Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சட்டசபையில் ஜெயலலிதா படம்: ஆதரவும், எதிர்ப்பும்

Featured Replies

சட்டசபையில் ஜெயலலிதா படம்: ஆதரவும், எதிர்ப்பும்

சட்டசபையில் ஜெயலலிதா படம்: எதிர்ப்பும், ஆதரவும்படத்தின் காப்புரிமைAFP

தமிழக சட்டமன்றத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படம் நாளை (பிப்ரவரி 12) திறக்கப்படவுள்ள நிலையில், அந்த நிகழ்வுக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துகள் வெளியாகியுள்ளன.

தமிழக சட்டமன்ற பேரவை செயலாளர் க.பூபதி அளித்துள்ள செய்திக்குறிப்பில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் முன்னிலையில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படத்தை சட்டப்பேரவை தலைவர் பி.தனபால் திறந்துவைப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்றத்தில் சுதந்திரபோரட்ட தலைவர்கள் காந்தி, காயிதேமில்லத் மற்றும் முன்னாள் முதல்வர்கள் ராஜாஜி, காமராஜ், எம்ஜிஆர் உள்ளிட்ட தலைவர்களின் பத்து படங்கள் வைக்கப்பட்டுள்ளன.

ஜெயலலிதாவின் படத்தை பிரதமர் மோதி திறந்துவைப்பார் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது சட்டப்பேரவை தலைவர் திறந்துவைப்பார் என அழைப்பிதழில் கூறப்பட்டுள்ளது.

திமுகவின் செயல்தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "அரசியல் சட்டத்துக்கும் - உச்சநீதிமன்ற தீர்ப்புக்கும் விரோதமாக ஊழல் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படத்தை திறந்து சட்டப்பேரவையின் மாண்பை குலைக்கக் கூடாது,'' என குறிப்பிட்டுள்ளார்.

தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன், சட்டமன்ற உறுப்பினர்கள் யாரிடமும் தெரிவிக்காமல், ஜெயலலிதாவின் படம் திறந்துவைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது மோசமான செயல் என்கிறார்.

சட்டசபையில் ஜெயலலிதா படம்: எதிர்ப்பும், ஆதரவும்படத்தின் காப்புரிமைM.K. STALIN

''ஜெயலலிதாவின் படத்தை திறக்கும் நிகழ்வை சட்டமன்ற உறுப்பினர்களிடம் முறையாக பேசாமல், அதிமுகவின் விழா போல நடத்துகிறார்கள். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது வீட்டில் ஒரு படத்தை மாட்டுவது போல சட்டமன்றத்தில் ஜெயலலிதாவின் படத்தை வைக்க முடிவுசெய்துள்ளார். தற்போது உயிரோடு இருந்திருந்தால், ஜெயலலிதா, சசிகலாவுடன் பெங்களூரு சிறையில் இருந்திருப்பார். அவரின் படத்தை வைப்பதில் நியாயம் இல்லை,'' என்று துரைமுருகன் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து திமுகவை சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினரான ஜெ.அன்பழகன் சட்டப்பேரவை செயலாளர் பூபதியிடம் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படத்தை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மனு ஒன்றை அளித்துள்ளார்.

"மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படத்தை பொது இடங்களிலும், அரசு விழாக்களிலும் பயன்படுத்துவதை தவிர்க்க நாங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த படத்திறப்பிற்கான அழைப்பிதழைக் கூட எதிர்க்கட்சிக்கு வழங்காமல் ஒரு நிகழ்ச்சியை நடத்துவது ஏற்புடையது அல்ல" என தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெ.அன்பழகன் தெரிவித்தார்.

 

 

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி ஜெயலலிதாவின் படம் திறப்பதை எதிர்க்க தேவையில்லை என்று கூறியுள்ளார்.

''ஒவ்வொரு கட்சியினரும், அவர்களின் ஆட்சிக்காலத்தில், தங்களது தலைவரின் படம் சட்டமன்றத்தில் வைக்கவேண்டும் என்று எண்ணுவதில் தவறில்லை. ஜெயலலிதா குற்றவாளி என்ற காரணத்தைக் கொண்டு எதிர்க்கிறார்கள். ஆனால் மூன்று முறை அவர் முதல்வராக ஆட்சி செய்த காலத்தில் பெண்களுக்காக தொட்டில் குழந்தை திட்டம், பேறுகால விடுப்பு அதிகரிப்பு உள்ளிட்ட பல திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். மேலும் சட்டமன்றத்தில் திறக்கப்படும் முதல் பெண்ணின் படமாக ஜெயலலிதா படம் இருக்கும் என்பதால் அதை நான் ஆதரிக்கின்றேன். இது என் சொந்த முடிவு,'' என்று விஜயதரணி பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த், "சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என்று உச்சநீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதால், ஜெயலலிதாவின் படத்தை சட்டமன்றத்தில் வைக்கக்கூடாது" என தெரிவித்துள்ளார்.

