Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகத்தை அதிரவைக்கும் நித்தியானந்தா – மௌனித்திருக்கும் அதிகார வர்க்கம் – அச்சத்தில் மக்கள்…

Featured Replies

தமிழகத்தை அதிரவைக்கும் நித்தியானந்தா – மௌனித்திருக்கும் அதிகார வர்க்கம் – அச்சத்தில் மக்கள்…

“கஞ்சா கொடுத்து என் மகளை நித்தியானந்தா மாற்றி விட்டார்” என தந்தை ஒருவர் முறையிட்டுள்ளார்.

nithys2.jpg?resize=600%2C450
“தை்தியருக்கு படித்த தம் மகனை கஞ்சா கொடுத்து மயக்கி நித்தியானந்தா சாமியார் அணி கடத்தி விட்டதே இதை கேட்பார் யாருமே இல்லையா?” என பெரியகுளம் நீதிமன்ற வளாகத்தில் பெற்றோர் கதறி அழுதனர். வைத்தியருக்கு படித்த மகன் மனோஜ்குமார் மற்றும் சிறுமி நிவேதா ஆகியோரை, சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தாவின் பெங்களூர் பிடதி ஆசிரமத்தில் இருந்து மீட்க வேண்டும் என பெரியகுளம் வடகரை சுப்பிரமணிய சாவடிதெரு பகுதியைச் சார்ந்த காந்தி என்பவர் காவற்துறையில் முறையிட்டனர். இதன் அடிப்படையில் தேனி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் வீ .பாஸ்கரன் உத்தரவின் பேரில் பெரியகுளம் காவல் ஆய்வாளர் முத்து பிரேம்சந்த் தலைமையிலான காவற்துறைக் குழு பிடதி சென்றது.

nityananda-demands-parent1.jpg?resize=60

அங்கிருந்து மனோஜ்குமார் மற்றும் நிவேதா இருவரையும் மீட்டு அழைத்து சென்று பெரியகுளம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர். நீதிமன்ற விசாரணையில் நிவேதா, உறவினர்களுடன் செல்ல விருப்பம் தெரிவித்தார். இதனையடுத்து நிவேதா உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.  ஆனால் வைத்தியர் மனோஜ்குமார் பிடதி ஆசிரமத்துக்கே செல்ல விரும்புவதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதனால் அவர் பிடதி ஆசிரமம் செல்ல அனுமதிக்கப்பட்டார். பெற்றோரிடம் எதுவும் சொல்லாமல் வைத்தியர் மனோஜ்குமார் பிடதிக்கு சென்றார்.

nityananda-demands-parent.jpg?resize=600

தங்களது கண்முன்னாலேயே மகன் பிரிந்து நித்தியானந்தா ஆசிரமம் செல்வதை தாங்க முடியாமல் வயதான பெற்றோர் கதறி கூச்சலிட்டனர். அப்போது, “அய்யோ என் மகனை கஞ்சா கொடுத்து மயக்கி நித்தியானந்தா ஆட்கள் கடத்திட்டு போயிட்டாங்களே… 75 லட்சம் செலவு செஞ்சு டாக்டருக்கு படிக்க வெச்சேனே… இதைக் கேட்குறதுக்கு யாருமே இல்லையா?” என கதறினர். இந்த பெற்றோரின் கதறல் நீதிமன்ற வளாகத்தையே அதிர வைத்தது.

nityananda-demands-parent2.jpg?resize=60

நித்தியானந்தா மீது பல்வேறு முறைப்பாடுகள், சர்ச்சைகள் உள்ளன. தற்போது பெற்றோரிடம் இருந்து பிள்ளைகளைப் பிரித்து கடத்திச் செல்வது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளதோடு, தமிழக, மற்றும் இந்திய அதிகார வர்க்கத்தினர் நித்தியானந்தாவின் அடாவடித்தனங்களை அனுமதிப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

nithys3.jpg?resize=600%2C450

http://globaltamilnews.net/2018/65825/

 

 

நித்யானந்தா ஆசிரமத்திலிருந்து பெண் சீடர் மீட்பு: வரமறுத்த மகனால் கதறிய பெற்றோர்

 

 
71d35afd-cf9a-4912-9600-a1574a541eaf%201

நித்யானந்தா ஆசிரமத்தில் ’அடைக்கப்பட்டுள்ள’ தங்கள் பிள்ளைகளை மீட்டுத்தர வேண்டும் என்று போடப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பெண் சீடர் பெற்றோருடன் சென்றார். ஆண் சீடர் மீண்டும் ஆசிரமத்திற்கே சென்றதால் பெற்றோர் கதறி அழுதனர்.

பெரியகுளம் வடகரை சுப்பிரமணிய சாவடிதெரு பகுதியைச் சேர்ந்தவர் காந்தி(58). இவரது மகன் மனோஜ் குமார்(24). இவர் மருத்துவம் படித்தவர். மற்றும் இதே பகுதியைச் சேர்ந்தவர் குமார் இவரது மகள் நிவேதா (19) இருவரும் நித்யானந்த போதனைகளை கேட்கச்சென்றவர்கள் நாளடைவில் நித்யானந்தாவின் பெங்களூர் ஆசிரமத்தில் சீடராக இணைந்துவிட்டனர்.

தங்கள் பிள்ளைகளை மீட்டுத்தர வேண்டும், அவர்கள் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக பெற்றோர்கள் தேனி மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் முறையிட அவர்களை நீதிமன்ற உத்தரவுப்படி தேனி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் வீ .பாஸ்கரன் உத்தரவின் பேரில் பெரியகுளம் காவல் ஆய்வாளர் .முத்து பிரேம்சந்த் தலைமையில் போலீஸார் , கர்நாடகா மாநிலம் பெங்களுரில் உள்ள நித்யானந்தா சாமியாருக்குச் சொந்தமான பிடபி ஆசிரமத்திற்கு சென்றனர்.

அங்கிருந்து டாக்டர். மனோஜ் குமார், நிவேதா இருவரையும் மீட்டு வந்து குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர்களிடம் குற்றவியல் நடுவர் விசாரணை நடத்தினார். இதில் நிவேதா தனது உறவினர்களுடன் செல்ல விருப்பம் தெரிவித்ததால் அவர் மட்டும் உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டார். பின் மனோஜ்குமார் மீண்டும் பிடபி ஆசிரமம் செல்ல விருப்பம் தெரிவித்ததால் உரிய பாதுகாப்புடன் அவர் ஆசிரமத்திற்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார்.

தனது பெற்றோருடன் செல்ல ஆண் சீடர் மனோஜ் விரும்பாமல் மீண்டும் ஆசிரம் சென்றதை கண்டு அவரது தந்தை மற்றும் உறவினர்கள் தேனி மாவட்ட நீதிமன்றம் முன் கதறி அழுதனர்.

http://tamil.thehindu.com/tamilnadu/article22681558.ece

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.