Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பூந்தமல்லியில் பிரபல தாதா பிறந்த நாள் கொண்டாட்டம்; 75 ரவுடிகள் சுற்றி வளைத்து கைது: சினிமா பாணியில் நடந்த வேட்டை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை: பிரபல ரவுடி பினு சினிமா பாணியில் ஆட்டுக்கறி, மது விருந்துகளுடன் சக ரவுடிகளை அழைத்து பிறந்த நாள் கொண்டாடிய போது போலீசார் துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்தனர். அதில் 75 ரவுடிகள் ஒரே நேரத்தில் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழா கொண்டாடியவன் உட்பட 50 பேர் தப்பிச் சென்றனர். சென்னையில் குற்றப்பின்னணியில் உள்ள ரவுடிகள் குறித்து ரவுடிகள் ஒழிப்பு பிரிவு போலீசார் ரகசியமாக கண்காணித்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த 2012ம் ஆண்டு முதல் தற்போது வரை சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் சிறு சிறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் முதல் மொத்தம் 14,551 ரவுடிகள் உள்ளனர். அதில், சென்னையை சேர்ந்தவர்கள் மட்டும் 11,303 பேர் ஆகும், மற்ற 3,248 பேர் சென்னை புறநகர் மற்றும் வெளிமாவட்டங்கள், பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ளவர்கள். அதில் 1000 பேர் கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல் வழக்கில் தொடர்புடையவர்கள்.

இவர்களை சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவுப்படி மத்தியக் குற்றப்பிரிவு போலீஸ் கூடுதல் கமிஷனர் கணேசமூர்த்தி, துணை கமிஷனர் செந்தில்குமார், உதவி கமிஷனர் ஸ்டீபன், இன்ஸ்பெக்டர் காசியப்பன், எஸ்.ஐ.ராஜேஷ் ஆகியோர் கொண்ட தனிப்படை ரகசியமாக கண்காணித்து வருகிறது. மேலும், தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வரும் ரவுடிகளை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வருவதால், சென்னையில் ரவுடிகளின் நடமாட்டம் வெகுவாக குறைந்துள்ளது. இதனால், ரவுடிகள் சென்னை புறநகர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பதுங்கி தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் பிற்பகல் 3 மணிக்கு பள்ளிக்கரணையில், கொலை வழக்கில் தலைமறைவாக இருக்கும் பல்லு மதன் என்பவன் பதுங்கியிருப்பதாக மத்தியக் குற்றப்பிரிவு போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதனால், போலீசார் அவனை கைது செய்தனர். அவனை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர். வண்டலூர்- மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் உள்ள  மலையம்பாக்கத்தில் உள்ள ஒரு லாரி ஷெட்டில் பிறந்த நாள் விழாவுக்கு செல்வதாக தெரிவித்துள்ளான். அரிவாளுடன் பிறந்த நாள் விழாவுக்கு செல்ல என்ன காரணம் என்று விசாரணை நடத்திய போது சூளைமேடு பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி பின்னி (எ) பினு (45) பிறந்தநாள் விழா என்றும்,  இதில் என்னை போல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த ரவுடிகள் அனைவரும் இந்த விழாவில் கலந்து கொள்கிறார்கள் என்று தெரிவித்தான். இதனால் சூளைமேட்டில் உள்ள பினு கூட்டாளி கனகு(எ) கனகராஜ் என்பவரை அழைத்து கொண்டு விழா நடைபெறும் இடத்திற்கு செல்ல இருந்ததாக தெரிவித்தார். இதைகேட்டு அதிர்ந்துபோன போலீசார், போலீஸ் கமிஷனர் ஏ.ேக.விஸ்வநாதனுக்கு தகவல் தெரிவித்தார்.

பின்னர் ரவுடிகளை கூண்டோடு சுற்றி வளைத்துப் பிடிக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், உயர் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதில் கூடுதல் கமிஷனர் சாரங்கன், இணை கமிஷனர் சந்தோஷ்குமார், துணை கமிஷனர் சர்வேஷ் ராஜ் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனையைத் தொடர்ந்து, சுமார் 50க்கும் மேற்பட்ட போலீசார் கொண்ட படை அமைக்கப்பட்டது. அதன்பின்னர், பல்லு மதன் மூலம் ரவுடி கனகுக்கு போன் செய்ய வைத்து, ரவுடிகள் ஒன்று கூடுவதை போலீசார் உறுதிப்படுத்தினர்.  

அதைதொடர்ந்து தனிப்படை போலீசார் அனைவருக்கும் ரவுடிகளை பிடிக்கும் போது அவர்கள் கத்தி, அரிவாளால் தாக்க முயற்சிக்கலாம். இதனால் அனைவரும் கவணமாக தங்கள் துப்பாக்கிகளை காட்டி அவர்களை பிடிக்க வேண்டும். யாரும் உணர்ச்சி வசப்பட்டு யாரையும் சுட வேண்டாம். தேவைப்பட்டால் வானத்தை நோக்கி சுட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. தேவையில்லாமல் போலீசாருக்குள் ஒருவரை ஒருவர் சுட்டு விடக் கூடாது என்று அறிவுறுத்தினர். இதையடுத்து, அனைவரும் துப்பாக்கிகளுடன் 15 தனியார் கால்டாக்சி வாகனங்களில் பிறந்த நாள் விழா நடைபெறும் மலையம்பாக்கம் கிராமத்திற்கு அருகே உள்ள லாரி ஷெட்டுக்கு இரவு 8 மணிக்கு புறப்பட்டனர். 

