Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ், தமிழர், திராவிடம்

Featured Replies

தமிழர்கள் யார் என்ற கேள்வி அடிப்படையிலேயே சிக்கலான கேள்வி.

சங்ககாலத்திலேயே தமிழ், தமிழர், தமிழகம் என்ற சொற்களைக் காணலாம் . 'தமிழ்கெழு மூவர் காக்கு மொழிபெயர் தே எத்த பன்மலை யுறந்தே' என்கிறது அகம்(31).ஆனால் தமிழர் மற்றும் திராவிடர் என்கிற சொல்லாடலை அரசியல் சொல்லாடலாக மாற்றியவர்கள் தலித்துகளே, இன்னும் குறிப்பாகச் சொல்லப்போனால் பறையர்களே.

1881ல் அயோத்திதாசர் திராவிடமகாஜனசங்கம் என்னும் அமைப்பை ஏற்படுத்துகிறார். 'ஒருபைசா தமிழன்' என்னும் இதழை நடத்தியவரும் இவரே. அயோத்திதாசர் பறையர்களைப் பூர்வபவுத்தர்களாகக் காண்கிறார். இந்துமதத்தில் காணப்படும் பண்டிகைகளுக்கெல்லாம் பவுத்தரீதியான விளக்கங்கள் கொடுக்கிறார். ஆனால் அருந்ததியர்களை அவர் பவுத்தர்களாக ஏற்றுக்கொள்ளவில்லை. அருந்ததியர், விறலியர், தோட்டிகள், குறவர்கள் ஆகியோர் 'இயல்பிலேயே' தாழ்ந்தவர்கள்' என்னும் அவர், பஞ்சமர் பாடசாலைகளில் அருந்ததியர் குழந்தைகளை பறையச்சிறுவர்களோடு சேர்த்துப் பயிற்றுவிப்பதை 'குப்பைக்கூளங்களை வைரமணிகளோடு சேர்ப்பதுபோல' என்றுகூறி எதிர்க்கிறார்.

அதன்பிறகு மறைமலையடிகள், மனோன்மனீயம் சுந்தரனார் போன்றோர் ஆரியத்திற்கு எதிராக தமிழையும் திராவிடத்தையும் தூக்கிப்பிடித்தனர். ஆனால் இவர்களின் தமிழ்த்தேசியம் என்பது சைவத்தை அடிப்படையாகக் கொண்ட வெள்ளாளத்தேசியமே. அவர்கள் பார்ப்பனரின் அதிகாரத்தை மறுத்தார்களே தவிர வருணாசிரமத்தை மறுக்கவில்லை. 'மாட்டு மாமிசம் உண்ணாதார்தான் தமிழர்' என்று வரையறுக்கிறது சென்னைப் பல்கலைக்கழக தமிழகராதி. 'பறையரொழிந்தோர்தான் தமிழர்' என்கிறார் வெள்ளைக்கால் சுப்பிரமணியம்பிள்ளை. சிறுதெய்வங்களைத் துஷ்டதேவதைகள் என்று இகழ்கிறார் மறைமலையடிகள். அதேபோல அன்று நீதிக்கட்சியில் இருந்த பல தலைவர்களும் கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் பார்ப்பனர்களின் அதிகாரத்தை மறுத்தார்களேயன்றி, பார்ப்பனீயைத்தோ இந்துமதத்தையோ மறுக்கவில்லை.

திராவிடர் என்ற சொல்லாடலை ஒரு பரந்த தளத்திற்குக் கொண்டுசென்றவர் பெரியார் ஈ.வெ.ரா ஒருவரே. அவர் திராவிடர் என்னும் கருத்தாக்கத்தை சாதியொழிப்பு, பார்ப்பன எதிர்ப்பு ஆகிய இங்கு காலங்காலமாய் நிலவிவந்த அவைதீகமரபுடனும் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்னும் நவீனக் கருத்தாக்கங்களுடனும் இணைத்தார்.

சாதியையும் அதற்குக் காரணமாயிருக்கும் இந்துமதத்தையும் எதிர்த்தன் மூலம் அவர் திராவிடர் என்னும் சொல்லுக்கு 'சாதியற்றவர்' என்னும் அர்த்தத்தைத் தந்தார். மேலும் பொதுவாக தேசியம் என்பதே மற்றமை (others) அல்லது எதிரிகளை அடிப்படையாகக் கொண்டே கட்டமைக்கப்படுவது. காந்தியின் இந்தியத்தேசியம் வெள்ளையரை மற்றமை என்றதென்றால் திலகர் போன்றோர்கள் முன்வைத்த இந்து-இந்தியத்தேசியம் முஸ்லீம்களை மற்றமையாக முன்வைத்தது.

ஆனால் பெரியார் பார்ப்பனர்களையே மற்றமையாக நிறுத்தினார். பார்ப்பனரல்லாதார் அனைவரும் திராவிடர்கள் என்றார். அதற்கு அவரைப் பொறுத்தவரை நிலப்பகுதி கூட தடையில்லை. 'பம்பாயிலும் வங்காளத்திலும் வசிக்கும் தாழ்த்தப்படட் தோழர்கள் கூட திராவிடர்கள்தான்' என்றார். பார்ப்பனரக்ளை மற்றமையாக அவர் நிறுத்தினாரே தவிர அவர்களை நாட்டைவிட்டு வெளியேற்றவோ அல்லது வன்முறையை அவர்கள் மீது ஏவிவிடவோ அவர் முனையவில்லை. இந்தவகையில் பெரியாரின் திராவிடர் என்ற சொல்லாடல் ஜனநாயகத்தன்மை வாய்ந்தது.

ஆனால் பெரியாரிடமிருந்து அண்ணா பிரிந்தபோது திராவிட நிலப்பரப்பில் வாழும் அனைவரும் (பார்ப்பனர்கள் உட்பட) திராவிடர்கள் என்றார். அதனால்தான் அண்னாவின் இயக்கத்தில் 'திராவிடர்' என்பதிலுள்ள 'ர்' விகுதிகிடையாது.

திராவிடமுன்னேற்றக்கழகம்தான

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.