Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

படுவான்கரை பறிபோகுமா??!!

Featured Replies

படுவான்கரை பறிபோகுமா??!!

பெயர் குறிப்பிடாத வலிந்த படை நடவடிக்கை ஒன்றை சிறிலங்காப் படைகள் மட்டக்களப்பின் படுவான்கரை நோக்கி நடத்தி வருகிறார்கள். மட்டக்களப்பில் வாகரைப் பகுதியை விடுதலைப்புலிகளிடம் இருந்து கைப்பற்றிக் கொண்ட சிறிலங்காப் படைகள் தற்பொழுது படுவான்கரைப் பகுதியையும் கைப்பற்ற கடுமையாக முயன்று வருகின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பகுதிகளை படுவான்கரை மற்றும் எழுவான்கரை என்று அழைப்பார்கள். சூரியன் உதயமாகி எழுகின்ற கரையாகிய கிழக்கு திசையில் உள்ள பகுதிகளை எழுவான்கரை என்றும், சூரியன் மறைகின்ற மேற்கு திசையில் உள்ள பகுதிகளை படுவான்கரை என்றும் சொல்வார்கள். படுவான்கரை பல கிராமங்களையும், அடர்ந்த காடுகளையும் கொண்ட ஒரு பெரும் பிரதேசம் ஆகும்.

இந்த படுவான்கரைப் பிரதேசத்தின் பெரும்பாலான பகுதி விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருப்பது பலரும் அறிந்த ஒரு விடயம். விடுதலைப்புலிகளின் பலமான தளங்கள் இருப்பதாக கருதப்படுகின்ற தொப்பிக்கலவும் இங்குதான் இருக்கிறது. இப் பகுதிகளை கைப்பற்றுவதற்கு சிறிலங்காப் படைகள் பல முனைகளில் வலிந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

கடந்த 08.03.07 வியாழக்கிழமை செங்கலடி கறுத்தப்பாலம் ஊடாக சிறிலங்காப் படைகள் முன்னேற முயன்றன. இந்த முன்னேற்ற நடவடிக்கையை விடுதலைப்புலிகள் கடும் பதில் தாக்குதல் நடத்தி முறியடித்தனர். பல படையினர் கொல்லப்பட, ஆயுதங்களையும் படையினரின் இறந்த உடல்களையும் விட்டுவிட்டு சிறிலங்காப் படைகள் பின்வாங்கின.

அதே நேரத்தில் சிறிலங்காப் படைகள் பிறிதொரு முனையாலும் முன்னேற்ற முயற்சியை மேற்கொண்டனர். புலுக்குணாவைப் பகுதியில் இருந்து முன்னேறிய படையினர் உன்னிச்சைப் பகுதியை கைப்பற்றி தொடர்ந்து பாவற்கொடிச்சேனை வரை முன்னேறினர். பாவற்கொடிச் சேனையில் வைத்து விடுதலைப்புலிகள் படையினரின் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்தினர்.

இதற்கு அடுத்த நாள் 09.03.07 சிறிலங்காப் படைகள் புல்லுமலையில் இருந்தும் இன்னுமொரு முன்னேற்ற முயற்சியை மேற்கொண்டனர். இந்த முன்னேற்ற முயற்சி விடுதலைப்புலிகளின் கடும் பதிலடித் தாக்குதலின் மூலம் முறியடிக்கப்பட்டது. இதன் போதும் பல ஆயுதங்களையும் இறந்த ஆறு படையினரின் சடலங்களையும் விட்டு விட்டு சிறிலங்காப் படைகள் ஓட்டம் பிடித்தன. படையினரின் ஆறு சடலங்களில் நல்ல நிலையில் இருந்த நான்கு சடலங்களை விடுதலைப்புலிகள் செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக ஒப்படைத்தனர்.