பிறந்த நாள் நிகழ்ச்சி நடைபெறும் வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலையை தனிப்படை ேபாலீசார் இரவு 8.50க்கு வந்தடைந்தனர். அப்போது, கல்யாண நிகழ்ச்சி நடப்பதுபோல், சாலையின் இருபுறங்களிலும் ரேடியோ செட், வண்ண சீரியல் லைட்கள், தோரணங்கள் என மிக பிரமாண்டமாக அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இந்த ஆர்பாட்டமான வரவேற்புகள் வண்டலூர் வெளிவட்ட சாலையில் தொடங்கி, நிகழ்ச்சி நடைபெறும் லாரி ஷெட் வரை செய்யப்பட்டிருந்தது. மேலும், 50க்கும் மேற்பட்ட ஆட்டு கிடா, நாட்டு கோழிகள் வெட்டி இரண்டு கிலோ மீட்டர் தொலைவுக்கு மனக்க மனக்க சமையல் நடந்து கொண்டிருந்தது.

இதைபார்த்து பிரமித்த போலீசார்,  10 குழுக்களாக பிரிந்து நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை சுற்றி செடிகள் மற்றும் புதர்களுக்குள் மறைந்து இருந்தனர். மேலும் சாலைகளில் தடுப்புகள் அமைத்தும் கண்காணிக்கப்பட்டது. அப்போது, ஏரியா வாரியாக வரும் ரவுடிகளுக்கு பட்டாசுகள் வெடித்து உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. இதனால் அந்த பகுதியே திருவிழா போல் காட்சியளித்தது.
சிறிது நேரத்தில் 150க்கும் மேற்பட்ட ரவுடிகள் புடைசூழ சூளைமேடு ரவுடி பின்னி(எ) பினு தனது பிறந்த நாள் கேக்கை அரிவாளால் வெட்டினார். அப்போது அனைவரும் கரகோஷம் எழுப்பி வாண வேடிக்கையுடன் கொண்டாடினர். இந்த சந்தர்ப்பத்திற்காக காத்திருந்த போலீசார் துப்பாக்கிகளுடன் இரவு 9 மணிக்கு அதிரடியாக லாரி ஷெட்டுக்குள் புகுந்தனர். 

அப்போது, 150க்கும் மேற்பட்ட ரவுடிகள் கறி விருந்துடன் மது அருந்தி கொண்டு  நடனம் ஆடிக்கொண்டிருந்தனர். போலீசார் சுற்றி வளைத்ததை அறிந்த ரவுடிகள் சிலர் அங்கிருந்து தலை தெறிக்க ஓடினர். உடனே, போலீசார் துப்பாக்கி முனையில் 53 பேரை சுற்றிவளைத்து கைது ெசய்தனர். தப்பி ஓடிய அனைவரும் அருகில் உள்ள மலையம்பாக்கம் கிராமத்திற்குள் புகுந்தனர். உடனே தனிப்படை போலீசார் கிராம மக்கள் உதவியுடன் வீடுவீடாக சென்று சோதனை நடத்தி 22 பேரை பிடித்தனர். ஆனால் பிறந்த நாள் கொண்டாடிய ரவுடி பின்னு(எ) பினு தனது கூட்டாளிகளுடன் தப்பி ஓடிவிட்டான். 

பின்னர் பிடிப்பட்ட 75 ரவுடிகளையும் போலீசார் பூந்தமல்லி, போரூர், நசரத்பேட்டை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், ரவுடி பின்னி(எ) பினு கேரளாவை சேர்ந்தவர். தனது தந்தையுடன் சிறு வயதியே சென்னை வந்த பினு கடந்த 10 ஆண்டுகளாக சூளைமேடு நமச்சிவாயபுரத்தில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். இவர் மீது சூளைமேடு, அரும்பாக்கம் காவல் நிலையத்தில் 2 ெகாலை வழக்குகள் உள்ளது. அதேபோல் 3 ஆள் கடத்தல் வழக்கு, 7 கொலை மிரட்டல் வழக்கு என 30க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இரண்டு வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதால் தற்போது கொளத்தூரில் வசித்து வருகிறார். பின்னி தனது பிறந்த நாளுக்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த 150க்கும் மேற்பட்ட ரவுடிகளுக்கு முறையாக அழைப்பு விடுத்து தனது பலத்தை வெளிப்படுத்த இந்த பிறந்த நாள் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது தெரியவந்தது. போலீசார் ரவுடிகளுக்கு எதிராக எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கை குறித்து பிறந்த நாள் நிகழ்ச்சிக்கு பிறகு ஆலோசனை கூட்டம் நடத்த திட்டமிட்டிருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இந்த ரவுடிகளுடன் வக்கீல்கள் மற்றும் 2 கல்லூரி மாணவர்களும் கைது செய்யப்பட்டனர்.

கைது ெசய்யப்பட்ட ரவுடிகளிடம் இருந்து 35க்கும் மேற்பட்ட அரிவாள்கள், பட்டாகத்திகள், 88க்கும் மேற்பட்ட செல்போன்கள், 50 பைக்குகள் மற்றும் ஆட்டோ,   7 சொகுசு கார்கள், 2 மூட்டைகள் நிறைய மது பாட்டில்கள், காலி மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து தப்பி ஓடிய மற்ற ரவுடிகளை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. பொதுவாக  சரோஜா, ஜிகர்தண்டா, பீமா, திருப்பாச்சி போன்ற திரைப்படங்களில் தான் பிரபல ரவுடிகளாக வலம் வருபவர்கள் ஒன்றாக கூடி பிறந்தநாள் விழா கொண்டாடி தங்களது பலத்தை நிரூபிப்பார்கள். ஆனால் தற்போது நிஜ வாழ்க்கையில் தங்களது பலத்தை நிரூபிக்கும் வகையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பிரபல ரவுடிகள் 75 பேரை துப்பாக்கி முனையில் ஒரே இடத்தில் போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தது  சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

http://www.dinakaran.com/News_detail.asp?Nid=373961

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.