Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உணவுக்கு முண்டியடித்து கையேந்தும் பரிதாபம் சமாளிக்க முடியாமல் திணறும் அரச அதிகாரிகள்

Featured Replies

உணவுக்கு முண்டியடித்து கையேந்தும் பரிதாபம் சமாளிக்க முடியாமல் திணறும் அரச அதிகாரிகள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் இராணுவ கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு நெருக்கடிகளுக்கு மத்தியில் இடம்பெயர்ந்து வந்துள்ள மக்கள் எந்தவொரு அடிப்படை வசதிகளுமின்றி பெரும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

சமைத்த உணவுகளும் மிகக்குறைந்தளவிலேயே தற்போது வழங்கப்பட்டு வருவதால் அவற்றைப் பெறுவதற்கு இடம்பெயர்ந்த மக்கள் வரிசையில் காத்து நிற்பதுடன் சிலவேளைகளில் முண்டியடித்துக் கொண்டு கையேந்தி நிற்கும் பரிதாப நிலையும் காணப்படுகின்றது.

அத்துடன், மலசலகூட வசதிகள் இன்மையால் பெண்களும் சிறு குழந்தைகளும் பெரும் அசௌகரிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதுடன் தொற்றுநோய் பரவும் அபாயமும் உருவாகியுள்ளது.

ஆரையம்பதியிலுள்ள பொது இடங்களில் தங்கியுள்ள பெரும்பாலான மக்களுக்கு தற்போதைய கடும் வெப்பநிலை காரணமாக கண் நோய் பரவியுள்ளதால் இவர்கள் பெரும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

அத்துடன், பெரும்பாலான இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள இடங்களில் வாந்தி பேதி, வயிற்றோட்டம் போன்ற தொற்றுநோய்கள் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

இதனைவிட இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள இடங்களிலுள்ள பொதுமக்களாலும் அருகிலுள்ள முஸ்லிம் பிரதேச மக்களாலும் சமைத்த உணவுகள் வழங்கப்படுகின்ற போதிலும் சிறு குழந்தைகளுக்கான பால் மா போன்ற அத்தியாவசியப் பொருட்கள் இல்லாமையால் பெற்றோர்கள் அவற்றை வாங்குவதற்கு பணமில்லாத நிலையில் மிகவும் மனச் சோர்வுடனேயே காணப்படுகின்றனர்.

திடீரென்று மிகப் பெருமளவிலான மக்கள் இடம்பெயர்ந்து வந்துள்ளமையினால் அவர்களுக்கான தங்குமிட வசதிகள், உணவு உட்பட அடிப்படை வசதிகளை வழங்குவதற்கு தம்மிடம் போதிய நிதி வசதிகளோ, ஆளணி வசதிகளோ இல்லையென்றும் அதனால் அல்லற்படும் மக்களுக்கு உதவி செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தனது பெயரைக் குறிப்பிட விரும்பாத மாவட்ட செயலக அதிகாரியொருவர் கவலையுடன் தெரிவித்தார்.

அரச உயரதிகாரிகள், மீள்குடியேற்ற அமைச்சு, அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சு, மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பிலிருந்தபடி விபரங்களைக் கேட்கிறார்கள். ஆனால், துன்பப்படும் மக்களுக்கு உளப்பூர்வமாக அவசர உதவிகளை பெற்றுத்தர முடியாதவர்களாகவேயுள்ளனர் என்றும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

தொற்றுநோய் பரவும் அபாயம் தோன்றியுள்ளதால் மருத்துவ வசதிகள் மிகவும் அவசியமாக தேவைப்படுகின்றது. அத்துடன், மலசலகூட வசதியும் பிரதான தேவையாகவுள்ளது.

ஒரு நாளைக்கு ஒரு தடவையே குடிநீர் வழங்கப்படுகின்றது. இதனையே இடம்பெயர்ந்த மக்கள் பல்வேறு தேவைகளுக்கும் பயன்படுத்தி வருகின்றனர்.

அத்துடன், தண்ணீர் உட்பட பல்வேறு தேவைகளுக்கும் அப்பிரதேசங்களிலுள்ள வீடுகளை நாடிச் செல்லும் பரிதாப நிலைமையும் காணப்படுகின்றது.