பின்பு 10.03.07 அன்று சிறிலங்காப் படைகள் 36ம் கொலனியில் இருந்து தாண்டியடி நோக்கி ஒரு நகர்வை ஆரம்பித்தனர். சிறிலங்காப் படைகள் சில மைல்கள் தூரம் முன்னேறிய பிற்பாடு விடுதலைப்புலிகள் கடும் எதிர்தாக்குதலை தொடுத்தனர். சிறிலங்காப் படையினர் முன்னேறி கைப்பற்றிய பெரும்பாலான பகுதிகள் விடுதலைப்புலிகளால் மீண்டும் கைப்பற்றப்பட்டன.

இவ்வாறு சிறிலங்காப் படைகள் தொடர்ச்சியாக மூன்று நாட்கள் நான்கு முனைகளில் இருந்து படுவான்கரைப் பிரதேசத்தை நோக்கி முன்நகர்வு முயற்சியை மேற்கொண்டனர். இதில் இரண்டு நகர்வுகள் விடுதலைப்புலிகளால் முறியடிக்கப்பட்டன. ஆனால் புலுக்குணவையில் இருந்து முன்னேறிய படையினரால் உன்னிச்சைப் பகுதியை கைப்பற்ற முடிந்தது. அதே போன்று 36ஆம் கொலனியில் இருந்து முன்னேறிய படைகளாலும் சில மைல்கள் முன்னேற முடிந்தது.

விடுதலைப்புலிகள் உன்னிச்சையில் இருந்து சிறிலங்காப் படைகளை விரட்டுவதற்கு எடுத்த முயற்சிகள் பெரியளவில் வெற்றி அளிக்கவில்லை. எட்டாம் திகதி ஆரம்பித்த சண்டைகள் உன்னிச்சையில் பதினொராம் திகதி வரை நீடித்தது குறிப்பிடத்தக்கது

நான்கு முனைகளில் சிறிலங்காப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட இந்த வலிந்த நடவடிக்கையில் சிறிலங்காப் படைகள் கடும் இழப்பை சந்தித்துள்ளனர். பல ஆயுதங்களையும் விடுதலைப்புலிகளிடம் பறிகொடுத்துள்ளனர். விடுதலைப்புலிகள் தரப்பிலும் இழப்புக்கள் ஏற்பட்டுள்ளது. உன்னிச்சைப் பகுதியில் பதினொராம் திகதி நடந்த சண்டையில் விடுதலைப்புலிகளின் ஏழு உடல்களை கைப்பற்றியாதாக சிறிலங்காவின் பாதுகாப்பு தரப்பு தெரிவித்தது. இந்த உடல்கள் இரு நாட்கள் கழித்து செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக விடுதலைப்புலிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் பாதுகாப்புத் தரப்பு மேலும் தெரிவித்தது.

சிறிலங்காத் தரப்பால் படுவான்கரையை நோக்கிய இந்த நடவடிக்கை பற்றி பெரிய ஆரவாரமான அறிவிப்புக்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. அதுவும் விடுதலைப்புலிகளே தாக்குதல் நடத்துவதாகவும், சிறிலங்காப் படைகள் பதில் தாக்குதலில் மட்டும் ஈடுபடுவதாகவும் சிறிலங்காவின் பாதுகாப்புத் தரப்பு கூறியது. சிறிலங்காப் படைகள் ஆக்கிரமித்த பகுதிகளைக் கூட, ஏற்கனவே சிறிலங்காப் படைகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகள் போன்றே அது காட்டிக் கொண்டது.

வாகரையைப் போன்று படுவான்கரையையும் கைப்பற்றுவதற்கு மாதக் கணக்கில் எடுக்கும் என்பதால், இந்த நடவடிக்கைகள் குறித்து சிறிலங்காப் படைத் தரப்பு அடக்கி வாசிக்கவே விரும்புகிறது.