அதேபோல, ஜெயலலிதாவின் படம் சட்டமன்றத்தில் திறந்துவைப்பது ஒரு தவறான உதாரணம் என பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

http://www.bbc.com/tamil/india-43022351

  • தொடங்கியவர்

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படம் சட்டப்பேரவையில் திறக்கப்பட்டது

 

 
picturejpg

படம்: சிறப்பு ஏற்பாடு

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படம் சட்டப்பேரவையில் திறக்கப்பட்டது. ஜெயலலிதா படத்தை பேரவைத் தலைவர் பி.தனபால் திறந்து வைத்தார்.

இந்தப் படம் 7 அடி உயரும் 5 அடி அகலமும் கொண்டதாக உள்ளது. ஆயில் பெயின்டிங் முறையில் படம் வரையப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் படத்தை சென்னை கவின் கல்லூரி மாணவர்கள் உருவாக்கினர்.

படத்தின் கீழ் ஜெயலலிதா அடிக்கடி பேசும் வாசகமன அமைதி, வளம், வளர்ச்சி என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது.

படத் திறப்பைத் தொடந்து ஜெயலலிதாவின் உரை பேரவையில் ஒலிபரப்பப்பட்டது.

11-வது தலைவர்..

சட்டப்பேரவையில் 11-வது தலைவர் படமாக ஜெயலலிதாவின் படம் திறக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே திருவள்ளுவர், ராஜாஜி, காமராஜர், முத்துராமலிங்கத் தேவர், காந்தி, அண்ணா, பெரியார், காயிதே மில்லத், எம்.ஜி.ஆர்., அம்பேத்கர் ஆகியோரது படங்கள் உள்ளன. அந்த வரிசையில் ஜெயலலிதாவின் படம் 11-வது படமாக திறக்கப்பட்டுள்ளது.

முதல் பெண் தலைவர்..

தமிழகத்தின் முதல்வராக 6 முறை பொறுப்பு வகித்தவர் ஜெயலலிதா. உடல்நலக்குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி காலமானார். மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் நினைவிடம் அருகே ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்டது. அந்த இடத்தில் ரூ.43 கோடியில் நினைவகம் கட்டப்போவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், சென்னை போயஸ் கார்டனில் ஜெயலலிதா வசித்த ‘வேதா இல்லம்’ வீட்டை அரசு நினைவு இல்லமாக மாற்றுவதற்கான பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன.

sweetsjpg

ஜெயலலிதாவின் உருவப்படம் திறக்கப்பட்டதை கொண்டாடிய அதிமுக தொண்டர்கள் | படம்: எல்.சீனிவாசன்.

ஜெயலலிதாவின் உருவப்படத்தை சட்டப்பேரவை அரங்கில் அமைக்க வேண்டும் என்று அக்கட்சி எம்எல்ஏக்கள் கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்று, ஜெயலலிதா படத்தை பேரவை அரங்கில் அமைக்க முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, பேரவை அரங்கில் இன்று காலை 9.30 மணிக்கு ஜெயலலிதாவின் படம் திறக்கப்பட்டது.

சட்டப்பேரவையில் திறக்கப்பட்டுள்ள முதல் பெண் தலைவரின் படம் ஜெயலலிதாவின் உருவப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

திமுக, காங்கிரஸ் புறக்கணிப்பு

ஜெயலலிதா படத் திறப்பு நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ் பேரவை உறுப்பினர்களுக்கு தனித்தனியே அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவைச் செயலாளர் பூபதி தெரிவித்திருந்தார்.

ஆனால், ஜெயலலிதா படத்தை திறப்பதற்கு எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர், தேமுதிக தலைவர் விஜயகாந்த், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன். பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

http://tamil.thehindu.com/tamilnadu/article22727727.ece?homepage=true

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.