அரச சார்பற்ற நிறுவனங்கள் குறிப்பிட்டளவு அரிசி, பருப்பு, சீனி போன்ற உலருணவுப் பொருட்களையும் பிளாஸ்டிக் கோப்பைகள், மண்ணெண்ணெய் விளக்கு என்பவற்றையே வழங்கி வருகின்றன.

பகல் நேரத்தில் கடுமையான காற்றும் கடும் வெப்பமும் நிலவுவதால் அவற்றை சமைத்து சாப்பிட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

அத்துடன், வழங்கப்பட்ட மண்ணெண்ணெய் விளக்குக்கு மண்ணெண்ணெய் வாங்கக்கூட பணமில்லாத நிலையில் இந்த மக்கள் இரவு நேரங்களில் இருளில் தவிக்க வேண்டிய நிலையேற்பட்டுள்ளது.

இதேவேளை, இடம்பெயர்ந்த மக்களில் பலர் கறுத்தப்பாலம், வவுணதீவு, பட்டிருப்பு, மண்முனை, அம்பிளாந்துறை சோதனைச் சாவடிகளுக்கு சென்று தமது முக்கிய ஆவணங்களான அடையாள அட்டை உட்பட தஸ்தாவேஜுகளையும் பெறுமதிமிக்க பொருட்களையும் எடுத்துவர ஒரு தடவையாவது அனுமதிக்குமாறு கெஞ்சிக் கேட்கின்ற போதிலும் படைத்தரப்பினரால் அதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.

இராணுவ கட்டுப்பாடற்ற பிரதேசங்களிலுள்ள நூற்றுக்கணக்கான வீடுகள் ஷெல் வீச்சினால் எரிந்தும் உடைந்தும் சேதமடைந்தும் காணப்படுவதால் தமது முக்கிய குடும்ப ஆவணங்கள், பெறுமதிமிக்க பொருட்கள் என்பன தற்போது இடையிடையே பெய்துவரும் மழையினால் முற்றாக அழியும் நிலை ஏற்படலாமென்றும் இடம்பெயர்ந்துள்ள மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, காடுகளுக்குள் ஷெல் வீழ்ந்து வெடிப்பதனால் அங்கிருந்த யானைகள் ஊர்மனைக்குள் நுழைந்து பீதியடைந்த நிலையில் எஞ்சியுள்ள வீடுகளையும் சேதப்படுத்தி வருவதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்றும் ஷெல் தாக்குதல்

இதேவேளை, நேற்று ஞாயிற்றுக்கிழமை காலையும் மட்டக்களப்பு வெபர் அரங்கிலுள்ள பிரதான படைத்தளத்திலிருந்து பல்குழல் ரொக்கட் தாக்குதலும் புதூர் விமானத்தளத்திலிருந்து ஷெல் வீச்சுகளும் இராணுவ கட்டுப்பாடற்ற பகுதிகளை நோக்கி மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பல்குழல் ரொக்கட் தாக்குதலின் உக்கிரமான அதிர்வினால் அருகிலுள்ள வீடுகளிலும் இடம்பெயர்ந்து முகாம்களிலும் தங்கியுள்ள குழந்தைகள், சிறுவர்கள், வயோதிபர்கள் பீதியடைந்த நிலையில் காணப்படுகின்றனர்.

உணவுப் பற்றாக்குறை, மலசலகூட வசதி, குடிநீர் வசதி, இரவு நேரத்தில் மின்சாரமின்மை உட்பட எந்தவொரு அடிப்படை வசதிகளுமின்றி பெரும் அவலநிலைக்குள் தள்ளப்பட்டுள்ள சுமார் ஒன்றரை இலட்சம் மக்கள் தற்போது இடையிடையே இரவு நேரங்களில் பெய்யும் மழை, கடும் பனி மற்றும் பகல் நேரங்களில் தொடரும் கடும் வெப்பமான காலநிலை என்பவற்றுக்கும் முகம்கொடுக்கும் பரிதாப நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

http://www.tamilwin.com/article.php?artiId...;token=dispNews

  • தொடங்கியவர்
f_Frontlm_4c9e93d.jpg:)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.