வாகரையைக் கைப்பற்றுவதற்கு கையாண்ட அதே யுக்தியையே படுவான்கரையை கைப்பற்றுவதற்கும் சிறிலங்காப் படைகள் கையாளுகின்றன. ஓரே நேரத்தில் பாரிய நடவடிக்கையை நடத்தாது பல முனைகளில் சிறிய சிறிய முன்னேற்ற முயற்சியை சிறிலங்காப் படைகள் செய்கின்றன. சில முனைகளில் தோல்விகளை தழுவினாலும், வேறு சில முனைகளில் வெற்றியை பெற முடியும் என்று சிறிலங்காப் படைகள் திட்டமிட்டு நகர்கின்றன.

இவ்வாறு படுவான்கரைப் பிரதேசத்தை படிப்படியாக கைப்பற்றுகின்ற திட்டத்துடன் சிறிலங்காப் படைகள் செயற்பட்டு வருகின்றன. அந்த வகையில் படுவான்கரைக்கான சண்டை மாதக் கணக்கில் தொடரத்தான் போகிறது.

படுவான்கரையை கைப்பற்றுவதற்கு இன்னும் ஒரு வழியையும் சிறிலங்காப் படைகள் கையாண்டு வருகின்றார்கள். இதுவும் ஏற்கனவே வாகரையில் கையாளப்பட்ட முறைதான். தொடர்ச்சியான எறிகணைத் தாக்குதல்களையும், விமானக் குண்டு வீச்சுக்களையும் நிகழ்த்தி மக்களை இடம்பெயரச் செய்து விடுதலைப்புலிகளை தனிமைப் படுத்துவதுதான் அந்த வழி.

சிறிலங்காப் படைகளின் கடும் எறிகணைத் தாக்குதல்களாலும், விமானக் குண்டுவீச்சுகளாலும் படுவான்கரைப் பிரதேசத்தில் உள்ள மக்கள் சிறிலங்காப் படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள எழுவான்கரை நோக்கி இடம் பெயர்ந்து வருகிறார்கள். கடந்த சில நாட்களாக இது மிகவும் அதிகரித்துள்ளது. படுவான்கரைப் பிரதேசத்தில் இருந்து பெரும்பாலான மக்கள் வெளியேறிவிட்டார்கள் என்றும் சில செய்திகள் தெரிவிக்கின்றன.

படுவான்கரையில் இருந்து மக்கள் அனைவரும் வெளியேறி விட்டால், பின்பு மக்கள் அற்ற ஒரு பிரதேசத்தை தக்க வைப்பதற்கு விடுதலைப்புலிகள் கடுமையாக போரிட மாட்டார்கள் என்று சிறிலங்காப் படைத் தரப்பு நம்புகிறது. இதனால் ஈவு இரக்கமின்றி தினமும் மக்கள் குடியிருப்புக்கள் மீது கொடிய எறிகணைத் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

வாகரையை கைப்பற்றிய பின்பு படுவான்கரைப் பிரதேசத்தின்றான வினியோக வழிகளை துண்டித்திருப்பதாக சிறிலங்காப் படைகள் கருதுகின்றன. வன்னியில் இருந்து கிழக்கிற்கு விடுதலைப்புலிகள் எந்த வழியிலும் வரக்கூடாது என்பதற்காக திருகோணமலையின் காட்டுப் பகுதிகளில் கண்காணிப்பை சிறிலங்காப் படைகள் தீவிரமாக்கி உள்ளன. அத்துடன் திருகோணமலையில் விடுதலைப்புலிகளின் மிச்சமுள்ள கட்டுப்பாட்டுப் பகுதிகளை நோக்கியும் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

இவ்வாறு படுவான்கரைப் பிரதேசத்திற்கான வினியோகப் பாதைகளையும் துண்டிப்பதோடு, அங்கிருந்து மக்களையும் வெளியேற்றி, அதை ஒரு சூனியப் பிரதேசமாக்கி படுவான்கரையை கைப்பற்றுகின்ற முயற்சியை சிறிலங்காப் படைகள் செய்து வருகின்றன. இதற்கு மாதங்கள் சென்றாலும் படுவான்கரையை கைப்பற்ற முடியும் என்று சிறிலங்கா அரசு உறுதியாக நம்புகிறது.

