை­க­ளையும் நீதிவான் தடை செய்து உத்­தரவிட்டார்.

 இந் நிலையில் முன்னாள் மத்­திய வங்கி ஆளுநர் லக்ஷ்மன் அர்ஜுன் மகேந்­திரன் தற்­போது சிங்கப் பூரில் உள்­ள­தாக உளவுத் தகவல் கிடைத்திருப்பதாக குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்ததையடுத்து, அவர் எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்னர் குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகி வாக்கு மூலம் வழங்க வேண்டும் எனவும் நீதிவான் உத்தரவிட்டார்.

அத்துடன் 2015.2.27 முதல் அந் நிறுவனம் செயலிழக்கச் செய்யப்படும் வரை பேப்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்திடம் இருந்த சொத்துக்கள் மற்றும் பணம் தொடர்பில் கணக்காய்வாளர் ஒருவர் ஊடாக உறுதிப்படுத்தி அறிக்கை சமர்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

 குற்றப் புலனாய்வுப் பிரிவு சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் யசந்த கோதாகொட மன்றில் ஆஜராகி கருத்துக்களை முன்வைத்த நிலையிலேயே இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-02-03#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.