சிறிலங்காப் படைகள் நம்புவது போன்று படுவான்கரைப் பிரதேசத்தின் முக்கிய கிராமங்களை தொடர்ச்சியான சண்டைகளின் மூலம் சிறிலங்காப் படைகள் கைப்பற்றவும் கூடும். ஆனால் படுவான்கரை அடர்ந்த காடுகளை கொண்ட ஒரு பிரதேசம். அங்கே விடுதலைப்புலிகள் தொடர்ந்து நிலை கொண்டு கரந்தடித் தாக்குதல்களின் மூலம் சிறிலங்காப் படைகளுக்கு பெருத்த இழுப்புக்களை ஏற்படுத்த முடியும். படுவான்கரையை கைப்பற்றுவது சிறிலங்காப் படைகளுக்கு இராணுவரீதியாக எந்த ஒரு சாதக பலனையும் கொடுக்கப் போவதில்லை.

மாறாக இது பெரும் பாதகத்தைக் கொடுக்கக்கூடும். வடக்கில் விடுதலைப்புலிகள் பெரும் நடவடிக்கைக்கு தயாராகி வருவதாக செய்திகள் வெளியாகின்றன. வன்னியில் அவசர ஆட்சேர்ப்பும், பயிற்சிகளும் பெரும் எடுப்பில் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த நேரத்தில் சிறிலங்காப் படைகள் படுவான்கரையில் சிக்குப்பட்டுப் போய் கிடக்கின்றன.

உண்மையில் விடுதலைப்புலிகள் மேற்கொள்ளக் கூடிய நடவடிக்கைகளை தடுப்பதற்கு வன்னி மீது ஒரு வலிந்த நடவடிக்கையை ஆரம்பிப்பதற்கு சிறிலங்காப் படைகள் திட்டமிட்டிருந்தன. மணலாற்றில் இருந்து முல்லைத்தீவை நோக்கி முன்னேறுவது சிறிலங்காப் படைகளின் திட்டமாக இருந்தது. அத்துடன் வட முனையில் புநகரி மீது ஒரு நடவடிக்கைக்கும் சிறிலங்காப் படைகள் தயாராக இருந்தன.

வன்னி மீது தாக்குதல் நடத்தி, விடுதலைப்புலிகளை தற்காப்பு நிலையில் வைத்திருப்பதற்கு திட்டமிட்டிருந்த சிறிலங்காப் படைகளின் திட்டத்தில் மட்டக்களப்பு வேபர் மைதானத்தில் வந்து விழுந்த எறிகணைகள் மண்ணைப் போட்டுவிட்டன. இதனால் வன்னியை விட்டுவிட்டு தொப்பிக்கல மீது தாக்குதல் நடத்த வேண்டிய கட்டாயத்திற்கு சிறிலங்காப் படைகள் தள்ளப்பட்டுள்ளதை கடந்த கட்டுரையில் (எறிகணைத் தாக்குதல் சொல்லுகின்ற செய்திகள்) சுட்டிக்காட்டி இருந்தோம்.

இப்பொழுது சிறிலங்காப் படைகள் படுவான்கரையை கைப்பற்றுவதற்காக நீண்டகால நடவடிக்கை ஒன்றை ஆரம்பித்துள்ளனர். இதில் பெறுகின்ற சிறிய வெற்றிகளின் மூலம் பிரச்சார யுத்தத்தில் வெற்றி கொண்டு, தமிழ் மக்களின் மனோபலத்தை உடைப்பதற்கு சிறிலங்கா அரசு முனைகிறது. ஆனால் எங்கு படையினர் சண்டையிட வேண்டும் என்று தீர்மானிக்கும் நிலையில் இருக்கின்ற விடுதலைப்புலிகள் பாய்வதற்கு தீர்மானிக்கும் போது எல்லாமே மாறிவிடும்.

-வி.சபேசன் (15.03.07)

http://www.webeelam.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.